Pages

Search This Blog

Monday, January 30, 2017

பயணங்கள் முடிவதில்லை - எஹ் ஆத்தா ஆத்தோரமா வாரிய

எஹ் ஆத்தா ஆத்தோரமா வாரிய ?
நான் பார்த்த பாக்காமலே போறிய ?
அடியே ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?
அடி அக்கம் பக்கம் யாரும் இல்ல..அள்ளிக்கலாம் வா புள்ள ..
எஹ் ஆத்தா ஆத்தோரமா வாரிய?நான் பார்த்த பாக்காமலே போறிய?

ஆவாரம் பூவாக அள்ளாம கிள்ளாம..
அணைக்க துடிச்சிருக்கேன்..

அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு ..
தனிச்சு தவிச்சிருக்கேன் ..

ஆவாரம் பூவாக அல்லாமா கில்லாம ..
அணைக்க துடிச்சிருக்கேன் ..

அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு..
தனிச்சு தவிச்சிருக்கேன்..

தவிச்ச மனசுக்கு தண்ணி தர வேணாமா ?
தளும்பும் நெனப்புக்கு அல்லிகிறேன் நீவாமா ..

மாருல குளிருது சேர்தென அணைச்சா ..
தீருமடா குளிரும் கட்டிபுடிசுக்கோ ..ஹே ..

ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?

நான் போறேன் முன்னால ..நீ வாட பின்னால ..
நாயகர் தோட்டத்துக்கு ..

பேசாதே கண்ணாலே ..என்னடி அம்மாடி வாடுற வாட்டத்துக்கு ..

நான் போறேன் முன்னால..நீ வாடா பின்னால..
நாயகர் தோட்டத்துக்கு..

பேசாதே கண்ணாலே..என்னடி அம்மாடி வாடுற வாட்டதுக்கு..

சிரிச்ச சிரிப்புல சில்லரையும் சிதறுது ..
செவந்த முகம் கண்டு எம்மனசு பதறுது ..

பவள பவள பவள வாயில தெரிகிற அழகா ??? ..
பார்த்ததுமே மனசு பட்டு துடிக்குது ..
ஹே..ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?
அடியே ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?

Payanangal Mudivathillai - Hey Aatha

பயணங்கள் முடிவதில்லை - ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என் விழியோ கடல் ஆனதம்மா
எண்ணங்களோ அலை மோதுதம்மா புது

(ராக)

வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ
வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ
விழிகள் பாராமல் செவிகள் கேளாமல் கவிதை அரங்கேறுமோ (2)
தேவி உன் கொவில் வாசல் முன்னலே
காவியம் தேனென பூமியில் முதல் முதல்

(ராக)

ஆனந்த கங்கை வெள்ளம் பொங்கப் பொங்க
ஆரம்ப நாளில் இன்பம் கொஞ்சக் கொஞ்ச
பாடும் உள்ளம் துள்ளத் துள்ள
பாடல் ஒன்று சொல்லச் சொல்ல
ஆயிரம் சந்தம் நாவினில் சிந்தும் அம்பிகைக்கே சொந்தம் 
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க கற்ற வித்தை என்றும் செழிக்க (2)
முத்து ரத்தினம் சிந்தும் இத்தினம்
அன்னை உன்னை வணங்கி நின்று

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது
கான மழை இனி நான் பொழிவேன்
தேன் மழையில் இனி நீ நனைவாய்
புது ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது

Payanangal Mudivathillai - Mudhal Mudhal Raaga Deepam

பயணங்கள் முடிவதில்லை - வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன்

வைகறையில்  வைகைக்கரையில்  வந்தால்  வருவேன்  உன்  அருகில் 
உன்  நினைவில்  நெஞ்சம்  வான்  வெளியில்  நாளும்  நடத்தும்  ஊர்வலங்கள் 

(வைகறையில் )

உன்  நினைவே  எனக்கோர்  சுருதி  உன்  கனவே  எனக்கோர்  கிருதி 
உன்  நினைவில்  மனமே  உருகி  வாடுதம்மா  மலர்  போல்  கருகி 
பலப்  பல  ஜென்மம்  நான்  எடுப்பேன்  பாடல்கள்  கோடி  நான்  படிப்பேன் 
அன்பே  உனக்கே  காத்திருப்பேன் ...ஆ ...

(வைகறையில் )

ஆயிரம்  ஆயிரம்  ஆசைகளை  ஆசையில்  உன்னிடம்  பேச  வந்தேன் 
ஆவியில்  மேவிய  கேள்விகளை  கேளென  உன்னிடம்  கூற  வந்தேன் 
நினைவுகள்  ஏனோ  மறைகிறதே  கனவுகள்  ஏனோ  கலைகிறதே 
நிழல்  போல்  உன்னைத் தொடர்கிறதே ...ஆ ..

(வைகறையில் )

Payanangal Mudivathillai - Vaigaraiyil Vaigaikaraiyil

பயணங்கள் முடிவதில்லை - தோகை இளமயில் ஆடி வருகுது

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

(தோகை)

கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்
இதழ்களிலே பௌளர்ணமி வெளிச்சம்
கண்ணில் தோன்றும் ஜாலங்கள் கார்கால மேகம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

(தோகை)

பூமி எங்கும் பூந்தோட்டம் நான் காண வேண்டும்
புதுத் தென்றலும் பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும் அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை

(தோகை)

Payanangal Mudivathillai - Thogai Ilamayil

பயணங்கள் முடிவதில்லை - சாலை ஓரம் சோலை ஒன்று

சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்

சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து

சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்

பாவை இவள் பார்த்து விட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள் தான் அசைந்தால் நந்தவனக் காற்றடிக்கும்
நீங்கள் என்னை பார்த்தால் குளிரடிக்கும்
மனதுக்குள் ஏனோ மழை அடிக்கும்
ஹே பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
மொட்டுக் கதவை பட்டு வண்டுகள் கொட்டுகின்றதே
இப்போது

சாலை ஓரம் சோலை ....

கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அழுத்ததினால் கன்னி மனம் தான் துடிக்க
கடலுக்கு கூட ஈரமில்லையோ
நியாயங்களை கேட்க யாருமில்லையோ
சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
பேசும் கிள்ளையே ஈர முல்லையே நேரமில்லையே
இப்போது

சாலை ஓரம் சோலை ....

Payanangal Mudivathillai - Salaiyoram Oram

பயணங்கள் முடிவதில்லை - மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில்

மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது
அந்தக் கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ

(மணி ஓசை)

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்...ஆஆஆஆஅ
கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகதோ
ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ
ராதை மனம் ஏங்கலாமோ கன்ணன் முகம் வாடலாமோ
வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ

(மணி ஓசை)

பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது
பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது
பாடும் புது வீணை இங்கே ராகம் அதில் மாறும் அங்கே
தாளம் மாறுமோ ராகம் சேருமோ

(மணி ஓசை)

Payanangal Mudivathillai - Mani Oosai

பயணங்கள் முடிவதில்லை - இளைய நிலா பொழிகிறதே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே

Payanangal Mudivathillai - Ilaya Nilaa Poli

படிக்காதவன் (1985) - ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு

ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு.

ஏன்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள்

ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு.
செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்

செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்

சத்தியதை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களை காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
பூ மாலை காத்திருக்கும்
ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு
நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா
வெள்ளை இளஞ்சிட்டுக்கள், வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள், விண்ணை தொடுங்கள்

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா
வெள்ளை இளஞ்சிட்டுக்கள், வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள், விண்ணை தொடுங்கள்

பேருக்கு வாழ்வது வாழ்கை இல்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை
ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு

ஏன்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கல்

ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு.

Padikkadavan (1985) - Oru Koottu Kiliyaka

தங்கைக்கோர் கீதம் - தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி

தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி

தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு

தேனாக நினைச்சு தான் உன்ன வளர்த்தேன்
நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன் ( 2 )

தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு

தோள் மீது தொட்டில் கட்டி தாலாட்டினேன்
தாய் போல் நான் தானே சீர் ஆட்டினேன் ( 2 )

யார் என்று நீ கேட்க ஆளாகினேன் ( 2 )
போ என்று நீ விரட்டும் நாய் ஆகினேன் (2 )

மலராக எண்ணி தான் நானும் வளர்த்தேன்
நீயும் முள்ளாக தைச்சு விட நானும் தவிச்சேன்

தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு

பாதில வந்த சொந்தம் பெரிசு என்று
ஆதி முதல் வளர்த்த என்னை வெறுத்து விட்ட ( 2 )

பாசம் வச்ச என் நெஞ்சு புண் ஆகவே ( 2 )
புருஷன் பக்கம் பேசி விட்ட தங்கச்சியே ( 2 )

கிளியாக நினைச்சு தான் உன்ன வளர்த்தேன்
நீயும் கொத்தி விட வலிபட்டு நானும் துடிச்சேன் ( 2 )

தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு

ஆராரி ராராரி ராராரிரோ ...

Thangaikkor Geetham - Thattiparthen Thotta

பிரியா - அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே

அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே
அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
புதுமையிலே மயங்குகிறேன்
அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே

பார்க்க பார்க்க ஆனந்தம் பறவை போல உள்ளாசம்
வேளையின்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம்
வெரும் பேச்சு வெட்டி கூட்டம் ஏதும் இல்லை இந்த ஊரில்
கல்லம் கபடம் வஞ்ஜகம் இன்றி
கன்னியமாஹ ஒற்றுமை உணர்வுடன் வாழும் சிங்கப்பூர்
அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்


சிட்டு போல பிள்ளைகள் தெனில் ஆடும் முள்ளைகள்
துள்ளி துள்ளி மான்கள் போல ஆடும் உற்சாகம்
தினம் தோரும் திருநாளே சுகம் கோடி மனம் போல
சீனர் தமிழர் மலயல் மக்கள்
உறவினர் போல அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்
அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே


மஞ்சல் மேனி பாவைகள் தங்கும் மின்னும் அங்கங்கள்
காவியத்தில் வார்த்தை இல்லை உன்னை பாறாட்ட
நடை பார்த்து மயில் ஆடும் மொழி கேட்டு கிளி பேசும்
கண்ணில் தவளும் புன்னகை கண்டேன்
சொர்கம் போல இன்பமும் பெருமையும் வாழும் சிங்கப்பூர்
அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
லல லலலல லலலல லலலலா
லல லலலல லலலல லலலலா
லல லலலல லலலல லலலலா லலலலா லலலலலா

Priya - Akarai Cheemai

Friday, January 27, 2017

மௌன ராகம் - சின்னச் சின்ன வண்ணக்குயில்

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா.. 

புரியாத ஆனந்தம்.. புதிதாக ஆரம்பம்.. (2) 

பூத்தாடும் தேன்மொட்டு நான்தானா.. 

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா.. 

(இசை) 

மன்னவன் பேரைச் சொல்லி.. மல்லிகை சூடிக் கொண்டேன்.. 

