Pages

Search This Blog

Tuesday, October 30, 2018

பாசப் பறவைகள் - தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே

ஆண்: தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

பெண்: வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையே
ஆண்: பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே
பெண்: அன்பு என்னும் கூண்டிலே ஆடிப் பாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதே
ஆண்: தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
பெண்: தாயைப் போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே
ஆண்: மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே நீ என்றும் வாழ வேண்டுமே

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

ஆண்: தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்றுதானம்மா
அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா
பெண் : கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் பாவிலே நாளும் வாழும் தெய்வமே

ஆண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
பெண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
ஆண்: வாழ்த்துவேன் உனை போற்றுவேன் வாழ்வெல்லாம் உனை ஏற்றுவேன்
பெண்: காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே நாம் சேர்ந்து வாழ வேண்டுமே

(தென்பாண்டி)
(தென்பாண்டி)



Paasa Paravaigal - Thenpandi Thamizhe En Singara Kuyile

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு - உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

வெள்ளி நிலா வானவெளி போவது போல்
பிள்ளை நிலா துள்ளி இங்கு வந்ததம்மா .. ஹோ …ஹோ
அள்ளி அள்ளி கட்டிக்கொள்ள ஆனந்தமாய்
பிள்ளைகளின் செல்லமொழி கேட்டதம்மா

ஒருமர சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை
பிரிந்திட பொறுக்காது தாய் அன்பின் எல்லை
பால்முகம் மறக்காமல் தடுமாறும்
சேய்முகம் கண்டால்தான் நிலை மாறும்

(ஓ ஓ ஓ ஓ…)

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல்
சொந்தமொன்று மன்றமதில் வந்ததென்ன ..ஹோ ..ஹோ
சொர்க்கமொன்று பூமிதன்னில் கண்டதுபோல்
இன்பங்களை தந்துவிட்டு சென்றதென்ன

துணையாய் வழிவந்து எனைசேர்ந்த அன்பே
இனியும் உனைப்போல இணை ஏது அன்பே
எனக்கென நீதானே நம் வாழ்வில்
உனக்கென நான்தானே எந்நாளும்

(ஓ ஓ ஓ ஓ…)

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே



En Bommukutty Ammavukku - Uyire Uyirin

கேளடி கண்மணி - தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்

தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான்  காதல் சந்தம்
ஆடும் காற்று  நெஞ்சில் தாளம் போட ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட

காவேரி ஆற்றின் மீனிங்கே காதோடு மோதும் ஆனந்தம்
தீராத காதல் தேனிங்கே பாட்டோடு பாட்டாய் ஆரம்பம்
பாராமலே போராடினேன் தாளாத மோகம் ஏற
தூங்காமலே நான் வாடினேன் சேராத தோள் தான் சேர
தாவிடும் என் நெஞ்சத்தின் சந்தங்கள் பாடிடும் உன்னை
தேடிடும் உன் நெஞ்சத்தின் மஞ்சத்தில்  பாய்ந்திடும் என் எண்ணங்கள்
நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட  (தென்றல் தான் திங்கள்...)

பூ மீது மோதும் தென்றல் தான் பூமேனி சேர்ந்தால் தாங்காது
பூவாடை மூடும் ஜாலத்தால் பூபாளம் தானாய் தோன்றாது
நூலாடையின் மேலாடவும் தேகம் தான் தீயாய் மாறும்
தேனோடையில் நீராடவும் மோகந்தான் மேலும் ஏறும்
தேடிடும் என் ராஜாவின் ரோஜாப்பூ சேர்ந்திடும் உன்னை
கேளடி என் ராஜாங்கம் நீதானே சேரடி என் மன்றத்தில்
நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட  (தென்றல் தான் திங்கள்...)



Keladi Kanmani - Thenral Thaan 

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு - பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ

பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ...
தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ...
வாராமல் வந்த செல்வம்
வீடேறி வந்த தெய்வம்
தேடாமல் தேடி வந்த தாழம்பூச்சரம்

ரெண்டு தாய்க்கொரு பிள்ளை
என்று வாழ்ந்திடும் முல்லை
உன்னை யார் சுமந்தாரோ
உண்மை நீ அறிவாயோ (2)

உன்னை நினைத்து உருகிடும் மாது
உன்னை பிரிய மனம் துணியாது
பூவே பனிப்பூவே நீதான் இல்லாது
பார்வை எங்கள் பார்வை தூக்கம் கொள்ளாது
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ...

(பொம்முக்குட்டி)

பெற்ற தாய்படும் பாடு
பிள்ளை தானறி யாது
இது காக்கையின் கூடு
இங்கே பூங்குயில் பேடு  (2)

வந்த உறவை இவள் விடுவாளோ
சொந்த உறவை அவள் தருவாளோ
பாசம் உயிர்நேசம் வாழும் நெஞ்சோடு
பாடும் உறவாடும் ஜீவன் உன்னோடு
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ...

(பொம்முக்குட்டி)



En Bommukutty Ammavukku - En Bommu Kutti Ammavukku Aararo

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு - குயிலே குயிலே குயிலக்கா

குயிலே குயிலே குயிலக்கா – குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா – கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே

காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும்
காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும்
ஒன்னா ரெண்டா சங்கீதம் கண்டால் சுகம் உண்டாகும்
உந்தன் இசை பூவாகும் எந்தன் மனம் வண்டாகும்
கண்மணி பெண்ணே வந்திடு முன்னே
கண்மணி பெண்ணே பாரடியோ
என் நிலை கொஞ்சம் கேளடியோ
இன்று வரை உன்னை விட்டால் என் துணை யாரடியோ?

