Pages

Search This Blog

Showing posts with label Siraichalai. Show all posts
Showing posts with label Siraichalai. Show all posts

Monday, November 28, 2016

சிறைச்சாலை - செம்பூவே பூவே உன் மேகம்

ஆண்: செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெண்: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
ஆண்: படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
பெண்: மன்னவன் விரலகள் பல்லவன் உளியோ
ஆண்: இமைகளும் உதடுகள் ஆகுமோ
பெண்: வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ

(செம்பூவே பூவே)

ஆண்: அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சையாக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்
பெண்: தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சில் ஆடும் சுவாசச்சூட்டில் காதல் குற்றாலம்
ஆண்: தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான் சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா
பெண்: நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
ஆண்: ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
பெண்: கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ

(செம்பூவே பூவே)

பெண்: இந்த தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ
ஆண்: அந்த காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சின் நாணம் சுட்டு மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே
பெண்: விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலோ பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ
ஆண்: முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
பெண்: நாணத்தாலோர் ஆடை சூடிக் கொள்வேன் நானே
ஆண்: பாயாகும் வழி சொல்லாதே பஞ்சணை புதையல் ரகசியமே

(செம்பூவே பூவே)

Siraichalai - Sempoove Poove

Friday, October 25, 2013

சிறைச்சாலை - ஆலோலங்கிளித் தோப்பிலே

F: ஆலோலங்கிளித் தோப்பிலே
தங்கிடும் கிளித் தங்கமே
இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துகாரி

M: ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி...

F: நெஞ்சில் ஒரு தும்பி பறக்கும் ஹையோ..ஹையையோ..

M: செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹையோ..ஹையையோ. (ஆலோலம்)

F: ஆலோலங்கிளித் தோப்பிலே
தங்கிடும் கிளித் தங்கமே
இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துகாரி

M: கடல் கடக்குது இதயம் உன் கண்ணில் நீந்தித்தானோ...ஹோய்
F: துடிதுடிக்கிற நெஞ்சில் இனி தூவான மழைதானோ....ஹோய்
M: காதல் விழாக்காலம் கைகளில் வா வா ஈர நிலாப் பெண்ணே
F: தெம்மாங்கு ஏந்த வரும் பூங்காற்றே
என் கூந்தல் பொன்னூஞ்சல் ஆடி வா
M: வீணை புது வீணை சுருதி சேர்த்தவன் நானே
நம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே (ஆலோலம்)

F: ஆலோலங்கிளித் தோப்பிலே
தங்கிடும் கிளித் தங்கமே
இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துகாரி

F: கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ..ஹோய்
M: கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ...ஹோய்
F: பூவிழியின் ஓரம் வானவில் கோலம் பொன்மகளின் நாணம்
M: நிலாவின் பிள்ளை இங்கு நீதானோ
பூஞ்சோலை பூக்களுக்கு தாய்தானோ
F: ஆசை அகத்திணையா வார்த்தை கலித்தொகையா
அன்பே நீ வா வா நம் காதல் குறுந்தொகையா (ஆற்றில்)


M: ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி...

F: நெஞ்சில் ஒரு தும்பி பறக்கும் ஹையோ..ஹையையோ..

M: செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹையோ..ஹையையோ. (ஆலோலம்)

F: ஆலோலங்கிளித் தோப்பிலே
தங்கிடும் கிளித் தங்கமே
இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துகாரி

Siraichalai - Alolam Kili Thopilae

Followers