Pages

Search This Blog

Showing posts with label Kavalai Vendam. Show all posts
Showing posts with label Kavalai Vendam. Show all posts

Tuesday, April 25, 2017

கவலை வேண்டாம் - நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி

என் நிழலை நீ பிரிந்தால்      
என் உயிர் பிரிந்திடக்கண்டேனே     
என் மனதின் கரைகளிலே      
உன் அலை வருவதைக்கண்டேனே     
நான் உயிர் வாழும் இனி ஒரு நாளும்     
உன்னை மறவேன் அன்பே…     
நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு     
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு     
நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு     
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு     
நான் இருந்தாலும் உன்னோடு என் ஆயுள் நீளுமடி....     
     
பார்க்கும் திசையெல்லாம் நீ வரைந்த காதல் தோன்றுதே     
சேர்க்கும் விதியென்றே நான் நினைக்க காலம் ஓடுதே     
என் கண்ணீரிலும் உன் சிரிப்பைதான் தேடிப்பார்க்கிறேன்     
நான் கண்மூடியே உன் விழிகளில் மூழ்கிப்போகிறேன்..  (நீ தொலை)

Kavalai Vendam - Nee Tholaindhaayo

கவலை வேண்டாம் - ஜன்னல் காற்றுப் போலவே

ஜன்னல் காற்றுப் போலவே     
என் நெஞ்சில் வந்தியே     
மின்னல் கீற்றுப் போலவே     
உன் எண்ணம் தாக்குதே     
உன் முகவரியை நீ தரவேண்டாம்     
உன் வாசம் போதும்     
கண் மயக்கியதை அன்பே அன்பே      
என் சுவாசம் போக்குமே     
என் பல்சை ஏத்திட்டுப் போறியே     
நீ போறியே மீன் போலவே     
ஏக்கத்தை ஏத்திட்டுப் போறியே ரதியே… ஏ… ஏ…     
என் என் பல்சை ஏத்திட்டுப் போறியே     
நீ போறியே மீன் போலவே     
ஏக்கத்தை ஏத்திட்டுப் போறியேய்     
நீ போறியே ரதியே ஏ… ஏ… ஏ… ஏ… ஏ…      
     
நெஞ்சேய் என் நெஞ்சேய் உனக்காகத் துடிக்கிறதே ஹேய்     
சொல்லு ஆசைகள் என்ன நான் சொன்னால் தருவாயா     
உன்னால் எனக்குள்ளேய் ஏதேதோ நடக்கிறதேய்     
உன் வாழ்வின் கோடி தேடல்கள்     
நான் தீண்டி சேர்க்கவா……      (என் பல்சை)
     
என்னப்பத்தி உனக்கு உனக்குத்தானே தெரியும்     
முகவரிகள் தேவையில்லை கனவுல புரியும்     
கண்ணைக்கண்ணைக் கட்டிக்கட்டி வெள்ளையான     
பட்டாம் பூச்சி பறக்குது     
உன்னை சுத்தி உலகமே தெரியுது     
புரியுதா அறியுதா கனியே மனம்முடிக்கவா     
பனியே அமுதே     
     
வரியாய் கவிகவியாய் எழுதுவேன் பெண்மானே     
உனைத்தான் நான் பிடிப்பேன்     
     
உன் முகவரியை நீ தரவேண்டாம்     
உன் வாசம் போதும்     
கண் மயக்கியதை அன்பே அன்பே      
என் சுவாசம் போக்கும்

Kavalai Vendam - Kavalai Vendam

கவலை வேண்டாம் - உன் காதல் இருந்தால் போதும்

என்னைத்தேடி வந்தா வெள்ளத்தாமர     
உன்னால் நேரம் என்னால் போச்சே     
உன்னோட அழகால ஒன்னும் தோனல     
கொஞ்சம் தல சுத்திப் போச்சே     
ஒரு பார்வையிலே உயிர் போனதடி     
உன்னோடுதான் விட்டுப்போகாதே     
நான் வாழ்ந்திட…   
உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும்…     
உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும்…     
உன் காதல் இருந்தால் போதும்     
ஹோ… ம்   
போ…து…ம்… ம்…      
ஹோ… ம்… 
ஏஹே ஹே ஹே…    
     
என் கால் ரெண்டும் வழித்தேட உன் வாசல் வந்தேன்     
அது ஏன் என்று தெரியாமல் தடுமாறினேன்     
வேஷம் போட வேண்டாம் என்று      
என் நெஞ்சம் தான் சொல்கின்றேன்     
     
என் ஆகாயம் பூலோகம் எல்லாமே நீதான்     
உன் மூச்சோடு மூச்சாக நான் சேரவா     
வெள்ளை காகிதம் நான் காவியம் ஆனேனோ     
உனைப் பார்த்தால்……     
நான் என்னிடம் தோர்க்கிறேன்     
தீ என தெரிந்தும் கேட்கிறேன்     
கண் விழித்திடப் பார்க்கிறேன்     
நான் தீராத கனவொன்றில் தான் தொலைகிறேன்      
காதல் இருந்தால் போதும் போதும் போதும்…     
காதல் இருந்தால் போதும் போதும் போதும்…     
உன் காதல் இருந்தால் போதும்     
ஹோ… ம்…    
போ…து…ம்… ம்…     
என்னைத்தேடி வந்தா வெள்ளத்தாமர     
உன்னால் நேரம் என்னால் போச்சே     
உன்னோட அழகால ஒன்னும் தோனல     
கொஞ்சம் தல சுத்திப் போச்சே     
ஒரு பார்வையிலே உயிர் போனதடி     
உன்னோடுதான் விட்டுப்போகாதே     
நான் வாழ்ந்திட… (உன் காதல்)

Kavalai Vendam - Un Kaadhal Irundhal

Followers