மன்மதன் பாடல் ஒன்று.. நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன்.. 

சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்.. 

என்னமோ ஆசைகள்.. நெஞ்சத்தின் ஓசைகள்.. 

மாலை சூடி.. மஞ்சம் தேடி.. (2) 

காதல் தேவன் சந்நிதி.. காண... காணக் காண.. 


சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா.. 

புரியாத ஆனந்தம்.. புதிதாக ஆரம்பம்.. (2) 

பூத்தாடும் தேன்மொட்டு நான்தானா.. 

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா.. 

(இசை) 

மேனிக்குள் காற்று வந்து மெல்லத்தான் ஆடக் கண்டேன்;.. 

மங்கைக்குள் காதல் வந்து.. கங்கை போல் ஓடக் கண்டேன்.. 

இன்பத்தின் எல்லையோ.. இல்லையே இல்லையே.. 

அந்தியும் வந்ததால்.. தொல்லையே.. தொல்லையே.. 

காலம் தோறும்.. கேட்க வேண்டும் (2) 

பருவம் என்னும் கீர்த்தனம் பாட.. பாடப்பாட.. 


சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா.. 

புரியாத ஆனந்தம்.. புதிதாக ஆரம்பம்.. (2) 

பூத்தாடும் தேன்மொட்டு நான்தானா.. 

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக்; கூவுதம்மா..(2)

Mouna Ragam - Chinna Chinna Vanna Kuyil

வாழ்த்துக்கள் - எந்தன் வானமும் நீதான்

எந்தன் வானமும் நீதான் 
எந்தன் பூமியும் நீதான் 
உன் கண்கள் பார்த்திடும் திசையில் 
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான் 
எந்தன் பயணமும் நீதான் 
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே
உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி

எந்தன் வானமும் நீதான் 
எந்தன் பூமியும் நீதான் 
உன் கண்கள் பார்த்திடும் திசையில் 
வாழ்கிரேனே

நீ நடக்கும் போது உன் நிழலும்
மண்ணின் விழும்முன்னே ஏந்திக்கொள்வேன்
உன் காதலின் ஆளம் கண்டு கண்கள் கலங்குதே
உன்னுடய கால்தடத்தை மழை அழித்தால்
குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன்
உன்னால் இன்று பெண்ணானதின் அர்த்தம் புரிந்ததே

உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி

எந்தன் வானமும் நீதான் 
எந்தன் பூமியும் நீதான் 
உன் கண்கள் பார்த்திடும் திசையில் 
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான் 
எந்தன் பயணமும் நீதான் 
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே

ஒரே ஒரு வார்த்தயில் கவிதை என்றால் 
உதடுகள் உன்பெயரை உச்சரிக்கும்
என் பெயரைதான் யாரும் கேட்டல் 
உன்பெர் சொல்கிரேன்
ஒரே ஒரு உடலில் இருஇதயம்
காதல் என்னும் உலகத்தில்தான் இருக்கும்
நீயில்லயேல் நான் இல்லயே நெஞ்சம் சொல்லுதே

உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி

எந்தன் வானமும் நீதான் 
எந்தன் பூமியும் நீதான் 
உன் கண்கள் பார்த்திடும் திசையில் 
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான் 
எந்தன் பயணமும் நீதான் 
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே

Vaazhthugal - Enthan Vaanamum Neethan

கல்லூரி - சரியா இது தவறா சரியா இது தவறா

சரியா இது தவறா சரியா இது தவறா 
சரியா இது தவறா இந்த 
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா 
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல 
வரமா காதல் வலயா
கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே 
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா

சரியா இது தவறா சரியா இது தவறா 
சரியா இது தவறா இந்த 
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா 
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல 
வரமா காதல் வலயா


ஆணும் பெண்ணும் பழகிடும் போது
காதல் மிருகம் மெல்ல மரைந்திருக்கும் 
ஆசை என்னும் வலையினை விரித்து
அல்லும் பகலும் அது காத்துகிடக்கும்
நண்பர்கள் என்று சொன்னல் சிரிக்குமே 
நாளைக்கு பார் என்று உரைக்குமே
நெஞ்சுக்குள் துண்டில் விட்டு இழுக்குமே
நம் நிழல் அதன் வளி நடக்குமே
தடுப்பது போல நடித்திடும் போதும் 
தத்தி தாவி கண்கள் ஓடும்
அடுத்தது என்ன அடுத்தது என்ன அணையை
தாண்டி உள்ளம் கேட்க்கும் இது சரியா

சரியா இது தவறா சரியா இது தவறா 
சரியா இது தவறா இந்த 
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா 
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல 
வரமா காதல் வலயா

ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள்
மெளுகினிலே அதை படைத்துவிட்டான்
பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது
மெதுமெதுவாய் அதை உருக வைத்தான் 
உள்ளத்தை கட்டி போட தெரிந்தவன் 
யாருமே உலகத்தில் இல்லையே
வெல்லத்தின் அளவுகள் தாண்டினால் 
வண்டுகள் என்ன செய்யும் முல்லையே
தெடு தொடு என்று தூரத்தில் நின்று
தூதுகள் சொல்லுது மயில்கள் ரெண்து
தொட தொட வந்தால் தொடுவானம் போல்
தள்ளி செல்லுது மேகம் ஒன்று இது சரியா

சரியா இது தவறா சரியா இது தவறா 
சரியா காதல் தவறா இந்த 
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா இது தவறா சரியா இது தவறா 
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல 
வரமா காதல் வலயா
கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே 
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா

சரியா இது தவறா சரியா இது தவறா 
சரியா இது தவறா இந்த 
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா 
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல 
வரமா காதல் வலயா,,,,,,,,,,,

Kalloori - Sariya Ithu Thavara

12 பி - ஒரு புன்னகை பூவே சிறு பூக்களின் தீவே

ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு

ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே
நீ என்னை மட்டும் காதல் பண்ணு
என் வாலிப நெஞ்சம்
உன் காலடி கெஞ்சும்
சிறு காதல் பிச்சை போடு கண்ணு

நான் கெஞ்சி கேட்கும் நேரம்
உன் நெஞ்சின் ஓரம் ஈரம்
அச்சச்சோ அச்சோ காதல் வாராதோ
சூரியன் வாசல் வந்து ஐஸ்க்ரீம் கொடுக்கும்
ஓடாதம்மா வீழாதம்மா
சந்திரன் உள்ளே வந்து சாக்லெட் கொடுக்கும்
சூதாதம்மா ரீலுதாம்மா

உன் படுக்கை அறையிலே
ஒரு வசந்தம் வேண்டுமா
உன் குளியல் அறையிலே
விண்டர் சீசன் வேண்டுமா
நீ மாற சொன்னதும்
நான்கு சீசனும் மாற வேண்டுமா
லவ் பண்ணு
என்பது ஆண்டுகள் இளமையும் வேண்டுமா
மெய்யாகுமா மெய்யாகுமா

அட வெள்ளை வெள்ளையாய்
ஓர் இரவு வேண்டுமா
புது வெளிச்சம் போடவே
இரு நிலவு வேண்டுமா
உன்னை காலை மாலையும்
சுற்றி வருவது காதல் செய்யவே
லவ் பண்ணு ஐயோ பண்ணு

நீ கெஞ்சி கேட்கும் நேரம்
என் நெஞ்சின் ஓரம் ஈரம்
அச்சச்சோ அச்சோ காதல் வந்தாச்சோ

12B - Oru Punnagai Poove

Wednesday, January 11, 2017

ஜே ஜே - உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே (உன்னை நினைக்கவே)
நீ கேட்கையில் சொல்லவே இல்லையே
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே (உன்னை நினைக்கவே)

லல்லால்லா லால்லா
ஜேஜேஜே ஜேஜேஜே

நான் உன்னை மறந்த செய்தி
மறந்துவிட்டேன்
ஏன் இன்று குளிக்கும் போது நினைத்துக்கொண்டேன்
கண்மூடி சாயும் பொழுதிலும்-உன் கண்கள்
கண் முன்பு தோன்றிமறைவதேன் ஏன் ஏன் ஏன்
நீ என்னைக்கேட்டபோது காதலில்லை
நான் காதல் உற்ற போது நீயுமில்லை
ஒற்றைக் கேள்வி உன்னைக்கேட்கிறேன்
இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா
ஹார்மோன்களின் சத்தம் கேட்குதே
உன் காதிலே
என்று கேட்கும் இந்த சத்தம் (உன்னை நினைக்கவே)

என் சாலை எங்கும் எங்கும்
ஆண்கள் கூட்டம்
என் கண்கள் சாய்ந்ததுண்டு தில்லை
காட்சி யாவும் புதைந்து போனது
என் நெஞ்சம்
உன்னை மட்டும் தோண்டி பார்ப்பதேன்
ஓ ஓஒ
உன்னோடு அன்று கண்ட காதல் வேகம்
என்னோடு எட்டி நின்ற நாகரீகம்
கண்ணில் கண்ணில் வந்து போகுதே
என் நெஞ்சே கட்டில் மீது திட்டுகின்றதே
உன் தேடலோ காதல் தேடல் தான்
என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போல (உன்னை நினைக்கவே)

Jay Jay - Unnai Ninaikave

பூவே உனக்காக மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு கட்டி வச்சேன் வந்து ஆட
தேவதைய கூட்டி வாங்க வாசல் எங்கும் கோலம் போட

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

மச்சினிச்சி கொலுசு சத்தம் வீட்ட சுத்தி பாட்டு பாட
மண்ணும் கல்லும் பாதம் தொட்டு மல்லிகையா மாறி போக
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

தண்ணி ஊத்துறா மஞ்ச தண்ணி ஊத்துறா
மாமன்காரன் மயங்கி நின்ன வெண்ணி ஊத்துறா

தண்ணி ஊத்துறா மஞ்ச தண்ணி ஊத்துறா
மாமன்காரன் மயங்கி நின்ன வெண்ணி ஊத்துறா

பூவப்போல மனசுக்குள்ள புயலப்போல வந்த புள்ள
திண்டுக்கல்லு பூட்ட போட்டு பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள

பூவப்போல மனசுக்குள்ள புயலப்போல வந்த புள்ள
திண்டுக்கல்லு பூட்ட போட்டு பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு கட்டி வச்சேன் வந்து ஆட
தேவதைய கூட்டி வாங்க வாசல் எங்கும் கோலம் போட

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

Poove Unakkaga - Machinichi

பூவே உனக்காக - ஓ பியாரி பாணி பூரி பம்பாய் நாரி

ஓ பியாரி பாணி பூரி பம்பாய் நாரி
நீதான் எந்தன் நக்மா நக்மா நக்மா
சில்வெஸ்ட்டர் ஸ்டால்லோன் போலே அப்பன்காரன்
கூட வந்த தகுமா தகுமா தகுமா

சைனீஸ் நூடுல்ஸ் நீதான்
டொமேடோ சாசும் நான் தான்
இது பாஸ்ட் புட் காலம்
அடி வேஸ்ட் வெட்கம் நாணம் நாணம்

ஓ பியாரி ….

