Pages

Search This Blog

Wednesday, November 30, 2016

இந்திரா - தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?

(தொடத்தொட)

அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்
நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்
காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்னப்பின்ன நடுக்கமென்ன

(தொடத்தொட)

பனிதனில் குளித்த பால்முகம் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்
இதழ் மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே

(தொடத்தொட)

Indira - Thoda Thoda

இந்திரா - ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து

பச்ச பாவக்கா…பளபளங்க…பழனி பச்ச…மினுமினுங்க…
செங்கருட்டி…செவத்தபுள்ள…கின்னாவந்தா…கினுகட்டி…
உடும்பு…துடுப்பு…மகா…சுகா…
பா…பரங்கி…எட்டுமண்…குண்டுமண்

ஏ ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க ¦ºளக்கியமா
ஏ அரிசிக்கட ஐய்யாவுப் பொண்ணு ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு ¦ºளக்கியமா

பழைய பாக்கி இருக்குதா பையன் மனசு துடிக்குதா (2)

பட்டணத்து ஸ்டைலக்கண்டா பட்டிக்காடு கசந்திடுமா
பள்ளிக்கூட நெனப்பிருக்கே பாவி மனம் மறந்திடுமா
பட்டுப்பாவாடக்கு நெஞ்சு துடிக்குது
ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது

(ஓடக்கார)

குண்டுப் பொண்ணு கோமலவள்ளி என்னானா என்னானா
ரெட்டப்புள்ள பொறந்ததுமே நூலானா நூலானா
குள்ள வாத்து டீச்சர் கனகா
ஐயோ…பார்வையில பச்ச மொளகா
மேற்படிப்பு படிக்கப் போனா மேற்கொண்டு என்ன ஆனா
மொத்தத்துல மூணு மார்க்கில் ஃபெயிலானா ஃபெயிலானா
ஒல்லிக்குச்சி ராஜமீனா ஓடிப்போனா என்ன ஆனா
பூசணிக்கா வயிறு வாங்கித் திரும்பி வந்தாளே

(ஏ ஓடக்கார)

அம்மன் கோயில் வேப்பமரம் என்னாச்சு என்னாச்சு
சாதிச் சண்ட கலவரத்துல ரெண்டாச்சு ரெண்டாச்சு
மேலத்தெரு கருப்பையாவும் கீழத்தெரு செவத்தம்மாளும்
சோளக்காட்டு மூலையில ஜோடிசேர்ந்த கதையென்னாச்சு
மூத்த பொண்ணு வயசுக்குத்தான் வந்தாச்சு வந்தாச்சு
மத்த கதை எனக்கெதுக்கு எங்குருவி எப்படி இருக்கு
தாவிச்செல்லு குருவி இன்னிக்கு தாவணி போட்டிருக்கு

(ஏ ஓடக்கார)

Indira - Odakaara Maarimuthu

இந்திரா - அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை

விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
ராரரா…

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

(ஹே அச்சம்)

அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா (2)
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

வாடி இளையசெல்லியே…வாடி இளையசெல்லியே
நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே
அம்மா அழகுக் கண்ணம்மா அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா

(ஹே அச்சம்)

லல்லா லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி (2)

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

(இனி அச்சம்)

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் (2)

கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்

Indira - Ini Achcham Achcham

இந்திரா - நிலாக் காய்கிறது நிறம்

நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது யாரும்
ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும்
சுகிக்கவில்லையே
சின்ன கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெயில் காயும் காயும் அதில் மாற்றம்
ஏதும் இல்லையே
ஆ…வானும் மன்னும் நம்மை வாழச் சொல்லும் அந்த
வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது யாரும்
ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக்
கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக்
கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்கையே சீதனம் உங்கள் தேவையைத்
தேடுங்கள்
நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது யாரும்
ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும்
சுகிக்கவில்லையே
சின்ன கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்

Indira - Nilla kaaikirathu

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்

வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்
ஒரு சிலையின் காதில் நான் பாட அது உயிரும் வந்து நடமாட
ஒரு செடியின் காதில் நான் பாட அதில் ரோஜா பூக்கள் பூத்தாட
வானவில் வந்தது வசந்தமும் வந்தது பாட்டுக்கள் கேட்பதற்கு
வானவில் வந்தது வசந்தமும் வந்தது பாட்டுக்கள் கேட்பதற்கு
வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்

திரும்பும் எந்த திசையிலும் என் பாடல்கள் கேட்குமே
விரும்பும் நேயர் வரிசையிலே குயில்களும் சேருமே
உதிர்ந்து விழும் இலைகள் எல்லாம் என் பாடல்கள் கேட்டபடி
இலைகளுக்கே தெரிந்ததடி அந்த இயற்கையும் வியக்குதடி
பாலைவனங்களில் என் பாடல்கள் சோலையடி
மனசுக்கு மனசு பாலங்கள் போட பாட்டுக்கள் போதுமடி
வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்

வாசல் தேடி வந்ததடி சொர்கமே சொர்கமே
வானம் கூட தொட்டுவிடும் தூரமே தூரமே
கனவுகளின் பேரெழுதி ஒரு தேவதை வாங்கிக்கொண்டாள்
நிமிடத்துக்கு ஒன்று என அந்த கனவுகள் பலிக்க வைத்தாள்
கோயில் மணிகளே என்னை வாழ்த்திட ஒலி கொடுங்கள்
மெல்லிசை ராஜ்ஜியம் என் வசம் ஆனது பூமழை பொழிகிறது
வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்
ஒரு சிலையின் காதில் நான் பாட அது உயிரும் வந்து நடமாட
ஒரு செடியின் காதில் நான் பாட அதில் ரோஜா பூக்கள் பூத்தாட
வானவில் வந்தது வசந்தமும் வந்தது பாட்டுக்கள் கேட்பதற்கு
வானவில் வந்தது வசந்தமும் வந்தது பாட்டுக்கள் கேட்பதற்கு

Unnidathil Ennai Koduthen - Vaanam paadiyien

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட

காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
யாரும் இல்லாத ஆள் என்று பூமியில் யாருமில்லை
கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு

துள்ளி துளி ஓடலாம் மான்களாக ஆகலாம் பூவனங்கள் போகலாமா
முள்ளில்லாத பூக்களில் சுற்றுலாக்கள் போகவே வண்டு போல மாறலாமா
கோடை காலம் தீர்ந்தாச்சு சொகம் ஓடி போயாச்சு சொந்தங்கள் புதுசாச்சு
காட்டு மூங்கில் குழளாச்சு காற்றும் கூட சேர்ந்தாச்சு கற்பனை நிஜமாச்சு
ஒளிந்திருந்த புன்னகை இன்று ஒவ்வொரு நிமிஷமும் வெளியாச்சு
முகம் மறைத்த மேகங்கள் விலகி முழுமதி வெளியே வந்தாச்சு
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு

வெண்புறாக்கள் கூட்டமே எங்களோடு கூட்டணி சேர்ந்துக்கொள்ள வேண்டுகின்றதே
வெட்டுகின்ற மின்னலோ சற்று நேரம் நின்றதே கையெழுத்து வாங்கி சென்றதே
பூமியெங்கும் வலைவீசு நம்மை போலே ஆளேது நினைத்தால் இனிக்கிறது
சொந்தமாக ஒரு வீடு நிலவில் வாங்கு என்னோடு சிறகுகள் முளைக்கவிடு
இமை இருக்கிற துணையில் தானே விழிகள் இங்கே இருக்கிறது
நிலமிருக்கிற துணையில் தானே வேர்கள் இங்கே வளர்கிறது
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
யாரும் இல்லாத ஆள் என்று பூமியில் யாருமில்லை
கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை

Unnidathil Ennai Koduthen - Kaatrukku Thudivittu

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே

மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா

மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
ஆயிரம் கோடிகள் செல்வம்
அது யாருக்கு இங்கே வேண்டும்
அரை நொடி என்றால் கூட
இந்த ஆனந்தம் ஒன்றே போதும்
பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
(மல்லிகைப் பூவே..)

சின்ன சின்ன கைகளிலே ட்
வண்ணம் சிந்தும் ரோஜாப்பூ
சிரித்து பேசி விளையாடும்
நெஞ்சம் இங்கு மத்தாப்பூ
இன்னும் அந்தி வானில்
பச்சைக்கிளி கூட்டம்
என்ன சொல்லி பறக்கிறது?
நம்மை கண்டு நானி
இன்னும் கொஞ்ச தூரம்
தள்ளி தள்ளி போகிறது
எங்களின் கதை கேட்டு
தலையாட்டுது தாமரைப்பூ
மயிலே நாம் ஆடிய கதையை நீ பேசு
(மல்லிகைப் பூவே..)

அலைகள் வந்து மோதாமல்
கடலில் கரைகள் கிடையாது
எந்த அலைகள் வந்தாலும்
எங்கள் சொந்தம் உடையாது
சுற்றி சுற்றி வருதே
பட்டு தென்றல் காற்று
இங்கே இங்கே பார்க்கிறது
மொட்டு விடும் மலரை
காஞ்சி பட்டு நூலில்
கட்டி தர கேட்கிறது
வேலிகள் கிடையாது
எந்த வெள்ளமும் நெருங்காது
நிலவே இது கொஞ்சும் கிளிகளின் இசைப்பாட்டு
(மல்லிகைப் பூவே..)

Unnidathil Ennai Koduthen - Malligai Poovea

சந்தித்த வேளை - பெண் கிளியே பெண் கிளியே

பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால் 
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு

பெண் கிளியே ...

