Pages

Search This Blog

Showing posts with label Maalaiyitta Mangai. Show all posts
Showing posts with label Maalaiyitta Mangai. Show all posts

Thursday, November 24, 2016

மாலையிட்ட மங்கை - செந்தமிழ்த் தேன்மொழியாள்

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே...
நின்றது போல் நின்றாள் நெடுதூரம் பறந்தாள்
நிற்குமோ நிலைக்குமோ நெஞ்சம் 
மணம் பெறுமோ வாழ்வே...

செந்தமிழ்த் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
[நிலாவென...]
பைங்கனி இதழ்களில் பழரசம் தருவாள் 
பருகிட தலைகுனிவாள்

காற்றினில் பிறந்தவளோ 
புதிதாய் கற்பனை வடித்தவளோ...
[காற்றினில்...]
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்தி பூச்சரமோ?
[அவள் செந்தமிழ்த்...]

கண்களில் நீலம் விளைத்தவளோ
அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கே பெண்ணே 
பேராசை கொள்ளும் 
பேரழகெல்லாம் படைத்தவளோ..
[செந்தமிழ்த்...]

Maalaiyitta Mangai - Sendhamizh Thenmozhiyaal

Followers