Pages

Search This Blog

Showing posts with label Papanasam. Show all posts
Showing posts with label Papanasam. Show all posts

Friday, November 18, 2016

பாபநாசம் - ஏயா என் கோட்டிக்காரா

ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டைக்காராா

குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டக்காரா

செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரா

யே எட்டி என் கொட்டிக்கார
அடி ஏழா என் வேட்டைக்காரி

குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டைக்காரி

செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரி

தேடி சேர்த்த காச போல்
காதல் இருக்குதா

கொஞ்சமாக எடுக்குற
கஞ்சம் தடுக்குதா

காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டி

சின்ன புள்ள நான்தான்
பெண்ணே உண்மை அல்லோ

என்ன தாங்க இப்போ
மூணு அம்மை அல்லோ

பாலருவியும் தேனருவியும் ஐந்தருவியும்
உன் நேசத்தின் முன்னே முன்னே தோத்தே போகும்
மண்ணில் சொர்கமிது

ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டைக்காரா

குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டக்காரா

செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரா

காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டி

தட்டான் பூச்சி போல
வண்ணம் அள்ளி தார

கண்ணில் இன்னும் வேற
ஏதோ சொல்லி தார

நான் நினைச்சதும் நீ நினைச்சதும்
நூழிலையில் தான் வழுக்கிட

பேசி பேசி இன்னும் பேசி
பேசா நிலை வருமோ

தேடி சேர்த்த காச போல்
காதல் இருக்குதா

கொஞ்சமாக எடுக்குற
கஞ்சம் தடுக்குதா

காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டி

Papanasam - Yeya En Kottikkaara

பாபநாசம் - வினா வினா

வினா வினா ஒரே வினா
விடாமலே எழும் வினா

நிறைவுறா ஒரே கனா
இறைவனா மனிதனா

ஆற்றில் செல்லும் நீரில்
நேற்றின் வெள்ளம் எது

நேற்றெல்லாம் மாயையே
சூறை காற்றின் ஊடாய்

சாயா நாணற் காடாய்
வேண்டும் ஓர் மேன்மையே

பூபாளம் கேட்காதோ
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ

வினா வினா ஒரே வினா
விடாமலே எழும் வினா

சிக்குமா சிக்குமா சிலந்தி தான் அமைத்த தன் வலையில்
சிக்குதே சிக்குதே மனது பாவம் எனும் பொய் வலையில்

அம்மை அப்பன் காக்கும் பிள்ளை ஆயுள் நூறு வாழும்
இம்மை செய்த நன்மை நம்மை தீமை கொன்று காக்கும்
அன்பே உயரிய ஆவனம் செய்த அறம் நம்மை காத்திடும்

வினா வினா ஓர் வினா
விடாமலே எழும் வினா

நிறைவுறா ஒரே கனா
இறைவனா மனிதனா

கத்தியா புத்தியா இரண்டில் வெல்வதேது சொல் மனமே
புத்தியே புத்தியே உலகில் வெல்லுகின்ற ஆயுதமே

பாறை மேலே தேரே போனால் பாத சுவடு இல்லையே
வேறை போலே உண்மை கூட வெளியே வந்தால் தொல்லையே

கூறா மனமே ரகசியம்
உலகில் உறவே அவசியம்

வினா வினா ஒரே வினா
விடாமலே எழும் வினா

நிறைவுறா ஒரே கனா
இறைவனா மனிதனா

ஆற்றில் செல்லும் நீரில்
நேற்றின் வெள்ளம் எது

நேற்றெல்லாம் மாயையே
சூறை காற்றின் ஊடாய்

சாயா நாணல் காடாய்
வேண்டும் ஓர் மேன்மையே

பூபாளம் கேட்காதோ
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ

பூபாளம் கேட்காதோ
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ

Papanasam - Vinaa Vinaa

Followers