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே

ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன்
ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன்
பாடும் குயில் பாட்டெல்லாம் பாவை குரல் போலேது?
நாளும் இசை கேட்டாலே தாகம் பசி தோனாது
குக்குக்கு குக்கூ
மெட்டு கலந்து
சொன்னது என்ன ராகத்திலே
சொக்கி விழுந்தேன் மோகத்திலே
கண்மணியே பொன்மணியே என் மனம் சொர்க்கத்திலே

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே



En Bommukutty Ammavukku - Kuyile Kuyile

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை - சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

ஆ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு.. வண்ணக் களஞ்சியமே
சின்ன மலர்க் கொடியே.. நெஞ்சில் சிந்தும் பனித்துளியே
பெ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

ஆ: உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே
பெ: ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே
ஆ: சிற்றன்னவாசலின் ஓவியமே.. சிந்தைக்குள் ஊறிய காவியமே
பெ: எங்கே நீ.. அங்கேதான் நானிருப்பேன்
எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன்
ஆ: மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே

பெ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு.. வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே.. என்னைச் சேரும் இளங்கிளியே
ஆ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

பெ: உன்னாலே நான் கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்
ஆ: கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன்
பெ: மின்சாரம் போலெனைத் தாக்குகிறாய்.. மஞ்சத்தைப் போர்க்களம் ஆக்குகிறாய்
ஆ: கண்ணே.. உன் கண்ணென்ன வேலினமோ
கை தொட்டால்.. மெய் தொட்டால் மீட்டிடுமோ
பெ: கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்
நானிங்கு தோற்றுவிட்டேன்.. நீயென்னை ஆளுகிறாய்

ஆ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
ஆ: பெண்ணல்ல நீயெனக்கு.. வண்ணக் களஞ்சியமே
பெ: சிந்தும் பனித்துளியே.. என்னைச் சேரும் இளங்கிளியே
ஆ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெ: சொர்க்கத்தின் வாசற்படி…



Unnai Solli Kutramillai - Sorkathin Vasapadi

Monday, October 29, 2018

முதல் மரியாதை(1985) - ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா

ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா

பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது
அடடா எனக்காக அருமை கொறைஞ்சீக தரும மகராசா தலைய கவுந்தீக
களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலான்னு தான் பெரு
அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு



Muthal Mariyathai(1985) - Raasave Unna Nambi Intha Rosa Poo

முதல் மரியாதை(1985) - பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா

பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா
தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா

ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல

இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்லா

ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாத சொகத்த சொன்னேனடி

சோக ராகம் சொகந்தானே
சோக ராகம் சொகந்தானே

யாரது போறது

குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா
தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா

உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்

உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்

மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே

எசப் பாட்டு படிச்சேன் நானே

பூங்குயில் யாரது

கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க

அடி நீதானா அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே

நான்தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகந்தான் மறந்ததா



Muthal Mariyathai(1985) - Poongatru Thirumbuma

முதல் மரியாதை(1985) - வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்

வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்

பச்ச கிளியோ ஒட்டுகிருச்சு இச்ச கிளியோ ஒதுகிருச்சு
பஞ்ச நெருப்பு ஒதிகிருச்சு பச்ச மனச பதுகிருச்சு
கைய கட்டி நிக்க சொன்ன காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது
சாமி கிட்ட கேளு யாரு போட்ட கொடு
பஞ்சுக்குள்ள தீய வெச்சு சுத்தி வச்சவக யாரு

வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்

உன்ன கண்டு நான் சொக்கி நிக்குறேன்
கண்ணுக்குள்ள நான் கண்ணி வெக்கிறேன்
சொல்லாம தான் தத்தளிக்கிறேன்
தாளாம தான் தள்ளி நிக்கிறேன்
பாசம் உள்ள பந்தம் இத பாவமுன்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வெக்க கூடாது
புத்தி கேட்ட தேசம் போடி வெச்சு பேசும்
சாதி மத பேதம் எல்லாம்
முன்னவங்க செஞ்ச மோசம்

வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்



Muthal Mariyathai(1985) - Vetti Veru Vasam

முதல் மரியாதை(1985) - ஏறாத மல மேலே

ஏறாத மல மேலே.... ஆ...
எலந்த பழுத்திருக்கு எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்பட்டுமா... ஆ...
எசப் பாட்டு படிக்கட்டுமா எலுமிச்சம் கண்ணுகளா
எஞ்சோட்டுப் பொண்ணுகளா

கிண்டல பாரு கிண்டல
அதெல்லாம் ஒஞ்சோட்டு பொண்டுகளா அது
பேரு தான் பெருசா

டேய்... போடா பொடி மொட்ட

ஏறாத மல மேலே.... ஆ...
ஏ... எலந்த பழுத்திருக்கு எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்பவில்லையா
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு

ஏலே... எவடி அவ
எம் பாட்டுக்கு எதிர் பாட்டு பாடுறவ

அடி மாம்போத்து கர மேல... ஏ...
மயிருணத்தும் சின்னவளே
மயிருணத்தும் சின்னவளே
பாறையில நானிருந்து...
பாடும் குரல் கேக்கலையா
பாடும் குரல் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேட்டதையா
ஒம் பாட்டுச் சத்தம் கேட்டதையா
கூப்பிடுற சத்தமெல்லாம்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்
அடி என் சத்தம் நின்னிருந்தா
என்னாடி நீ செஞ்சிருப்ப
என்னாடி நீ செஞ்சிருப்ப
ஒங்க சத்தம் நின்னிருந்தா
ஓடோடி நான் வந்திருப்பேன்
ஓடோடி நான் வந்திருப்பேன்
ஓடோடி வந்திருந்தா
ஓடப் பக்கம் போயிருப்போம்
அடி ஓடப் பக்கம் அடி ஓடப் பக்கம்



Muthal Mariyathai(1985) - Eratha Malai Mele

முதல் மரியாதை(1985) - ஏ குருவி சிட்டுக் குருவி

குருவி
குருவி குருவி
ஏ குருவி சிட்டுக் குருவி
ஓன் சோடி எங்க அத கூட்டிக்கிட்டு
எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு
பொல்லாத வீடு கட்டு பொன்னான கூடு
இப்ப பொண்டாட்டி இல்லே
வந்து எங்கூட பாடு ஏ குருவி
சிட்டுக் குருவி ஏ குருவி...
ஐயா உள்ளத்துல நல்ல அன்பிருக்கு
ஆனா வீட்டுக்குள்ள கொஞ்சம் வம்பிருக்கு
பொண்டாட்டிகாரி என்னான்னு பாப்பா
வந்து ஓங்கூட்ட பாப்பா கொடக்கூலி கேப்பா
ஏ குருவி சிட்டுக் குருவி
ஏ எவடி அடியே எவடி
ஏ எவடி அது...