நடு ரோட்டுல பாட்டி ஒருத்தி லிப்டுன்னு கேட்டா – dont miss
அவ வீட்டுல பேத்தி ஒருத்தி அழகா இருப்பா – dont miss
உன்ன பாத்ததும் தேங்க்ஸ் நு சொல்லி காபி கொடுப்பா – dont miss
அவ நெஞ்சுல அரவிந்த்சாமியா உன்ன நெனைப்பா – dont miss
விஸ்கி பீரு மத்தவன் காசுல வாங்கி கொடுத்தா – dont miss
வேல வெட்டி ஏதும் இல்லாமல் சோறு கிடச்சா – dont miss
எக்ஸாம் எக்ஸாம் வந்தா எஸ்கேப் பண்ணாத மாமா
பேப்பர் சேஸ்சோ பிட் அடிச்சோ பாஸ் பண்ணம்மா

ஹூவா ஹூவா ஹூவ்வல்லா ஹூவா

ஓ பியாரி ….

வாட்ச்மேனா லேடீஸ் ஹாஸ்டல்ல வேல கெடச்சா – dont miss
சேல்ஸ்மேனா நாயுடு ஹால்ல சேர சொன்னாக்க – dont miss
ப்ளௌஸ் தைக்கிற லேடீஸ் டைலெரின் சிநேகம் கெடச்சா – dont miss
ஸ்டெபி கிராப்பு டென்னிஸ் மேட்ச்சில எகிரி குதிச்சா – dont miss
டாடி போட்ட புல் ஹான்ட் சர்ட்டுல சில்லர இருந்தா – dont miss
டாடி ஊதும் சிகெரட் பாக்கெட்ல மிச்சம் இருந்தா – dont மிஸ்
அப்பாக்கள் செய்யாத தப்பா, தாத்தாக்கள் சிந்தாத ஜோல்லா
வாலிபத்தில் ரைட்டும் இல்லம் ராங்கும் இல்லம்மா...

ஹூவா ஹூவா ஹூவ்வல்லா ஹூவா

ஓ பியாரி ….

Poove Unakkaga - Oh Pyari

பூவே உனக்காக - சிக்குலெட்டு சிக்குலெட்டு

சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி
நீ சிரிச்சதும் இப்ப எனக்கு
பீர் அடிச்சது போல இருக்கு

கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்

சிக்குலெட்டு ….

MTV பிகரு எல்லாம்
எதிரில் வந்து நின்னா நியாயமா
LKG UKG படிக்கும் பையனுக்கு தாங்குமா
ஆஜா மேரி ஜான் ஆட்டம் போடா வாரியா
சார்ஜா மேட்சபோல போட்டி போட ரெடியா
ரெட்ட ஜெட பறக்குது
மொட்ட தல மொளைக்குது

கூத்து நடக்குது ….

சிக்குலெட்டு ….

உன்ன நெனைச்சா உள்ளுக்குள்ளத்தான்
ரயிலு இஞ்சின் ஒன்னு ஓடுது
சின்ன கிளிதான் கண்ணு அடிச்சா
மனசு சாட்டிலைட்டா மாறுது
பாப்பா இடுப்புல கதகலி நடக்குது
பாத்தா மனசுல தக்கதிமி அடிக்குது
முக்காபுலா நடக்குது
கொக்க கோலா குடிக்குது

கூத்து நடக்குது ….

சிக்குலெட்டு ….

Poove Unakkaga - Chiclet Chiclet

பூவே உனக்காக - சொல்லாமலே யார் பார்த்தது

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை கடுக்கின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ

நெஞ்சத்தை தொட்டு தொட்டு காதல் செல்லு பச்சைக்கிளி
முத்தங்கள் என்ன சத்தம் மெல்ல வந்து சொல்லடி
(சொல்லாமலே..)

மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சுமெத்தை முன்னே போல குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
கண்கள் சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை காதல் வலயா
உன் பார்வை குற்றால சாரல் மழையா
அன்பே உன் ராஜாங்கல் எந்தன் மடியா
நீ மட்டும் பொன்வீணை எந்தன் இடையா
இடையில் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான்
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள் கண்மணி
(சொல்லாமலே..)

கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
கை சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது
என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது
அன்பே நான் எந்நாளும் உன்னை நினைக்க
முள்மீது பூவானேன் தேகம் இழக்க
வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாதம் சந்தோஷ யுத்தம் நடந்தது
உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம் காதலா
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள் கண்மணி
(சொல்லாமலே..)

Poove Unakkaga - Sollamalae Yar Paarthathu

பூவே உனக்காக - ஆனந்தம் ஆனந்தம் பாடும்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
உந்தன் ஞாபகம் பூமழை தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன்
காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய்ப் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனதில் நின்ற காதலியே
மனைவியாக வரும்போது
சோகம் கூட சுகமாகும்
வாழ்க்கை இன்ப வரமாகும்!

உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்
ஒன்றாகச் சேர்ந்திட வேண்டும்
பூவே உன் புன்னகை என்றும்
சந்தோஷம் தந்திட வேண்டும்

ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே!
ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே!

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

இன்னும் நூறு ஜென்மங்கள்
சேர வேண்டும் சொந்தங்கள்
காதலோடு வேதங்கள்
ஐந்து என்று சொல்லுங்கள்

தென் பொதிகை சந்தனக் காற்று
உன் வாசல் வந்திட வேண்டும்
ஆகாய கங்கைகள் வந்து
உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்

கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்
நிஜமாய் இன்று ஆனதே!
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்
நிஜமாய் இன்று ஆனதே!

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
விரும்பிக்கேட்டவர் : சிபி
இசை: எஸ்.ஏ. ராஜ்குமார்
பாடியவர்: உன்னிக்கிருஷ்ணன்
திரைப்படம்: பூவே உனக்காக

Poove Unakkaga - Anantham Anantham

மகா நதி - தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாழாது

தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாழாது
செவ்வானம் மின்னல் வெட்டி மண் மீது வீழாது
காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி
காற்றாடி போலிருந்து வீழ்வதில்லையடி

அன்பான உறவு கண்டு கூடு கட்டி ஆடுவேன்
அந்நாளில் நானிருந்த வாழ்கையை தான் தேடுவேன்
அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி
என் எண்ணம் என்றைக்கும் தோல்வி என்பதை எற்றதில்லையடி

ஹே தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
ஹே தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
ஹே தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
ஓ தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு

Mahanadhi - Thanmanam Ulla Nenjum

மகா நதி - அன்பான தாயை விட்டு

அன்பான தாயை விட்டு
எங்கே நீ போனாலும்
நீங்காமல் உன்னைச் சுற்றும்
எண்ணங்கள் எந்நாளும்
ஐயா உன்கால்கள் பட்ட
பூமித்தாயின் மடி
எங்கேயும் ஏதும் இல்லை
ஈடு சொல்லும் படி

காவேரி அலைகள் வந்து
கரையில் உன்னைத் தேடிடும்
காணாமல் வருத்தப் பட்டுத்
தலை குனிந்து ஓடிடும்
ஒரு பந்தம் என்பதும் பாசம் என்பதும்
வேரு விட்ட இடம்
இதை விட்டால் உன்னை வாழ வைப்பது
வேறு எந்த இடம்

தன் மண்ணை விட்டொரு குருவிக் குடும்பம்
பறந்து போகுதடி
தான் இந்நாள் வரைக்கும் இருந்த கூட்டை
மறந்து போகுதடி
இந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொரு
கோலமிட்டதடி
இதில் நன்மை கூடட்டும் தீமை ஓடட்டும்
காலம் விட்ட வழி

Mahanadhi - Anbana Thayai

மகா நதி - எங்கேயோ திக்கு திசை

எங்கேயோ திக்கு திசை 

எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான்
அம்மாடி வந்ததென்ன என் வாழ்கை ஓடம்தான்

காவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி
காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி

கைமாறி நான் வளர்த்த பச்சைக்கிளி போனது
கண்ணார நானும்காண இத்தனை நாள் ஆனது

இரு கண்ணே செந்தமிழ்த்தேனே தந்தையின் பாசம் வென்றதடி
பசும் பொன்னே செவ்வந்திப்பூவே இத்துடன் சோகம் சென்றதடி
நான் கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது
இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது

Mahanadhi - Engeyo Thikkudesai

மகா நதி - சொல்லாத ராகங்கள் என்னென்ன

பெண் : துவக்கம் எங்கே இது வரை சரிவரப் புரியவில்லை

ஆண் : தொடங்கியதை தொடர்ந்திடப் புதுவழி தெரியவில்லை

பெண் : புதிர்களும் புதுக்கவி புனைந்திட

ஆண் : நெருங்கிட என் மனம் மருகிட

பெண் : மயங்குதே கலங்குதே

ஆண் : சொல்லின்றியே தயங்குதே

பெண் : அலைகள் எழுந்து கரைகள் கடந்து
சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன (இசை)

பெண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

ஆண் : நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன

பெண் : எழுந்த சந்தம் ஒன்று
கலந்த சொந்தம் இன்று
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்புமோ புது யுகம் அரும்புமோ

ஆண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

பெண் குழு : அஹ ஹஹா..அஹ ஹஹா..ஹா..(இசை)
ஆஹ ஹஹஹா..ஹாஹ ஹஹா..

ஆண் : காவல் வைத்தாலும் உன்மீது
ஆவல் கொண்டாடும் உள்ளம் உள்ளம்

பெண் : காலம் கைகூடும் என்றெண்ணி
காதல் கொண்டாடும் எண்ணம் எண்ணம்

ஆண் : கூண்டில் என் வாசம் என்றாலும்
மீண்டும் நான் வந்தால் அந்நேரம்
வேண்டும் நான் வாழ உந்தன் நெஞ்சம்

பெண் : வானம் நின்றாலும் சாய்ந்தாலும்
வையம் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
பாவை பெண் பாவை உந்தன் தஞ்சம்

ஆண் : ஜீவன் வெவ்வேறு ஆகாமல்
ஜென்மம் வீணாகிப் போகாமல்
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்புமோ புது யுகம் அரும்புமோ

பெண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

ஆண் : நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன (இசை)

பெண்குழு : ஆஹ ஹஹஹா..ஹாஹ ஹஹா..

