Pages

Search This Blog

Showing posts with label Seethakaathi. Show all posts
Showing posts with label Seethakaathi. Show all posts

Friday, December 28, 2018

சீதக்காதி - அய்யா

சுற்றும் புவி முற்றும்
புகழ் எட்டும்
இவன் முகம் காட்ட
பற்றும் உயிர் அற்றும்
திறன் திரை மேவிடும்
முன்னும் இதன் பின்னும்
இனையில்லாதொரு வினையற்ற
கொட்டும் விழி காட்டும்
கலை அரங்கேரிடும்

கற்றை ஒளி பற்றி
திகல் வித்தை அதில் கலந்துட்ட
கட்டும் கை தட்டும்
ஒளி கடல் மீறிடும்
கட்டும் கரை முட்டும்
பெரு வெள்ளம் இவர் புரண்டோட
முற்றா வேர் பட்றா வரை
அரண்றோடிடும்

தீரா ஊற்றாக
மாறா மாற்றாக
சேரா ஆழங்கள் சென்று சேர்ந்தான்
தீரா ஊற்றாக
மாறா மாற்றாக
வாழாமல் வாழ்வானான் நான் நான்

{அய்யா
ஆதவனை கையாலே மறைப்பான் எவன்
அய்யா
ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன்
அய்யா .
இறப்பை கடந்து இருளை கிழித்து
விடியல் தந்து எழுவான் இவன்
அய்யா ஹஹஹஹா} (2)

மீன் கொண்ட வானத்தில்
(மீன் கொண்ட வானத்தில்)
மின் கொண்ட முகிலாக
(மின் கொண்ட முகிலாக)
சூழாலி ஒலியெல்லாம்
(சூழாலி ஒலியெல்லாம்)
சூழ் கொண்ட சங்காக
(சூழ் கொண்ட சங்காக)
கான் கொண்ட மரமெல்லாம்
கான் கொண்ட மரமெல்லாம்)
தான் கொண்ட விதையாக
(தான் கொண்ட விதையாக)
மிசை வீசும் காற்றை
மிசை வீசும் காற்றை)
தேன் இசையாக்கும் குழலாக

மீன் கொண்ட வானத்தில்
மின் கொண்ட முகிலாக
சூழாலி ஒலியெல்லாம்
சூழ் கொண்ட சங்காக
கான் கொண்ட மரமெல்லாம்
தான் கொண்ட விதையாக
மிசை வீசும் காற்றை
தேன் இசையாக்கும் குழலாக

சில்லு தீர்ந்து சிலையாக
சிதறடிக்கும் புயலாக
ஆர்பரிக்கும் அலையாக
மீண்டுயிர்த்து நிலையாக

தீண்டாத தீ குச்சி
குளிரையும் நெருப்பாக
உயிர் வரையறை
உன் சிறையறையேனும்
பழங்கதை தூளாக

ஆதவனை கையாலே மறைப்பான்
எவன்
அய்யா
ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன்
அய்யா .
இறப்பை கடந்து இருளை கிழித்து
விடியல் தந்து எழுவான் இவன்
அய்யா ஹஹஹஹா

அய்யா
ஆதவனை கையாலே மறைப்பான் எவன்
அய்யா
ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன்
அய்யா .
இறப்பை கடந்து இருளை கிழித்து
விடியல் தந்து எழுவான் இவன்
அய்யா ஹஹஹஹா



Seethakaathi - Ayya

சீதக்காதி - அவன் துகள் நீயா

அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா

அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா

பொறியாய் சுடராய்
உன் விழிகளில் அவன் ஒளி
அசைவாய் ஒலியாய்
உன் உடலெங்கும் அவன் மொழி

தீ தின்ற பிறகும்
அவன் தீரவில்லையே துளியும்
மண் உண்ட பிறகும்
உன் உள்ளே உள்ளே
அவன் முளைக்கிறான்

உன் புன்னகை அவனே
நீ பார்க்கும் பார்வை அது அவனே
உன் வார்த்தைகள் அவனே
நீ வாழும் வாழ்க்கையே
அவன் அவன்

உன் பாதையும் அவனே
உன் பாதை பூக்களும் அவனே
பூ வாசமும் அவனே
நீ கொள்ளும் சுவாசமும்
அவன் அவன்

பொறியாய் சுடராய்
உன் விழிகளில் அவன் ஒளி
அசைவாய் ஒலியாய்
உன் உடலெங்கும் அவன் மொழி

தீ தின்ற பிறகும்
அவன் தீரவில்லையே துளியும்
மண் உண்ட பிறகும்
உன் உள்ளே உள்ளே
அவன் முளைக்கிறான்

அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா

அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா

நீ ஒரு நாடகம்
குறு நாடகம்
புது மேடையாய் அவன்

நீயோ ஒரு பொம்மையாய்
உயிர் பொம்மையாய்
உன்னை அசைப்பவன் அவன்
நீங்கா கனவாய்
உன் கண்ணில் நீளுகின்றான்
முடியா ஓர் இசையாய்
உன் காதில் வாழுகின்றான்
பாவம் அம்மரணம்
அதன் வேலை கெடுக்கிறான்
அடடா இறந்தும் இறந்தும் இறந்தும்
கொடுக்கிறான்

சீதக்காதி

பொறியாய் சுடராய்
உன் விழிகளில் அவன் ஒளி
அசைவாய் ஒலியாய்
உன் உடலெங்கும் அவன் மொழி

தீ தின்ற பிறகும்
அவன் தீரவில்லையே துளியும்
மண் உண்ட பிறகும்
உன் உள்ளே உள்ளே
அவன் முளைக்கிறான்