Muthal Mariyathai(1985) - Yeh Kuruvi

முதல் மரியாதை(1985) - ஏ கிளியிருக்கு பழமிருக்கு

ஏ... ஏ கிளியிருக்கு பழமிருக்கு...
ஏ கிளியிருக்கு பழமிருக்கு ஏரி
கரை இருக்கு
சோள
கருதிருக்கு
அடி சோல
குயிலிருக்கு...
ஏ கிளியிருக்கு பழமிருக்கு ஏரி
அனைவர் கரை இருக்கு

சோள
அனைவர் கருதிருக்கு
அடி சோல
அனைவர் குயிலிருக்கு...
அடி பயிறுக்குள்ள பருவப் புள்ள
பதுங்கி நின்னிருச்சாம்
அவ பதுங்கக் கண்டு குருவி ரெண்டு
ஒதுங்கி நின்னுக்கிச்சாம்
சேலையில் சந்தனம் வேட்டியில் குங்குமம்
தொட்டதும் ஒட்டிக்கிச்சாம்
அடி மால வரும் முன்னே சோலக் கிளி ரெண்டும்
மத்தளம் கொட்டிக்கிச்சாம்
தந்தனத் தந்தனத் தந்தனத் தந்தன 
தந்தனத் தந்தனனா 
தந்தனத் தந்தனத் தந்தனத் தந்தன 
தந்தனத் தந்தனனா 
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... 



Muthal Mariyathai(1985) - Hey Kiliyirukku

முதல் மரியாதை(1985) - அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்

அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக 
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக 

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக…

மல்லு வேட்டி கட்டி இருக்கு
அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு
முத்தழகி முத்தம் குடுக்க
அது மேல மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி
மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு
ஏதுடா வம்பா போச்சி லவுக்கையும் கெடயாது
சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை
பூவு ஒன்னு காண்ணடிச்சா வண்டு வரும் பின்னால
எக்கு தப்பு வேணாம் ம்ம்..

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்.. என் ராசாத்திக்காக..

ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
வெக்கதையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா
ஓடிவா ஓடை பக்கம் ஒளியலாம் மெதுவாக
அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாங்க
காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு
கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
போடி புள்ள எல்லாம் டூப்பு….

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்.. என் ராசாவுக்காக 
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்... என் ராசாவுக்காக



Muthal Mariyathai(1985) - Antha Nilava Thaan

கரகாட்டக் காரன் - மாரியம்மா மாரியம்மா

மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்

நிலையாக நிலைக்க வைக்கும்
நினச்சதெல்லாம் பலிக்க வைக்கும்

உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா

காவல் நீதான் காளியம்மா
(மாரியம்மா)

மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா
காத்தும் கனலும் நீயம்மா

வானத்தபோல் நின்னு பாரம்மா
வந்தேன் தேடி நானம்மா

இந்த மனம் முழுதும் நீதானே
வந்த வழி துணையும் நீதானே

தங்க திருவடிய தொழுதோமே
இங்கு மனம் உருக அழுதோமே

சீரேஸ்வரி காமேஸ்வரி
வேறாரு நீதானே காப்பு
(மாரியம்மா)

வானெல்லாம் வாழ்த்துத்தான் கேட்கட்டும்
வாழ்வே வளமே பாக்கட்டும்

நீ எங்க தாய் என்று காணட்டும்
நிழலும் நிஜமா மாறட்டும்

சக்தி முழுதும் தந்து காப்பாயே
முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே

பக்தி மனம் விரும்பும் என் தாயே
நித்தம் பரிதவிக்கும் உன் சேயே

சாட்சி சொல்லும் தாயே துணை
தீயெல்லாம் பூவாக மாறட்டும்
(மாரியம்மா)



Karagattakaran - Mariyamma Mariyamma

அடுத்த வீட்டுப் பெண் - கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே - நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே...

(கண்ணாலே)

பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே - உன்
பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே - என் 
அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே

காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

(கண்ணாலே)

பதுமை போல காணும் உந்தன் அழகிலே
நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதிமயங்க்கி வீழ்ந்தேன் உன் வலையிலே

காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

(கண்ணாலே)



Adutha Veettu Penn - Kannaale Pesi Pesi Kollathey

கரகாட்டக்காரன் - குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா

குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி
குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவுதான் உன்னச் சுத்திப் பறக்குது
என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி

மானே மயிலே ம்ரகதக் குயிலே தேனே நான் பாடும் தெம்மாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே காதில் கேட்டாயோ என் வாக்கே
ஒன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிக்குந்தேர் போல ஆனேன்
பூப்பூத்த சொலையிலே பொன்னான மாலையிலே நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு நீங்காத தாகம் கொண்டு பாடும் பாட்டு

குடகு மலைக் காட்டில் ஒரு பாட்டுப் பாடுது இந்தப் என் பைங்கிளி
குடகு மலைக் காட்டில் ஒரு பாட்டுப் பாடுது இந்தப் என் பைங்கிளி

மறந்தால் தானே நினைக்கணும் மாமா நினைவே நீ தானே நீ தானே
மனசும் மனசும் இணைஞ்சது மாமா நெனச்சுத் தவிசசேனே நான் தானே
சொல்லிவிட்ட பாட்டு தெக்குக் காதோட கேட்டேன்
தூது விட்ட ராசா மனந்தாடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்னாலென்ன ஒண்ணாக நின்னாலென்ன
ஒன் பேரப் பாடி நிப்பேன் மாமா
தூங்காமல் ஒன்ன எண்ணி துடிச்சாலே இந்தக் கன்னி மாமா

குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவுதான் உன்னச் சுத்திப் பறக்குது
என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது
ஒத்த வழி என் வழி தானே மானே

குடகு மலைக் காட்டில் ஒரு பாட்டுப் பாடுது இந்தப் என் பைங்கிளி
குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி



Karagattakaran - Kudagu Malai Kaatil Varum Paatu Ketkutha

தூறல் நின்னு போச்சு - ஏரிக்கரை பூங்காற்றே

ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென்கிழக்கோ….
தென்கிழக்கு வாசமல்லி….
என்னைத் தேடி வர தூது சொல்லு….
(ஏரிக்கரை பூங்காற்றே)

பாதமலர் நோகுமுன்னு நடக்கும்
பாதைவழி பூவிரிச்சேன்… மயிலே
பாதமலர் நோகுமுன்னு நடக்கும்
பாதைவழி பூவிரிச்சேன்… மயிலே
ஓடம் போல் ஆடுதே மனசு
கூடித் தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த  பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது
(ஏரிக்கரை பூங்காற்றே)

ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரனும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும்வரை ரோசாவே காத்திரு
(ஏரிக்கரை பூங்காற்றே)



Thooral Ninnu Pochchu - Yerikkarai Poonkatre





தூறல் நின்னு போச்சு - பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

மாலை அந்திமாலை
இந்த வேளை மோகமே
மாலை அந்திமாலை
இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே
நாணமே பெண்ணின் சீதனமே
மேகமழை நீராட
தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது

பூவை எந்தன் சேவை
உந்தன் தேவை அல்லவா
பூவை எந்தன் சேவை
உந்தன் தேவை அல்லவா
மன்மதன் கோயில் தோரணமே
மார்கழி திங்கள் பூமுகமே
நாளும் இனி சங்கீதம்
பாடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்



Thooral Ninnu Pochchu - Bhoopalam Isaikkum

தூறல் நின்னு போச்சு - தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே

பெண்: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோழில் துஞ்சியதோ...