பெண் : நாட்கள் ஒவ்வொன்றும் துன்பம்
தூக்கம் இல்லாமல் செல்லும் செல்லும்

ஆண் : வீசும் பூந்தென்றல் உன்பாட்டை
நாளும் என் காதில் சொல்லும் சொல்லும்

பெண் : பாரம் நெஞ்சோரம் என்றாலும்
ஈரம் கண்ணோரம் என்றாலும்
உள்ளம் உன் பேரைப் பாடும் பாடும்

ஆண் : நேசம் எந்நாளும் பொய்க்காமல்
நெஞ்சைத் துன்பங்கள் தைக்காமல்
நாளை பொற்காலம் கூடும் கூடும்

பெண் : நெஞ்சில் எப்போதும் உன் எண்ணம்
கண்ணில் எந்நாளும் உன் வண்ணம்
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்பலாம் புது யுகம் அரும்பலாம்

ஆண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

பெண் : நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன

ஆண் : எழுந்த சந்தம் ஒன்று
கலந்த சொந்தம் இன்று
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்பலாம் புதுயுகம் அரும்பலாம்

பெண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

ஆண் : நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன

Mahanadhi - Solladha Raagangal

மகா நதி - ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம்

பெண்குழு : கங்கா சங்காச காவேரி ஸ்ரீரங்கேச மனோஹரி
கல்யாணகாரி கலுசானி நமஸ்தேஸ்து சுகாசரி

பெண் : ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி 
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி 
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி 
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி 
தெய்வப் பாசுரம் பாடடி

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி

பெண் : கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும்
அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி 
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி

ஆண் : கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறு வீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கள நீராட முன் வினை தீர்க்கும்
நீர் வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர் வண்ணம் என்ன கூறுவேன் தேவ லோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி

ஆண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி 
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி 
தெய்வப் பாசுரம் பாடடி

ஆண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி

இருவர் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி



Mahanadhi - Sri Ranga Nathanin

மகா நதி - தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது

பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்….
பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்….

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ

வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றிசொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி

ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு

ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ

முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால
கல் மேடு தாண்டி வரும் காவேரி நீரால
சேத்தொட சேர்ந்த விதை நாத்து விடாதா
நாத்தோடு செய்தி சொல்ல காத்து வராதா

செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம் தான்
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம் தான்
நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ

இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி



Mahanadhi - Pongalo Pongal

Friday, January 6, 2017

மே மாதம் - ஆடிப்பாரு மங்காத்தா

ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ராணி எடுத்து வை ஏஸ் எடுத்து வை

வை ராஜா வை வை ராஜா வை வை ராஜா வை
வை ராஜா வை வை ராஜா வை வை ராஜா வை

ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல் கட்டா

ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா

எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு

நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்துபோடு வோட்டு

ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல் கட்டா

ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா

ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ஏஸ் எடுத்து வை

ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ஏஸ் எடுத்து வை

என்னென்ன நம்பர் வேணும் என்னக் கேளடி சும்மா
எதுவும் தருவேன் அம்மா

ஒன்பதாம் நம்பர் மட்டும் இங்கே ஒட்டாதம்மா
விவரங் கேளடி சும்மா

என்னாட்டம் விளையாடு தப்பாட்டம் கூடாது
நம்பர்கள் சதி செஞ்சா நண்பர் மேல் தப்பேது

இது போல ஆட்டம் ஆடி இந்தியா கறை சேர்ப்பேன்
சொந்தத்தில் ராக்கெட் வாங்கி சொர்கம் சென்று விலை கேட்பேன்

பொன் கூண்டை விட்டு நான் வானம்
வந்த பட்சி

வானத்தை தாண்டி புது வாழ்க்கை
வாழும் கட்சி

எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு

நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்து போடு வோட்டு

ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல்கட்டா

ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா

எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு

நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்து போடு வோட்டு

ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ஏஸ் எடுத்து வை

ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ஏஸ் எடுத்து வை

பிரிக்காத சீட்டுக்கட்ட மின்னும் போதை வன்னம்
அச்சு வெல்ல கன்னம்

உன்னோடு எந்த ஆணும் தோக்க தானே வேணும்
ஆஹா என்ன ஞானம்

இது வரை என்னாச்சு என் வாழ்க்கை வீனாச்சு
சொந்தத்தில் சுவாசிச்சு அட ரொம்ப நாளாச்சு

என் கால்கள் எங்கும் போகும்
தட்டி கேட்க கூடாது

என் பேர்கள் எங்கும் போகும்
கட்டி போட கூடாது

வார்த்தைகள் கற்க
நான் பள்ளிக்கூடம் சென்றேன்

வாழ்க்கையை கற்க
நான் வாசல் தாண்டி வந்தேன்

எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு

நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்துபோடு வோட்டு

ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல்கட்டா

ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா

எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு

நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்துபோடு வோட்டு

May Madham - Adi Paru Mangatha

மே மாதம் - பாலக் காட்டு மச்சானுக்கு

பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

செலவுக்கு நோட்டே இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்

பாட்டு சத்தம் கேட்டு புட்டா
மத்ததெல்லாம் கொசுரு

செலவுக்கு நோட்டே இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்

சிட்டு குருவி சிட்டு குருவி
சிரிக்கட்டுமே பெட்டை குருவி

ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது
ஆஹா வாழ்வே சொர்கம்

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

செலவுக்கு நோட்டே இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்

சிட்டு குருவி சிட்டு குருவி
சிரிக்கட்டுமே பெட்டை குருவி

ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது
ஆஹா வாழ்வே சொர்கம்

கவலைகள் வேண்டாம் கனவுகள் வாங்கு
வா சந்தோஷம் நமக்கு

திருமணம் வேண்டாம் காதலை வாங்கு
கதவுகள் வேண்டாம் சாவிகள் வாங்கு
வா பொற்க்காலம் நமக்கு

செல்வங்கள் வேண்டாம் சிறகுகள் வாங்கு
வா வானம் நமக்கு

வானமும் பூமியும் வாழ்ந்தால் இனிமையே

பாடகன் வாழ்விலே நித்தம் நித்தம்
பரவசம் நவரசம்

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

செலவுக்கு நோட்டே இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்

வானத்தை எவனும் அழைக்கவும் இல்லை
வா இப்போதே அளப்போம்

வாழ்க்கையை எவனும் ரசிக்கவும் இல்லை

பூக்களை எவனும் திறக்கவும் இல்லை
வா இப்போதே திறப்போம்

பூமியில் புதையலை எடுக்கவும் இல்லை
வா இப்போதே எடுப்போம்

வாலிபம் ஒன்று தான் வாழ்வின் இன்பமே

புன்னகை ஒன்று தான் என்றும் என்றும்
இளமையின் ரகசியம்

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

செலவுக்கு நோட்டே இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

செலவுக்கு நோட்டே இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்

சிட்டு குருவி சிட்டு குருவி
சிரிக்கட்டுமே பெட்டை குருவி
ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது
ஆஹா வாழ்வே சொர்கம்

May Madham - Pala Kaattu Machanukku

முரட்டுக் காளை (1980) - பொதுவாக எம் மனசு தங்கம்

ஜே ... ஜேய்... அண்ணணுக்கு... ஜேய்.. அண்ணணுக்கு...
ஜேய்.. காளையனுக்கு ஜேய் காளையனுக்கு ஜேய்... ஜேய்ய்ய்ய்ய்...

பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
உன்மையே சொல்வேன்... நல்லதே செய்வேன்
தன்னானா தானா
தன தன்னானா... தானா
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஹா... ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்

முன்னால சீறுது மயில காள
பின்னால பாயுது மச்சக்காள
முன்னால சீறுது மயில காள
ஹா... பின்னால பாயுது மச்சக்காள
அடக்கி ஆளுது முரட்டு காள
முரட்டுக்காள... முரட்டுக்காள
நெஞ்சுக்குள் அச்சமில்ல
யாருக்கும் பயமும்மில்ல
வாராதோ வெற்றி என்னிடம்
விளையாடுங்க... உடல் பலமாகுங்க
ஆடலாம் பாடலாம் கொண்டாலாம்
ஹெய்... ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
உண்மையே சொல்வேன்... ஹா
நல்லதே செய்வேன்
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடவோம் பாடுவோம் கொண்டாவோம்
ஹா... ஹா.. ஆனந்தம் காணுவோம் என்னாலுமே


வாங்கடி வாங்கடி பொண்டுகளா
வாசம் உள்ள செண்டுகளா
வாங்கடி வாங்கடி பொண்டுகளா
வாசம் உள்ள செண்டுகளா
கும்மி அடிச்சி... புடவைய போத்தி
அண்ணன வாழ்த்தி பாடுங்களா

காளையன பாத்துப்புட்டா
ஜல்லி கட்டு காளையெல்லாம்... துள்ளிக்கிட்டு ஒடுமடி
புல்லுக்கட்ட தேடிக்கிட்டு... புல்லுக்கட்ட தேடிக்கிட்டு
புல்லுக்கட்ட தேடிக்கிட்டு
கொம்பிருக்கும் காளைகெல்லாம் தெம்பிருக்காது
இந்த கொம்பு இல்லா காளையிடம் வம்பிருக்காது
குலவ போட்டு பாருங்கடி... கும்மிஅடிச்சி ஆடுங்கடி
மாரியம்மன் கோவிலுக்கு பொங்கலு வைப்போம் வாருங்கடி
பொங்கலு வைப்போம் வாருங்கடி
பொங்கலு வைப்போம் வாருங்கடி

பொறந்த ஊருக்கு புகழ சேரு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
பொறந்த ஊருக்கு புகழ சேரு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
நாலு பேருக்கு நன்மை செய்தா
கொண்டாடுவார்... பண்பாடுவார்
என்னாலும் உழைச்சதுக்கு
பொன்னாக பலமிருக்கு
ஊரோடு சேர்ந்து வாழுங்க
அம்மனருல் சேரும்... தினம் நம்ம துணையாகும்
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்
ஹெய்... ஆனந்தம் காணுவோம் என்னாலுமே

பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டின்னு வந்துவிட்டா சிங்கம்
உண்மையே சொல்வேன்... நல்லதே செய்வேன்
ஹா... தன்னானா தானா.. 
தன தன்னான தானா
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹேய்
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே...
ஹா... ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹே.. ஹாக...
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே... 
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹே

Murattu Kaalai (1980) - Pothuvaka En Manasu Thangam

ஆனந்த கும்மி - ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா
தலிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா
தலிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா

நிலவெரியும் இரவுகளில் ஒ மைனா ஒ மைனா
மணல் வெளியில் சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா
கிளிஞ்சல்கலே உலையரிசி இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஒ மைனா ஒ மைனா

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா
தலிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா

இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா
இரு குயில்கள் பேரெழுதும் ஒ மைனா ஒ மைனா
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா
தலிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா

Aanandha Kummi - Oru Kili Uruguthu

தம்பிக்கு எந்த ஊரு - காதலின் தீபம் ஒன்று

காதலின் தீபம் ஒன்று 
ஏற்றினாலே என் நெஞ்சில்

காதலின் தீபம் ஒன்று 
ஏற்றினாலே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் 
கூடலில் கண்ட இன்பம் 
மயக்கம் என்ன 
காதல் வாழ்க 

