Pages

Search This Blog

Showing posts with label Nizhalgal. Show all posts
Showing posts with label Nizhalgal. Show all posts

Wednesday, January 29, 2014

நிழல்கள் - மடை திறந்து தாவும்

மடை திறந்து தாவும் நதி அலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசைக் கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹே ...

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின்
நாட்டியம் அமைப்பேன் நான்

மடை திறந்து ...

நேற்றின் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றின் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்களம்
இசைக்கென இசைக்கின்ற ரசிகர்கள்
ராஜ்ஜியம் எனக்கே தான்

மடை திறந்து ....

Nizhalgal - Madai Thiranthu

நிழல்கள் - பூங்கதவே தாள்திறவாய் பூவாய்

பூங்கதவே தாள்திறவாய் பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

(பூங்கதவே)

நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்

(பூங்கதவே)

திருத் தேகம் எனக்காகும் தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அன்னேரம்
மங்கல வாழ்த்தொலி கீதம்

(பூங்கதவே)

Nizhalgal - Poongathavae

நிழல்கள் - இ்து ஒரு பொன்மாலைப் பொழுது

இ்து ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்

(இது ஒரு)

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

(இது ஒரு)

வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருனாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்

(இது ஒரு)

Nizhalgal - Ithu Oru Pon Malai

Followers