வாய் மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
உள்மனம் பேசாமல் உண்மைத் தோன்றாது
வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
பெண் கிளி பொய் சொன்னால் ஆண் கிளி தூங்காது 

ஆண் கிளியே ஆண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு 
பாட்டு வரி புரிந்து கொண்டால் 
உன் பல்லவியை நீ மாற்று 

பெண் கண்களே நாடகம் ஆடுமா
பெண் நெஞ்சமே ஊடகம் ஆகுமா
யார் சொல்லியும் பெண் மனம் கேட்குமா
கைத் தட்டினால் மொட்டுக்கள் பூக்குமா
விடை கேட்டேன் கேள்வி தந்தாய்
இது புதிரான புதிர் அல்லவா
கேள்விக்குள்ளே பதில் தேடு 
அது சுவையான சுவை அல்லவா
உள்ளத்தின் வண்ணம் என்னத் தெரியவில்லை
உடைத்துச் சொல்லும் வரைப் புரிவதில்லை 
மூடாத பூவுக்குள் என்றும் தேன் இல்லை 

பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு 
என் பாட்டு வரி பிடித்திருந்தால் 
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு

என் நெஞ்சிலே ஆயிரம் ஓசைகள் 
உன் காதிலே கேட்கவே இல்லையா
நீ ஆழிப் போல் அலைகளை ஏவினால் 
நான் கரையைப் போல் மௌனமாய் மேவினேன்
நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம்
இது பெண் பூசும் அறிதாரமா
உண்மைக் காண வன்மை இல்லை 
உங்கள் விழி என்மேல் பழி போடுமா
நிலவைப் பிரிவதற்கு வலிமை உண்டு 
உன் நெஞ்சைப் புரிவதற்கு வலிமை இல்லை 
கானல் நீர் தேடாதே அங்கே நீர் இல்லை 

ஆண் கிளியே ஆண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு 
பாட்டு வரி புரிந்து கொண்டால் 
உன் பல்லவியை நீ மாற்று 

பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு 
என் பாட்டு வரி பிடித்திருந்தால் 
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு

sandhitha velai - Pen kiliye pen kiliye

Monday, November 28, 2016

சிறைச்சாலை - செம்பூவே பூவே உன் மேகம்

ஆண்: செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெண்: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
ஆண்: படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
பெண்: மன்னவன் விரலகள் பல்லவன் உளியோ
ஆண்: இமைகளும் உதடுகள் ஆகுமோ
பெண்: வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ

(செம்பூவே பூவே)

ஆண்: அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சையாக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்
பெண்: தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சில் ஆடும் சுவாசச்சூட்டில் காதல் குற்றாலம்
ஆண்: தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான் சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா
பெண்: நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
ஆண்: ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
பெண்: கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ

(செம்பூவே பூவே)

பெண்: இந்த தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ
ஆண்: அந்த காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சின் நாணம் சுட்டு மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே
பெண்: விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலோ பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ
ஆண்: முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
பெண்: நாணத்தாலோர் ஆடை சூடிக் கொள்வேன் நானே
ஆண்: பாயாகும் வழி சொல்லாதே பஞ்சணை புதையல் ரகசியமே

(செம்பூவே பூவே)

Siraichalai - Sempoove Poove

சிங்கம் - காதல் வந்தாலே காலு ரெண்டும்

Everybody listen to samba bumba rumba thumba
Everybody membo jambo bembo callin a party
Everybody move it move it move it move it move it now
Everybody runnin a coming its time to party
Everybody listen to samba bumba rumba thumbathumba
Everybody groovin shakin movin becoming naughty
Everybody goring goring goring goring goringo
Everybody time to move on in life and just say party

ஹே காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே
காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே
ஆசை வந்தாலே I Love You சொன்னாளே
கண்ணு ரெண்டும் சுத்துதே உந்தன் முன்னாலே
ஹே திட்டம் போட்டு பார்த்து திமிராய் பேசி
என்ன நீ வளைச்சியே ஓ yeah ஓ
வெட்டருவ மீசை முறுக்கி முறிச்சி
என் நெஞ்சை கலைச்ச ஓ yeah ஓ
ஹே வாடி ஹே வாடி நீ வாடாமல்லி பூ தாண்டி
இடுப்பு கொண்ட ஊசி சிரிப்பு window Ac now

ஹே முதுகு தேக்கு மரம்
முழுசா பார்த்த ஜுரம் தான் 



மீசை திருத்த சின்ன கத்திரிகோல வெச்சேன்
முத்தம் நெனப்பில் நானும் மூக்கை வெட்டிகிட்டேன்
பட்டு புடவை கட்டி பட்டுன்னு காலில் விழ
பத்து தடவ தினம் ஒத்திக பாத்துகிட்டேன்
சத்துள்ள சாப்பாடெல்ல தின்னு நின்னு என் உடம்ப
சட்டுன்னு சோள தோட்ட போல மாதுறியே
பட்டுன்னு வெட்டி பசி முட்டி நிக்கும் என் குணத்த
கட்டி தான் போட்டு ரொம்ப சாதம் ஆக்குறியே
ஹே பாரு நீ பாரு நீ பார்த்த மனம் jore jore
உனக்கு முனனால் தான் நிலாவே dulla இருக்கு
அட எனக்கு கிட்ட தட்ட இதயம் fulla இருக்கு

Singam -  Kadhal Vandhale

சிங்கம் - என் இதயம் இது வரை துடித்ததில்லை

என் இதயம் இது வரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இது வரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

இது எதனால் எதனால் தெரியவில்லை
அதனால் பிடிக்கிறதே
இது சுகமா வழியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வழியும்
சேர்ந்து துரத்துகிறதே

என் இதயம் இதுவரை துடிக்கவில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

சரணம் 1

கூட்டத்தில் நின்றாலும் உன்னையே தேடுது கண்கள்
ஒற்றையாய் போனாலும் உன்னுடன் நடக்குது கால்கள்
அச்சமே இல்லாத பேச்சிலே மயங்குது நெஞ்சம்
மிச்சமே இல்லாமல் உன்னிடம் வந்தேன் தஞ்சம்

ஆண் :
தாவணி மோதியே சாயுதே தேரடி
ரெண்டடி நாலடி நூறு அடி இழுத்தாய்

என் இதயம் இது வரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இது வரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

சரணம் 2

உன்னிடம் எப்போதும் உரிமையாய் பழகிட வேண்டும்
வைரமே ஆனாலும் தினம் தினம் தொலைத்திட தூண்டும்
இதுவரை என் நெஞ்சில் இல்லவே இல்லை பயங்கள்
இரண்டு நாள் பார்த்தேனே மிரட்டுதே உந்தன் குணங்கள்

ஆண் :
இதனை நாட்களாய் படுத்தும் உறங்கினேன்
இரண்டு நாள் கனவிலே உன்னை கண்டு விழித்தேன்

என் இதயம் இது வரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இது வரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

இது எதனால் எதனால் தெரியவில்லை
அதனால் பிடிகிறதே
இது சுகமா வழியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வழியும்
சேர்ந்து துரத்துகிறதே

என் இதயம் இது வரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இது வரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

Singam - En idhayam ithuvarai thudikkavillai

சிங்கம் - ஒரு வார்த்தை மொழியாலே

ஹே 
ஒரு வார்த்தை மொழியாலே 
என்னை உருக வைத்தாள்
என்னை உருக வைத்தாள்
ஒரு பார்வை வழியாலே 
என்னை நெருங்கி விட்டாள்
என்னை நெருங்கி விட்டாள் 
ஒரு மின்னல் இடிபோல 
என்னை துடிக்கவிட்டாள்
என்னை துடிக்கவிட்டாள் 
ஒரு காதல் வரத்தாலே
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்

She stole my heart
She stole my heart
She stole my heart
She stole my little little heart

வெள்ளை வெள்ளையாய் இரவுகள் 
கொள்ளை கொள்ளையாய் கனவுகள் 
கொஞ்ச கொஞ்சமாய் கரைகிறேன் 
அன்பே உன் காதலாலே 
சின்ன சின்னதாய் ஆசைகள் 
புத்தம் புதிதாய் கவிதைகள் 
லட்சம் லட்சமாய் தோன்றுதே 
அன்பே உன் செய்கையாலே 

ஒரு சாரல் மழையாலே 
என்னை நனைய வைத்தான் 
என்னை நனைய வைத்தான் 
புயலாய் உருமாறி 
என்னை வேரோடு சாய்த்துவிட்டான்

He stole my heart
He stole my heart
He stole my heart
He stole my little little heart

ஓ நெஞ்சின் அறைகள் திறக்கிறேன் 
உன்னை அதிலே நிறைக்கிறேன் 
என்னை முழுதாய் மறக்கிறேன் 
அன்பே உன் காதலாலே 
உன்னை எண்ணியே வசிக்கிறேன் 
என்னை அதனால் ரசிக்கிறேன் 
தன்னன் தனியே மிதக்கிறேன் 
அன்பே உன் செய்கையாலே 

ஓ தலை கால் தான் புரியாமல் 
என்னை தவிக்கவைத்தாள் 
என்னை தவிக்கவைத்தாள் 
 தலை கனமாய் நடந்தே தான்
என்னை ஏதேதோ செய்துவிட்டாள் 

She stole my heart 
She stole my heart
She stole my heart
She stole my little little heart

Singam - She stole my heart

ரம்மி - கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே

கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
உன்கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா

கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள
நீ கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
தூபத்தாலே தேச்சு வெச்சேன் ஒரு வீரமா
நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா

சாதத்துல கல்லுபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்து
சலிக்காம சதி பண்ணுற
சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட
உறுத்தாம உயிர் கொல்லுற
அதிகம் பேசமா அளந்து நான் பேசி
எதுக்கு சடபின்னுர
சல்லிவேர ஆணிவேராக்குற
சட்டபூவ வாசமா மாத்துற
நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற

கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன

எங்கவேணா போய்கோ நீ
என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே
தண்ணியத்தான் விட்டுபுட்டு
தாமரையும் போனதுன்னா
தருமாற தலசாயுமே
மறைஞ்சி போனாலும்
மறந்து போகாத
நெனப்புதான் சொந்தமே
பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே
நீ பார்க்காம போனாலே கிடையாதே மறுசென்மமே

கூடமேல கூடவச்சி கூடலூரு…கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போகசொன்னா

என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா

Rummy - Koodamela Koodavechi

பக்தி பாடல் - சுவாமியே ஐய்யப்போ

சுவாமியே........ அய்யப்போ     
அய்யப்போ..... சுவாமியே
சுவாமி சரணம்..... அய்யப்ப சரணம்
அய்யப்ப சரணம்.... சுவாமி சரணம்
தேவன் சரணம்..... தேவி சரணம்
தேவி சரணம்..... தேவன் சரணம்
ஈஸ்வரன் சரணம்.... ஈஸ்வரி சரணம்
ஈஸ்வரி சரணம்.... ஈஸ்வரன் சரணம்
 பகவான் சரணம்.... பகவதி சரணம்
பகவதி சரணம்... பகவான் சரணம்
சங்கரன் சரணம்.... சங்கரி சரணம்
சங்கரி சரணம்.... சங்கரன் சரணம்
பள்ளிக்கட்டு.... சபரிமலைக்கு
சபரிமலைக்கு.... பள்ளிக்கட்டு
கல்லும் முள்ளும்...காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை... கல்லும் முள்ளும்
குன்டும் குழியும்... கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம்... குன்டும் குழியும்
இருமுடிக்கட்டு...... சபரிமலைக்கு
சபரிமலைக்கு.... இருமுடிக்கட்டு
கட்டும் கட்டு.... சபரிமலைக்கு
சபரிமலைக்கு...... கட்டும் கட்டு
யாரை காண.... சுவாமியை காண
சுவாமியை கண்டால்... மோக்ஷம் கிட்டும்
எப்போ கிட்டும்... இப்போ கிட்டும்
தேக பலம் தா... பாத பலம் தா
பாத பலம் தா... தேக பலம் தா
ஆத்மா பலம் தா... மனோ பலம் தா
மனோ பலம் தா.. ஆத்மா பலம் தா
நெய் அபிஷேகம்.... சுவாமிக்கே
 சுவாமிக்கே... நெய் அபிஷேகம்
பன்னீர் அபிஷேகம்..... சுவாமிக்கே
சுவாமிக்கே... பன்னீர் அபிஷேகம்
அவலும் மலரும்...... சுவாமிக்கே
சுவாமிக்கே... அவலும் மலரும்
சுவாமி பாதம்... ஐயப்பன் பாதம்
ஐயப்பன் பாதம்... சுவாமி பாதம்
தேவன் பாதம்... தேவி பாதம்
தேவி பாதம்... தேவன் பாதம்
ஈஸ்வரன் பாதம்... ஈஸ்வரி பாதம்
ஈஸ்வரி பாதம்... ஈஸ்வரன் பாதம்
சுவாமி திந்தக்க தோம் தோம்..... 
அய்யப்ப் திந்தக்க தோம் தோம்..

Bakthi Paadal - Swamiye Ayyappo

பக்தி பாடல் - 108 ஐயப்ப சரணங்கள்

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 
ஓம் ஹரிஹரசுதனே சரணம் ஐயப்பா 
ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா 
ஓம் சக்தி வடிவேலன் சோதரனே சரணம் ஐயப்பா 
ஓம் மாளிகைபுறத்து மஞ்சம்மாதேவி லோகமாதாவே சரணம் ஐயப்பா 
ஓம் வாவர் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 
ஓம் கருப்பண்ண சரணம் ஐயப்பா 
ஓம் பெரிய கடுத்த ஸ்வாமியே சரணம் ஐயப்பா 
ஓம் சிறிய கடுத்த ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் வனதேவத மாரே சரணம் ஐயப்பா 
ஓம் துர்கா பகவதி மாரே சரணம் ஐயப்பா 
ஓம் அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா 
ஓம் அனாத ரட்சகனே சரணம் ஐயப்பா 
ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா 
ஓம் அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா 
ஓம் அம்பலத்தரசனே சரணம் ஐயப்பா 
ஓம் அபயதாயகனே சரணம் ஐயப்பா 
ஓம் அகந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா 
ஓம் அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா 
ஓம் அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா 
ஓம் அழுதையில் வாஸனே சரணம் ஐயப்பா 
ஓம் ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா 
ஓம் ஆபத்பாந்தவனே சரணம் ஐயப்பா 
ஓம் ஆனந்த ஜோதியே சரணம் ஐயப்பா 
ஓம் ஆத்ம ஸ்வரூபியே சரணம் ஐயப்பா 
ஓம் ஆனைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா 
ஓம் இருமுடி பிரியனே சரணம் ஐயப்பா 
ஓம் இன்னலைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா 
ஓம் இகபரசுக தாயகனே சரணம் ஐயப்பா 
ஓம் இதய கமல வாஸனே சரணம் ஐயப்பா 
ஓம் ஈடில்லா இன்பமளிப்பவனே சரணம் ஐயப்பா 
ஓம் உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா 
ஓம் ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா 
ஓம் ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா 
ஓம் ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா 
ஓம் எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா 
ஓம் எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா 
ஓம் என்குல தெய்வமே சரணம் ஐயப்பா 
ஓம் என் குருநாதனே சரணம் ஐயப்பா 
ஓம் எரிமேலி வாழும் கிராத சாஸ்தாவே சரணம் ஐயப்பா 
ஓம் எங்கும் நிறைந்த நாதப்ரம்மமே சரணம் ஐயப்பா 
ஓம் எல்லோருக்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா 
ஓம் ஏற்றுமானுரப்பன் மகனே சரணம் ஐயப்பா 
ஓம் ஏகாந்த வாஸியே சரணம் ஐயப்பா 
ஓம் எழைக்கருள்  புரியும் ஈசனே சரணம் ஐயப்பா 
 ஓம் ஐந்துமலை வாஸனே சரணம் ஐயப்பா 
ஓம் ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா 
ஓம் ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா 
ஓம் ஓங்கார பரப்ருஹமமே சரணம் ஐயப்பா
ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
ஓம் கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
ஓம் கம்பங்குடிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா
ஓம் கருணா ஸமுத்ரமே சரணம் ஐயப்பா
ஓம் கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் சபரிகிரி வாஸனே சரணம் ஐயப்பா 
ஓம் சத்ரு ஸம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா 
ஓம் சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா 
ஓம் சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா 
ஓம் சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா 
ஓம் சம்பு குமாரனே சரணம் ஐயப்பா 
ஓம் சத்ய சொரூபனே சரணம் ஐயப்பா 
ஓம் சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா 
ஓம் சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா 
ஓம் சண்முக சோதரனே சரணம் ஐயப்பா 
ஓம் தன்வந்திரி மூர்த்தியே சரணம் ஐயப்பா 
ஓம் நம்பினோரைக் காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா 
ஓம் நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா 
ஓம் பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா 
ஓம் பம்பை பாலகனே சரணம் ஐயப்பா 
ஓம் பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா 
ஓம் பக்தஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா 
ஓம் பக்தவத்ஸவனே சரணம் ஐயப்பா 
ஓம் பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா 
ஓம் பம்பா வாஸனே சரணம் ஐயப்பா 
ஓம் பரம தயாளனே சரணம் ஐயப்பா 
ஓம் மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா 
ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா 
ஓம் வைக்கத்தப்பன் மகனே சரணம் ஐயப்பா 
ஓம் கானக வாஸனே சரணம் ஐயப்பா 
ஓம் குலத்துப்புழை பாலகனே சரணம் ஐயப்பா 
ஓம் குருவாயூரப்பன்  மகனே சரணம் ஐயப்பா 
ஓம் கைவல்யபத தாயகனே சரணம் ஐயப்பா 
ஓம் ஜாதிமத பேதமில்லாதவனே சரணம் ஐயப்பா 
ஓம் சிவசக்தி ஐக்ய சொரூபனே சரணம் ஐயப்பா 
ஓம் ஸேவிப்பவர்க்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா 
ஓம் துஸ்டர் பயன் நீக்குவோனே சரணம் ஐயப்பா 
ஓம் தேவாதி தேவனே சரணம் ஐயப்பா 
ஓம் தேவர்கள் துயரம் தீர்த்தவனே சரணம் ஐயப்பா 
ஓம் தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா 
ஓம் நாராயணன் மைந்தனே சரணம் ஐயப்பா 
ஓம் நெய்யபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா 
ஓம் ப்ரணவ ஸ்வரூபனே சரணம் ஐயப்பா  
ஓம் பாப ஸம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா 
ஓம் பாயசான்ன ப்ரியனே சரணம் ஐயப்பா 
ஓம் வன்புலி வாஹனனே சரணம் ஐயப்பா 
ஓம் வரப்ர தாயகனே சரணம் ஐயப்பா 
ஓம் பாகவதோத்தமனே சரணம் ஐயப்பா 
ஓம் பொன்னம்பல வாஸனே சரணம் ஐயப்பா 
ஓம் மோகினி ஸீதனே சரணம் ஐயப்பா 
ஓம் மோகன ரூபனே சரணம் ஐயப்பா 
ஓம் வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா 
ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா 
ஓம் ஸத்குரு நாதனே சரணம் ஐயப்பா 
ஓம் ஸர்வ ரோக நிவாரகனே சரணம் ஐயப்பா 
ஓம் ஸச்சிதானந்த சொரூபனே சரணம் ஐயப்பா 
ஓம் ஸர்வாபீஷ்ட தாயகனே சரணம் ஐயப்பா 
ஓம் சாச்வதபதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா 
ஓம் பதினெட்டாம்படிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா 


காத்து ரட்சிக்கனும் பகவானே சரணம் ஐயப்பா 
மலையேற்றித் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா 
படியேற்றித் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா 
திவ்ய தரிசனம் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா 
என்றும் மறவா வரம் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா 


அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் 
செய்த ஸகல குற்றங்களையும் பொறுத்துக் காத்து ரட்சிக்க வேண்டும்.
ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிமேல் வாழும் வில்லன் 
வில்லாளி வீரன் , வீர மணிகண்டன் , காசி ராமேஸ்வரம் , 
பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் என் ஓம் ஹரிஹரசுதன் 
கலியுக வரதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப 
ஸ்வாமியே சரணம் ஐயப்பா .... 