காதலின் தீபம் ஒன்று 
ஏற்றினாலே என் நெஞ்சில் 
---
நேற்று போல் இன்று இல்லை 
இன்று போல் நாளை இல்லை 

நேற்று போல் இன்று இல்லை 
இன்று போல் நாளை இல்லை 

அன்பிலே வாழும் நெஞ்சில்..ஆ ஆ.. 
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே 
ஒன்றுதான் எண்ணம் என்றால் 
உறவுதான் காதலே 
எண்ணம் யாவும் 
சொல்ல வா 
---
காதலின் தீபம் ஒன்று 
ஏற்றினாலே என் நெஞ்சில்
---
என்னை நான் தேடித் தேடி 
உன்னிடம் கண்டு கொண்டேன் 

என்னை நான் தேடித் தேடி 
உன்னிடம் கண்டு கொண்டேன் 

பொன்னிலே பூவை அள்ளும்...ஆ..ஆ..
பொன்னிலே பூவை அள்ளும்
புன்னகை மின்னுதே 
கண்ணிலே காந்தம் வைத்த 
கவிதையைப் பாடுதே 
அன்பே இன்பம் 
சொல்ல வா 
---
காதலின் தீபம் ஒன்று 
ஏற்றினாலே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் 
கூடலில் கண்ட இன்பம் 
மயக்கம் என்ன 
காதல் வாழ்க 

காதலின் தீபம் ஒன்று 
ஏற்றினாலே என் நெஞ்சில்

Thambikku Entha Ooru - Kaadhalin Deepam Ondru

அடுத்த வாரிசு - பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்

பேசக் கூடாது 
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை
லீலைகள் காண்போமே

ஆசை கூடாது மணமாலை தந்து
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே
ஆசை கூடாது

பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ என் கவிதை நீ
பாடும் ராகம் நீ என் நாதம் நீ என் உயிரும் நீ

காலம் யாவும் நான் உன் சொந்தம் காக்கும் தெய்வம் நீ
பாலில் ஆடும் மேனி எங்கும் கொஞ்சும் செல்வம் நீ

இழையோடு கனியாட தடை போட்டால் நியாயமா
உன்னாலே பசி தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனிமேல் ஏனிந்த எல்லை

ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

பேசக் கூடாது ஹங்..... 

ரராரரா லலாலலா
ரராரரா லாலாலலா..லா
ரராரரா லலாலலா
ரராரரா லாலாலலா..

காலைப் பனியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ என் நினைவும் நீ

ஊஞ்சலாடும் பருவம் உண்டு
உரிமை தரவேண்டும்
நூலில் ஆடும் இடையும் உண்டு
நாளும் வர வேண்டும்

பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்

ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

ஸ்...பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை
லீலைகள் காண்போமே

லால லாலா லா......

Adutha Varisu - Pesak koodaathu

அடுத்த வாரிசு - காவிரியே கவிக்குயிலே கண்மணியே

காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா மனம்
தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா

பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்
தீராத மோகங்கள் தீராமல் தீரும்

ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

துது துத் துத் து து..தூ....துது துத் துத் து து..தூ
லலலலா லலலா...லலலா..லலலலா லலலா...
லலலலா லலலா...லலலா..லலலலா லா...

இருவர் ஒருவர் எனைத்தானே ....உறவினில் இணைவோமே

பருவம் கனிந்த புதுத்தேனே.....பழகிக் களிப்போமே

உனக்கும் எனக்கும் பொருத்தம் வளர வளர சுகமே

இனிக்கும் இதழில் அமுதம் பருக பருக சுகமே

ஆனந்தம் உல்லாசம்

வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ

ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

சைய்யா மோரே கோயா ஏ தேகோ ஏ தேகோ
சைய்யா மோரே கோயா ஏ தேகோ ஏ தேகோ
காலி கடா சாரி தேகோனா
காலி கடா சாரி தேகோனா
ஆஜா சைய்யா அரே மோரே கோயா

குளிரும் வாட்டுதடி பெண்ணே விலகி ஓடாதே

கொடியும் படர்ந்துவரும் கண்ணா படரும் கிளை நீயே

சிரித்து சிரித்து மயக்கும் புதுமைப் பதுமையே வா

அழைத்து அணைத்து வளைத்து ரசிக்கும் ரசிகனே வா

ஆனந்தம் உல்லாசம்

வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ

ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா மனம்
தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா

பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்
தீராத மோகங்கள் தீராமல் தீரும்

ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

Adutha Varisu - Kaveriye Kavikuyiley

அடுத்த வாரிசு - ஆசை நூறு வகை

ஆசை நூறு வகை.... வாழ்வில் நூறு சுவை வா.....
போதும் போதுமென.... போதை தீரும் வரை வா....
தினம் ஆடிப்... பாடலாம்..... பல ஜோடி... சேரலாம்...
மனம் போல்... வா... கொண்டாடலாம்....

என்ன சுகம் தேவை.... எந்த விதம் தேவை...
சொல்லித்தர நான் உண்டு...
பள்ளியிலே கொஞ்சம்... பஞ்சனையில் கொஞ்சம்...
அள்ளித்தர நீயுண்டு...
இங்கு சொர்க்கம் மண்ணில் வரும்...
சொந்தம் கண்ணில் வரும் வா....
தினம் நீயே செண்டாகவே...
அங்கு நான்தான் வண்டாகுவேன்...

முத்து நகை போலே... சுற்றி வரும் பெண்கள்...
முத்தமழை தேனாக...
வந்த வரை லாபம்.... கொண்ட வரை மோகம்...
உள்ளவரை நீயாடு...
இங்கு பெண்கள் நாலுவகை.... இன்பம் நூறு வகை வா....
தினம் நீயே செண்டாகவே...
அங்கு நான்தான் வண்டாகுவேன்...

Adutha Varisu - Aasai Nooruvagai

மிஸ்டர் பாரத் - என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம்

என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன் (இசை)

என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்
உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு நடந்ததும்

{முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்

ஆ...ஆ...ஆ...}

என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்


பாவம் தீர்க்க ஒரு கேள்வி கேட்க
இங்கு தெய்வம் நேரில் வர வில்லை
பாவம் நேரம் அதற்கில்லை
குற்றவாளிகளின் கொட்டம் தீர
ஒரு சட்டம் ஒத்து வர வில்லை
தர்மம் செத்துவிட வில்லை
கட்டில் வேறு ஒரு தொட்டில் வேறு எனில் என்னவாகும் உலகம்
சொந்தமில்லை ஒரு பந்தமில்லை இது நாகரீக நரகம்
தந்தை யாரோ கானல் நீரோ தாய்ப் பால் கூட கண்ணீரோ

உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு நடந்ததும்

{முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்

ஆ...ஆ...ஆ... }

என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்


பெண்கள் யாரும் இங்கு பெண்கள் இல்லை
அவர் எச்சில் துப்பும் ஒரு கிண்ணம்
என்று தானே உனதென்னம் காலம் மாறியது காட்சி மாறியது
பெண்மை ஆளுவது திண்ணம் சீதை சாகவில்லை இன்னும்
போன ஜென்ம வினை நாளை கொள்ளும் அது அந்த நாளில் வழக்கம்
இந்த ஜென்ம வினை இன்று கொள்ளும் இது இந்த நாளில் பழக்கம்
கருவில் தானே வெளிச்சம் இல்லை மண்ணில் வந்தும் ஒளி இல்லை

உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு நடந்ததும்

{முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்

ஆ...ஆ...ஆ... 

என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்

உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு நடந்ததும்

{முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்...

ஆ...ஆ...ஆ... } 

Mr. Bharath - En Thayin Meethu Aanai

மிஸ்டர் பாரத் - காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு

யாரது 
நான் தான்
நான் தான்னா
ப்ச்.. நான் தான்
எங்கே இருக்கீங்க 
இங்கே
எங்கே 

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி 

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி
நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா
கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி

எங்கேயோ ஐஸ் ஆச்சு சிலு சிலுப்பாச்சு
இங்க தான் சூடாச்சு எரியுது மூச்சு

லல்லல்லால லல்லல்லால லல்லல்லால லா..
என்னவோ ஆயாச்சு இனி என்ன பேச்சு
பழம் தான் பழுத்தாச்சு பசி எடுத்தாச்சு

என்ன வேணும் ராசா நீ கேட்டாத் தாரேன்

ஒண்ணு ஒண்ணா நான் தானே எடுத்துக்கப் போறேன்

நீ கன்னத்த கிள்ள என்னத்தச் சொல்ல நான்
காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரனும் முன்னுக்கு வந்தேன்
நீ வாடை புடிக்கும் மல்லிகப் பூவோ
வண்ணப் புறாவோ நான்
கை தொட்டதும் தொட்டேன் சம்மதப் பட்டேன் வா

காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரணும் முன்னுக்கு வந்தேன்

பெட்டியில் பாலோடு புட்டிகளும் இருக்கு
வெண்ணையே தடவாத ரொட்டிகளும் இருக்கு

ம்ம்... ஹ ஹ ஹா ஹ ம்ம் ம்ம்...
ஒண்ணுமே வேணாமே உன்ன விட எனக்கு
உள்ளது எல்லாமே உன்னிடத்தில் இருக்கு

மத்தவங்க பாக்காட்டி கொடுப்பேன் நானே

ஹ..இப்போ இங்க ஆள் எது ரகசியம் தானே

நான் வெள்ளரிப் பிஞ்சு மெல்லவே கொஞ்சு வா

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி

ஹஹ்ஹ..காதல் செய்ய கத்துத் தரணும்
முன்னுக்கு வந்தேன்

உள்ள தான் பாரேன்மா ஊட்டி மலைச் சாரல்
உள்ளத்தில் பாயாதோ ஊசி மழைத் தூறல்

அஹஹாஹ அஹஹாஹ அஹஹாஹாஹ
என்னவோ ஏதேதோ இன்பம் பொறந்தாச்சு
சொல்லவே தெரியாம என்ன மறந்தாச்சு

இன்னும் இன்னும் ஆனந்தம் தன்னால் புரியும்

சின்னப் பொண்ணு நான் தானே எனக்கென்னத் தெரியும்

நான் உள்ளத சொல்வேன் சொன்னதச் செய்வேன் வா

காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரணும் முன்னுக்கு வந்தேன்

நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா

ஹஹ்ஹ..

கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா

காத்திருந்தேன் கதவ திறந்தேன்
உள்ளுக்கு வந்தேன் ஹஹ்ஹ..

காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி

ஹவ்..ஹா..

