Pages

Search This Blog

Monday, October 29, 2018

கரகாட்டக் காரன் - மாரியம்மா மாரியம்மா

மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்

நிலையாக நிலைக்க வைக்கும்
நினச்சதெல்லாம் பலிக்க வைக்கும்

உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா

காவல் நீதான் காளியம்மா
(மாரியம்மா)

மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா
காத்தும் கனலும் நீயம்மா

வானத்தபோல் நின்னு பாரம்மா
வந்தேன் தேடி நானம்மா

இந்த மனம் முழுதும் நீதானே
வந்த வழி துணையும் நீதானே

தங்க திருவடிய தொழுதோமே
இங்கு மனம் உருக அழுதோமே

சீரேஸ்வரி காமேஸ்வரி
வேறாரு நீதானே காப்பு
(மாரியம்மா)

வானெல்லாம் வாழ்த்துத்தான் கேட்கட்டும்
வாழ்வே வளமே பாக்கட்டும்

நீ எங்க தாய் என்று காணட்டும்
நிழலும் நிஜமா மாறட்டும்

சக்தி முழுதும் தந்து காப்பாயே
முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே

பக்தி மனம் விரும்பும் என் தாயே
நித்தம் பரிதவிக்கும் உன் சேயே

சாட்சி சொல்லும் தாயே துணை
தீயெல்லாம் பூவாக மாறட்டும்
(மாரியம்மா)



Karagattakaran - Mariyamma Mariyamma

Followers