Pages

Search This Blog

Showing posts with label Pooveli. Show all posts
Showing posts with label Pooveli. Show all posts

Saturday, December 31, 2016

பூவேலி - ஒரு பூ எழுதும் கவிதை

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஒவியமாய் விரியும்

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஒவியமாய் விரியும்

உலகத்தின் மெலிய தாள்களின் மேலே
இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்
அழகிய இதழ் கொண்டு வா
முத்தம் என்பது நாம் காணும் தியானம
அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்

ஊசி துளைத்த குமிழிகள் போலே
உடைவது உடைவது வாழ்வு

காற்று துரத்தும் கடலலை போல
தொடர்வது தொடர்வது காதல்

உடல் மீது கொஞ்ச காலம்
இளைப்பாறும் காதலே
உடல் தீர்ந்து போன பின்னும்
உயிர் வாழும் காதலே

காலங்கள் எங்கு தீரும்
அதுவரை செல்வோமா
காலங்கள் தீருமிடத்தில்
புது ஜென்மம் கொள்வோமா

உன் மூச்சிலே நானும் என் மூச்சிலே நீயும்
காற்றில் ஒலிகள் கேட்கும்
வரையில் காதல் கொள்வோமா?

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்

நதி நீர் எழுதும் கவிதை
அலை ஒவியமாய் விரியும்

கண்கள் இருக்கும் பேர்களுகெல்லாம்
சூரியன் மட்டும் சொந்தம்

காதல் இருக்கும் பேர்களுகெல்லாம்
சூரியக்குடும்பம் சொந்தம்

உலகம் திறந்து வைத்த முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான்
இன்னும் அந்த தேடல் தான்

சுடர் கோடி எதற்கு வந்தோம்
தொலைத்ததை காணத்தான்
உதட்டினில் தொடங்கி அந்த உயிர் சென்று தேட தான்

நீ என்பதும் பாதி நான் என்பதும் பாதி
உன்னில் என்னை என்னில் உன்னை
ஊற்றி கொள்வோமா?

ஒரு பூ எழுதும் கவிதை

சிறு தேன் துளியாய் உருளும்

நதி நீர் எழுதும் கவிதை

அலை ஒவியமாய் விரியும்

உலகத்தின் மெலிய தாள்களின் மேலே

இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்

அழகிய இதழ் கொண்டு வா

முத்தம் என்பது நாம் காணும் தியானம்

அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்

முத்தம் என்பது நாம் காணும் தியானம்
அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்

Pooveli - Oru Poo Ezhuthum

பூவேலி - இதற்கு பெயர் தான் காதலா

காண்பதெல்லாம் தலைகீழ் தோற்றம்
என்னோடு ஏனோ இத்தனை மாற்றம்

பூமி என்பது தூரமானதே
நட்ஷத்திரங்கள் பாக்கமானதே
மனிதர் பேசும் பாஷை மறந்தே
பறவைகளோடு பேச தோணுதே
காணும் பிம்பம் கண்ணில் மறைந்து
காணா உருவம் கண்ணில் தோணுதே
அன்பு திருமுகம் தேடி தேடி
கண்கள் என்னை தாண்டி போகுதே

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

புரியா மொழியோ புரிந்து போகும்
புரிந்த மொழியோ மறந்து போகும்
சரியாத உடை சரிசெய்வதாக
சரியாய் இருந்தும் சரிய செய்யும்
நிலவை போலவே இரவும் பிடிக்கும்
உணவை போலவே பசியும் ருசிக்கும்
எந்த பேனா வாங்கும் பொழுதும்
என்னவள் பெயர் தான் எழுதி பார்க்கும்

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

கண்ணாடி முன்னே பேசி பார்த்தால்
வார்தைகள் எல்லாம் முந்தி அடிக்கும்
முன்னாடி வந்து பேசும் பொழுதோ
வார்தைகள் எல்லாம் நொண்டி அடிக்கும்
பாதி பார்வை பார்கும் போதே
பட்டாம் பூச்சிகள் நெஞ்சில் பறக்கும்
கண்ணில் இருந்தும் கவிதை முளைக்கும்
ககிதம் மணக்கும் கண்ணீர் இனிக்கும்

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

கண்கள் என்னும் இரண்டு ஜன்னல்
திறந்து வைத்தும் மூடி கொள்ளும்
இதயம் என்னும் ஒற்றை கதவு
மூடி வைத்தும் திறந்து கொள்ளும்
நீ என்பது நீ மட்டும் அல்ல
மூளையின் மூலையில் ஒரு குரல் கேட்கும்
நான் என்பது இன்னோரு பாதி
யார் என்பது இதயம் கேட்கும்

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

Pooveli - Itharku Peyar Than

Followers