Mr. Bharath - Kaathirukken Kadhava

மிஸ்டர் பாரத் - என்னம்மா கண்ணு சௌக்யமா

என்னம்மா கண்ணு

சொல்லம்மா கண்ணு 

என்னம்மா கண்ணு

சொல்லம்மா கண்ணு

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

யானைக்கு சின்ன பூனை போட்டியா - துணிஞ்சு
மோதிதான் பட்ட பாடு பாத்தியா

யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் - உரசிப்
பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. அஹ

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்.. ஹா

வெள்ளிப்பணம் என்னிடத்தில் கொட்டிக்கிடக்கு
வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு

சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு
உத்தமனா நீயிருந்தா மீசை முருக்கு

சத்தியத்தை நம்பி ஓகோ கோ கோ...
லாபமில்லை தம்பி ஓகோ கோ கோ...

நிச்சயமா நீதி அஹ ஹாஹ ஹா....
வெல்லும் ஒரு தேதி அஹ ஹாஹ ஹா....

உன்னாலதான் ஆகாது வேகாது

கொஞ்சம்தானே வெந்திருக்கு மிச்சம் வேகட்டும் ஹோய்

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்


எப்பவும் நான் வச்ச குறி தப்பியதில்ல
என்னுடைய சொல்லை யாரும் தட்டியதில்ல

இன்னொருவன் என்ன வந்து தொட்டதுமில்ல
தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்ல

மீசையில மண்ணு ஓகோ கோ கோ.......
ஒட்டினதை எண்ணு அஹ ஹாஹ ஹா..

பாயும்புலி நான்தான் அஹ ஹாஹ ஹா.
பார்க்கப் போற நீதான் அஹ ஹாஹ ஹா.

சும்மாவுந்தான் பூச்சாண்டி ஏய் காட்டாதே

நம்மகிட்ட போடுறியே தப்புதாளந்தான் ஹே

என்னம்மா கண்ணு

சொல்லம்மா கண்ணு

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

யானைக்கு சின்ன பூனை போட்டியா -ஆங்- துணிஞ்சு
மோதிதான் பட்ட பாடு பாத்தியா டேய் டேய்

யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் - உரசிப்
பாருங்க மங்கிடாத தங்கம்தான்..

என்னம்மா கண்ணு சௌக்யமா ஆங்

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான் ஆங்

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு ..ஃபண்டாஸ்டிக் !

Mr. Bharath - Ennamma Kannu

படையப்பா - வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும்

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல் அப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல் அப்பா
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல் அப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல் அப்பா

வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா
வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா
கைதட்டும் உளிபட்டு நீ விடும் நெற்றித்துளி பட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா
கைதட்டும் உளிபட்டு நீ விடும் நெற்றித்துளி பட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா
வெட்டுக்கிளி அல்ல நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித்தலைகொண்டு நடையெடு படையப்பா
வெட்டுக்கிளி அல்ல நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித்தலைகொண்டு நடையெடு படையப்பா
மிக்கத் துணிவுண்டு இளைஞர்கள் பக்கத் துணையுண்டு
உடன்வர மக்கட்படையுண்டு முடிவெடு படையப்பா
வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா
 வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல் அப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல் அப்பா
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல் அப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல் அப்பா

இன்னோர் உயிரை கொன்று புசிப்பது மிருகமடா
இன்னோர் உயிரை கொன்று ரசிப்பவன் அரக்கனடா
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்
நேற்றுவரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா
நேற்றுவரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா
வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா
வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா
கைதட்டும் உளிபட்டு நீ விடும் நெற்றித்துளி பட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா
வெட்டுக்கிளி அல்ல நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித்தலைகொண்டு நடையெடு படையப்பா
வெட்டுக்கிளி அல்ல நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித்தலைகொண்டு நடையெடு படையப்பா
மிக்கத் துணிவுண்டு இளைஞர்கள் பக்கத் துணையுண்டு
உடன்வர மக்கட்படையுண்டு முடிவெடு படையப்பா
நேற்றுவரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா
நேற்றுவரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா
வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா

Padayappa - Vetri Kodi Kattu

தர்மயுத்தம் - ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

செம்மண்ணிலே தண்ணீரை போல் உண்டான சொந்தம் இது
சிந்தாமணி ஜோதியை போல் ஒன்றான பந்தம் இது
தங்கை அல்ல தங்கை அல்ல தாயானவள்
கோடி பாடல் நான் பாட பொருள் ஆனாள்
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா
முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா
என் ஆலயம் பொன் கோபுரம்
ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

ராஜாவை நான் ராஜாத்திக்கு துணையாக பார்ப்பேனேம்மா
தேவர்களின் பல்லாக்கிலே ஊர்கோலம் வைப்பேனேம்மா
மணமங்கலம் திருக்குங்குமம் வாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவேன்
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

Dharma Yuddham - Oru thanga rathathil

தர்மயுத்தம் - ஆகாய கங்கை போனதேன் மலர் சூடி

ஆகாய கங்கை பூந்தேன் மலர்சூடி
பொன் மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்கலம் நாடுதே சங்கமம்

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்கலம் நாடுவான் சங்கமம்

காதல் நெஞ்சில்…ஹே ஹே ஹே ஹே
மேள தாளம்…ஹோ ஹோ ஹோ ஹோ
காதல் நெஞ்சில்…ஹே ஹே ஹே ஹே
மேள தாளம்…ஹோ ஹோ ஹோ ஹோ
காலை…வேளை…பாடும் பூபாளம்
மன்னா இனி…உன் தோளிலே
படரும் கொடி நானே பருவப்பூ தானே
பூமஞ்சம்…உன் மேனி
எந்நாளில் அரங்கேறுமோ

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுவான் மங்கலம் நாடுவான் சங்கமம்

தேவை யாவும்…ஹே ஹே ஹே ஹே
தெரிந்த பின்னும்…ஹோ ஹோ ஹோ ஹோ
தேவை யாவும்…ஹே ஹே ஹே ஹே
தெரிந்த பின்னும்…ஹோ ஹோ ஹோ ஹோ
பூவை…நெஞ்சில்…நாணம் போராடும்
ஊர் கூடியே…உறவானதும்
தருவேன் பல நூறு பருக கனிச்சாறு
தளிரான…என் மேனி
தாங்காது உன் மோகம்

ஆகாய கங்கை பூந்தேன் மலர்சூடி
பொன் மான் விழி தேடி
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்கலம் நாடுவான் சங்கமம்
லாலலா லாலலா லாலலா லாலலா



Dharma Yuddham - Aagaya Gangai Poonthen

படிக்காதவன் (2009) - ராங்கி ரங்கம்மா... ரவிக்கை எங்கம்மா

ஆண்: ராங்கி ரங்கம்மா... ரவிக்கை எங்கம்மா...
ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாமா...
ஏங்கி என்னம்மா ஏக்கம் தானம்மா நீ வாம்மா... 

பெண்: ஆசை தோசை அப்பளம் வடடா நீ
ஆளப்பாரு அல்வா கடடா நீ

ஆண்: சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை
கத்தாமக் கத்துது கட்டிலுமேல

பெண்: குத்தாம குத்துது ஆம்பளை மீசை
பத்தாமப் பத்துது பொம்பளை ஆசை (ராங்கி ரங்கம்மா...)

(இசை...)

பெண்: நெய் வாழை போட்டுவச்சேன் வச்சேன் வா மாமா
ஆண்: எலமேல உன்னை வச்சி வச்சித்தின்னலாமா

பெண்: வாசம் பார்க்க வாசம் பார்க்க மேயாதே
நேரம் பார்த்து நெஞ்சு மேலே சாயாதே
ஆண்: பட்டா போட்ட இடம் நீதாண்டி
பங்கு கேட்கப் போறேன் நான்தாண்டி
பெண்: குத்தாம குத்துது ஆம்பளை மீசை
பத்தாமப் பத்துது பொம்பளை ஆசை

ஆண்: சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை
கத்தாமக் கத்துது கட்டிலுமேல (ராங்கி ரங்கம்மா...)

(இசை...)

ஆண்: குல்கந்து குட்டிப்போட்டு தந்த பூ நீயா
பெண்: கல்க்கண்டு கட்டில்போட்டு செஞ்ச தீனியா

ஆண்: உப்புப்போட்டு ஊர வச்ச மாம்ப்பிஞ்சு
எச்ச பண்ணிப் பிச்சித்தாறேன் நான்வந்து

பெண்: மஞ்சப்பூசி மச்சம் மறைச்சேனே
ஒன்னப் பார்த்து வெக்கம் தொலைச்சேனே 

ஆண்: சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை
கத்தாமக் கத்துது கட்டிலுமேல

பெண்: குத்தாம குத்துது ஆம்பல மீசை
பத்தாமப் பத்துது பொம்பளை ஆசை (ராங்கி ரங்கம்மா...)

Padikathavan (2009) - Raanki Rangamma

படிக்காதவன் (2009) - கடவுளும் காதலும் வேறு இல்லை

ஆண்: கடவுளும் காதலும் வேறு இல்லை
இதுவரைப் பார்த்தவர் யாருமில்லை
முதன் முதல் இரண்டையும் பார்த்தவன் நான் தானே ஏய் ஏய் ஏய் 

பெண்: காமமும் காதலும் வேறு இல்லை
எவருக்கும் இதுவரை தெரியவில்லை
முதன் முதல் இரண்டையும் புரிந்தவள் நான் தானே ஏய் ஏய் ஏய்

குழு: ஓ ஓ ஓ ஓ ஓ....
ஓ ஓ ஓ ஓ ஓ....

ஆண்: தலைகீழ் தெரியுதே வானம்
தலைமேல் உருளுதே பூமி
கலராய் தெரியுதே காற்று
எல்லாம் காதலே (கடவுளும் காதலும்...)

(இசை...)

ஆண்: ஆடைகள் அணிந்து அருவியும் நடந்தால்
உனைப்போல் இருக்கும் என்றுணர்ந்தேன்

பெண்: மீசையும் முளைத்து மின்னலும் நடந்தால்
உனைப்போல் இருக்கும் என்றுணர்ந்தேன்

ஆண்: நீ சிந்திய மௌனத்தை சேர்த்துதான்
இசைக்கிறேன் நான் ஒரு இன்னிசை

பெண்: மீசையின் வன்முறை ரசித்துத்தான்
நான் கூட பார்க்கிறேன் பண்ணிசை

ஆண்: உன் மென்மையை விரும்புதே என் மனம்
போர்க்களம் புகுந்திட வேண்டாம்

பெண்: உன் வன்மையை விரும்புதே பெண்மைதான் 
அகிம்சையை வாரிட வேண்டாம்

குழு: ஓ ஓ ஓ ஓ ஓ....
ஓ ஓ ஓ ஓ ஓ....

ஆண்: மெல்லினம் என்பது பெண்மை
வல்லினம் என்பது ஆண்மை
இடையினம் என்பது மென்மை
இதுதான் உண்மையே

(இசை...)

