Pages

Search This Blog

Showing posts with label Iniavaley. Show all posts
Showing posts with label Iniavaley. Show all posts

Friday, February 1, 2019

இனியவளே - மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா

மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா
உயிரோடு கலந்தவளா
இவள் தானா இவள் தானா இவள் தானா
மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா
எனை ஆளும் மன்னவரா
இவர் தானா இவர் தானா இவர் தானா
வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா
கண்களிலே காதலர்கள் போர்க்களமா

உன் தீண்டலில் உயிர் வரை வேர்க்கிறேன்
என் இரவினை நீளமாய் கேட்கிறேன்
உன் நாணத்தை ஜாசகம் கேட்கிறேன்
பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன்
இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும்
தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும்
மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை
பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம்

உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன்
நான் மறுபடி மழலையாய் ஆகிறேன்
வெண்சாமரம் இமைகளால் வீசுவேன்
என் கண்களால் காதலை பேசுவேன்
சந்தன சிலையா செய்தது மன்மத கலையா
சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா
காதலே காதலே புது கவிதையா தாய்மடி
வாய் மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே



Iniavaley - Malaroadu Piranthavala

இனியவளே - தென்றல் எந்தன் நடையை கேட்டது தத்தோம் தகதோம்

தென்றல் எந்தன் நடையை கேட்டது தத்தோம் தகதோம்
தாழம்பூவின் வாசம் கேட்டேன் தித்தோம் திகிதோம்
மூன்றாம் பிறை என் நகங்கள் கேட்டது தத்தோம் தகதோம்
முகிலில் ஆட ஊஞ்சல் கேட்டேன் தித்தோம் திகிதோம்
இரவுகள் என்னிடம் கண்மை கேட்டன தத்தோம் தகதோம்
ரசிக்கும்படி ஒரு ரகசியம் கேட்டேன் தித்தோம் திகிதோம்
அழைக்காத போதும் நிலவு வந்தது
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்

பகலில் வராத பால் நிலவே ஏன் என்னைத்தேடி வந்தாய்
எதையோ கேட்க ஏங்கி நின்றாய்
இரவில் வராத சூரியனே ஏன் என்னைத்தேடி வந்தாய்
எதை இரவல் வாங்க நின்றாய்

ஆஆ...சாரல் மழை பூவாகி சந்தமுடன் தானாடும்
தங்க நிற நூலாகி தாவணியை தான் சேரும்
வா வா இன்றுதான் ஒரு மாலை நேரம் வாய்ப்பிருக்கு
வாசல் கோலம் வண்ணம் கேட்டது தத்தோம் தகதோம்
காற்றில் கலையாதிருக்க சொன்னேன் தித்தோம் திகிதோம்

மண்ணைத் தொடாத மழைத்துளியே நான் உன்னை ஏந்தி நின்றேன்
முத்து மாலையாக்கிக் கொண்டேன்
வண்ணம் கெடாத மேகங்களே ஏன் வானில் காய வேண்டும்
எந்தன் சேலை ஆக வேண்டும்

ஆஆ...துள்ளி வரும் ஆற்றோடு தோணிகளில் நான் ஆட
தள்ளிவிடும் காற்றோடு தோப்புகளில் நான் ஓட
ஆ...ஹா அன்புதான் நம் பாதை எங்கும் பூத்திருக்கு

குயில்கள் எந்தன் தமிழை கேட்டன தத்தோம் தகதோம்
உலகம் கேட்க கூவச்சொன்னேன் தித்தோம் திகிதோம்
மயில்கள் எந்தன் சாயல் கேட்டன தத்தோம் தகதோம்
மழையில் விரிக்க தோகை கேட்டேன் தித்தோம் திகிதோம்
மாலை நேரம் மெல்ல மாறிப்போனது தத்தோம் திகிதோம்
மயக்க போர்வையில் சாய்ந்து கொண்டது தித்தோம் திகிதோம்
துணையாக தூங்க இரவும் வந்தது
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்

என்னையும் உன்னையும் ஏன் பிரித்தார்
இடையினில் கோடுகள் ஏன் கிழித்தார்
கனவுகள் புகையென ஆனதேன்
காற்றில் சேர்ந்தே போனதேன்



Iniavaley - Thendral Enthan

இனியவளே - உயிரே உயிரே நலம் தானா

ஆண்: உயிரே உயிரே நலம் தானா ?
சம்மதம் தானா ? நிஜம் தானா? நிம்மதி தானா?
அழகே நிலவின் முதுகில் கவிதை எழுதி
ரசித்திடவா ...

பெண்: உயிரே உயிரே எனை நானே தந்து விட்டேனே
தொடுவானைத் தொட்டுவிட்டேனே
அன்பே நிலவைப் பிடித்து உயிரை மடித்து
கொடுத்திடவா...

ஆண்: உயிரே உயிரே ...

ஆண்: மூச்சுவிடும் தாஜ்மஹாலை நான் பார்க்க
விட்டு விட்டு தாமரைகள் தான் பூக்க

பெண்: மச்சம் மட்டும் தொட்டுக் கொள்ள நீ கேட்க
மிச்சயிடம் கோபப்பட்டு தான் பார்க்க

ஆண்: மின்மினியே இதோ இதோ தான்
கண்களும் பேசும் காதல் விழா தான்
சந்தனமே இதோ இதோ தான்
குங்குமம் பூசும் காதல் விழா தான்

பெண்: என் ஜீவனே ..... என் ஜீவனே....
உன் பார்வையின் போதையில் நான்
அழவே

ஆண்: உயிரே உயிரே குடை தேடி அலைந்தேனே
உன்னை மூடி நனைந்தேனே
அன்பே கனவை அழைத்துப் பரிசுக் கொடுத்து
அனுப்பிடவா ....

பெண்: உயிரே உயிரே

பெண்: சின்ன சின்ன கன்னக்குழி தேனூட்ட
உள்ளுக்குள்ளே உன்னைத் தள்ளி தாழ்பூட்ட

ஆண்: அடிக்கடி தொட்டுக்கொள்ளும் இமைப் போலே
சத்தமின்றி சந்திக்கணும் இனிமேலே

பெண்: வண்டினமே இங்கே இங்கே தான்
மொட்டுகள் கூசும் நெருங்கி வராதே
செவ்விதழே இங்கே இங்கே தான்
முத்தங்கள் வேணும் உறங்கிவிடாதே

ஆண்: என் ஜீவனே... என் ஜீவனே...
கிறங்கிய விழிகளில் இளம்பிறை பார்த்தேன்

உயிரே உயிரே உனைத்தானே உணர்வேனே
உடைப்போலே அணிந்தேனே
அன்பே நீண்ட பகலில் கூந்தல் இரவில்
மறைத்திடவா...

ஆண்: உயிரே உயிரே ...



Iniavaley - Uyire Uyirea

Followers