Pages

Search This Blog

Showing posts with label Kanave Kalaiyathe. Show all posts
Showing posts with label Kanave Kalaiyathe. Show all posts

Monday, January 6, 2014

கனவே கலையாதே - கண்ணில் உன்னைக்கண்டு

கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன்
கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன் கண்ணபெருமானே
கண்களுக்கு நன்றி சொன்னேன் கன்னி இள மானே
கங்கைக்கரை காற்றைக் கேளு கண்ணபெருமானே
காதல் செய்த காலம் எல்லாம் காதில் கூறும் தானே
கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன் கண்ணபெருமானே
 
சரணம் -1

சொல்லடி நீ ப்ரிய சினேகிதி நீ
இள மனம் எனும் மலர்வனம் துளிர் விட
தினம் தினம் அவன் இங்கு வருவானா
இனியும் ஒரு அறிமுகமா ? இருவருமே புதுமுகமா ?
அவன் இங்கு வருவானா ? தோழி அடைக்கலம் தருவானா ?
ஈச்சம்பூவை ஈரக்காற்று கூச்சம் தீர கூடிடும் இரவினில்
அவன் இங்கு வருவானா ?
கண்ணா மழை வண்ணா  கண்ணா மழை வண்ணா
என செம்மாங்குயில் போல் கூவுகின்றேன்

 கண்ணில் உன்னை
 கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன் கண்ணபெருமானே
கண்களுக்கு நன்றி சொன்னேன் கன்னி இள மானே
கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன் கண்ணபெருமானே

சரணம் -2

தொட்டகுறை முன்பு விட்டகுறை
இன்று தொடங்கிட தொடங்கிட
தொடர்ந்திட தொடர்ந்திட புது சுகம் அரும்பாதோ
புயல் அடித்தால் நிலவணையும்
மழை அடித்தால் மலை கரையும்
உனக்கிது தெரியாதா ? கண்ணா உறவுகள் திரும்பாதா ?
மண்ணில் காதல் மாய்ந்ததென்று பார்த்ததில்லை
பூமியில் அதற்கொரு கல்லறை கிடையாது
உன்னை இங்கு என்னை உன்னை இங்கு என்னை
என்றும் ஒன்றாய் சேர்த்த காதல் வாழ்க

கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன் கண்ணபெருமானே
கண்களுக்கு நன்றி சொன்னேன் கன்னி இள மானேகண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன் கண்ணபெருமானே
பிறவி உனக்காக எடுத்த கிளி
மனதை உனக்காக கொடுத்த கிளி
இனியும் தனியாக தவித்த படி
இருக்க விடலாமோ தலைவன்மடி

கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன் கண்ணபெருமானே
கண்களுக்கு நன்றி சொன்னேன் கன்னி இள மானே

Kanave Kalayadhe - Kannil Unnai

கனவே கலையாதே - பூசு மஞ்சள் பூசு மஞ்சள்

(ஆண்)
 
பூசு  மஞ்சள்  பூசு  மஞ்சள்  பூசிய  பூவொன்று  
பூஒமியோடு  போன  பின்னும்  பூத்தது  ஏன்  இன்று  ? 
என் கண்கள் பொய் சொல்லுமா  - வேர்  இல்லாமல் பூ பூக்குமா  ?
கண்ணோடு  ஆனந்தமா  - என் நெஞ்சோடு  பூகம்பமா  ?
பிம்பமா  உன் போலே  பிம்பமா ?
ஓ ..ஓ...  நம்புமா  என்  உள்ளம்  நம்புமா   ? 

(பூசு )  
உயிர்  நீங்கி  போனவளே  
என்  உயிர்  வாங்கி  போனவளே  
என்  உயிர்  போன  தேகம்  மட்டும்  நடமாடுதே  
பாரம்மா ...என்  வாழ்வை  பாரம்மா  
நீ  தந்த  காயங்கள்  நெஞ்சோடு   ஆறுமுன்னே  
அழகான  வாளொன்று  அதை  கீருதே 
தாங்குமா ...என்  உள்ளம் தாங்குமா 
உன் போன்ற புன்னகையால்  என் வாழ்வை குடிப்பவள்  யார் 
உன் போன்ற பார்வையினால்  என் கண்ணை எரிப்பவள்  யார் 
ஒரு தொடர்கதையே  இங்கு விடுகதைய  
அந்த  விடையின்  எழுத்தை  எந்தன்  விதி  வந்து  மறைத்ததா   ? 
பொங்குதே  கண்ணீரும்  பொங்குதே   கண்களில்  உன்  பிம்பம்  தங்குதே  