ஆண்: முதல் முறை உனை நான் பார்த்ததில் இருந்து
இதுவரை எனை நான் பார்த்ததில்லை

பெண்: உனைக்கண்ட இரவில் கரைந்ததில் இருந்து
இதுவரை இமைகள் மூடவில்லை

ஆண்: உன் இதழிலும் வர்ணங்கள் தெரியுதே
இது என்ன அதிசயம் சொல்லிடு

பெண்: இரவெல்லாம் பகலாய் தோன்றுதே
இது என்ன ரகசியம் சொல்லிடு

ஆண்: நீ புன்னகை சிந்திடும் நொடிகளில்
நான் சிதறிப்போகிறேன் அள்ளிடு

பெண்: உன் நுனி விரல் தீண்டிடும் நொடிகளில்
பொசுக்கென்று மலர்கிறேன் கிள்ளிடு

குழு: ஓ ஓ ஓ ஓ ஓ....
ஓ ஓ ஓ ஓ ஓ...

ஆண்: அழகிய வன்முறை செய் செய்
அதில் கொஞ்சம் இம்சைகள் வை வை
அதுதான் காதலில் மெய் மெய்
அதில் இல்லை பொய்யடி (கடவுளும் காதலும்...)

Padikathavan (2009) - Kadavulum Kadhalum

படிக்காதவன் (2009) - ஏ வெற்றிவேலா நம்ம ஆட்டம் தான்

ஆண்: ஹரோ ஹரோ ஹரோ ஹரோ ஹரோ ஹரோ ஹரோஹரா ஹோ
ஹரோ ஹரோ ஹரோ ஹரோ ஹரோ ஹரோ ஹரோஹரா ஹோ

ஆண்: ஏ வெற்றிவேலா நம்ம ஆட்டம் தான் எகுறுது தூளா
ஏ அடி ஜோரா நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா
பள்ளிக்கூடம் போகாமலே ஃபஸ்ட் க்ளாசில் பாசான கூட்டம் இது
பாடம் கீடம் படிக்காமலே நான் சொல்லும் அன்பான பாடம் இது
ஏத்திவிட்டா ஏத்திவிட்டா ஏறலாம் ஏறலாம் முன்னேறலாம்
சுத்தி சுத்தி ஒன்ன சுத்தி
ஆட்டம் தான் போட்டுத்தான் கொண்டாட்டம் தான் (ஏ வெற்றிவேலா...)

(இசை...)

குழு: எம்மோ எம்மோ எமதீதீ
எம்மோ எம்மோ எமதீதீ
எம்மோ எம்மோ எம்மோ எம்மோ எம்மோ
எம்மோ எம்மோ எமதீதீ
எம்மோ எம்மோ எமதீதீ
எம்மோ எம்மோ எம்மோ எம்மோ எம்மோ

ஆண்: எம்பேரு ஊரில் படிக்காதவன்
ஆனாலும் பொய்யா நடிக்காதவன்
ஆறேழு டிகிரி முடிக்காதவன்
யார் காலயும் வார துடிக்காதவன்

புரட்சித்தலைவரு எங்கடா படிச்சாரு
டாக்டர் பட்டம் கொடுத்தாங்கப்பா
ஐயா கலைஞரு எழுதாத எழுத்தா
எந்த காலேஜ் போனாரப்பா
நான் படிச்ச நல்ல பாடம்தான் இது இது (ஏ வெற்றிவேலா...)

(இசை...)

ஆண்: அத கொண்டா அட இத கொண்டா
ஒரு கோட்டருல அந்த மேட்டரக் கொண்டா
ஒரு மீட்டரு வந்தா எல்லா வாயும் பொளக்கும்டா
ஒரு ஃபிகரு வந்தா சும்மா தெருவு கலக்கும்டா
அந்த கிறுக்கு எனக்கு இருக்கு
ஏ இதா ஏ அதா ஏ இதா அதா இதா அதா

(இசை...)

ஆண்: டெண்டுல்கர் படிச்சது பத்தாவது
ஆனாலும் அடிச்சா நூறாகுது
அம்பானி காலேஜ் போனதில்லை
ஆனாலும் பேரு வானம்போல
சைக்கிள் கடைதான் வச்சாங்க பசங்க
ஃப்ளைட்டு கண்டு புடிச்சாங்கப்பா
தானா படிச்சி தனியாளா ஒருத்தன்
ட்ரெய்னு செஞ்சி முடிச்சானப்பா
ஏ.. அடிடா.. தெருமேளந்தான் பிப்பீ டும் டும் (ஏ வெற்றிவேலா...)

Padikathavan (2009) - Hey Vetri Velaa

படிக்காதவன் (2009) - ஏ ரோசு ரோசு ரோசு

பெண்: ஏ ரோசு ரோசு ரோசு
அழகான ரோசு நான்
ஏ பாசு பாசு பாசு
உனக்கேத்தப் பீசு நான்
ஒருவாட்டி ஒருவாட்டி எனைக்கிள்ளேண்டா
ஒரு கோடி ஒரு கோடி
பூப்பூக்கும் மேனி மேனி இதுடா 

குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
ஆண்: அட நானா தனனா தனனா
குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
ஆண்: ஓ... ஓ... ஓ...

குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
பெண்: நீ ரெடியா ரெடியா இருடா
குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
பெண்: நீ ஃபோரோ சிக்ஸோ அடிடா

ஆண்: நான் காதல் செய்யப்போறேன்
கண்ணைமூடு கையாலே
ஒன்னத்தூக்கிக் கொஞ்சப்போறேன்
கைத்தூக்கு நீ மேல (ஏ ரோசு ரோசு...)

(இசை...)

பெண்: யார நான் பாத்தாலுமே
உன்னைப் போலத்தெரியும்
உன்னாலே உன்னாலத்தான்
எந்தன் உலகம் விடியும்
உன் பேர உன் பேரத்தான்
தூங்கும் போதும் சொல்வேன்
உன் மேல உன் மேலத்தான்
உயிரா நானும் இருப்பேன்

ஆண்: இந்தக்காதல் ஜோடிதான்
சூப்பர் காம்பினேஷன் தான்
நல்லா வாழப்போறேன்தான் 
டோரா டோரா டொய்யா

குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
ஆண்: அட நானா தனனா தனனா

குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
ஆண்: ஓ... ஓ... ஓ...
குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
பெண்: ஏ மூடா மூடா இருக்கேன்
குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
பெண்: நீ ஸ்பீடா ஸ்பீடா இருடா 

ஆண்: நான் காதல் செய்யப்போறேன்
கண்ணைமூடு கையாலே
ஒன்னத்தூக்கிக் கொஞ்சப்போறேன்
கைத்தூக்கு நீ மேல (ஏ ரோசு ரோசு...)

(இசை...)

பெண்: சேலை தான் நானும் கேட்டால்
சேலைக் கடைய வாங்கு
வெயிலுன்னு நானும் சொன்னா
பகலை இரவா மாத்து
பொண்டாட்டி ஆன பின்னே போடா சொல்லமாட்டேன்
ஏங்கன்னும் என்னாங்கன்னும் அன்பாதானே அழைப்பேன்

ஆண்: இந்த வார்த்தை போதாதா
ஆளை மாத்திப் போடாதா
வானில் ஏறத் தோன்றாதா
அய்யோ அய்யோ அய்யோ

குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
ஆண்: அட நானா தனனா தனனா
குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
ஆண்: ஓ... ஓ... ஓ...

குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
பெண்: ஏ ஜோரா ஜோரா இருக்கு
குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
பெண்: ஏ போர்ரா போர்ரா டுபுக்கு

ஆண்: நான் காதல் செய்யப்போறேன்
கண்ணைமூடு கையாலே
ஒன்னத்தூக்கிக் கொஞ்சப்போறேன்
கைத்தூக்கு நீ மேல (ஏ ரோசு ரோசு...)

Padikathavan (2009) - Hey Rosu Rosu

படிக்காதவன் (2009) - அப்பாம்மா வெளையாட்டை வெளையாடிப் பாப்போமா

ஆண்: அப்பாம்மா வெளையாட்டை வெளையாடிப் பாப்போமா
செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம்
அச்சாரம் போட்டப்பின்னே அச்சம் எதுக்கு
பரிஷம் போட்டதுமே பெத்துக்கலாம்
தப்பே இல்லை ஏய் தப்பே இல்லை அய் அய் தப்பே இல்லை

பெண்: அஞ்சாமல் என் மேல கைப்போடு கைப்போடு
செல்லம் செல்லம் செல்லம்
யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை
எனக்கு மொத்தமாகக் கொடுத்துப்புடு பத்துப்புள்ளை
பத்துப்புள்ளை அய் அய் பத்துப்புள்ளை (அப்பாம்மா வெளையாட்டை...)

(இசை...)

ஆண்: எட்டுக்கால் கட்டில் செய்யச் சொல்லு
ஏழெட்டு தொட்டில்கள் கட்டச் சொல்லு

பெண்: கடிகாரம் முள்ளெல்லாம் கழட்டச் சொல்லு
காலையில் சேவலை தூங்கச் சொல்லு

ஆண்: என்னோட சம்சாரம்... அழகான மின்சாரம்...

என்னோட சம்சாரம் அழகான மின்சாரம்
நான் தொட்டா மட்டும்தான் ஆகாது சேதாரம்

பெண்: ஆடைக்குள் மேடைப்போடு... அதிலே நீயே பாடு...
அரங்கேற்றம் செய்யும் முன்னே...
பூந்து விளையாடு... (அப்பாம்மா வெளையாட்டை...)

(இசை...)

ஆண்: காம்புக்கேத் தெரியாமல் பூவைப் பறிப்பேன்
கடலுக்கேத் தெரியாமல் உப்பு எடுப்பேன்

பெண்: சாமத்தில் உன் பக்கம் சாஞ்சுப் படுப்பேன்
சம்மதம் கேட்காமல் மேஞ்சு முடிப்பேன்

ஆண்: சாமத்து சங்கீதம்... கேட்டாலே சந்தோஷம்...
சாமத்து சங்கீதம் கேட்டாலே சந்தோஷம்
தினந்தோறும் கேட்டாலும் ஒருபோதும் சலிக்காதே

பெண்: விளையாத பொட்டல் காடு... நீயே விதையப்போடு...
பூப்பூக்கும் பூரிப்போடு..
இனிமேல் உன் பாடு... (அப்பாம்மா வெளையாட்டை...)

Padikathavan (2009) - Appa Amma Vilayattu

மூன்றாம் பிறை - வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி

தானா ன னா தானா ன னா
தானா ன னா தானா ன னா
தானா ன னா தானா ன னா
தானா ன னா தானா ன னா

வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....

நேரம்

வானில் ஒரு

தீபாவளி

நாம் பாடலாம்

கீதாஞ்சலி

வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....

நேரம்

வானில் ஒரு

தீபாவளி

நாம் பாடலாம்

கீதாஞ்சலி

கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்

கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்

ஆஹ ஹா....கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்

கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்

கரையின் மீது அலைக்கென்ன மோகம்

நுரைகள் வந்து கோலம் போடுதே

தானா ன னா தானா ன னா
தானா ன னா

வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....

