Pages

Search This Blog

Showing posts with label Jannal Oram. Show all posts
Showing posts with label Jannal Oram. Show all posts

Tuesday, December 17, 2013

ஜன்னல் ஒரம் - உன்னப் பார்க்காம பார்க்காம

உன்னப் பார்க்காம பார்க்காம
ஒண்ணும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்

உன்னத் தாங்காம தாங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
இல்ல பேச்சு ஐயோ கூச்சம்

எனக்குள்ளே நூறு பேச்சு சிரித்தேனோ கூடிப் போச்சு
பொழுதெல்லாம் வீணாப் போச்சு புரியாம ஏதோ ஆச்சு
மனசெல்லாம் பட்டாம்பூச்சி உன்னால

உன்னப் பார்க்காம பார்க்காம
ஒண்ணும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்

அன்னைக்கே பாசம் வச்சேன்
அப்பவே ஆசை வச்சேன்
என்னைக்கும் நீயே தான்னு ஏதேதோ பூசை வச்சேன்
சந்திக்க சேதி வச்சேன் சம்மதம் கேட்டு வச்சேன்
கட்டிக்கத் தாலி செஞ்சி எப்பயோ வாங்கி வச்சேன்
நூறு வருஷமும் இல்ல
பல கோடி வருஷமும் இல்ல
ஒரு நாளில் ஒரு நொடி போதும் என என் கூட

உன்னப் பார்க்காம பார்க்காம
ஒண்ணும் பேசாம பேசாம
தூக்கம் இல்ல தூக்கம்
தூக்கம் ஐயோ ஏக்கம்

முல்லப்பூ வாசம் என்ன
மல்லிப்பூ வாசம் என்ன
கண்ணே உன் வாசம் பட்டால் கல்லுமே பூப்பதென்ன
அத்திப்பூ வாசம் என்ன
அல்லிப் பூ வாசம் என்ன
ஐயா நீ இல்லாமல் அரளிப்பூ கேட்பதென்ன
போதும் நிறுத்தடி யம்மா புரியாம குழம்புறேன் சும்மா
உசுரோட அடிக்கிற வாசம் அது காதல் தான்

உன்ன பார்க்காம பார்க்காம
ஒண்ணும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்

உன்னத் தாங்காம தாங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
கூச்சம் இல்ல பேச்சு
கூச்சம் ஐயோ கூச்சம்

எனக்குள்ளே நூறு பேச்சு சிரித்தேனோ கூடி போச்சு
பொழுதெல்லாம் வீணா போச்சி புரியாம ஏதோ ஆச்சு
மனசெல்லாம் பட்டாம்பூச்சி உன்னால

Jannal Oram - Unnai Paarkama

Followers