[தங்கச் சங்கிலி...]

மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி

[தங்கச் சங்கிலி...]

ஆண்: காவல் நூறு மீறி
காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூ வேலைகள்
உன் மேனியில் பூஞ்சோலைகள்

பெண்: அந்திப் பூ விரியும்
அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கணவு கனியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்

ஆண்: [தங்கச் சங்கிலி...]

பெண்: ஆடும் பொம்மை மீது
ஜாடை சொன்ன மாது

ஆண்: லாலா லாலலாலா லால லால லாலா

பெண்: கண்ணோடு தான் போராடினாள்
வேர்வைகளின் நீராடினாள்

ஆண்: ராராரரா ராராரரா ராராரரா ராராரரா

அன்பே ஆடை கொடு
எனை அனுதினம் அள்ளி சூடிவிடு

பெண்: இதழில் இதழால் கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட மடி கொடு

ஆண்: [தங்கச் சங்கிலி...]

பெண்: [மலர்மாலை...]

ஆண் & பெண்: [தங்கச் சங்கிலி...]



Thooral Ninnu Pochchu -Thanga Sangili Minnum Paikili

Tuesday, October 23, 2018

நான் மகான் அல்ல(2010) - தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு

தெய்வம்  இல்லையெனும்போது கோவில் எதற்கு
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு
இதுவரையில் எதைக்கேட்டாலும் தருவாயே மனம் கோணாமல்
துயரம் நான் இதை கேட்காமல்
கொடுத்தாயே எதற்காக
தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு

ஒரு நாள் எனை பிரிந்தாலும் வாடிய முகமே
உனை இனி எங்குப் பார்ப்பது ஓ
எனதாசைகள் நிறைவேற ஏங்கிய
மனமே உனை எதைத்தந்து மேய்ப்பது
அழுதிடக்கூடாதென்று அறிவுறை கூறுவாய்
அழுகையை நீயே தந்து போனாயே
உறங்கிய நேரம் இன்றி உழைத்திடும் கண்களே
நிரந்தரத் தூக்கம் என்ன ஆண் தாயே
தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு
உயிர் வாழ்வதே எனக்காக என்று நீ தினம் பேசுவாய்
அது என்ன ஆனது ஓ
தலைமேல் சுமை இருந்தாலும் புன்னகை
தருமே இதழ் அது எங்குப்போனது
நடந்திடப்பாதம் தந்து வழிக்காட்டினாய்
நடுவிலே முந்தி சென்றாய் என் செய்வேன்
எது எது இல்லையென்று எனக்கென வாங்கினாய்
இறுதியில் நீயே இல்லை என் சொல்வேன்
தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு



Naan Mahaan Alla (2010 film) - Theivam Illai

நான் மகான் அல்ல(2010) - ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று

ஆண்: ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு

பெண்: வழிதோறும் பூக்கள் வாழ்த்து சொன்னது கைதொட்டு
இது கடவுள் எழுதி காதில் பாடும் தாலாட்டு

ஆண்: இதழோரம் இதழோரம் புதிதாக புன்னகை ஒன்று
எப்போதும் பார்த்தேனே சில நாளாய் நானே
கதவோரம் தலை நீட்டி தினம் பார்க்கும்
சிறு பிள்ளை போலே என்னுள் வந்து கவிதை எட்டிப்பார்க்க...

ஆண்: ஓ... ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு

(இசை...)

பெண்: தினம் உனை பார்க்கும்போது இடையினில் தோன்றும் அந்த
ஊடலாம் அன்பே ஐய்யோ அழகானது

ஆண்: தனிமையில் நீயும் நானும் கண்களாலே பேசும்போது
எனக்குள்ளே தோன்றும் மோகம் புதிதானது

பெண்: அச்சமா, நானமா, அன்பிலே கொல்வதா
உன்னிடம் இழுத்தது எதுவோ தெரியலேயே

ஆண்: ஹேய்... எப்போது பூக்கள் பூக்கும், புரியாதது
எப்போது காதல் தாக்கும், தெரியாதது
எப்போது பூக்கள் பூக்கும், புரியாதது
எப்போது காதல் தாக்கும், தெரியாதது

(இசை...)

ஆண்: மழை வரும் நேரம் முன்பு, தரை வரும் காற்றைப் போல
மனம் எங்கும் வந்தாய் பெண்ணே, ஜில்லென்று நீ

பெண்: தூவும் மழை நின்ற பின்பு, தூரல் தரும் மரங்கள் போல
நினைவுகள் தந்தே செல்வாய், என்றென்றும் நீ

ஆண்: ஓ... கண்களா, கன்னமா, பார்வையா, வார்த்தையா
உன்னிடம் பிடித்தது எதுவோ, தெரியலேயே...

பெண்: எப்போது பூக்கள் பூக்கும், புரியாதது
எப்போது காதல் தாக்கும், தெரியாதது
எப்போது பூக்கள் பூக்கும், புரியாதது
எப்போது காதல் தாக்கும், தெரியாதது

ஆண்: ஒரு மாலை நேரம் வந்தது, வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம் சென்றது, சென்றது பூ போட்டு



Naan Mahaan Alla (2010 film) - Oru Maalai Neram

நான் மகான் அல்ல(2010) - வா வா நிலவை புடிச்சுத் தரவா

ஆண்: வா வா நிலவை புடிச்சுத் தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா
வா வா நிலவை புடிச்சுத் தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா
வானத்தில் ஏறி ஏணி கட்டு
மேகத்தை அள்ளி மாலை கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
ஓ... ஓ....
வா வா நிலவை புடிச்சுத் தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா

(இசை...)