உன் புன்னகை அவனே
நீ பார்க்கும் பார்வை அது அவனே
உன் வார்த்தைகள் அவனே
நீ வாழும் வாழ்க்கையே
அவன் அவன்

உன் பாதையும் அவனே
உன் பாதை பூக்களும் அவனே
பூ வாசமும் அவனே
நீ கொள்ளும் சுவாசமும்
அவன் அவன்

அவன் துகள் நீயா
அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா
அவனே நீயா} (2)



Seethakaathi - Avan

சீதக்காதி - ஐயாவே எதை பார்க்கிறாய் நெடு நேரமாய்

ஐயாவே எதை பார்க்கிறாய்
நெடு நேரமாய்
வாழ்ந்ததெல்லாம் எதிரே
சருகாய் வீழ்கிறதோ

அத்தனை பாசமும்
நாள்பட்ட ஏக்கமும்
ஓர் நொடியில் துளியாய்
தனியாய் காய்கிறதோ

பாறையின் மேல் பெரு வெளிச்சம்
தங்கி சென்றே போகிறதே
தியாகமெல்லாம் தலை குனிந்தே
மௌனங்களாய் அழுகிறதே
உயிர் சாவில் முடிவதில்லை

காணலே மெய்யாக
பழகிவிட்டால் இங்கே
ஈரமாய் தொடும் நதிகள்
சிலிர்பதுண்டோ உள்ளேஏ

ஆழத்தின் ஆழங்களை
பார்த்த மௌனத்தினை
ஓசை ஜெய்பதுண்டோ
காலத்தின் தூரம் வரை
வேர்கள் விட்ட மரம்
சாவில் உதிர்வதுண்டோ

தன்னந்தனியே அழுது விட்டே
போனதெங்கே கூமானே
ஒப்பனை தான் கலைந்த பின்னே
உன் முகமாய் ஆனாயோ

கலை சாவை மதிப்பதில்லை
ஏகானந்த மலர் சாய்ந்ததே
எரி மீதிலே
வேகிறதே தனியாய்
இது தான் முடிவா



Seethakaathi - Uyir

சீதக்காதி - கோழி ஒன்னு கால் எடுத்து பூமி பந்த தோற்கடிக்க

ஆண் கோழி ஒன்னு கால் எடுத்து
பூமி பந்த தோற்கடிக்க
ஆடுன்கின்ற நாட்டியத்த
நின்னு பாருங்க

பாம்பு புத்து தானும்
உச்சி கோபுரத்த போல எண்ணி
போடுகின்ற நாடக்கத்த
கொஞ்சம் கேளுங்க

நூல் அறுந்து போன பட்டம்
வானம் எட்ட தாவுகின்ற
கேடு கெட்ட கேவலத்த
சொல்ல வேணுங்க

காலம் நம்ம காலமின்னு
ஆணவத்தில் பேசி நிக்கும்
ஏழரைக்கு ஏகப்பட்ட
லொள்ளு தானுங்க

வேஷம் போட்ட
அர நெல்லிகாயும்
ஆப்பிள் ஆகாதே
ஊசி கூர்வாளாக மாறிடாதே

கோழி ஒன்னு கால் எடுத்து
பூமி பந்த தோற்கடிக்க
ஆடுன்கின்ற நாட்டியத்த
நின்னு பாருங்க

பாம்பு புத்து தானும்
உச்சி கோபுரத்த போல எண்ணி
போடுகின்ற நாடக்கத்த
கொஞ்சம் கேளுங்க

நூல் அறுந்து போன பட்டம்
வானம் எட்ட தாவுகின்ற
கேடு கெட்ட கேவலத்த
சொல்ல வேணுங்க

காலம் நம்ம காலமின்னு
ஆணவத்தில் பேசி நிக்கும்
ஏழரைக்கு ஏகப்பட்ட
லொள்ளு தானுங்க

குருக்கத்தி பூவும் ரோசாவா
தன்ன எண்ணிக்கொள்ள கூடாதே
கயிர் இல்லாமா எந்நாளும்
பொன்னான ஊஞ்சல் ஆடாதே

பொடி மட்ட நாளும் பீங்கான
பழி சொல்ல ஊரும் கேட்காதே
ரசம் இல்லாத கண்ணாடி
நம்மோட மூஞ்ச காட்டாதே

நீர் வத்தி போன பின்னாலே
மீன் வட்டம் போட எண்ணாதே
ஈ மொச்ச பண்டம் கெட்டாலே
நீ கூரு கட்டி விக்காதே

தானா யாரும்
வரவில்லை நீயும் ஆட்டம் போடாதே
வேரை விட்டு ஊரு நாளும் நீங்கிடாதே

கோழி ஒன்னு கால் எடுத்து
பூமி பந்த தோற்கடிக்க
ஆடுன்கின்ற நாட்டியத்த
நின்னு பாருங்க

பாம்பு புத்து தானும்
உச்சி கோபுரத்த போல எண்ணி
போடுகின்ற நாடக்கத்த
கொஞ்சம் கேளுங்க

நூல் அறுந்து போன பட்டம்
வானம் எட்ட தாவுகின்ற
கேடு கெட்ட கேவலத்த
சொல்ல வேணுங்க

காலம் நம்ம காலமின்னு
ஆணவத்தில் பேசி நிக்கும்
ஏழரைக்கு ஏகப்பட்ட
லொள்ளு தானுங்க



Seethakaathi - Kozhi Onnu Kaal Eduthu

Followers