Bakthi Paadal - 108 Ayyappan saranam

தெய்வம் - திருச்செந்தூரின் கடலோரத்தில்

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்

அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும் 
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் 
அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும் 
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கு முகம் ஒன்று
ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று
நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்

பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா
நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா
வருவாய் அருள் தருவாய் முருகா

Dheivam - Thiruchendoorin Kadalorathil Senthilnaathan

பக்தி பாடல் - சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது
முருகா அமைதி கொண்டது - அறிவில்
சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது
கந்தா பெருமை கொண்டது - முருகா
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது
உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது
கந்தா முதுமை வராது - குமரா
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ
கந்தா உன் அருளன்றோ - முருகா
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)



Bakthi Paadal - Solla Solla Inikkuthada

பக்தி பாடல் - சஷ்ட்டியை நோக்க சரவணபவனார்

காப்பு:-
-------------
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,

நிஷ்டையுங் கைகூடும்,
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை,

அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.

நூல்:-
------------
சஷ்ட்டியை நோக்க சரவணபவனார்
சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார்        ... ... 5

கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக        ... ... 10

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக        ... ... 15

சரஹணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென        ... ... 20

வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க        ... ... 25

விரைந்தெனைக் காக்க வேலோன்வருக
ஐயும் கிலியும் அடைவுடன்செளவும்
உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் செளவும் கிளரொளி ஐயும்
நிலை பெற் றென்முன் நித்தம் ஒளிரும்        ... ... 30

சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்
குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்        ... ... 35

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்        ... ... 40

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும்        ... ... 45

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண        ... ... 50

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து        ... ... 55

முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று        ... ... 60

உன்திரு வடியை உருதி யென்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க        ... ... 65

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க        ... ... 70

முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க        ... ... 75

சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க        ... ... 80

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க        ... ... 85

வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க        ... ... 90

முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க        ... ... 95

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக வேல் காக்க
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அறையிருள் தன்னில் அனையவேல் காக்க        ... ... 100

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க        ... ... 105

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்        ... ... 110

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும்        ... ... 115

கனபூசை கொள்ளும் காளியோடனே வரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும்        ... ... 120

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்        ... ... 125

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட        ... ... 130

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக்க யிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய        ... ... 135

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்        ... ... 140

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது வோட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட        ... ... 145

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்        ... ... 150

சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும்        ... ... 155

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்        ... ... 160

உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரஹண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவம்ஒளி பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்        ... ... 165

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை ஏற்ற இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா        ... ... 170

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே        ... ... 175

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை        ... ... 180

நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும்
மெத்த மெத் தாக வேலா யுதனார்        ... ... 185

சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்        ... ... 190

வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்        ... ... 195

பெற்றவள்குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய        ... ... 200

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகி
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்        ... ... 205

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்        ... ... 210

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை        ... ... 215

வழியாற் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி        ... ... 220

அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத்மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்        ... ... 225

சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி        ... ... 230

திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே        ... ... 235

மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம்
சரணம் சரணம் சரஹண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.

Bakthi paadal - Kandha Sasti Kavasam

Friday, November 25, 2016

சத்யம் - ஆறடி காற்றே

ஆறடி காற்றே
அத்துக்குச்சு பாத்தே
அதிரடி ஏத்து
அஞ்சமில்லை விளையாட்டே

ஆஹா யேய்…ய்…

இவன் உடையும் கண்டு
நடையும் கண்டு
செயலும் கண்டு
குணமும் கண்டு
அதிரும் நெஞ்சம் அதிகம் உண்டு மண் சாட்சி
இவன் கர்வம் கண்டு
கனிவும் கண்டு
துனிவும் கண்டு
துடிப்பும் கண்டு
அடங்கும் பேர்கள் எங்கும் உண்டு மண் சாட்சி
என்னாச்சு
ஏதாச்சு
தோட்டாக்கள் பூவாச்சு

ஆறடி காற்றே
அத்துக்குச்சு பாத்தே
அதிரடி ஏத்து
அஞ்சமில்லை விளையாட்டே யே….யே

பேச்சு மட்டும் தான்
வளர்ச்சி என்று தப்பாதே
வீச்சு வீசினால்
வீசிடுவான் நம்மாளே
உன் முகத்தை பார்த்து
கட்டடத்துக்குள் காத்து
ஊதி விட்ட தீயை
உத்து உத்து பாரு
கண்களுக்குள் ஓடும்
கந்தகத்தில் ஆறு
எட்டு வச்சு எட்டு வச்சு
வெற்றி பொட்டு தொட்டு வைப்பான்

ஆறடி காற்றே
அத்துக்குச்சு பாத்தே
அதிரடி ஏத்து
அஞ்சமில்லை விளையாட்டே

பூட்டி வைச்சு பார்
தூள் பறக்கும் உன்பாடு
தூண்டு விட்டுட்டா
தீப்பிடிக்கும் உன் காடு
முன்ன வந்து நின்னா
ஆஹா ஹா
மூச்சு முட்டும் கண்ணா
ஆஹா ஹா
ஹா யாரு இவன் யாரு இவன்
கொம்பன் என்று கூறு
சொல்லி சொல்லி சீறும்
தொட்டு மட்டும் பாரு
சொல்லி வச்சு சொல்லி வச்சு
சத்தியத்தை காத்து நிப்பான்

ஆறடி காற்றே
அத்துக்குச்சு பாத்தே
அதிரடி ஏத்து
அஞ்சமில்லை விளையாட்டே

இவன் உடையும் கண்டு
நடையும் கண்டு
செயலும் கண்டு
குணமும் கண்டு
அதிரும் நெஞ்சம் அதிகம் உண்டு மண் சாட்சி
இவன் கர்வம் கண்டு
கனிவும் கண்டு
துனிவும் கண்டு
துடிப்பும் கண்டு
அடங்கும் பேர்கள் எங்கும் உண்டு மண் சாட்சி
என்னாச்சு
ஏதாச்சு
தோட்டாக்கள் பூவாச்சு
என்னாச்சு
ஏதாச்சு
தோட்டாக்கள் பூவாச்சு…

Sathyam - Aaradi Kaathe

சத்யம் - பால் பப்பளி

பால் பப்பளி
வெள்ள தக்களி
உன் கூடளி
என்ன சமாளி

பால் பப்பளி
வெள்ள தக்களி
நான் கொமளி
இப்போ சோக்களி

உன் முந்தாணய முண்டசாக கட்டி கொள்ளவ
நான் மூனு வெல முட்ட சொரு அள்ளி தின்னவ
நீ புள்ளி வெச்ச மானு தானே கொலம் பொடவ
என் மீசயல கது குத்தி கூசம் கட்டவ

பால் பப்பளி
வெள்ள தக்களி
உன் கூடளி
என்ன சமாளி

பால் பப்பளி
வெள்ள தக்களி
நீ கொமளி
போட சோக்களி

என் முந்தாணய முண்டசாக கட்டி கொல்லதே
நீ மூனு வெள முட்ட சொர அள்ளி தின்னதே
என் புள்ளி வெச்ச மானு மெலே கொலம் பொடதே
உன் மீசயால கது குத்தி கூசம் கட்டதே

கன்ன குழி வழியே
தொண்ட குழி நொழன்சு
நெஞ்சு குழி நடுவே
மய்யம் கொல்லதே
ஹெய் அச்சு வெல்ல அழகே
உச்சி வெய்யில் நிலவே
பிசு பிசு என்ன
ஈரம் செய்யாதே
என்ன மேலும் கீழும்
ஏலம் போட்டு தளம் பொடதே
இந்த ஒராம் பெத்த பொன்ன
பர்த்து உசு கொட்டதே
எனை பூவுகுள்ளே தேனை போல
பூடி வைகாதே
நம்ம ஆத்த கொவில் யானையபோல்
ஆடி வைகதே
காதல காதல ஓடி வரவ
யாருமில்லா நேரம் பர்த்து தேடி வரவ
வான்னிலா தேன்னில கூடி வரவ
ஆடி மாச கத்து போல ஆடி வரவ

பால் பப்பளி
வெள்ள தக்களி
உன் கூடளி
என்ன சமாளி

பால் பப்பளி (பபோய்)
வெள்ள தக்கலி (அபோய்)
உன் கூடளி
என்ன சமாளி

உன் முந்தாணய முண்டசாக கட்டி கொள்ளவ
நான் மூனு வெல முட்ட சொரு அள்ளி தின்னவ
என் புள்ளி வெச்ச மானு மெலே கொலம் பொடதே
உன் மீசயால கது குத்தி கூசம் கட்டதே

ஒத்தயிலே குதிச்சென்
மெத்தயிலே தவிச்சென்
கத்திரிகோல் விழியலே
கண்ண வெட்டதே
ஒத்தயிலே இருந்தென்
சுத்தி சுத்தி பரந்தென்
சீடெடுக்கும் கிளியாய்
கூண்டில் வைகதே
ஒரு முட்டாய் கடய மொரசு பார்க்கும் பட்டிக்கட்டான் போல்
நீ எட்டி நின்னு என்ன பர்த்து ஏங்க வைகதே
உன் ஆடு புலி ஆடம் எல்லம் இங்கே வேணான்ய
நான் கூடு விட்டு கூடு பாயும் பொண்ணு தனய்ய
கொகில கொகில கோடை வெய்யில
காலகாலமாக வாழும் காமன் மகல
கொவல கொவல கதல் நகல
ஓரகண்ணால் பார்க்க வெணாம் பட்ட பகல

பால் பப்பளி
வெள்ள தக்களி
உன் கூடளி
என்ன சமாளி

பால் பப்பளி
வெள்ள தக்களி
நீ கொமளி
போட சோக்களி

உன் முந்தாணய முண்டசாக கட்டி கொள்ளவ
நான் மூனு வெல முட்ட சொரு அள்ளி தின்னவ
ஹெய் புள்ளி வெச்ச மானு மெலே கொலம் பொடதே
உன் மீசயால கது குத்தி ஹஹஹஹன்ன்ம்ம்ம்ம்

Sathyam - Paal Pappaali

சத்யம் - செல்லமே செல்லமே கொஞ்ச

பெண்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
ஓர் ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் நள்ளிரவினில் உறைந்திடுவேனே
செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கொஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

(இசை...)

