Pages

Search This Blog

Showing posts with label Nimir. Show all posts
Showing posts with label Nimir. Show all posts

Tuesday, May 29, 2018

நிமிர் - எப்போதும் உன் மேல் நியாபகம்

எப்போதும் உன் மேல் நியாபகம்
என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கனும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்
அருகில் வா
என அழைக்கவா
விரல் கோர்க்கனும்
தோள்சாய்க்கனும்

எப்போதும் உன் மேல் நியாபகம்
என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கனும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்

அந்தி வெயில் அடங்கையில்
நானும் நீயும் பேசனும்
சத்தமிடும் வளையலை
சங்கம் வைத்து தீர்க்கனும்
பக்கத்துல வந்து
வெட்கத்தையும் தந்து
சொக்க வைத்தாய் அன்று
சேலைப் போல நானும்
தோளில் சரியனும்

எப்போதும் உன் மேல் நியாபகம்
என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கனும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்
அருகில் வா
என அழைக்கவா
விரல் கோர்க்கனும்
தோள்சாய்க்கனும்

என்ன இது உயிரிலே
ஊஞ்சல் ஒன்று ஆடுதே
எங்கிருந்தோ உடலையும்
காய்ச்சல் வந்து மூடுதே
பத்து விரல் தேயும்
நித்திரையும் போகும்
எத்தனை நாள் இந்த வாதை?
தென்றல் கூட கருணைக்
கொண்டு தழுவுதே

எப்போதும் உன் மேல் நியாபகம்
என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கனும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்
அருகில் வா
என அழைக்கவா
விரல் கோர்க்கனும்
தோள்சாய்க்கனும்

எப்போதும் உன் மேல் நியாபகம்
என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கனும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்



Nimir - Epodhum Unmael Nyabagam

நிமிர் - கீதாரக் கிளியே கண்ணனின் கீதாரக் கிளியே

கீதாரக் கிளியே
கண்ணனின் கீதாரக் கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவாரத் தமிழே

எது நீ ?
உயிரோ?
உடலோ?
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ?
நினைவோ?
உயிர் உருக்கிடும்

கீதாரக் கிளியே
கண்ணனின் கீதாரக் கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவாரத் தமிழே

ஆசைப் பொழுதினிலே
ராதை நீங்காதிருப்பாள்
காலை விடியும் வரை
பேதை தூங்காதிருப்பாள்

மூச்சோடு சேரும்
உன் சுவாசம் அழகு
ஒரு நாளோடு தீரா
உன் மோகம் அழகு
இரு விழியால் பேசாதே
ஒரு விழியால் பேசு
இடிகளை நீ வீசாதே
மழையை வீசு
மனம் நனைந்திட

கீதாரக் கிளியே
கண்ணனின் கீதாரக் கிளியே
தேவாரத் தமிழே
கொஞ்சிடும் தேவாரத் தமிழே

எது நீ
உயிரோ?
உடலோ?
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ?
நினைவோ?
உயிர் உருக்கிடும்

கீதாரக் கிளியே
கண்ணனின் கீதாரக் கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவாரத் தமிழே

மாயக் கரு விழியால் ஆளை
வெல்வாயடி
பேசும் சிறுமொழியால் காதல்
சொல்வாயடி
ஆதார தீயே
உன் பார்வை அழகு
சிறு சேதாரம் ஆகா
உன் காதல் அழகு

பெருகியதே காதல் தான்
கடல் அலையைப் போல
வழிகிறதே தேடல் தான்
நதியைப் போல
உன்னை நினைக்கையில்

கீதாரக் கிளியே
கண்ணனின் கீதாரக் கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவாரத் தமிழே

எது நீ ?
உயிரோ?
உடலோ?
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ?
நினைவோ?

கீதாரக் கிளியே
கண்ணனின் கீதாரக் கிளியே
தேவார தமிழே.....



Nimir - Geedhaara Kiliye

நிமிர் - ஏனடி ஏனடி என்னைத் தொட்டு

ஏனடி ஏனடி
என்னைத் தொட்டு ஏன் இன்று
மின்னல் அடித்தாய்
நீயடி நீயடி
நினைவிடம் சொல்லாமல்
நீயாகிறேன்

கனவிலும் காணாத
பெண்ணா இவள்
அய்யோ அய்யோ மனம்
திண்டாடுதே
முதல் முறை பெண்ணாக
நான் காண்கிறேன்
இதோ இதோ மனம்
கொண்டாடுதே

ஏனடி ஏனடி
என்னைத் தொட்டு ஏன் இன்று
மின்னல் அடித்தாய்
நீயடி நீயடி
நினைவிடம் சொல்லாமல்
நீயாகிறேன்

விழியில் பேசிப் போவாய்
சொல்லாமல் நான் பார்க்கையில்
புயலை வீசி போகின்றாய்
விரலோடு காதல் சேர்த்தால்
யாரடியோ நீதான்
உனக்குள்ளே உன்னைத்தான்
நான் தேடினேன்

யாரடியோ
நீ யாரடியோ
எனக்குள்ளே நான் இன்று
போராடினேன்
தேடும் கண்கள் தேடும்
அது உன்னை மட்டும்
பாடும் நெஞ்சம் பாடும்
உன் பேரை மட்டும்
போதும் பெண்ணே போதும்
நீ நெஞ்சை கொன்றாய்
போதும் கண்ணே போதும்
நீ என்னை வென்றாய்

