Pages

Search This Blog

Showing posts with label Anbu. Show all posts
Showing posts with label Anbu. Show all posts

Friday, December 30, 2016

அன்பு - அவள் யார் அவள் அழகானவள்

அவள் யார் அவள் அழகானவள் அடி நெஞ்சிலே மின்னல்
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்
முதல் காதலின் துள்ளல்

எத்தனை எத்தனை நளினம் அடி என்னுயிர் எங்கும் சலனம்
இருமுறை இருமுறை ஜனனம் அது உன்னை காண்டிட தருனம்
ரத்தம் மொத்தம் உறைகின்றதே…

அவள் யார் அவள் அழகானவள் அடி நெஞ்சிலே மின்னல்
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்
முதல் காதலின் துள்ளல்

அன்பே நீ என் நெஞ்சை போர் கப்பல் போல் வந்து
சொல்லாமல் கொள்ளாமல் தாக்காதே தாக்காதே
ஆணோடு எப்போதும் இம்சைகள் செய்கின்ற
ஆதிக்க பெண்ணாக மாறாதே
அந்தி நிலா ஆ அந்தி நிலா
அல்லி மலர் அள்ளி அள்ளி எய்தவளா
என்னவளா என்னவளா
என்னை ஒரு அர்த்தமென செய்தவளா
செவ்வரி ஊறிய விழிகள்
அதில் செந்தமிழ் மிஞ்சிடும் மொழிகள்
புன்னகை செய்யும் புயல் மேகமே…

அவள் யார் அவள் அழகானவள் அடி நெஞ்சிலே மின்னல்
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்
முதல் காதலின் துள்ளல்

ஐந்தாறு கண்டங்கள் நீ தாண்டி சென்றாலும்
அங்கேயும் உனை வந்து பெண் பார்ப்பேன்
செவ்வாயில் நீ சென்று வாழ்ந்தாலும்
நான் உந்தன் செவ்வாயில் ஓரத்தில் தேன் வார்ப்பேன்
என்னுயிரே… என்னுயிரே…
மெய்யாக நான் இங்கு பொய்யானேன்
என்னுயிரே… என்னுயிரே…
பொய்யல்ல நான் இங்கு நீயானேன்
சட்டென சட்டென இதயம்
பல சில்லென சில்லென உடையும்
அத்தனை சில்லிலும் உன் பிம்பமே…

அவள் யார் அவள் அழகானவள் அடி நெஞ்சிலே மின்னல்
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்
முதல் காதலின் துள்ளல்

எத்தனை எத்தனை நளினம் அடி என்னுயிர் எங்கும் சலனம்
இருமுறை இருமுறை ஜனனம் அது உன்னை காண்டிட தருனம்
ரத்தம் மொத்தம் உறைகின்றதே…

Anbu - Aval Yaar Aval

அன்பு - தவமின்றி கிடைத்த வரமே

தவமின்றி கிடைத்த வரமே .இனி வாழ்வில் எல்லாம் சுகமே
நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியில் தானே வாழ்கிறேன் 
நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்
நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதையாகிரேன்
நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன்
தவமின்றி கிடைத்த வரமே ஒ ...இனி வாழ்வில் எல்லாம் சுகமே

ஒ கடிவாளம் இல்லாத காற்றாக நாம் மாற
வேண்டாமா ? வேண்டாமா ?
கடிகாரம் இல்லாத
ஊர் பார்த்து குடியேற
வேண்டாமா ? வேண்டாமா ?
கை கோர்க்கும் போதெல்லாம்
கை ரேகை சேரட்டும் 
முத்தத்தின் எண்ணிக்கை
முடிவின்றி போகட்டும்

பகலெல்லாம் இரவாகி போனாலென்ன
இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன
நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன

தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே

சூடான இடம் வேண்டும்
சுகமாகவும் வேண்டும்
தருவாயா ? தருவாயா ?

கண் என்ற போர்வைக்குள்
கனவென்ற மெத்தைக்குள்
வருவாயா ? வருவாயா ?

விழுந்தாழும் உன் கண்ணில்
கனவாக நான் விழுவேன் எழுந்தாலும் 
உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன்
மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன்
பிறந்தாலும் உன்னையே தான் மீண்டும் சேர்வேன்
இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன்

தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே

நீ சூரியன் நான் வெண்ணிலா
உன் ஒளியில் தானே நான் வாழ்கிறேன்

நீ சூரியன் நான் தாமரை
நீ வந்தால் தானே மலர்கிறேன்

நீ சூரியன் நான் வான்முக்தில்
நீ நடந்திடும் பாதையாகிரேன்

நீ சூரியன் நான் ஆழ்கடல்
என் மடியில் உன்னை ஏந்தினேன்

தவமின்றி கிடைத்த வரமே

இனி வாழ்வில் எல்லாம் சுகமே

Anbu - Thavamindri Kidaitha

Followers