பெண்: குரலில் உன் குரலில் மெல்லிசை சுகம் அறிவது போலே
விரலில் உன் விரலில் முன்பனி சுகம் உணர்வது போலே
விழியில் உன் விழியில் வேல் அளி சுகம் தொடுவது போலே
இதழில் உன் இதழில் முக்கனி சுகம் புரிவது போலே
கூந்தலில் எனை மீது தினந்தோறும் பரிமாறு
நீ நீச்சல் குளம்போலே நெடு நேரம் இளைப்பாறு
ஓர் ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் நள்ளிரவினில் இறைந்திடுவேனே

ஆண்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

(இசை...)

பெண்: வே.......... நீயோ
வே.......... நானோ
வெட்கம் வெட்கம்
வே........ நீயோ
வே........ நானோ
நித்தம் நித்தம்

ஆண்: நிலவில் வெண்ணிலவில் உன் தலை முடி கலைவது போதும்
பகலில் நண்பகலில் உன் செவி மடல் மலர்வதும் போதும்

பெண்: ஒளியில் மின்னொளியில் என் வளையலும் இடிவது போதும்
மனதில் என் மனதில் உன் பரவசம் நிறைவது போதும்

ஆண்: போதும் ஆனாலும் போதாது சந்தோஷம்
பெண்: கண் தூங்கப் போனாலும் தூங்காது ஆள்வாசம்

ஆண்: சகாயமே உன் அருகினில் இளைப்பாறுவேனே
தடாகமே புன்முறுவலில் நனைந்திடுவேனே

பெண்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே

ஆண்: மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

பெண்: ஓர் ஆயிரம் மெல் சுகங்களை கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் ம்ம்ம்ம்ம்ம்ம்

Sathyam - Chellame Chellame

சத்யம் - என் அன்பே நானும் நீயின்றி

பெண்: என் அன்பே நானும் நீயின்றி நானில்லை...
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை...
நான் உன்னில் உன்னில் என்பதால்..
என் தேடல் நீங்கிப் போனதே...
என்னில் நீயே என்பதால்..
என் காதல் மேலும் கூடுதே..
காண வேண்டும் யாதும் நீயாகவே...
மாற வேண்டும் நானும் தாயாகவே...

குழு: ஆத்தடி ஆசை அலை பாய
சேத்துக்கோ மீச கொடை சாய
கூத்தடி கோடை மழை பேய
ஏத்துக்கோ ஆடை உலை காய
ஆத்தடி ஆசை அலை பாய
சேத்துக்கோ மீச கொடை சாய
கூத்தடி கோடை மழை பேய
ஏத்துக்கோ ஆடை உலை காய

பெண்: என் அன்பே நானும் நீயின்றி நானில்லை...
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை...
நான் உன்னில் உன்னில் என்பதால்..
என் தேடல் நீங்கிப் போனதே...
என்னில் நீயே என்பதால்..
என் காதல் மேலும் கூடுதே..
காண வேண்டும் யாதும் நீயாகவே...
மாற வேண்டும் நானும் தாயாகவே...

(இசை...)

பெண்: தலை தொடும் மழையே...
செவி தொடும் இசையே...
இதழ் தொடும் சுவையே...
இனிப்பாயே....
விழி தொடும் திசையே...
விரல் தொடும் கனையே...
உடல் தொடும் உடையே...
இணைவாயே....
யாவும் நீயாய் மாறிப் போக நானும் நான் இல்லையே
மேலும் மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லையே
தெளிவாகச் சொன்னால் தொலைந்தேனே உன்னால்

குழு: ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா
ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா

பெண்: என் அன்பே நானும் நீ இன்றி நானில்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை

(இசை...)

பெண்: கருநிறச் சிலையே...
அறுபது கலையே...
பரவச நிலையே...
பகல் நீயே....
இளகிய பனியே...
எழுதிய கவியே..
சுவை மிகு கனியே...
சுகம் நீயே....
கூடு பாவாய் தேகத்தோடு காதல் தினம் ஓடுதே
கூடு பாயும் தாகத்தோடு ஆசை நதி மோதுதே
தொடுவாயா என்னை தொடர்வேனே உன்னை

குழு: ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா
ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா

பெண்: ஓ... என் அன்பே நானும் நீயின்றி நானில்லை...
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை...
நான் உன்னில் உன்னில் என்பதால்..
என் தேடல் நீங்கிப் போனதே...
என்னில் நீயே என்பதால்..
என் காதல் மேலும் கூடுதே..
காண வேண்டும் யாதும் நீயாகவே...
மாற வேண்டும் நானும் தாயாகவே...
காண வேண்டும் யாதும் நீயாகவே...
மாற வேண்டும் நானும் தாயாகவே...

Sathyam - En Anbe

சில்லுனு ஒரு காதல் - நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

பேச்செல்லாம் தாலாட்டுப் போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
அவள் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை

நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதே
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ.....

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது

நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா

சில்லென்று பூமி இருந்தும்
இந்த தருணத்தில் குளிர்காலம் கோடை ஆனதேனோ
வா அன்பே நீயும் வந்தால்
செந்தணல் கூட பனிகட்டி போல மாறும் ஏ....ஏ....

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

Sillunu Oru Kaadhal - New York

சில்லுனு ஒரு காதல் - முன்பே வா என் அன்பே வா

முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே..

உன் முன்பே வா என் அன்பே வா..
கூட வா உயிரே வா..
உன் முன்பே வா என் அன்பே வா
பூப் பூவாய் பூப் பூவாய்

[குழு]
ரங்கோ ரங்கோலி......
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
ஜீல் ஜீல்...
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சித்திர புன்னகை வண்ணம் மின்ன
.. (ஒ ஓ ...)

[பெண்]
பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவுக்கு ஓர் பூ வைத்தாய்..
மண பூ வைத்து பூ வைத்து..
பூவுக்குள் தீ வைத்தாய்..
(ஒ ஓ...)

[ஆண்]
தேனி - நீ -நீ மழையில் ஆட
நாம் - நாம் -நாம் நனைந்து வாட
என் நாணத்தில் உன் ரத்தம்..
நீ ஆடைக்குள் உன் சத்தம் ............
.உயிரே........ ஒ ஓ...

[பெண்]
பொழி ஒரு சில நாளில் தனி
யாண்ட ஆண் தரையில் நீந்தும்

முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

[ஆண்]
நான் நானா கேட்டேன் நானே என்னை நானே
உன் அன்பே வா என் அன்பே வா..

[பெண்]
முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்...

[இசை..]
[ஆண்]
நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டிலில் குடி வைக்கலாமா..
நாம் வாழும் வீட்டுக்குள்
வேர ராரும் வந்தாலே
தகுமா....?..

[பெண்]
தேன் மழை தேக்கத்தில் நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா..
நான் சாயும் தோளில் மேல்
வேறுயாரும் சாய்ந்தாலே
தகுமா....?..

[ஆண்]
நீரும் செங்குள சேரும்
கலந்தது போலே
கலந்தவளா.....

[பெண்]
முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

[ஆண்]
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நாங்கள் சொல்ல வேண்டும்
நீங்கள் யார்...

[பெண்]
முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

[குழு]
ரங்கோ ரங்கோலி......
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
ஜீல் ஜீல்...
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சித்திர புன்னகை வண்ணம் மின்ன
.. (ஒ ஓ ...)

