Pages

Search This Blog

Showing posts with label Chithirayil Nilachoru. Show all posts
Showing posts with label Chithirayil Nilachoru. Show all posts

Monday, January 14, 2019

சித்திரையில் நிலாச்சோறு - உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி

உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி
திட்ட ஒரு புள்ள பெத்து தா
திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா
பையன் பொறந்தா எங்கப்பன் பேருதான்
பொண்ணு பொறந்தா எங்கம்மா பேருதான்
பேரு வைக்க புள்ள வேணும் எனக்கு
அந்த புள்ள கொடு செல்லக்கிளியே

உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி
திட்ட ஒரு புள்ள பெத்து தா
திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா

ஏ முத்து போல புள்ள ஒன்னு
ஏ பெத்து போடு பெத்து போடு
ஏ ஆசையோட கேட்கறத
அட அள்ளிக் கொடு அள்ளிக் கொடு

முன்னவங்க செஞ்ச தவம் செய்கையில் விளங்கும்
நல்லதெது கெட்டதெது போகப் போகத் தெரியும்
பாட்டன் பூட்டன் பண்ணி வெச்ச வேலையெல்லாம்
கொட்டம் போட்டு அட்டகாசம் தான் நடத்தும்
அப்பன் போல புள்ள வந்தா
அப்பனுக்கும் கூட பல புத்திமதி சொல்லிக்கொடுக்கும்

உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி
திட்ட ஒரு புள்ள பெத்து தா
திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா
பையன் பொறந்தா எங்கப்பன் பேருதான்
பொண்ணு பொறந்தா எங்கம்மா பேருதான்
பேரு வைக்க புள்ள வேணும் எனக்கு
அந்த புள்ள கொடு செல்லக்கிளியே
உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி
திட்ட ஒரு புள்ள பெத்து தா
திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா

சொல்லித் தந்த விதியெல்லாம் அவனுக்குப் பிறகும்
அப்படியே புள்ளவழி அற்புதமா தொடரும்
நல்ல விதை கெட்டுப்போய் முளைக்காது
நம்பு கண்ணு வானம் வத்திப் போகாது
செல்வம் என்றால் பிள்ளைச் செல்வம்
சேர்ந்த செல்வம் எப்போதுமே உன்னைவிட்டு விலகாது

உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி
திட்ட ஒரு புள்ள பெத்து தா
திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா
பையன் பொறந்தா எங்கப்பன் பேருதான்
பொண்ணு பொறந்தா எங்கம்மா பேருதான்
பேரு வைக்க புள்ள வேணும் எனக்கு
அந்த புள்ள கொடு செல்லக்கிளியே
உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி
திட்ட ஒரு புள்ள பெத்து தா
திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா




Chithirayil Nilachoru - Ungappan Pera

சித்திரையில் நிலாச்சோறு - கல்லாலே செஞ்சு வெச்ச சாமியில்ல நீ

கல்லாலே செஞ்சு வெச்ச சாமியில்ல நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வமில்ல நீ 
எனக்காக மண்ணில் வந்த 
எனக்காக இந்த மண்ணில் வந்த 
என் தங்கமே வைரமே செல்லமே...
கல்லாலே செஞ்சு வெச்ச சாமி இல்ல நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ 

கன்னுகுட்டி நீ துள்ளி ஓடுனா 
கண்ணு பட்டிடும் சொன்ன சொல்ல கேளும்மா 
தேரு வந்து நின்னா கூட நீ அழகு 
மின்னல் வந்து போனா கூட நீ தான் அழகு 
அம்மான்னு உன்ன நானும் கூப்பிடுவேன் 
எங்க அம்மாவ அப்போ அப்போ நெனச்சுக்குவேன் 
அம்மான்னு உன்ன நானும் கூப்பிடுவேன் 
எங்க அம்மாவை அப்போ அப்போ நெனச்சுக்குவேன் 
நீ செய்கூலி சேதாரம் இல்லாத 
என் தங்கமே வைரமே செல்லமே....

கல்லாலே செஞ்சு வெச்ச சாமியில்ல நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வமில்ல நீ 

மண்ணில் விழுந்த மழை துளி நீ 
என் கண்ணில் இருக்கும் கருவிழி நீ 
பொட்டு வெச்ச சித்திரமே நீ எனக்கு போதும் 
வட்ட நிலா நீ தான் என்று உன் அழக பாடும் 
யானை மேல நீ அமர்ந்து வலம் வரணும் 
நான் எப்ப எப்ப கேட்டாலும் நீ வரம் தரனும் 
நீ வேணும் நிழலாக 
வாழோணும் தங்கமே வைரமே செல்லமே...

கல்லாலே செஞ்சு வெச்ச சாமியில்ல நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வமில்ல நீ 
எனக்காக மண்ணில் வந்த 
எனக்காக இந்த மண்ணில் வந்த 
என் தங்கமே வைரமே செல்லமே...
ஆராரோ ஆரிராரோ ஆரிராரிரோ..
ஆராரோ ஆரிராரோ ஆரிராரிரோ..
ஆராரோ ஆரிராரோ ஆரிராரிரோ..



Chithirayil Nilachoru - Kallale Senju Vecha

சித்திரையில் நிலாச்சோறு - காலையிலே மாலை வந்தது

காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது
இனி காலமெல்லாம் உனைத் தொடர்ந்து வர
உன் காலடிதான் இனி சரணமென
இந்த வானமும் பூமியும் வாழ்த்து சொல்ல

காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது

கண்களை நான் கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தேன்
கண் திறந்தேன் என்ன அழகு
எண்ணத்தை நான் எப்படியோ ஓடவிட்டேன்
இன்று அதில் நல்ல தெளிவு
மூங்கில் காடு முழுசா பாடும்
புல்லாங்குழலாய் மாறும் போது
சித்திரம் எழுதும் கண்மணி அழகு
நித்தமும் வளரும் பெளர்ணமி நிலவு
உனது இரு விழிகளில் கதை எழுது

காலையிலே மாலை ….

இன்று முதல் வாழும் வரை நான் உனக்கு
இந்த வரம் வேண்டும் எனக்கு
சிந்தனையில் வந்து வந்து போகும் உனக்கு
சிற்றிடையில் வேலை இருக்கு
எனது உனது மனது நமதாக
விருந்து கலந்து விருப்பம் உனதாக
இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு
என்னோடு வந்த இளமையும் இனி உனக்கு

காலையிலே மாலை ….



Chithirayil Nilachoru - Kaalaiyile Maalai

Followers