Pages

Search This Blog

Showing posts with label Kaadhal Mannan. Show all posts
Showing posts with label Kaadhal Mannan. Show all posts

Monday, November 25, 2013

காதல் மன்னன் - வானும் மண்ணும் கட்டிக்

ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஆண் : நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை
பெண் : மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்றும் தோன்றவில்லை
ஆண் : வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை
பெண் : பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
இலக்கணம் பார்க்கவில்லை
ஆண் : பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை
பெண் : உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை
ஆண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

பெண் : எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ
உணர்ச்சிக்கு பாதை உண்டோ
ஆண் : விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ
காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ
பெண் : காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை
ஆண் : ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

Kaadhal Mannan - Vaannum Mannum

Friday, October 11, 2013

காதல் மன்னன் - திலோத்தமா

நான் மடி ஏந்தி மண் போல் யாசித்தேன்
என் மழைத்துளியே ஏன் தான் யோசித்தாய்
மனம் தாங்காதே பின் வாங்காதே
திலோத்தமா திலோத்தமா

இது மெய் தானே உன்னைக் கேட்கிறேன்
அட என் கண்ணை நானே பார்க்கிறேன்
என் கண்ணீரில் நன்றி சொல்கின்றேன்
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

மாற்றம் மனதிலொரு மாற்றம்
மாற்றம் விழியில் தடுமாற்றம்
தவறல்லவா உன் நெஞ்சுக்குத் தாழ்ப்பாளிடு

யேஹி.. யேஹி.. யேஹி.. யேஹி..
காதல் அனைவருக்கும் பூவோ
எனக்கு மட்டும் முள்ளோ
முள்ளோ உன்னால் சொல்லாமலே முத்தாடவோ
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

இது சொல்லாத சோகம் அல்லவா
அதை மௌனங்கள் சொல்லும் அல்லவா
தள்ளிப்போனாலும் உள்ளம் போகாது
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

இவள் நெஞ்சோடு ஏதோ உள்ளது
அதை உன் காதில் சொன்னால் நல்லது
மௌனம் தீர்ப்போமா மீண்டும் பார்ப்போமா
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

Kaadhal Mannan - Thilothamma

காதல் மன்னன் - உன்னைப் பார்த்த பின்பு

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்....
இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்....
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....
(உன்னை........)

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாய இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ
(உன்னை..........)

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீ இருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமயமலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ
(உன்னை...........)

Kaadhal Mannan - Unnai Paartha

Followers