Pages

Search This Blog

Showing posts with label Nenjinile. Show all posts
Showing posts with label Nenjinile. Show all posts

Tuesday, December 24, 2013

நெஞ்சினிலே - மனசே மனசே

மனசே மனசே
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க (2)
பூக்கள் மீது பனி துடைத்து கவிதைகள் எழுதிவிடு
காதல் கடிதம் நீ கொடுத்து நிலவினை தூது விடு
மனசே ... மனசே ...

(மனசே மனசே ...)

நீ தினம் தினம் சுவாசிக்க தானே
காற்றில் தென்றலாய் நானும் ஆகவா ?
நீ என்னை தான் வாசிக்க தானே
உந்தன் கையில் நான் வீணை ஆகவா ?
மழை இல்லை நனைகிறேன் நம் காதலின் சாரலா ?
உன்னை கண்டு உறைகிறேன் உன் பார்வை மின்சாரமா ?
என்னை தந்தேன் உன்னை கொடு
மனசே ... மனசே ...

(மனசே மனசே ...)

உன் கனவிலே நான் வர தானே
தினமும் இரவிலே விழிதிருப்பேனே
உன் மனதிலே குடிவர தானே
உனது விழியிலே நீந்திடு வேனே
ஒரே முறை நிழல் தொடு என் பிம்பம் நீயாகுமே
ஒரே ஒரு வரம் கொடு உன்னோடு நான் வாழவே
சுகம் தரும் கடல் இதோ
மனசே ... மனசே ...

(மனசே மனசே ....)

Nenjinile - Manase Manase

Followers