ஆண்: கவலை நம்மை சில நேரம்
கூரு போட்டு துண்டாக்கும்
தீயினை தீண்டி வாழும்போதே
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலை சேரும் நதி யாவும்
தன்னை தொலைத்து உப்பாகும்
ஆயினும் கூட மழையாய் மாறி
மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம்போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும்
அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை
புரிந்தால் துயரம் இல்லை
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு.

ஓ... ஓ...
வா வா நிலவை புடிச்சுத் தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா

(இசை...)

ஆண்: ஆஹா...
இரவை பார்த்து மிரளாதே
இதயம் வேர்த்து துவளாதே
இரவுகள் மட்டும் இல்லை என்றால்
நிலவின் அழகு தெரியாதே
கனவில் நீயும் வாழாதே
கலையும் போது வருந்தாதே
கனவில் பூக்கும் பூக்களை எல்லாம்
கைகளில் பறித்திட முடியாதே
அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்தது போனால் மறுபடி ஒன்று
புதிதாய் உருவாகும்...

குழு: வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
ஓ... ஓ...



Naan Mahaan Alla (2010 film) - Va Va Nilava Pudichi

நான் மகான் அல்ல(2010) - இறகை போலே, அலைகிறேனே

இறகை போலே, அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தை போலே, தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு கற்று பட்டதும்
அநியாய காதல் வந்ததே, அட காதல் ஆசை தந்ததே
எனக்குள்ளே எதோ மின்னல் போலே தொட்டு சென்றதே

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்

கூட வந்து நீ நிர்த்பதும், கூடுவிட்டு நான் செல்வதும்
தொடருதே, தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்லவதும், மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே, புரியுதே காரணம்
நேரங்கள் தீருதே, வேகங்கள் கூடுதே
பூவே உன் கண்ணுக்குள்ளே பூமி பந்து சுத்துதே

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்

ஏய் என்னானதோ, எதனதோ இல்லாமல் போச்சே தூக்கமும்
கண்ணே உன்னை காணமல் நான் இல்லை
என்மீதிலே உன் வாசனை எப்போதும் வீச பார்கிறேன்
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை
நீ என்னை காண்பதே, வானவில் போன்றதே
துரத்தில் உன்னை கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்



Naan Mahaan Alla (2010 film) - Irakai pole

நான் மகான் அல்ல(1984) - மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை

மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை 
இன்ப‌ மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை 
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு கண்ணாடி கன்னம் உண்டு 
மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை 

காயும் வெயில் காலம் பாயும் மழை நீயோ 
காயும் வெயில் காலம் பாயும் மழை நீயோ 
கோடையில் நான் ஓடை தானே வாடையில் நான் போர்வை தானே
கோடையில் நான் ஓடை தானே வாடையில் நான் போர்வை தானே
நீ கொஞ்ச நான் கெஞ்ச வேறென்ன இன்பம் 
நீண்ட நேரம் தோன்றுமோ

மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை 
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு கண்ணாடி கன்னம் உண்டு 
மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை

சோலை மஞ்சள் சேலை சூடும் அந்தி வேளை
சோலை மஞ்சள் சேலை சூடும் அந்தி வேளை
மாங்கனியாய் நீ குலுங்க ஆண் கிளியாய் நான் நெருங்க
மாங்கனியாய் நீ குலுங்க ஆண் கிளியாய் நான் நெருங்க
அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம் 
ஆடை கொண்டு மூடுமோ

மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை 
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு கண்ணாடி கன்னம் உண்டு 
மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை



Naan Mahaan Alla(1984 film)- Maalai Soodum Velai Andhi

சர்கார் - OMG பொண்ணு ILY கண்ணு

ஓஓஓ கண்களா
GR8 கண்களா
AKA வெண்ணிலா
சில் சில்லா

ஓ தென்றலா
XOX தென்றலா
L8R மின்னலா
சிண்ட்ரெல்லா

OMG பொண்ணு
ILY கண்ணு
ASAP கூட வா நீ
BAEநீமா
BFF நான் மா
ROFL பண்ணலாமா

IMOநீ நீ நீ நீ
ஆயிரம் பொண்ண பார்ப்ப நீ
IDK என்னென்ன என்ன
எவ்ளோ புடிக்கும் சொல்லு நீ

IMO நீ மட்டும் தான் டி
பேரழகி என் பொண்டாட்டி
போகாத 1 மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT

IDK நீ இல்லனா
நான் எப்படி வாழ்வேன் டி
ஓ ஹோ ஓ ஹோ

ஓஓஓ கண்களா
GR8 கண்களா
AKA வெண்ணிலா
சில் சில்லா

ஓ தென்றலா
XOX தென்றலா
L8R மின்னலா
சிண்ட்ரெல்லா

OMG பொண்ணு
ILY கண்ணு
ASAP கூட வா நீ
BAEநீமா
BFF நான் மா
ROFL பண்ணலாமா

IMOநீ நீ நீ நீ
ஆயிரம் பொண்ண பார்ப்ப நீ
IDK என்னென்ன என்ன
எவ்ளோ புடிக்கும் சொல்லு நீ

IMO நீ மட்டும் தான் டி
பேரழகி என் பொண்டாட்டி
போகாத 1 மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT

IDK நீ இல்லனா
நான் எப்படி வாழ்வேன் டி
ஓ ஹோ ஓ ஹோ

ஓஓஓ கண்களா
GR8 கண்களா
AKA வெண்ணிலா
சில் சில்லா

பேஸ்ஸ பார்த்தா GM ஆகும்
நெஞ்சுல சாஞ்சா GMSD
குழு : சும்சுக்கும் சும்சுக்கும்
செல்லு எல்லாம் LOLU
என்னோட SH நீயே தான் டி

குழு : சும்சுக்கும் சும்சுக்கும்

நான் அவுட் ஆப் டவுன் நா அப்பப்போ
HRU வேணும்
உன்ன டெய்லி 5 டைம்ஸ்
கிஸ்யூ மிஸ்யூ ஸ்மைலி வரணும்

உன்ன மீட் பண்ணின டே அது
எல்லாமே HBD ஆகும்
என்ன 24*7 கொஞ்சிவிட்டாலே SSOU

எம்மா எம்மா எம்மா
என்ன வொற்கு பிரம்மா
TY சொல்லட்டுமா CG நீ மா
எம்மா எம்மா எம்மா
உன்ன பத்திரமா TC பண்ணட்டுமா
சேரலாமா