நேரம்

வானில் ஒரு

தீபாவளி

நாம் பாடலாம்

கீதாஞ்சலி

தத் தத் தத் துத் துத் துத் ததுத துத்து
தத் தத் தத் துத் துத் துத் ததுத துத்து
தரிகிட தரிகிட தத்
தத் தத் தத் துத் துத் துத் ததுத துத்து
தத் தத் தத் தரிகிட தரிகிட
ததுத துத்து
தத் தத் தத் தா தத் தத் தத் தா
ததும் ததும் ததும் தா
ததும் ததும் ததும் தா

ரோஜா ஒன்று இன்று அலையில் ஆடலாம்

அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்

ரோஜா ஒன்று இன்று அலையில் ஆடலாம்

அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்

பெண்ணை பார்த்தால் கரையேரும் மீன்கள்
உள்ளங்கைகள் ரோஜா தீவுகள்

தானா ன னா தானா ன னா

Moondram Pirai - Vaanengum Thanga

மூன்றாம் பிறை - நரி கதை

ம்ம் முன்பு ஒரு காலத்துல முருங்க மல காட்டுக்குள்ள
முன்பு ஒரு காலத்துல முருங்க மல காட்டுக்குள்ள
தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது
அது காடு விட்டு நாடு தேடி ஓடி வந்தது
என்ன பன்னிச்சு

ஓடி வந்திச்சி


ம்ம் ஓடி வந்த குள்ள நரி

ஹையையோ ஹையையோ 

கால் தவரி வீழ்ந்ததடி ஓடி வந்த குள்ள நரி கால் தவரி வீழ்ந்ததடி
நீல நிற சாயம் வெச்ச தொட்டி ஒன்றிலே
அது நிறம் மாறி போனதடி சின்ன பொம்பலே

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

நரி கலர் மாறி போச்சு பிறகு காடு தேடி போச்சு நரி

காடு மாறி போச்சு

ஐயோ அப்றம்

கலர் தேடி போச்சு

கெட்டுது போ கதையே மாத்திபுட்டே
நரி கலர் மாறி காட்டுக்குள்ளே போச்சா
புதுசா ஒரு மிருகம் வந்திருக்குதஎ
அப்படின்னு பாத்து பயந்து போச்சு

ஐயையோ


ஹஹஹ நான் ஆண்டவன் அனுபிய புருஷன்
ஹஹஹ ஹஹஹ உங்களை ஆள வந்திருக்கும் அரசன்
மிருங்கங்களெல்லாம் பயந்தது
அங்கு நரியின் ராஜியம் நடந்தது
ஒரு நாள் மேகம் இடித்தது மின்னல் வெடித்தது காற்று அடித்தது
காடு துடித்தது நிலம் அசைந்தது மழை பொழிந்தது ஆ


காட்டு விலங்குகள் கலங்கின கொஞ்சம் பயந்தன
உடல் நடிங்கின ஆவி ஒடிங்கின நீல நரியின் வாசல் வந்து
ஒலம் விட்டு அழுதன

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஏ ஏ நீ ஏன் அழுகுற

நீ ஏன் அழுத

நான் புலி சிங்கம் முயில் குட்டி அது மாதிரி அழுதேன் நீ ஏன் அழுகுற

அப்போ செரி ம்ம் சொல்லு

நரியும் வெளியில் வந்தது மழையில் கொஞ்சம் நனைந்தது
நீல சாயம் கரஞ்சது நரியின் வேஷம் கலஞ்சது

ஹஹஹ ஹஹஹ

நீல சாயம் வெளுத்து போச்சு

டும் டும் டும் டும்

ராஜா வேஷம் கலஞ்சு போச்சு

டும் டும் டும் டும்

நீல சாயம் என்ன ஆச்சு

ம்ம் ம்ம் நீல சாயம் வெளுத்து போச்சு

நீல சாயம் வெளுத்து போச்சு

டும் டும் டும் டும்

ராஜா வேஷம் கலஞ்சு போச்சு

டும் டும் டும் டும்

நீல சாயம் வெளுத்து போச்சு

டும் டும் டும் டும்

ராஜா வேஷம் கலஞ்சு போச்சு

டும் டும் டும் டும்

காட்ட விட்டே ஓடி போச்சு

பெ&ஆ டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்

Moondram Pirai - Narikathai

மூன்றாம் பிறை - கண்ணே கலை மானே

கண்ணே கலை மானே கன்னி மயில்லென்ன
கண்டேன் உனை நானே [௨]
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

ராரி றாரோ ஒ ராரி ரோ 
ராரி றாரோ ஒ ராரி ரோ

கண்ணே கலை மானே கன்னி மயில்லென்ன
கண்டேன் உனை நானே

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
பேதை என்றால் அதிலொரு அமைதி
நீயோ கிளி பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

கண்ணே கலை மானே கன்னி மயில்லென்ன
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரி றாரோ ஒ ராரி ரோ 
ராரி றாரோ ஒ ராரி ரோ

காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்
கனமணி உனை நான்
கருத்தினில் நிறைத்தேன்உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீ தான் என்றும் என் சந்நிதி

கண்ணே கலை மானே
கன்னி மயிலென்ன
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

ராரி றாரோ ஒ ராரி ரோ 
ராரி றாரோ ஒ ராரி ரோ
ராரி றாரோ ஒ ராரி ரோ 
ராரி றாரோ ஒ ராரி ரோ

Moondram Pirai - Kanne Kalai Maane

மூன்றாம் பிறை - பூங்காற்று புதிரானது

பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது

வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்
வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்
மரகதக் கிள்ளை மொழி பேசும்
மரகதக் கிள்ளை மொழி பேசும்

பூவானில் பொன்மோகம் உன் போலே
நாளெல்லாம் விளையாடும்

பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது

நதி எங்கு சொல்லும் கடல் தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி

என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால்
நீ எந்தன் உயிர் அன்றோ

பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது

Moondram Pirai - Poongatre

மூன்றாம் பிறை - பொன்மேனி உருகுதே என் ஆசை

பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே
பனிகாற்றிலே தர நானனானா
பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே
பனிகாற்றிலே தர நானனானா


இளமை இது எங்கும் வயது இரு விழியும் தூங்காது
இனிமை சுகம் வாங்கும் மனது இனியும் இது தாங்காது
இளமேனி வாடுதே தனலாகவே இளங்காற்று வீசுதே அனலாகவே
பதில் இல்லையோ தர நானனனன
பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே
பனிகாற்றிலே தர நானனானா


அருவி என ஆசை எழுந்து அனைக்கும் சுகம் பார்க்காதோ
உருகும் மனம் உன்னை நினந்து உணர்வுகளை சேர்க்காதோ
உனக்காக ஏங்குதே ஒரு பூவுடல் உறவாடும் இன்பமோ திருபார்கடல்
பதில் இல்லையோ தர நானனனன
பொன்மேனி உருகுதே என் ஆசை ஆ பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே
பனிகாற்றிலே தர நானனானா

Moondram Pirai - Ponmeni Uruguthey

Thursday, January 5, 2017

படிக்காதவன் (1985) - ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம்

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு
கண்மணி என் கண்மணி! (2)

பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்
பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி!

(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)

ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்!
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்!
சிந்தினேன்.. ரத்தம் சிந்தினேன்
அது எல்லாம் வீண் தானோ?
வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ?
என் வீட்டு கன்னுக்குட்ட, என்னோட மல்லுக்கட்டி,
என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி!
தீப்பட்ட காயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி..... கண்மணி!


(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)


நேத்து இவன் ஏணி இன்று இவன் ஞானி!
ஆளைக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோணி!
சொந்தமே ஒரு வானவில் அந்த வண்ணம் கொஞ்ச நேரம்!
பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்!
பணங்காசக் கண்டுபுட்டா புலிகூடப் புல்லைத் தின்னும்
கலி காலாமாச்சுதடி கண்மணி என் கண்மணி!
அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போச்சுதடி கண்மணி..... கண்மணி!

(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)

Padikkadavan (1985) - Oorai Therinchikitten

கேப்டன் மகள் - எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

(எந்த பெண்ணிலும்)

கூந்தல் முடிகள் நெற்றிப் பரப்பில்
கோலம் போடுதே அதுவா கோலம் போடுதே அதுவா
சிரிக்கும்போது கண்ணில் மின்னல்
தெறித்து ஓடுதே அதுவா தெறித்து ஓடுதே அதுவா
மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா
கழுத்தின் கீழே கவிதைகள் இரண்டு மிச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

(எந்த பெண்ணிலும்)

முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா தள்ளி உள்ளதே அதுவா
சங்கு கழுத்தை பாசிமணிகள்
தடவுகின்றதே அதுவா தடவுகின்றதே அதுவா
ஒவ்வொரு வாக்கியம் முடியும் முன்னே புன்னகை செய்வாய்
அதுவா அதுவா அதுவா
ஓரிரு வார்த்தை தப்பாய் போனால் உதடு கடிப்பாய்
அதுவா அதுவா அதுவா
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

(எந்த பெண்ணிலும்)

Captain Magal - Endha Pennilum

ராஜா சின்ன ரோஜா - சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும் - கண்ணா
உங்க பேரை ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
மேக்கப்பை ஏத்துங்க
கெட்டப்பை மாத்துங்க
செட்டப்பை மாத்தாதீங்க

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும் - கண்ணே
எந்தன் பேரை ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
மேக்கப்பை ஏத்தலாம்
கெட்டப்பை மாத்தலாம்
செட்டப்பு மாறாதம்மா

(சூப்பர் ஸ்டாரு)

உள்ளங்கை சும்மா அரிக்குது அம்மா
அதுக்கு வைத்தியம் உண்டா
போட்டல் அவிழ்க்க துடிக்குது அய்யா
இதுக்கு வைத்தியம் உண்டா
கைவசம் வைத்தியம் மெத்த யிருக்கு
காரியம் மீறினால் மெத்தை இருக்கு
கண்ணனே உன்னிடம் வம்பு எதுக்கு
கட்டலும் ரெண்டுக்கு சொல்லியிருக்கு
எங்கெங்கு சுகமென்று இலக்கணமிருக்கு

(சூப்பர் ஸ்டாரு)


நெத்தியில் புரளும் ஒத்தை முடி விலக்கி
முத்தங்கள் தர ஒரு ஆசை
கண்மணி உனது கால் கொலுசெடுத்து
கைகளில் கட்டிக்கொள்ள ஆசை

என்னமோ மாறுது புத்தி உனக்கு
என் குங்குமம் எங்கயோ ஒட்டியிருக்கு
ஆணுக்கும் பெண்ணுக்கும் பந்தமிருக்கு
நான் அள்ளவும் கிள்ளவும் சொந்தமிருக்கு
என்றாலும் அதுக்கொரு இடம்பொருள் இருக்கு

(சூப்பர் ஸ்டாரு)

Raja Chinna Roja - Super Staru

Followers