Pages

Search This Blog

Showing posts with label Aasai. Show all posts
Showing posts with label Aasai. Show all posts

Thursday, January 9, 2014

ஆசை - ஷொக்க் அடிக்குது சொனா

ஹைய்யோ ஹையைய்யோ...
ஹைய்யோ ஹையைய்யோ...
ஹைய்யோ ஹையையைய்யோ....
ஹைய்யோ ஹையையைய்யோ....
ஹைய்யோ ஹையையைய்யோ....
ஹைய்யோ ஹையையைய்யோ....

யேஹ் ஷொக்க் அடிக்குது சொனா
நீ நடந்து போனா
ஹியர்ட் டிக்கிது தானா
நீ ரஜஸ்தன் மானா
குலுக்கி அந்த லடுக்கி வந்ததும் பார்வைதான்
லடுக்கி மேல தடுக்கி விழுந்தது
தடுக்கி விழுந்த நேரம் பார்த்துதான் மனசுல
அடுத்த நிமிஷம் லொவே பொரந்தது
ஹைய்யோ ஹையையைய்யோ...
ஹைய்யோ ஹையையைய்யோ...
யேன் நகங்கல கடிக்கிர... இடை துடிக்கிர
கன்னுல மின்னலை பாய்ச்சுர...
ஹைய்யோ ஹையையைய்யோ...
ஹைய்யோ ஹையையைய்யோ...

யேன் கலுக்குன்னு சிரிக்கிர... நெஞ்சை பரிக்கிர
பக்கத்தில் சொர்கத்தை காட்டுரா
ஹைய்யோ ஹைய்யோ ஹோஓ...
ஹைய்யைய்ய ஹைய்யைய்ய ஹோஓ...
அச்ச அச்ச பாபு கிச்ச... பச்சி கிலி
வச வச கன்னில் வச்ச.... கிக்கு பொடி
தில் டெர தீவானாஅ.... உன்ன விட்டு போவேனா
(ஷொக்க் அடிக்குது)

நீ யென்ன கொஞ்சம் விரும்பின... லொவே அரும்பின
தடிய நொடிய திங்கிரே
ஹைய்யோ ஹையையைய்யோ...
ஹைய்யோ ஹையையைய்யோ...
நீ ஒரு முத்தம் வழங்கின... தொட்டு தழுவின
விழிய மட்டுமே கொஞ்சுரே
ஹைய்யோ ஹையையைய்யோ...
ஹைய்யோ ஹையையைய்யோ...
சொரி சொரி பட சொரி... இந்த பொன்னு
ஸ்டொர்ய் ஸ்டொர்ய் லொவே ஸ்டொர்ய்... சொல்லும் கன்னு
தில் டெர தீவானாஅ.... உன்ன விட்டு போவேனா
ஹைய்யோ ஹையையைய்யோ....
ஹைய்யோ ஹையையைய்யோ....
ஹைய்யோ ஹையையைய்யோ....
ஹைய்யோ ஹையையைய்யோ....
(ஷொக்க் அடிக்குது)

Aasai - Shock Adikuthu

ஆசை - ஓரு முறை எந்தன் நெஞ்சில்

ஆண் : ஓரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ...

ஆண்குழு : திலோத்தமா

ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ...

ஆண்குழு : திலோத்தமா

ஆண் : ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
களைபவன் நானம்மா

***

ஆண் : இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே

பெண்குழு : என்ன

பெண் : இரவு இப்போது நீளம் ஆனதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே

ஆண்குழு : என்ன

ஆண் : எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
என் பேர் இப்போது மறந்து போனதே

பெண்குழு : என்ன

பெண் : வானம் இப்போது பக்கம் வந்ததே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே

ஆண்குழு : என்ன

ஆண் : ஓஹோ... ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே
அது பிரிவதில்லை

பெண் : ஓஹோ... ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே
சொல்லும் அறிவதில்லை

ஆண் : ஒரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ...

ஆண்குழு : திலோத்தமா

ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ...

ஆண்குழு : திலோத்தமா


***

ஆண் : காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
காதல் கொள்ளாத ஜீவன் பூமியில்

பெண்குழு : இல்லை

பெண் : கண்கள் இல்லாமல் காட்சி என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
கனவே இல்லாமல் நிலவு என்பதே

ஆண்குழு : இல்லை

ஆண் : தண்ணீர் இல்லாமல் எந்த மீனும்
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காதல் காவியம்

பெண்குழு : இல்லை

பெண் : மண்ணை தொடாத மழையும் வானிலே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
உன்னைத் தொடாமல் உறவு என்பதும்

ஆண்குழு : இல்லை

ஆண் : ஓஹோ.. இந்த இயற்கையெல்லம்
நம் இருவரையும் கண்டு மலைத்ததென்ன

பெண் : ஓஹோ.. இது காதலுக்கே உள்ள ஜீவ குணம்
இதில் கலக்கமென்ன

ஆண் : ஒரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ...