OMG பொண்ணு
ILY கண்ணு
ASAP கூட வருவேன்
BAEநீ தான்
BFF நான் தான்
ROFL பண்ணலாமா

IMO நீ மட்டும் தான் டி
பேரழகி என் பொண்டாட்டி
போகாத 1 மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT

IDK நீ இல்லனா
நான் எப்படி வாழ்வேன் டி
ஓ ஹோ ஓ ஹோ

ஓஓஓ கண்களா
GR8 கண்களா
AKA வெண்ணிலா
சில் சில்லா

ஓ தென்றலா
XOX தென்றலா
L8R மின்னலா
சிண்ட்ரெல்லா



Sarkar - OMG Ponnu

சர்கார் - CEO இன் தி ஹவுஸ்

ஐ வான்ன ராக் லைக்க
ஸ்டார் லைக்க
பயர் லைக்க
கிவ் மீ சம் லவ் லைக்க
ஹை லைக்க
மணி லைக்க

ஐ வான்ன ராக் லைக்க
ஸ்டார் லைக்க
பயர் லைக்க
கிவ் மீ சம் லவ் லைக்க
ஹை லைக்க
மணி லைக்கஏஏஏ

ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை

ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை

ரா ரா ரா ராட்சச
புகழ் ஒன்று எழுந்து நிக்கும்
ஒலிக்கும் பேர் ஒன்று
அரங்கமே அதிர வைக்கும்
தடுக்கும் காலம் தாண்டி
அது பரவி நிற்கும்

ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை

ஐ வான்ன ராக் லைக்க
ஸ்டார் லைக்க
பயர் லைக்க
கிவ் மீ சம் லவ் லைக்க
ஹை லைக்க
மணி லைக்க

தொட்டுட்டா வெற்றி மா
நம்ம ப்ரிக் அவுட் மா
நீங்க நாக்கவுட்டு மா
பார்த்துக்கோமா

நிலவில் எனக்கும்
ஒரு ஷேர் இருக்குமா
வித் ஊரு இருக்குமா
போகலாமா

ஓ கூலா ஓ டீலா
ஓ தூலா
ஓர் டாலரு மழை காலர் வரை
தினம் தினம் கொட்டும்
ஓ வானோ ஓ மண்ணோ
ஒரு எல்லோ ஓ சன்னோ
நான் கேட்க்கும் கலர் சேன்ஞ் ஆகும்

ஐ வான்ன ராக் லைக்க
ஸ்டார் லைக்க
பயர் லைக்க
கிவ் மீ சம் லவ் லைக்க
ஹை லைக்க
மணி லைக்க

ஐ வான்ன ராக் லைக்க
ஸ்டார் லைக்க
பயர் லைக்க
கிவ் மீ சம் லவ் லைக்க
ஹை லைக்க
மணி லைக்கஏஏஏ

ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை

ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை

ஆக்கிஜன் போல உன்
பிழை எல்லாம் இழுக்கனும்டா
கூகுளே நாளைக்கு
உன்னை தேடி மலைக்கனும்டா

பிரச்சனை எல்லாம்
நம்ம சுமப்போம்
சக்ஸஸ் எல்லாம்
ஷேர் பண்ணிப்போம்

பயம் வந்தா
அலற வைப்போம்
புல்ஸ் ஐ டார்கெட்ட அடிப்போம்

CEO இன் தி ஹவுஸ்
மணி மா மணி மா
மணி மா மணி மா
CEO இன் தி ஹவுஸ்
மணி மா மணி மா
மணி மா மணி மா

ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை

ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை



Sarkar - CEO In The House

சர்கார் - ஒருவிரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே

நேத்து வரஆஅ
ஏமாளி ஏமாளி ஏமாளி
நேத்து வரஆஅ
ஏமாளி ஏமாளி ஏமாளி

இன்று முதல்
போராளி போராளி போராளி
போராளி போராளி போராளி
இன்று முதல்
போராளி போராளி போராளி
போராளி போராளி போராளி

போராளி போராளி போராளி போராளி
போராளி போராளி போராளி போராளி

ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே
ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே

ஏழ்மையை
ஒழிக்கவே
செய்யடா
முயற்சியே

ஏழையை
ஒழிப்பதே
உங்களின்
வளர்ச்சியா

திருப்பி அடிக்க இருக்கு நெருப்பு

விரலின் நுனியில் விழட்டும் கருப்பு

உன்முறை அய்யோ நீ தூங்கினாய்
காசை பெற்று பின் ஏங்கினாய்

மானம் விற்று எதை வாங்கினாய்

ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே

நாம் ஒன்றாய்
கேள்விகள் கேட்டாலே
அடக்கும் கை அங்கு நடுங்காதோ
எளிய மனிதன் எழுதும் விதியிலே
புதிய உலகம் தொடங்காதோ

கரை வேட்டிகள் அங்கங்கு சிலை
எங்கள் வெயர்வையும் ரத்தமும் விலை

வெறும் வேதனையே இங்கு நிலை

எழு மாற்ற பறவையே

நீதியை கொல்கிறான்
மௌனமாய் போகிறோம்

ஊமைகள் தேசத்தில்
காதையும் மூடினோம்

மக்களின் ஆட்சியாம்
என்று நாம் வாழ்கிறோம்

போர்களை தாண்டி தான்
சோற்றையே காண்கிறோம்

துரோகங்கள் தாக்கியே
வீதியில் சாகிறோம்,
அழுதிடும் கண்களில்
தீயன வாழ்கிறோம்

ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே

ஏழ்மையை
ஒழிக்கவே
செய்யடா
முயற்சியே

ஏழையை
ஒழிப்பதே
உங்களின்
வளர்ச்சியா

மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய்

மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய்



Sarkar - Oru Viral Puratchi

சர்கார் - சிம்டான்காரன்

பல்டி பாக்குற
டர்ல வுடனும் பல்து

வோர்ல்டு மொத்தமும்
அரள வுடனும் பிஸ்து

பிசுறு கெளப்பி
பெர்ள வுடனும் பல்து

ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தரைல உக்கருமா

ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தரைல உக்கருமா

சிம்டான்காரன்
எங்கனா நீ சீரன்

நிண்டேன் பாரேன் முஷ்டு
அப்டிகா போறேன்

ஓஓஓஓ (4)

சிம்டான்காரன்
சில்பினுக்கா போறேன்

பக்கில போடேன்
விருந்து வைக்கபோறேன்

ஓஓஓஓ (4)