(பூசு )  
வடகே  ஒரு  அஸ்தமனம்  
தெற்கே  ஒரு  சந்திரோதயம்  
ஆகாயம்  என்னோடு  திசை  மாறுதே  
உண்மையா ... நான்  என்ன  பொம்மையா 
ஒரு  ஜன்மம்   வாங்கி   வந்து  இரு  ஜன்மம்  வாழ்கிறேன் 
இது  என்ன  கதை  என்று  விதி  கேட்குதே  
மாறுமா  என்  கண்ணீர்  மாறுமா  
எங்கேயோ  தொலைந்த  விதை  இங்கே  வந்து  பூத்ததென்ன  
முல்லை  பூ  என்றிருந்தேன்  முள்ளோடு  பாய்ந்ததென்ன 
நான்  ஓட நினைக்க  நிழல்  என்னை  துரத்த  
உயிர்  திகைக்கும்  பயணம்  எந்த  திருப்பதில்  முடிவது  
ஓய்ந்ததே ...என்  கால்கள்  ஓய்ந்ததே  
தீர்ந்ததே ... கண்ணீரும்  தீஎர்ந்ததே  
(பூசு )

Kanave Kalayadhe- Poosu Manjal(Male)

கனவே கலையாதே - பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசுது

(பெண்)
 
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசுது பூவொன்று
எண்ணம் போலே எண்ணம் போலே வந்தது வாழ்வென்று
தாய் தந்தை வாழ்த்துக்களால்
இன்று என் காதல் ஈடுரூதே
ஏன் இந்த மாற்றங்களோ
இன்று என் கண்ணில் தேனூருதே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
சிந்துதே கண்ணீரும் சிந்துதே

பூசு மஞ்சள் ....

கடல் நீரைக் கடன் வாங்கி என் கண் கொண்டு அழுதாலும்
நான் சொல்லும் நன்றிக்கு போதாதம்மா
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
இடம் மாறி வந்தாலும் தடம் மாறி போகாமல்
என் காதல் கைக்கூட கண்டேனம்மா
சிந்துதே கண்ணீரும் சிந்துதே
எண்ணம் போல் வாழ்வு கண்டேன் எல்லோரும் வாழ்த்தட்டுமே
முன்னூறு ஆண்டு வரை என் மஞ்சள் வாழட்டுமே
மறு பிறப்பினிலும் ஏழு பிறப்பினிலும்
இந்த தந்தைக்கும் தாய்க்கும் வந்து மகளென்று பிறந்திட
ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே

பூசு மஞ்சள் ...

ஆண் என்றால் ஒரு வீடு பெண் என்றால் இரு வீடு
தாய்நாட்டு பண்பாடு தடை போடுமே
பொங்குதே கண்ணீரும் பொங்குதே
கிளை எங்கே போனாலும் என் வேர்கள் இங்கேதான்
என் ஜீவன் இங்கும் அங்கும் விளையாடுமே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
பொன் மாலை தந்தவனை எந்நாளும் காதலிப்பேன்
வெண் மேகம் சிறகு தந்தால் விண்ணோடு வலம் வருவேன்
எந்தன் உயிர் மலரை உந்தன் திருவடியில் தந்து
உனக்குள் கரைந்து இந்த உலகத்தை மறந்திட
ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே
பொங்குதே கண்ணீரும் சிந்துதே

பூசு மஞ்சள் ...

Kanave Kalayadhe - Poosu Manjal(Female)
 

கனவே கலையாதே - கண்ணோடு கண்ணோடு

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்
காதோடு காதோடு பேசும் காதல்
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்
உறவே வருக நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக

கண்ணோடு கண்ணோடு ....

அன்பே அன்பே உன் ஆடை கொடு
உன் திருமுகம் தெரியட்டுமே
திங்கள் பெண்ணே உன் திரை விலக்கு
கண் நினைவுகள் மலரட்டுமே
உன் கால் கொலுசு சங்கீதம் பாடாதா ?
உன் கண் மணியில் என் காலம் விடியாதா ?
உன் கூந்தல் பூக்காடு நான் சூட பூவில்லையா ?
உயிரின் குரல் தான் அடி உனக்கு கேட்கவில்லையா ?

கண்ணோடு கண்ணோடு ....

நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிடு
உன் நிழலுக்குள் கரைந்துவிடு
பூக்கள் கொஞ்சம் என் கூந்தலுக்குள்
ஒரு குடித்தனம் தொடங்கிவிடு
உன் நேசம் தான் என் வாழ்வின் ஆகாயம்
உன் நெஞ்சில் நால் இல்லாமல் என்னாகும்
நாளே.. நாம் சேர்ந்து ஒன்றாகட்டும்
உயிரே மடிந்தால்
கடல் அலைகள் காதல் சொல்லட்டும்

கண்ணோடு கண்ணோடு ....

Kanave Kalaiyadhe - Kannodu Kannodu

Followers