Pages

Search This Blog

Showing posts with label Cuckoo. Show all posts
Showing posts with label Cuckoo. Show all posts

Thursday, April 27, 2017

குக்கூ - கல்யாணமாம் கல்யாணம்

காதல் கண்மணியே யே யே…

கல்யாணமாம் கல்யாணம்,
காதல் கண்மணிக்கு கல்யாணம் !
கல்யாணமாம் கல்யாணம்,
காதலி பொண்ணுக்கு கல்யாணம் !

ஒண்ணா சிரிச்சு
மெய்யா பழகி
கண்ணால் பேசி
காத்துக் கிடந்தது
ஒருவர் மடியில்
ஒருவர் சரிந்து
உறங்கிடாமல்
கனவும் கண்டு
கடைசிவரைக்கும் வருவதாக
கதையும் விட்டாளே
இன்று அத்தனை எல்லாம்
மறந்துவிட்டு பறந்தும் விட்டாளே…

கல்யாணமாம் கல்யாணம்…

லலலா… லலலா…
காதல் கண்மணியே யே யே

கூறச் சேல
மடிச்சு கட்டி
குங்குமபொட்ட
நெத்தியில வச்சி

மணவறையில் அவ இருப்பா
மகாராணியா
அவள காதலிச்சவன்
கலங்கி நிற்பான் அப்பிராணியா
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்

கெட்டி மேளம்
காது பொளக்க
நாதஸ்வரம்
ஓங்கி ஒலிக்க
கச்சேரியே ரசிச்சிருப்பா
ஊரு முன்னால

அவள காதலிச்சவன்
கதறிடுவான் ஓசையில்லாம
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்

சாதி சனத்த
வணங்கிக்கிட்டே
சட்டுன்னு சட்டுன்னு
சிரிச்சுக்கிட்டு
பரிசுப் பொருள வாங்கி வப்பா
ரொம்ப ஆசையா

அவள காதலிச்சவன்
கசங்கி நிற்பான் சந்நியாசியா

வக வகயா
சமைச்சு வச்சு
வாழ இலையில்
பந்தியும் இட்டு
புருஷனுக்கு ஊட்டி விட்டுவா
போட்டோ புடிக்கத் தான்

அவள காதலிச்சவன்
மனசுக்குள்ள குண்டு வெடிக்கத்தான்

மங்களத் தாலி
கழுத்தில் ஆட
மந்திர வார்த்த
அய்யரு ஓத
காரில் ஏறி போயிடுவா
புகுந்த வீட்டுக்கு
அவள காதலிச்சவன்
வந்துடுவானே நடு ரோட்டுக்கு

கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
காதல் கண்மணியே…….யேஏஏஏஏ!

கல்யாணம் கல்யாணம்
காதலிப் பொண்ணுக்கு கல்யாணம் !



Cuckoo - Kalyanamam Kalyanam

Monday, November 21, 2016

குக்கூ - மனசுல சூரக் காத்தே

மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே
மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே

நிலவே சோறூட்டுதே கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே

வா வென்று சொல்லும் முன்னே வருகின்ற ஞாபகம்
கண்ணே உன் சொல்லில் கண்டேன் அறியாத தாய் முகம்
ரகசிய யோசனை கொடுக்குதே ரோதனை
சொல்லாத ஆசை என்னை சுட சுட காய்ச்சுதே
பொல்லாத நெஞ்சில் வந்து புது ஒளி பாய்ச்சுதே
கண்ணிலே இல்லையே காதலும்
நெஞ்சமே காதலின் தாயகம்

ஆனந்தம் பெண்ணாய் வந்தே அழகாக பேசுதே
மின்சார ரயிலும் வண்ணக் குயில் போல கூவுதே
கை தொடும் போதிலே கலங்கவும் தோணுதே
அன்பே உன் அன்பில் வீசும் கருவறை வாசமே
எப்போதும் என்னில் வீச மிதந்திடும் பாவமே
மூங்கிலே ராகமாய் மாறுதே
மூச்சிலே வான் ஒலி பாடுதே

மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே
மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே

நிலவே சோரூட்டுதே கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே

Cuckoo - Manasula soora kaathe

குக்கூ - கோடையில மழ போல

கோடையில மழ போல
என்னுயிரே நீயிருக்க
வாடையிலும் அனலாக
வருவேன் உன் கூட

காலை இளங்கதிராக
கண்ணருகே நீ இருக்க
மாலைவரும் நிலவாகி
தொடுவேன் காத்தோட

போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ ?
இன்னும் கோடி சென்மம்
கூட வரும் உறவோ…?

போன…

காரியம் நூறு செய்து
மண்ணில் வாழ்வது பெரிது இல்லை
உந்தன் காலடி தடமறிந்து
செல்லும் பாதைகள் முடிவதில்லை

ஆலயம் தேடி சென்று
செய்யும் பூசைகள் தேவை இல்லை
உன்னதன் கைவிரல் தொடும் பொழுது
துன்பம் தொலைவிலும் வருவதில்லை

உறவெது வடிவெதுவோ? – கொண்ட
உறவுகள் உணர்ந்து தொட !
இருளெது ஒளியெதுவோ? – ரெண்டு
இருதயம் கலந்து விட!

மாறிடும் யாவும் இன்று
சொல்லும் வார்த்தையில் நெசமும் இல்லை
உண்மை காதலை பொருத்தமட்டில்
எந்த மாற்றமும் நிகழ்வதில்லை

ஆசைகள் தீரும் மட்டும்
கொள்ளும் அன்பினில் அழகில்லை
வெந்து போகிற வேலையிலும்
அன்பு தீ என்றும் அணைவதில்லை

உறவெது வடிவெதுவோ ? – கொண்ட
உறவுகள் உணர்ந்து தொட !
இருளெது ஒளியெதுவோ ? – ரெண்டு
இருதயம் கலந்து விட!

கோடையில மழ போல….

போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ ?
இன்னும் கோடி சென்மம்
கூட வரும் உறவோ…?

Cuckoo - Kodaiyila Malai

குக்கூ - ஆகாசத்த நான் பாக்குறேன்

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

கண்ணால எதையும்
காணாத இமைதான்
கண்ணீரப் பாத்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாப்பேனே

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

ஊரு கண்ணு படும்படி
உறவாடும் கனவே தொடருதே
நனவாகும் கனவே அருகிலே
உன்னத் தூக்கி சுமப்பேன் கருவிலே
மடிவாசம் போதும் உறங்கவே
நீதானே சாகா வனங்களே
தமிழே....தமிழே...
வருவேனே உன் கரமாய்
கொடியே....கொடியே
அழுறேனே ஆன்ந்தமாய்

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

காம்பத் தேடும் குழந்தையா
உன்னைத் தேடும் உசிரு பசியில
கோடித் தேரில் உன்னை மட்டும்
அறிவேனே தொடுகிற மொழியில
பேரன்பு போல ஏதுமில்ல
நீ போதும் நானும் ஏழையில்ல
அழகா.......அழகா
குயிலாவேன் உன் தோளில்
அழகி....அழகி
இது போதும் வாழ்நாளில்

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

கண்ணால எதையும்
காணாத இமைதான்
கண்ணீரப் பாத்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாப்பேனே

Cuckoo - Agasatha

Followers