ஆண்குழு : திலோத்தமா

ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ...

ஆண்குழு : திலோத்தமா

{ஆண் : ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
களைபவன் நானம்மா

Aasai - Orumuri Enthan

Thursday, October 24, 2013

ஆசை - புல்வெளி புல்வெளி

புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூரியன் சூரியன் வந்து
செல்லமாய் செல்லமாய் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா
இதயம் பறவை போலாகுமா
பறந்தால் வானமே போதுமா
நான் புல்லில் இறங்கவா
இல்லை பூவில் உறங்கவா

சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு
பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலநூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு
இலைகளில் ஒளிகின்ற கிளிக்கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
பூவண்ணமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றி விட வாருங்கள்

புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா

துள்துள்துள் துள்துள்துள்துள்ளென துள்ளும் மயிலே
மின்னல் போல் ஓடும் வேகம் தந்தது யாரு
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்ஜலென ஓடு நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு
மழையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி
பூவண்ணமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றி விட வாருங்கள்

புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூரியன் சூரியன் வந்து
செல்லமாய் செல்லமாய் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா
இதயம் பறவை போலாகுமா
பறந்தால் வானமே போதுமா
நான் புல்லில் இறங்கவா
இல்லை பூவில் உறங்கவா

Aasai - Pulveli Pulveli

ஆசை - மீனம்மா அதிகாலையிலும்

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
அம்மம்மா முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையெல்லாம் ஒரு காவியமே

சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து வந்து போகும்
மோதல் வந்து ஊடல் வந்து முட்டிக்கொண்ட போதும்
இங்கு காதல் மட்டும் காயம் இன்றி வாழும்
இது மாதங்கள் நாட்கள் செல்ல
நிறம் மாறிடும் பூக்கள் அல்ல

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே

ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்திக்கோர் புது வித்தை காட்டிடவா
ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டு தீண்டுவதா
மாமன் காரன் தானே மால போட நானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்

மீனம்மா மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்
அம்மம்மா வெயில் உன்னை அணைத்தால் இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும்

அன்று காதல் பண்ணியது உந்தன் கண்ணம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது
அன்று பட்டுச் சேலைகளும் நகை நட்டும் பாத்திரமும்
உனை கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது
ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு

மீனம்மா உன்னை நேசிக்கவும் அன்பை வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு
அம்மம்மா உன்னைக் காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு

உன்னைத் தொட்ட தென்றல் வந்து என்னைத் தொட்டு
என்னென்னவோ சங்கதிகள் சொல்லிவிட்டு போக
உன் மனமும் என் மனமும் ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு
ஒப்பந்தத்தில் கையெழுத்து போட
பின்பு மோகனப் பாட்டெடுத்தோம் முழு மூச்சுடன் காதலித்தோம்

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே

Aasai - Meenamma Adikalayilum

ஆசை - கொஞ்சநாள் பொறு

கொஞ்சநாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா

அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்

கொஞ்சநாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா

நேத்துக்கூட தூக்கத்தில பார்த்தேனந்தப் பூங்கொடிய
தூத்துக்குடி முத்தெடுத்து கோர்த்துவெச்ச மால போல
வேர்த்துக்கொட்டி கண்முழிச்சுப் பார்த்தா அவ
ஓடிப்போனா உச்சிமலக் காத்தா
சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிற்பா
சொல்லப்போனா பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திகுச்சி இல்லாமலே காதல் தீயப் பத்தவெப்பா

அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்

கொஞ்சனாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா

பச்சைதாவணி பறக்க அங்கு தன்னையே இவன் மறக்க
வச்ச கண்ணு வாங்கலையே மாமன் கண்ணு மூடல்லையே

என்னோடுதான் கண்ணாமூச்சி என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
காட்டாயம் என் காதல் ஆட்சி கைகொடுப்பா தென்றல் சாட்சி
சிந்தனையில் வந்துவந்து போனா அவ
சந்தனத்தில் செஞ்சுவெச்ச தேனா
என்னுடைய காதலியே ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா
வேரொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா

அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்

கொஞ்சநாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா

Aasai - Konja Naal Poru

Followers