பல்டி பாக்குற
டர்ல வுடனும் பல்து

வோர்ல்டு மொத்தமும்
அரள வுடனும் பிஸ்து

பிசுறு கெளப்பி
பெர்ள வுடனும் பல்து

ஹே ஹே ஹே ஹே
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தரைல உக்கருமா

ஹே ஹே ஹே ஹே
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தரைல உக்கருமா

அந்தரு பண்ணிகினா தா

இந்தா நா தா

ஓஓஓஓ (4)

மன்னவா நீ வா வா வா

முத்தங்களை நீ தா தா தா

பொழிந்தது நிலவோ

மலர்ந்தது கனவோஓஓ

ஹா ஹா ஹா ஹா ஹா(4)
ஹே ஹே ஹே

ஹே ஹே ஹே ஹே
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தரைல உக்கருமா

ஹே ஹே ஹே ஹே
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தரைல உக்கருமா

அந்தரு பண்ணிகினா தா

இந்தா நா தா

ஹே ஹே ஹே ஹே
குபீலு பிஸ்து பல்து
விக்கலு விக்கலு
ஹே தொட்டனா தொட்டனா
விக்கலு விக்கலு
ஓ ஓ ஓ ஓ ஓ

கொக்கலங்க கொக்கலங்க
கொக்கலங்க குபீலு

ஹைட்டுலிருந்து டைவு அடிச்சா
டம்மாலு

நம்ம புஷ்டிருக்க கோட்டையில்ல

அல்லா ஜோரும் பேட்டைல
சிரிசினுகுறோம் சேட்டையிலகுபீலு

பிசுறு கெளப்பு
பிசுறு கெளப்பு

கொக்கலங்க கொக்கலங்க
கொக்கலங்க குத்த போடு

ஓ ஓ ஓ ஓ ஓ

பல்டி பாக்குற
டர்ல வுடனும் பல்து

வோர்ல்டு மொத்தமும்
அரள வுடனும் பிஸ்து

பிசுறு கெளப்பி
பெர்ள வுடனும் பல்து

ஹே ஹே ஹே ஹே
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தரைல உக்கருமா

ஹே ஹே ஹே ஹே
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தரைல உக்கருமா

அந்தரு பண்ணிகினா தா

இந்தா நா தா

ஓஓஓஓ (4)

விக்கலு விக்கலு
ஹே தொட்டனா தொட்டனா
விக்கலு விக்கலு
ஓ ஓ ஓ ஓ ஓ


Sarkar - Simtaangara

சர்கார் - டாப் டக்கரு ஷார்ப்பு லுக்கரு

ரை போலாம் ரை
ரை போலாம் ரை
ரை போலாம் ரை
ரை போலாம் ரை

ஹேய்
ரை போலாம் ரை
ஹேய்
ரை போலாம் ரை
ஹேய்
ரை போலாம் ரை

டாப் டக்கரு
ஷார்ப்பு லுக்கரு
ஸ்டண்டநக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
போடு ஷட்டரு
ஓட உட்டுரு
ரிஸ்க் நம்ம ரேடாரு

யார்ரா நீ
அடங்கனும்யா
மடங்கனும்யா
அடங்கனும்யா
மடங்கனும்யா

ஏன்டே ஏன்டே ஏன்டே
ஏன்டே ஏன்டே ஏன்டே
ஹோய் ஹோய் ஹோய்
ஏன்டே ஏன்டே ஏன்டே
ஏன்டே ஏன்டே ஏன்டே
ஹோய் ஹோய் ஹோய்

டாப் டக்கரு
சாத்து உடனும்
யாரை தொடுற பார்த்து வரணும்
சாத்தி கெளம்பு காத்து வரணும்
ஹிட் ஆனா பிட் ஆவ வா டா

மொறச்சி தொலைச்சி
ஏத்தாத எனர்ஜி
எதிர்த்தா அதுதான்
என்னோட வளர்ச்சி

டாப் டக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
ஏன்டே ஏன்டே ஏன்டே
ஏன்டே ஏன்டே ஏன்டே

ஹேய் ஹே ஹேய் ஹே
ஹேய் ஹே ஹேய் ஹே

நைப்ப தொட்டவன்
பிளாட்டா
முடிக்கிறேன் நீட்டா
லோடு ஹண்ணுல தோட்டா

டாப் டக்கரு
ஷார்ப்பு லுக்கரு
ஸ்டண்டநக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
போடு ஷட்டரு
ஓட உட்டுரு
ரிஸ்க் நம்ம ரேடாரு

யார்ரா நீ
அடங்கனும்யா
மடங்கனும்யா
அடங்கனும்யா
மடங்கனும்யா

கை முடிஞ்சா வை
நில்லு மம்மி கிட்ட சொல்லிரு
கிளினிக் நம்பெரு இருந்தா
நீ ஸ்டெப் எடுத்து வை
ஓஹோ ஓ

ரை போலாம் ரை
ரை போலாம் ரை
ரை போலாம் ரை
வேனா தட்டிக்க என்டரு
வெடிக்கும் தண்டெரு
ஒரசாதம்மா
போலாம் ரை ஓஹோ ஓ

ரை போலாம் ரை
ரை போலாம் ரை
ரை போலாம் ரை

டாப் டக்கரு
ஷார்ப்பு லுக்கரு
ஸ்டண்டநக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
போடு ஷட்டரு
ஓட உட்டுரு
ரிஸ்க் நம்ம ரேடாரு

யார்ரா நீ
அடங்கனும்யா
மடங்கனும்யா
அடங்கனும்யா
மடங்கனும்யா



Sarkar - Top Tucker

Monday, October 15, 2018

96 - காதலே காதலே

கொஞ்சும் பூரணமே வா நீ
கொஞ்சும் எழிலிசையே
பஞ்சவர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி

காதலே காதலே
தனி பெருந்துணையே
கூட வா கூட வா
போதும் போதும்


காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போக வா
நீநீநீ



96 - Kaathalae Kaathalae

அமர்க்களம் - காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா

காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா
ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது
டப்பு மட்டும் வெச்சிருந்தா போதும் நீங்க
தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்

பொய்யும் சத்தியம் செய்யும் இந்த பூமி எப்படி உய்யும்
இதப் பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது

