Pages

Search This Blog

Showing posts with label 3. Show all posts
Showing posts with label 3. Show all posts

Tuesday, October 15, 2013

3 - நீ பார்த்த விழிகள்

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
ம்... ம்... கேட்டாலும் வருமா கேட்காத வரமா

இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
ம்... ம்... கேட்டாலும் வருமா கேக்காத வரமா

நிழல் தரும்… இவள் பார்வை…
வழி எங்கும்… இனி தேவை…
உயிரே… உயிரே… உயிர் நீ தான் என்றால்…
உடனே… வருவாய்… உடல் சாகும் முன்னால்…

அனலின்றி… குளிர் வீசும்…
இது எந்தன்… சிறை வாசம்

இதில் நீ மட்டும் வேண்டும்… பெண்ணே…
நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
ம்... ம்... கேட்டாலும் வருமா கேட்காத வரமா

இது போதுமா… இதில் அவசரமா…
இன்னும் வேண்டுமா… அதில் நிறைந்திடுமா…
நாம் பார்த்த நாள்… நம் வசம் வருமா…
உயிர் தாங்குமா....

3 - Nee Paartha Vizhigal

3 - கண்ணழகா காலழகா

கண்ணழகா... காலழகா...
பொன் அழகா... பெண் அழகா...
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

உயிரே உயிரே உனை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனை விட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி

எங்கேயோ பார்க்கிறாய் என்னெனென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்

உனக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன்
உன் உயிர் சேர்ந்திட நான் வழி பார்க்கிறேன்

இதழும் இதழும் இணையட்டுமே புதிதாய் படிகள் இல்லை
இமைகள் மூடி அருகினில் வா இது போல் எதுவும் இல்லை

உனக்குள் பார்க்கவா உள்ளதை கேட்கவா
என் உயிர் சேர்ந்திட நான் வழி சொல்லவா

கண்ணழகே... பேரழகே...
பெண்ணழகே... என் அழகே...
உயிரே உயிரே உனை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி
3 - Kannazhaga

Followers