Sillunu Oru Kaadhal - Munbe Vaa

மிஸ்டர் ரோமியோ - மெல்லிசையே

மெல்லிசையே
என் இதயத்தின்  மெல்லிசையே 
என் உறவுக்கு  இன்னிசையே 
என் உயிர் தொடும்  நல்லிசையே  

மெல்லிசையே  
என் இதயத்தின் மெல்லிசையே 
என் உறவுக்கு இன்னிசையே 
என் உயிர் தொடும் நல்லிசையே  

கண்ணை கொஞ்சம் திறந்தேன் 
கண்களுக்குள்  விழுந்தாய்   
எனது  விழிகளை  மூடி  கொண்டேன் 
சின்னஞ்சிறு  கண்களில்  உன்னை  சிறை  எடுத்தேன்  

கண்ணை கொஞ்சம் திறந்தேன் 
கண்களுக்குள் விழுந்தாய் 
எனது விழிகளை மூடி கொண்டேன் 
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன் 

மெல்லிசையே 
என் இதயத்தின் மெல்லிசையே 
என் உறவுக்கு இன்னிசையே 
என் உயிர் தொடும் நல்லிசையே  

எத்தனை இரவு 
உனக்காக  விழித்திருந்தேன் 
உறங்காமல்  தவித்திருந்தேன் 
விண்மீன்கள்  எறிதுரிந்தேன்   

எத்தனை நிலவை 
உனக்காக வேருதிருதேன் 
உயிர் சுமந்து பொறுத்திருந்தேன்
 உன்னை கண்டு   உயிர்  தெளிந்தேன் 

நீ  ஒரு  பாதி  என்றும்
நான்  ஒரு  பாதி 
காதல்  ஜோதி  

என்னவனே  
நிலம்  கடல்  ஆனாலும்  
அழியாது  இந்த  பந்தம்

கண்ணை  கொஞ்சம் திறந்தேன் 
கண்களுக்குள் விழுந்தாய் 
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்

கண்ணை கொஞ்சம் திறந்தேன் 
கண்களுக்குள் விழுந்தாய் 
எனது விழிகளை மூடி கொண்டேன் 
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன் 

மன்மத  விதையை  
மனதோடு  விதைத்து  யார் 
மழை  ஊற்றி  வளர்த்தது  யார் 
மலர்க்காடு  பறித்து  யார் 

காதல்  தீயை 
நெய்  கொண்டு  வளர்த்தது  யார்  
கை  கொண்டு  மறைத்து  யார்  
அதை  வந்து  அணைப்பது  யார்

ஆயிரம்  காலம் வாழும்
காதலும் வாழும் 
ஆயுள் நீளும்

பெண்ணழகே 
மண்ணும்  விண்ணும்  போனாலு ம் 
மாறாது  இந்த  சொந்தம் 

கண்ணை  கொஞ்சம் திறந்தேன் 
கண்களுக்குள் விழுந்தாய் 
எனது விழிகளை மூடி கொண்டேன் 
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்  

கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய் 
எனது விழிகளை மூடி கொண்டேன் 
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்

Mr. Romeo - Mel Isaiyae

திருடா திருடா - புத்தம் புது பூமி வேண்டும்

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்

வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூ மேலே
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்

பழமொழி கொஞ்சம் வழி விடு!
உன் அருகிலே ஓர் இடம் கொடு!
புன்னகை எங்கள் தாய்மொழி என்று வரம் கொடு!
பூமியில் சில மாறுதல் தனை வர விடு!

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

யுத்தம் இல்லாத பூமி
ஒரு சப்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலைக் கொள்ளும் வேண்டும்

பஞ்சப் பசி போக்க வேண்டும்
பாலைவனம் பூக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்

போனவை அட போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்
தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

Thiruda Thiruda - Putham Pudhu Bhoomi

புதிய முகம் - சம்போ சம்போ சம்போ

சம்போ சம்போ சம்போ சம்போ சாயங்காலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல் மோட்சங்கள் காண்போம் இப்போ

உட்சி மேகம் என்னை பார்த்ததும் கொஞ்சம் நீர் சிந்தும் அல்லவா
உப்பு காற்று என்னை தீண்டினால் சற்றே தித்திக்கும் அல்லவா

என்னை பெண் கேட்டு சீசர் வந்தான் எந்தன் பின்னாலே ஹிட்லர் வந்தான்
யாரும் இல்லாத நேரத்திலே சொல்லாமல் பிரம்மன் வந்தான்

பக்தி பாடல் பாடட்டுமா பாலும் தேனும் ஓடட்டுமா

பக்தி பாடல் பாடட்டுமா பாலும் தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா

சம்போ சம்போ சம்போ சம்போ சாயங்காலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல் மோட்சங்கள் காண்போம் இப்போ

மேடை போட்டு மெத்தை கொள்ளவே ஜாடை செய்தாலே போதுமே
எங்கள் வீடு காஷ்மீர் கம்பலி இருவர் குளிர்த்தாங்க கூடுமே

இந்த மோகத்தில் என்ன குற்றம் கடல் யோகத்தின் ஊச்ச கட்டம்

அந்த சொர்கத்தில் சேர்கட்டுமா இன்றைக்கு உன்னை மட்டும்

பக்தி பாடல் பாடட்டுமா பாலும் தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா

சம்போ சம்போ சம்போ சம்போ சாயங்காலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல் மோட்சங்கள் காண்போம் இப்போ

Pudhiya Mugam - Sambo Sambo

புதிய முகம் - ஜூலை மாதம் வந்தால்

பெண் : ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு
அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவா
ரத்தம் புத்தம் புதுசு

ஆண் : ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு
அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவா
ரத்தம் புத்தம் புதுசு

***

ஆண் : வெட்ட வெளியில் போவோமா
அடி சிட்டுக்குருவியின் சிறகை கேள்
நட்ட நடு நிசி நேரத்தில்
நாம் சற்றே உறங்கிட நிலவை கேள்
காடு மலைகள் தேசங்கள்
காண்போமா காற்றை கேள்
வீடு வேண்டாம் கூடொன்று
வேண்டாமா காட்டை கேள்

பெண் : காதல் என்று சொன்னதும்
காற்றும் கைகள் கட்டும்
காதல் என்னும் வார்த்தை தான்
சர்வதேச சட்டம்

ஆண் : ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு

பெண் : மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு

ஆண் : அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு

பெண் : முத்து முத்தம் போடவா
ரத்தம் புத்தம் புதுசு

ஆண் : ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு

பெண் : மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு

***

ஆண் : புதியதல்ல முத்தங்கள்
இனி பொய்யாய் வேஷம் போடாதே
உள்ளம் எல்லாம் என் சொந்தம்
அதை உள்ளங்கையில் மூடாதே

காதல் வந்தால்
கட்டில் மேல் கண்ணீரா கூடாதே
கண்கள் பார்த்து
ஐ லவ் யூ சொல்லிப்பார் ஓடாதே

பெண் : காதல் என்னும் ஏட்டிலே
நீயும் நானும் உச்சம்
கோடி மக்கள் வேண்டுகோள்
கொஞ்சம் வைப்போம் மிச்சம் (இசை)

பெண் : ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு

ஆண் : மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு

பெண் : அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு

ஆண் : முத்து முத்தம் போடவா
ரத்தம் புத்தம் புதுசு

பெண் : ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு

ஆண் : மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு

ஆ & பெ: அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவா
ரத்தம் புத்தம் புதுசு

Pudhiya Mugam - July Matham Vanthaal

புதிய முகம் - கண்ணுக்கு மையழகு

கண்ணுக்கு மையழகு, கவிதைக்கு பொய்யழகு 
கன்னத்தில் குழியழகு, கார் கூந்தல் பெண் அழகு

இளமைக்கு நடையழகு, முதுமைக்கு நரையழகு 
கள்வர்க்கு இரவழகு, காதலர்க்கு நிலவழகு
நிலவுக்கு கறையழகு, பறவைக்கு சிறகழகு 
அவ்வைக்கு கூனழகு, அன்னைக்கு சேய் அழகு

(கண்ணுக்கு மையழகு) 

விடிகாலை விண்ணழகு, விடியும் வரை பெண் அழகு 
நெல்லுக்கு நாற்றழகு, தென்னைக்கு கீற்றழகு 
ஊருக்கு ஆறழகு,   ஊர்வலத்தில்  தேரழகு 
தமிழுக்கு 'ழ' அழகு, தலைவிக்கு நான் அழகு 
(கண்ணுக்கு மையழகு)

Pudhiya Mugam - Kannukku Mai Azhagu

புதிய முகம் - நேற்று இல்லாத மாற்றம் என்னது

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்கை என்பதா
சொல்மனமே

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று உன் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்கை என்பதா
சொல்மனமே

கொடியில் பூக்கள் எல்லாம் காம்பு தாங்கும் வரை
கூந்தல் பூக்கள் எல்லாம் உறவு வாழும் வரை
காதல் நினைவொன்று தானே காற்று தீரும் வரை
மழையின் பயணமெல்லாம் மண்ணை தீண்டும் வரை
படகின் பயணமெல்லாம் நதியை தாண்டும் வரை
மனித பயணங்கள் எல்லாம் வாழ்க்கை தீரும் வரை

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று உன் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்கை என்பதா
சொல்மனமே

காற்று வழிபோவதை நாற்று சொல்கிறது
நேற்று மழை பெய்ததை ஈரம் சொல்கிறது
கண்ணில் வழிகின்ற கண்ணீர் காதல் சொல்கிறது
இலைகள் வீழ்ந்தாலுமே கிளையில் துளிர் உள்ளது
இரவு தீர்ந்தாலுமே இன்னும் நிலவுள்ளது
பாதி உயிர் போன போதும் மீதி வாழ்வுள்ளது

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று உன் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்கை என்பதா
சொல்மனமே

Pudhiya Mugam - Netru Illadha Matram

கண்ணன் வருவான் - காற்றுக்கு பூக்கள் சொந்தம்

காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா?
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா?

தாலாட்டு கேட்கவும் இல்ல
தாய் பாசம் பார்க்கவும் இல்ல
எனக்கொரு சொந்தம் சொல்ல வருவாளா?
நெஞ்சுக்குள்ள மல்லிகைப்பூ தருவாளா?
(காற்றுக்கு..)

பத்து விரலும் எனக்கு மாத்திரம்
புல்லாங்குழலாய் மாறவேணுமே
எந்த சாமி எனக்கு அந்த வரம் கொடுக்கும்?
நல்ல வரம் கொடுக்கும்
மீனாய் மாறி நீரில் நீந்தனும்
குயிலாய் மாறி விண்ணில் பறக்கனும்
காற்றா மரமா பூவா நானும் வாழ்ந்திடனும்
ஒருத்தி துணை வேணும்
சாமி சிலைகள் நூறு ஆயிரம்
செஞ்சு செஞ்சு நானும் வைக்கிறேன்
சாமி ஒன்னு கண்ண முழுச்சு பார்த்திடுமா?
அவளா காட்டிடுமா?
(காற்றுக்கு..)