மஹாகணபதி மஹாகணபதி மஹாகணபதி மஹாகணபதி

கண்ணகிக்குக் கோயில் கட்டும் கற்பு மிக்க நாடிது
கற்புன்னா எத்தன லிட்டர் புதுப்பொண்ணு கேட்குது (இசை)
அட சேல பாவாட அது மலையேறிப்போச்சு
மிடியோடு சுரிதாரும் பொது உடையாகிப்போச்சு
போழி புண்ணாக்கு பள்ளி எதுக்கு 
தந்தாலே பட்டம் இருக்கு
ஏட்டில் உள்ளது ஒழுக்கம் அந்து ரோட்டில் வந்ததும் வழுக்கும்
இதப் பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது

மஹாகணபதி மஹாகணபதி 
அண்ணனுக்கு ஜே காதல் மன்னனுக்கு ஜே மரத் தமிழனுக்கு ஜே
நம்ம தலைவனுக்கு ஜே ஜே 
தலைவனுக்கு ஜே ஜே தலைவனுக்கு ஜே ஜே

திரையில பொய்கள சொன்னா சாதிசனம் நம்புது
கருத்துள்ள கவிஞ்சன் சொன்னா காத தூரம் ஓடுது (இசை)
அட சத்துள்ள தானியம் அது காணாமப் போச்சு
வெறும் பொக்குள்ள அரிசி பொது உணவாகிப் போச்சு
பாசம் கண்ணீரு பழைய தொல்ல தாயே செத்தாலும் அழுவதில்ல
அட ஏழுகுண்டலவாட இது இன்னைக்குத் திருந்தும் நாடா
அட பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது

மஹாகணபதி மஹாகணபதி 

காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா (இசை)
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா (இசை)
ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது
டப்பு மட்டும் வெச்சிருந்தா போதும் நீங்க
தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்

பொய்யும் சத்தியம் செய்யும் இந்த பூமி எப்படி உய்யும்
இதப் பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது

மஹாகணபதி மஹாகணபதி மஹாகணபதி மஹாகணபதி



Amarkalam - Kaalam Kalikalam

அமர்க்களம் - சொந்த குரலில் பாட

சொந்த குரலில் பாட 
ரொம்ப நாளா ஆசை
ஹெல்லோ சுசிலா ஆண்டி 
ஹெல்லோ ஜானகி ஆண்டி
குயில் பாட்டு சித்ரா
எல்லோரும் என்னை மன்னியுங்கள்
(சொந்த..)

காற்றிலேறி பாட்டுப் பாட போகிறேன்
ஒரு கானம் பாடி வானம்பாடியாகிறேன்
வெண்ணிலாவில் தண்ணீருண்டு கேட்கிறேன்
நிலாவில் சென்று நீர் அருந்தப் போகிறேன்
மூன்று லோகம் கண்டு வாழப் போகிறேன்
முன்னூரு ஆண்டு இளமை வாங்கப் போகிறேன்
(சொந்த..)

இந்த பூமி பழைய பூமி அல்லவா
ஒரு புதிய பூமி சலவை செய்து கொண்டு வா
ஆதி மனிதன் நல்ல மனிதன் அல்லவா
ஒரு ஜாதியற்ற மனித ஜாதி கொண்டுவா
உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டு வா
அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா
உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டு வா
அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா
(சொந்த..)



Amarkalam - Sontha Kuralil Paada

Saturday, October 13, 2018

இமைக்கா நொடிகள் - காதல் ஒரு ஆகாயம் அது என்றும்

காதல் ஒரு
ஆகாயம் அது என்றும்
வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி

கடலுக்குள்ளே மீன்
அழுதால் மீன் கண்ணீர்
வெளியே தெரியாதே
உன்னை மெல்ல நீ
உணர்ந்தால் உன் காதல்
என்றும் பிரியாதே

காதல் ஒரு
ஆகாயம் அது என்றும்
வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி

இதயம் கேட்கும்
காதலுக்கு வேறெதையும்
கேட்டிட தெரியாது அன்பை
கேட்கும் காதலுக்கு சந்தேகம்
தாங்கிட முடியாது

மேடும் பள்ளம்
இல்லாமல் ஒரு பாதை
இங்கு கிடையாது பிரிவும்
துயரம் இல்லாமல் ஒரு
காதலின் ஆழம் புரியாதே

காதல் ஒரு ஆகாயம்
அது என்றும் வீழ்வது
இல்லையடி கண்ணீர்
ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி

கடலுக்குள்ளே மீன்
அழுதால் மீன் கண்ணீர்
வெளியே தெரியாதே
உன்னை மெல்ல நீ
உணர்ந்தால் உன்
காதல் என்றும் பிரியாதே

காதல் ஒரு ஆகாயம்
அது என்றும் வீழ்வது
இல்லையடி கண்ணீர்
ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்

இல்லையடி இல்லையடி
இல்லையடி இல்லையடி
இல்லையடி இல்லையடி



Imaikkaa Nodigal - Kadhal Oru Aagayam

இமைக்கா நொடிகள் - நீயும் நானும் அன்பே

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

ஆயுள் காலம் யாவும்
அன்பே நீயே போதும்
இமைகள் நான்கும் போர்த்தி
இதமாய் நாம் தூங்கலாம்

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி

என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி

என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி

என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

தாய் மொழி போலே நீ வாழ்வை என்னில்
உன் நிழல் பிரிந்தாலும் வீழ்வேன் மண்ணில்
மின்மினி பூவே உன் காதல் கண்ணில்
புதிதாய் கண்டேனே என்னை உன்னில்

தாமதமாய் உன்னை கண்ட பின்னும்
தாய் மடியை வந்தாய் நான் தூங்கவே

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

உன் தேவையை நான் தீர்க்கவேய
வெண்ணீரில் மீனை நீந்துவேன்
உன் காதலை கடன் வாங்கியே
என்னை நானே தாங்குவேன்

உன் பாதியும் என் மீதியும்
ஒன்றே தான் என்று வாழ்கிறேன்
உன் கண்களில் நீர் சிந்தினால்
அப்போதே செத்து போகிறேன்

சாலை ஓர பூக்கள்
சாய்ந்து நம்மை பார்க்க
நாளை தேவை இல்லை பெண்ணே
நாளும் வாழலாம்

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி

என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி

என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி


என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்



Imaikkaa Nodigal - Neeyum Naanum Anbe

Friday, October 5, 2018

கீதா கோவிந்தம் - இன்கெம் இன்கெம் காவாலே

கீதா கோவிந்தம் - இங்கேம்  இங்கேம் காவாலே

Geetha Govindam - Inkem Inkem Inkem




Followers