Pages

Search This Blog

Showing posts with label Mahanadi. Show all posts
Showing posts with label Mahanadi. Show all posts

Wednesday, January 11, 2017

மகா நதி - தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாழாது

தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாழாது
செவ்வானம் மின்னல் வெட்டி மண் மீது வீழாது
காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி
காற்றாடி போலிருந்து வீழ்வதில்லையடி

அன்பான உறவு கண்டு கூடு கட்டி ஆடுவேன்
அந்நாளில் நானிருந்த வாழ்கையை தான் தேடுவேன்
அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி
என் எண்ணம் என்றைக்கும் தோல்வி என்பதை எற்றதில்லையடி

ஹே தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
ஹே தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
ஹே தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
ஓ தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு

Mahanadhi - Thanmanam Ulla Nenjum

மகா நதி - அன்பான தாயை விட்டு

அன்பான தாயை விட்டு
எங்கே நீ போனாலும்
நீங்காமல் உன்னைச் சுற்றும்
எண்ணங்கள் எந்நாளும்
ஐயா உன்கால்கள் பட்ட
பூமித்தாயின் மடி
எங்கேயும் ஏதும் இல்லை
ஈடு சொல்லும் படி

காவேரி அலைகள் வந்து
கரையில் உன்னைத் தேடிடும்
காணாமல் வருத்தப் பட்டுத்
தலை குனிந்து ஓடிடும்
ஒரு பந்தம் என்பதும் பாசம் என்பதும்
வேரு விட்ட இடம்
இதை விட்டால் உன்னை வாழ வைப்பது
வேறு எந்த இடம்

தன் மண்ணை விட்டொரு குருவிக் குடும்பம்
பறந்து போகுதடி
தான் இந்நாள் வரைக்கும் இருந்த கூட்டை
மறந்து போகுதடி
இந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொரு
கோலமிட்டதடி
இதில் நன்மை கூடட்டும் தீமை ஓடட்டும்
காலம் விட்ட வழி

Mahanadhi - Anbana Thayai

மகா நதி - எங்கேயோ திக்கு திசை

எங்கேயோ திக்கு திசை 

எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான்
அம்மாடி வந்ததென்ன என் வாழ்கை ஓடம்தான்

காவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி
காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி

கைமாறி நான் வளர்த்த பச்சைக்கிளி போனது
கண்ணார நானும்காண இத்தனை நாள் ஆனது

இரு கண்ணே செந்தமிழ்த்தேனே தந்தையின் பாசம் வென்றதடி
பசும் பொன்னே செவ்வந்திப்பூவே இத்துடன் சோகம் சென்றதடி
நான் கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது
இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது

Mahanadhi - Engeyo Thikkudesai

மகா நதி - சொல்லாத ராகங்கள் என்னென்ன

பெண் : துவக்கம் எங்கே இது வரை சரிவரப் புரியவில்லை

ஆண் : தொடங்கியதை தொடர்ந்திடப் புதுவழி தெரியவில்லை

பெண் : புதிர்களும் புதுக்கவி புனைந்திட

ஆண் : நெருங்கிட என் மனம் மருகிட

பெண் : மயங்குதே கலங்குதே

ஆண் : சொல்லின்றியே தயங்குதே

பெண் : அலைகள் எழுந்து கரைகள் கடந்து
சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன (இசை)

பெண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

ஆண் : நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன

பெண் : எழுந்த சந்தம் ஒன்று
கலந்த சொந்தம் இன்று
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்புமோ புது யுகம் அரும்புமோ

ஆண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

பெண் குழு : அஹ ஹஹா..அஹ ஹஹா..ஹா..(இசை)
ஆஹ ஹஹஹா..ஹாஹ ஹஹா..

ஆண் : காவல் வைத்தாலும் உன்மீது
ஆவல் கொண்டாடும் உள்ளம் உள்ளம்

பெண் : காலம் கைகூடும் என்றெண்ணி
காதல் கொண்டாடும் எண்ணம் எண்ணம்

ஆண் : கூண்டில் என் வாசம் என்றாலும்
மீண்டும் நான் வந்தால் அந்நேரம்
வேண்டும் நான் வாழ உந்தன் நெஞ்சம்

பெண் : வானம் நின்றாலும் சாய்ந்தாலும்
வையம் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
பாவை பெண் பாவை உந்தன் தஞ்சம்

ஆண் : ஜீவன் வெவ்வேறு ஆகாமல்
ஜென்மம் வீணாகிப் போகாமல்
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்புமோ புது யுகம் அரும்புமோ

பெண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

ஆண் : நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன (இசை)

பெண்குழு : ஆஹ ஹஹஹா..ஹாஹ ஹஹா..

பெண் : நாட்கள் ஒவ்வொன்றும் துன்பம்
தூக்கம் இல்லாமல் செல்லும் செல்லும்

ஆண் : வீசும் பூந்தென்றல் உன்பாட்டை
நாளும் என் காதில் சொல்லும் சொல்லும்

பெண் : பாரம் நெஞ்சோரம் என்றாலும்
ஈரம் கண்ணோரம் என்றாலும்
உள்ளம் உன் பேரைப் பாடும் பாடும்

ஆண் : நேசம் எந்நாளும் பொய்க்காமல்
நெஞ்சைத் துன்பங்கள் தைக்காமல்
நாளை பொற்காலம் கூடும் கூடும்

பெண் : நெஞ்சில் எப்போதும் உன் எண்ணம்
கண்ணில் எந்நாளும் உன் வண்ணம்
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்பலாம் புது யுகம் அரும்பலாம்

ஆண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

பெண் : நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன

ஆண் : எழுந்த சந்தம் ஒன்று
கலந்த சொந்தம் இன்று
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்பலாம் புதுயுகம் அரும்பலாம்

பெண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

ஆண் : நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன

Mahanadhi - Solladha Raagangal

மகா நதி - ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம்

பெண்குழு : கங்கா சங்காச காவேரி ஸ்ரீரங்கேச மனோஹரி
கல்யாணகாரி கலுசானி நமஸ்தேஸ்து சுகாசரி

பெண் : ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி 
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி 
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி 
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி 
தெய்வப் பாசுரம் பாடடி

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி

பெண் : கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும்
அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி 
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி

ஆண் : கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறு வீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கள நீராட முன் வினை தீர்க்கும்
நீர் வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர் வண்ணம் என்ன கூறுவேன் தேவ லோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி

ஆண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி 
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி 
தெய்வப் பாசுரம் பாடடி

ஆண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி

இருவர் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி



Mahanadhi - Sri Ranga Nathanin

மகா நதி - தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது

பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்….
பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்….

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ

வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றிசொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி

ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு

ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ

முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால
கல் மேடு தாண்டி வரும் காவேரி நீரால
சேத்தொட சேர்ந்த விதை நாத்து விடாதா
நாத்தோடு செய்தி சொல்ல காத்து வராதா

செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம் தான்
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம் தான்
நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ

இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி



Mahanadhi - Pongalo Pongal

Followers