மயிலே மயிலே தோகை தருவாயா?
தோகை அதிலே சேலை நெய்யனும்
யாருக்குன்னு மயிலே நீதான் கேட்காதே
எனக்கு தெரியாதே
நிலவே நிலவே விண்மீன் தருவாயா?
விண்மீன் அதிலே வீடு கட்டணும்
யாருக்குன்னு நிலவே நீதான் கேட்காதே
எனக்கு தெரியாதே
மரமே மரமே கிளைகள் தருவாயா?
கிளையில் கிளிக்கு ஊஞ்சல் கட்டணும்
யாரு அந்த கிளிதான் என்று கேட்காதே
நிசமா தெரியாதே..

பெ: காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளே
உன் வாழ்கைக்கொஉ அர்த்தம் சொல்லி தருவாளே..

Kannan Varuvaan - Kaathukku Pookkal

அலை - என் ரகசிய கனவுகள் இனிக்கிற

பெண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா
மழை போலே வருவானா மடி மேலே விழுவானா
மலர் போலே தொடுவானா தொடுவானா
இவன் தானா இவன் தானா இவனோடு இணைவேனா

ஆண் : ஒருமுறை பார்க்கையில் பனியென உருகினேன்
மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிறேன்

பெண் : கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்
மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்

ஆண் : இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்

பெண் : எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன்

ஆண் : காதல் நீரிலே மூழ்கி போகிறேன்

பெண் : கையை நீட்டவா கரையில் சேர்க்கவா
இவன் தானா இவன் தானா இவனோடு இணைவேனா

ஆண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவளா

பெண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா செய்பவனா செய்பவனா

பெண் : தூரத்தில் நின்றெனை ரசிப்பது போதுமா தூரத்து வெண்ணிலா தாகங்கள் தீர்க்குமா

ஆண் : வெட்கத்தை வீசியே வாவென சொல்கிறாய் பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்

பெண் : அணைப்பாய் என நான் தவியாய் தவித்தேன் இருந்தும் வெளியே பொய்யாய் முறைத்தேன்

ஆண் : கன்னக்குழிகள் தான் காதல் தேசமா ஈரமுத்தம் தான் இன்ப தீர்த்தமா
இவள் தானா இவள் தானா இவளோடு இணைவேனா

பெண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா

ஆண் : என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவளா
மழை போலே வருவாளா மடி மேலே விழுவாளா

பெண் : மலர் போலே தொடுவானா தொடுவானா இவன் தானா

ஆண் : இவள் தானா

பெண் : இவனோடு இணைவேனா

பெண் : இவன் தானா

ஆண் : இவள் தானா

பெண் : இவனோடு இணைவேனா

Alai - En Ragasiya Kanavukal

குத்து - எனை தீண்டி விட்டாள்

ஆண் : எனை தீண்டி விட்டாள் திரி தூண்டி விட்டாள்
எனை நானே தொலைத்து விட்டேன்
ஒரு மார்கழியின் முன் பனி இரவில் எனை நானே எரித்து விட்டேன்

எனை தீண்டி விட்டாள் திரி தூண்டி விட்டாள்
எனை நானே தொலைத்து விட்டேன்
ஒரு மார்கழியின் முன் பனி இரவில் எனை நானே எரித்து விட்டேன்

இதழின் ஓரம் இழைந்து ஓடும் அவள் சிரிப்பில் விழுந்து விட்டேன்
அவள் கூந்தல் எனும் ஏணி அதை பிடித்தே எழுந்து விட்டேன்
கடந்து போகும் காற்றிலாடும் அவள் மூச்சில் கரைந்து விட்டேன்
இது போதும் இது போதும் என் வாழ்வை வாழ்ந்து விட்டேன்

பெண் : என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரிய விட்டாய்
என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருக விட்டாய்
என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரிய விட்டாய்
என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருக விட்டாய்

எனது தோட்டம் உனது பூக்கள் எதற்காக உதிர விட்டாய்
மனதோடு மணல் மேடு எதற்காக செதுக்கி விட்டாய்
எனது காற்றில் உனது மூச்சை எதற்காக அனுப்பி வைத்தாய்
உயிரின்றி உடல் வாழ பின்பு ஏன் நீ தூக்கி விட்டாய்

Kuththu - Ennai Theendi Vittai

நெஞ்சில் ஜில் ஜில் - உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்

ஆ: நெஞ்சில் ஜில் ஜில்..
எனக் காதல் பிறக்கும்..
நெஞ்சே நின்றாலும்
காதல் துடிக்கும்
அழியாது காதல்..
அழியாது காதல்..

ஆ: உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்
ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு
விண்மீன்கள் எல்லாம் அங்கே
நாம் வந்த பாத சுவடு

பெ: தீராத தேடல் இது
தித்திக்கும் தூரல் இது..

ஆ: (உனக்காகத்தானே..)

பெ: தேவதைப்போல வந்து காதல் இறங்கும்
அசரிரியாக நின்று பேசி சிரிக்கும்

ஆ: புரியாது பெண்ணே காரணங்கள்
ஜில் ஜில் ஜில் நெஞ்சில்..
த ன னா ன னா...

பெ: வெட்கங்கள் கொடியேற்றி போகும் ஓர் ஊர்வலம்
முத்தங்கள் மாநாடு கொண்டாடும் இதழ் ஓரம்
பொல்லாத ஏக்கங்கள் போடும் ஓர் தீர்மாணம்
பெண் நெஞ்சம் முன் வந்தால் தீர்மாணம் நிரைவேறும்

ஆ: காதலின் ஆட்சிதானே நமக்கு வேண்டும்
பூமியை தூசி தட்டி சுற்ற விடு மீண்டும்
(உனக்காகத்தானே..)

பெ: காதலை தெய்வம் என்று கைகள் வணங்கும்
காதலில் மட்டும்தானே உள்ளம் அடங்கும்

ஆ: சலவைக்கல் சிலையே பூஜிக்க வா..
ரகசிய பூவாய் தனனானனா...

பெ: உன் வாசம் இல்லாமல் பூவாசம் எனக்கேது
அதிகாலை தேநீரில் தித்திப்பு இருக்காது
என் தட்ப வெப்பங்கள் நீ இன்றி குறையாது
பூந்தென்றல் புகை ஆகும் ஸ்வாசிக்க பிடிக்காது

ஆ: பூவுக்கு வெண்ணிலவு பால் ஊட்டும் நேரம்
ஐயய்யோ பூமி எங்கும் ஆனந்தத்தின் ஈரம்
(உனக்காகத்தானே...)

Nenjil Jil Jil - Unakkagathaane Uyir Vaazhgiren

உதயகீதம் - பாடு நிலாவே தேன் கவிதை

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர

நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ
கைதான போதும் கை சேரவேன்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே

பாடும் நிலவே தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு தேடும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேர கூடும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

உன் பாடலை நான் கேட்கிறேன்

பாமாலையை நான் கோர்க்கிறேன்

பாடும் நிலாவே

தேன் கவிதை

பூ மலரே



Udaya Geetham - Paadu Nilavae Then Kavithai Poo Malare

உதயகீதம் - சங்கீத மேகம் தேன் சிந்தும்

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

லலல… லலல…
லல… லல… ல…

போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே…. ஹோ…..

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே…. ஹோ…..

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே… ஒ…
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்



Udaya Geetham - Sangeetha Megam

உதயகீதம் - தேனே தென்பாண்டி மீனே

தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை
ஆரீராரோ

(தேனே)

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

(தேனே)

பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே
பால் மனத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தால் வாசம் விட்டு போகுமா
ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை

(தேனே)



Udhaya Geetham - Thene Thenpandi

நாட்டாமை - நான் உறவுக்காரன் உறவுக்காரன்

ஆ: நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன்
நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்

பெ: நான் உறவுக்காரி உறவுக்காரி உறவுக்காரி
நீ கட்டிய வேட்டிக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரி

ஆ: என் பச்சரிசி நீதான் அச்சுவெல்லம் நாந்தான்
ஒன்னில் ஒன்னு கலக்கட்டுமே

பெ:ஏ.. ஆத்துக்குள்ள தோப்புக்குள்ள அய்யனாரு கம்மாக்குள்ள
நம்ம கொடி பறக்கட்டுமே..

ஆ: (நான் உறவுக்காரன்..)

ஆ: வெட்ட வெளியில் கொஞ்சம் தொட்டு கலப்போம்
இன்னும் விளக்கம் தேவையா?
பட்ட பகலில் ஒன்ன கட்டி புடிக்க
ஒரு வெளிச்சம் தேவையா?

பெ: விட்டு கொடு நீ கொஞ்சம் விட்டு கொடு நீ
என்று வழியா போறியா?
விட்டு கொடுத்தா இந்த கட்டி கரும்பா நீ
பிழிய போறயா?

ஆ: சொந்தக்கார பூவே சொல்லிக்கொஞ்சம் தாரேன்

பெ: சொல்லி கொடு மாமா அள்ளிதற வாரேன்

ஆ:(நான் உறவுக்காரன்..)

பெ: உன்ன நெனச்சு தினம் உன்னை நெனச்சு என் உசுரு உருகுது
உந்தன் நெனப்பில் இந்த பட்டு புடவ சும்மா வழுக்கி விழுகுது

ஆ: எந்த இடத்தில் அடி எந்த இடத்தில் என் இதயம் துடிக்குது
அந்த இடத்தில் அடி அந்த இடத்தில் என் ஆஸ்தி இருக்குது

பெ:அஞ்சு மணி வந்தா நெஞ்சுக்குள்ள பாட்டு

ஆ: பூத்திருச்சு பூவு இன்னும் என்ன பூட்டு

பெ: (நான் உறவுக்காரி..)