ஏனடி ஏனடி
என்னைத் தொட்டு ஏன் இன்று
மின்னல் அடித்தாய்
நீயடி நீயடி
நினைவிடம் சொல்லாமல்
நீயாகிறேன்

மலரைப் போலே மெலிதாய்
நெஞ்சோடு நீ தோன்றினாய்
நிலவை போலே ஆனாயே
வானம் ஆனேன் ஏனோ

காதலியோ நீதான்
நிஜமெது ?
நிழலெது ?
சொல்வாயடி
தேவதையோ என் தேவதையோ
இனி முதல் எனை என்று
காணபேனோ நான்

தேடும் கண்கள் தேடும்
அது உன்னை மட்டும்
பாடும் நெஞ்சம் பாடும்
உன் பேரை மட்டும்
போதும் பெண்ணே போதும்
நீ நெஞ்சை கொன்றாய்
போதும் கண்ணே போதும்
நீ என்னை வென்றாய்

ஏனடி ஏனடி
என்னைத் தொட்டு ஏன் இன்று
மின்னல் அடித்தாய்
நீயடி நீயடி
நினைவிடம் சொல்லாமல்
நீயாகிறேன்

கனவிலும் காணாத
பெண்ணா இவள்
அய்யோ அய்யோ மனம்
திண்டாடுதே
முதல் முறை பெண்ணாக
நான் காண்கிறேன்
இதோ இதோ மனம்
கொண்டாடுதே

ஏனடி ஏனடி
என்னைத் தொட்டு ஏன் இன்று
மின்னல் அடித்தாய்
நீயடி நீயடி
நினைவிடம் சொல்லாமல்
நீயாகிறேன்



Nimir - Yaenadi Yaenadi

நிமிர் - பூவுக்கு தாப்பா எதுக்கு

பூவுக்கு தாப்பா எதுக்கு?
ஊருக்கு கதவா இருக்கு ?
பூவுக்கு தாப்பா எதுக்கு?
ஊருக்கு கதவா இருக்கு ?

வெளியெல்லாம் தொரந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு
வெளியெல்லாம் தொரந்தே கெடக்கு

கிளி ஆக ஆசை எனக்கு
இலவச வெயில் வந்து விழுமே
என்னை இதமாய் தொடுமே
பூங்காத்தையே
வனம் வடிக்கட்டி அனுப்பிடுமே
மழை மழை மழை துளி விழுமே
என் மர்மம் தொடுமே

தலை ஈரத்தை
ஒரு துண்டு மேகம் துவட்டிடுமே
ஓடை எங்கள் தாய்ப்பால்
இந்த ஊரும் மண்ணும் தாய்மடி
இங்கே இல்லை நோய் நொடி
இந்த இடம் நல்ல இடம்
இது எந்தன் தலை நகரம்

பூவுக்கு தாப்பா எதுக்கு?
ஊருக்கு கதவா இருக்கு ?
பூவுக்கு தாப்பா எதுக்கு?
ஊருக்கு கதவா இருக்கு ?

வெளியெல்லாம் தொரந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு
வெளியெல்லாம் தொரந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு

சொத்து சுகம் தேடுகிற மனசா
இந்த சொகமே வருமா ?
பணம் காசெல்லாம்
இந்த பனி துளி விலை பெருமா?
வெட்டவெளி பொழப்புக்கு தானே
மனம் ஏங்கி கிடக்கு
ஆகாயமே

இங்க அக்கம் பக்கம் வந்து கிடக்கு
பட்டாம்பூச்சி பிடிக்க
நாம் பதுங்கி மெல்ல போகலாம்
அது பறக்கும் போது தோற்க்கலாம்
மனிதரை மறந்தொரு
பறவையின் வரம் பெறலாம்

பூவுக்கு தாப்பா எதுக்கு?
ஊருக்கு கதவா இருக்கு ?
பூவுக்கு தாப்பா எதுக்கு?
ஊருக்கு கதவா இருக்கு ?

வெளியெல்லாம் தொரந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு
வெளியெல்லாம் தொரந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு



Nimir - Poovukku Thaapa Ethuku

நிமிர் - நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி காதோரம் பாடுது

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட


வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது
அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது
வராமல் போகும் நாட்கள் வீண் என
வம்பாக சண்டை போட வைக்குது


சொல்ல போனால் என் நாட்களை
வண்ணம் பூசி தந்தவளும் நீதான்
துள்ளல் இல்ல என் பார்வையில்
தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்


எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி காதோரம் பாடுது


நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தணந்து வானம் கூத்தாட
பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே
ராசாவை தேடி கண்கள் ஓடுமே
ரோசாபூ மாலை ரெண்டு வேண்டுமே
பேசாமல் மாட்டி கொள்ள தோன்றுமே

பெண்கள் இல்லா என் வீட்டிலே
பாதம் வைத்து நீயும் வர வேண்டும்
தேன்றளில்லா தோட்டத்தில்
உன்னால் தானே காற்று வரும் மீண்டும்

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி காதோரம் பாடுது

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட


எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி காதோரம் பாடுது



Nimir - Nenjil Mamazhai

Followers