Pages

Search This Blog

Showing posts with label Iruvar Ullam. Show all posts
Showing posts with label Iruvar Ullam. Show all posts

Friday, November 18, 2016

இருவர் உள்ளம் - கண்ணாடி சிலையே

ஹே கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே 
முன்னாடி நின்றேன் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே 
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்

உன் பார்வை பட்டதும் தந்தை தாய் மறந்தேன்
என்னை நீ தொட்டதும் என்னை நான் இழந்தேன்
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... 

ஹே கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே 
முன்னாடி நின்றேன் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே 
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்

நேற்று வரை நீ எந்தன் இதயத்தின் ஓரத்தில்
எப்படி வந்தாய் என்னருகில் தொடுகின்ற தூரத்தில்
அலங்காரம் செய்வதில்லை வானத்து வெண்ணிலவு
அதைப் போலே பூமியிலே நீ எந்தன் பேரழகு

இது கனவில் நிஜமா இல்லை நிஜத்தில் கனவா
இது வலியில் சுகமா எனக்கு புரியவில்லை
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...

ஹே கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே 
முன்னாடி நின்றேன் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே 
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்

கடவுளை நான் கண்டதில்லை 
உன் முகம் பார்த்துவிட்டேன்
உன் மந்திரக் கண்களை பார்த்ததுமே
மயக்கத்தில் விழுந்துவிட்டேன்
உன்னை மட்டும் உலகத்திலே
நொடிக்கொரு முறை நினைப்பேன்
என் உயிரில் உன் உயிரை
தினம் இனி நான் சுமப்பேன்

இது கனவில் நிஜமா இல்லை நிஜத்தில் கனவா
இது வலியில் சுகமா எனக்கு புரியவில்லை
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ..

Iruvar Ullam - Kannadi Silaye

இருவர் உள்ளம் - காதல் கிளியே போகாதே

காதல் கிளியே போகாதே
போனால் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே
என் கையில் கிடைத்தாய் மெழுகாக
அடி எங்கே விழுந்தாய் அழுக்காக
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே

அடி உன்னைத் தவிர என்னிடத்தில்
எதுவும் இல்லை எதுவும் இல்லை 
எதுவும் இல்லை எனக்காக கிளியே
என் பாதை எல்லாம் உன்னிடத்தில்
வந்து சேரும் வந்து சேரும் 
வந்து சேரும் போகாதே வெளியே

ஓ காதல் கிளியே போகாதே
போனால் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே

ஏன் விழியினில் விழுந்தாய்
வலிகளை கொடுத்தாய் வழியினில் தொலைந்தாய்
ஏன் அமைதியை கெடுத்தாய்
கலவரம் விதைத்தாய் உயிருடன் எரித்தாய்

நேற்று எந்தன் வானவில்லில் 
ஏழு வண்ணம் தெரிந்ததடி
இன்று விழுந்து பார்க்கும் போது
செந்நிறம் மட்டும் தெரியுதடி
எரியுதடி இதயம் எரியுதடி 

காதல் கிளியே போகாதே
போனால் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே


நீ அலைகளின் அழகில் கடலினில் விழுந்தாய்
கரை வர மறந்தாய்
தீ தூரத்தில் மயக்கும் தொடத் தொட இரைக்கும்
சுட்ட பின்பு தெரியும்
கண்ணை விட்டு போன போதும்
என்னை விட்டு போகவில்லை
கையை விட்டு போன போதும்
காதல் விட்டு போகவில்லை
எரியுதடி இதயம் எரியுதடி 

காதல் கிளியே போகாதே
போனால் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே
என் கையில் கிடைத்தாய் மெழுகாக
அடி எங்கே விழுந்தாய் அழுக்காக
இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே

Iruvar Ullam - Kadhal Kiliye

Followers