ஆ: (நான் உறவுக்காரன்..)

பெ: என் பச்சரிசி நீதான் அச்சுவெல்லம் நாந்தான்
ஒன்னில் ஒன்னு கலக்கட்டுமே

ஆ: ஏ.. ஆத்துக்குள்ள தோப்புக்குள்ள அய்யனாரு கம்மாக்குள்ள
நம்ம கொடி பறக்கட்டுமே..

Nattamai - Naan Uravukaaran

Thursday, November 24, 2016

சிகரம் - வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை உன்னைத்தொட ஏணியில்லை

(வண்ணம்)

பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை சுவாசிக்க ஆசையில்லை
கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள யாருமில்லை

(வண்ணம்)

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி
கண்ணிரண்டில் பார்த்திருப்பேன் கால்கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன்வந்து சேரும்வரை தேகம்போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்

(வண்ணம்)

Sigaram - Vannam Konda

அலைபாயுதே - எவனோ ஒருவன் வாசிக்கிறான்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்தே யோசிக்கிறேன்
அதை தவனை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறேன்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்தே யோசிக்கிறேன்
அதை தவனை முறையில் நேசிக்கிறேன்
கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன்
ஊதும் ரகசியம் புரியவில்லை
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கம் இல்லா முன்னிரவில் என்
உள் மனதில் ஒரு மாறுதலா
உறக்கம் இல்லா முன்னிரவில் என்
உள் மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில் இது
எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு
இதுபோல் மருந்து பெரிதில்லையே
அந்தக் குழலைப்போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்




Alaipayuthey - Evano Oruvan

சொல்ல துடிக்குது மனசு - பூவே செம்பூவே உன் வாசம் வரும்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

நிழல் போல நானும் 
நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே )

உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல் 
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

Solla Thudikuthu Manasu - Poove Sem Poove

கரகாட்டக்காரன் - பாட்டாலே புத்தி சொன்னார்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்

காளயர்கள் காதல் கன்னியரை
கவர்ந்திட பாடல் கேட்டார்கள்
ஏழைகளும் ஏவல் அடிமைகளாய்
இருப்பதை பாடச் சொன்னார்கள்
கதவோரம் கேட்டிடும்
கட்டில் பாடலின்
மெட்டு போடசொன்னார்கள்
தெருவோரம் சேர்ந்திட
திருவாசகம் தேவாரம் கேட்டார்கள்
நான் படும் பாடுகள் அந்த ஏடுகள்
அதில் எழுதினாலும் முடிந்திடாது

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்

பூஜையில் குத்து விளக்கை ஏற்ற வைத்து
அதுதான் நல்லதென்றார்கள்
படத்தில் முதல் பாடலை பாட வைத்து
அது நல்ல ராசி என்றார்கள்
எத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய்
நான் விற்றேன் இதுவரையில்
அத்தனையும் நல்லவையா அவை
கெட்டவையா என அரியேன் உண்மையிலே
எனக்குதான் தலைவர்கள் என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்

Karakattakaran - Paattaalae puththi

கரகாட்டக்காரன் - ஊரு விட்டு ஊரு வந்து

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேறு கேட்டு போனதின்னா
நம்ம பொழப்பு என்னாகுங்க

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேறு வீடு உங்களை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேறு கேட்டு போனதின்ன
நம்ம பொழப்பு என்னாகுங்க

அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க
தப்பாக என்ன வேணாம்
பொன்னாலே கெட்டு போவேனோ என்று
ஆராய்ச்சி பண்ண வேணா
ஊருல ஒலகத்தில
எங்க கதை போல் ஏதும்
நடக்கலியா
வீட்டையும் மறந்துபுட்டு
வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா

மன்மத லீலையை வென்றவர் உண்டோ
இல்ல இல்ல

மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ
இல்ல இல்ல

மன்மத லீலையை வென்றவர் உண்டோ
மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ

காதல் ஈடேற
பாடு என் கூட

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேறு கெட்டு போனதின்ன
நம்ம பொழப்பு என்னாகுங்க

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேறு வீடு உங்களை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ

ஆனா பொறந்த எல்லாரும் பொண்ண
அன்பாக எண்ண வேணும்
வீனா திரிஞ்ச ஆனந்தம் இல்ல
வேறென்ன சொல்ல வேணும்

வாழ்கைய ரசிக்கணும்னா
வஞ்சிக் கோடி
வாசனை பட வேணும்
வாலிபம் இனிகனும்ன

பொண்ண கொஞ்சம்
ஆசையில் தொட வேணும்

கண்ணிய தேடுங்க கற்பனை வரும்
ஆமா ஆமா மா

கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
ஆமா ஆமா மா

கண்ணிய தேடுங்க கற்பனை வரும்
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
காதல் இல்லாம பூமி இங்கேது

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேறு கெட்டு போனதின்ன
நம்ம பொழப்பு என்னாகுங்க

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேறு வீடு உங்களை நம்பி
அய்யயோ
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேறு வீடு உங்களை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேறு கெட்டு போனதின்ன
நம்ம பொழப்பு என்னாகுங்க

Karakattakaran - Ooruvittu Ooruvanthu

கரகாட்டக்காரன் - மாங்குயிலே பூங்குயிலே சேதி

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்துச் செம்பு அத
தொட்டெடுத்துத் தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ
கிட்ட வந்து கெளருதடி என்னப் படு ஜோரு
கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா
பொண்ணு மனசேத் தொட்டு பறிச்சா
தன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வல தான் விட்டு விரிச்சா
ஏறெடுத்துப் பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் யம்மா சேத்து என்னைத் தேத்து
முத்தையன் படிக்கும் முத்திரக் கவிக்கு
நிச்சயம் பதிலு சொல்லணும் மயிலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா
கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன்
வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி யம்மா
இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி
கூடியிருப்போம் கூண்டுக் கிளியே
கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே
ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன்
சம்மதமுன்னு சொல்லு கிளியே
சாமத்திலே வாரேன் யம்மா சாமந்திப்பூத் தாரேன்
கோபப்பட்டுப் பாத்தா யம்மா வந்த வழி போறேன்
சந்தனம் கரச்சுப் பூசனும் எனக்கு
முத்தையங் கணக்கு மொத்தமும் ஒனக்கு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஹோய்

Karakattakaran - Maanguyilae

கரகாட்டக்காரன் - இந்த மான் உந்தன் சொந்த மான்

இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்

சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே...

பெண் இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்

***
வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மது கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே

இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவனே
ஆண் என்னுயிரே...

***
பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழிதான் இடம் தேடுதே
பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
என்னத்தான்...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
என்னத்தான் உன்னை எண்ணிதான்
உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்
மோகம் தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்

இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்

இந்த மான்
எந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே
என்னவனே..

Karakattakaran - Intha Maan

கரகாட்டக்காரன் - முந்தி முந்தி விநாயகரே

முந்தி முந்தி விநாயகரே!
வந்து வந்தெம்மைக் கண் பாருமே!

முந்தி முந்தி விநாயகரே!
வந்து வந்தெம்மைக் கண் பாருமே!

முப்பத்து முக்கோடித் தேவர்களே!
முப்பத்து முக்கோடித் தேவர்களே!

எப்போதும் உம் துணை வேண்டுமைய்யா!

முந்தி முந்தி விநாயகரே!
வந்து வந்தெம்மைக் கண் பாருமே!

முப்பத்து முக்கோடித் தேவர்களே!
எப்போதும் உம் துணை வேண்டுமைய்யா!

முந்தி முந்தி விநாயகரே!
வந்து வந்தெம்மைக் கண் பாருமே

Karakattakaran - Mundhi Mundhi

பக்தி பாடல் - குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (2)

அனுபல்லவி [சிவ ரஞ்சினி ]

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம் 1[சிவ ரஞ்சினி ]

வேண்டியதை தந்திட வெங்கடேஸன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் 2 [காபி ]

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - கண்ணா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் (2)
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா (2)


சரணம் 3 [காபி ]

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா (2)
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் 4 [சிந்து பைரவி ]

கல்லிலார்க்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா (2)

சரணம் 5 [ சிந்து பைரவி ]

குறை ஒன்றும் இல்லை

யாதும் மறுக்காத மலையப்பா (2)- உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு (2)
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)
மணிவண்ணா மலையப்பா

கோவிந்தா கோவிந்தா (3)

Bakthi Paadal - Kurai Ondrum Illai Kanna

மாலையிட்ட மங்கை - செந்தமிழ்த் தேன்மொழியாள்

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே...
நின்றது போல் நின்றாள் நெடுதூரம் பறந்தாள்
நிற்குமோ நிலைக்குமோ நெஞ்சம் 
மணம் பெறுமோ வாழ்வே...

செந்தமிழ்த் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
[நிலாவென...]
பைங்கனி இதழ்களில் பழரசம் தருவாள் 
பருகிட தலைகுனிவாள்

காற்றினில் பிறந்தவளோ 
புதிதாய் கற்பனை வடித்தவளோ...
[காற்றினில்...]
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்தி பூச்சரமோ?
[அவள் செந்தமிழ்த்...]

கண்களில் நீலம் விளைத்தவளோ
அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கே பெண்ணே 
பேராசை கொள்ளும் 
பேரழகெல்லாம் படைத்தவளோ..
[செந்தமிழ்த்...]

Maalaiyitta Mangai - Sendhamizh Thenmozhiyaal

Followers