Pages

Search This Blog

Showing posts with label 16 Vayathinile. Show all posts
Showing posts with label 16 Vayathinile. Show all posts

Friday, December 27, 2013

16 வயதினிலே - ஆட்டுக்குட்டி முட்டையிட்டு

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையிலதானே இப்போ காணுது பூமி
இது மட்டும்தானா இன்னும் இருக்குது சாமி

கூத்து மேடை ராஜாவுக்கு நூற்றிரெண்டு பொண்டாட்டியாம்
நூற்றிரெண்டு பெண்டாட்டியும் வாத்து முட்டை போட்டதுவாம்
பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு
பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு
மொத்தம் இருபத்து ஆறு
சின்ன குட்டிகளின் மேல் ஆணை புது சட்டிகளின் மேல் ஆணை
இரு வள்ளுவன் பாட்டிலுண்டு
பரம்பரை கதையிலுண்டு கதையல்ல மகராசி
காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே
பாட்டெடுத்து பாடிப்புட்டு நோட்டமிட்ட சின்னப் பொண்ணு
சந்தைக்கு போனா நானும் சாப்பிட்டு வர வா
சம்பந்தம் பண்ணா உனக்கு சம்மதம்தானா
காக்கையில்லா சீமையே ஏ...

காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே
பாக்கு வச்சி நேரம் பாத்து வச்ச ஆசை மச்சான்
சந்தைக்கு போறேன் நீங்க சாப்பிட்டு வாங்க
சம்பந்தம் பண்ண எனக்கு சம்மதம் தாங்க
அட இந்த பக்கம் பாருங்களே
என் கன்னி மனம் கேளுங்களே
அட ஏண்டி என்ன மஞ்சளுக்கு கேக்குறீயா
பழைய நெனப்புதான் பேராண்டி பழைய நெனப்புதான்
கிட்டப்பாவின் பாட்டை கேட்டு சின்னப்பாவை நேரில் பார்த்தேன்
கொட்ட கொட்ட வருகுதம்மா சங்கீதமா பெருகுதம்மா
மேடைக்கு போனா எனக்கு வீட்டுல பொண்ணு
பாட்டுல நின்னா நானும் நூத்துல ஒன்னு
என் திறமையை காட்டட்டுமா
இரண்டு சங்கதியை போடட்டுமா

16 Vayathinile - Aattu Kutti Muttaiyittu

16 வயதினிலே - செந்தூரப்பூவே செந்தூரப்பூவே

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ
(செந்தூரப்பூவே..)

தென்றலை தூதுவிட்டு ஒரு சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னி பருவத்தில் வந்த நினப்பே வண்ணப்பூவே
தென்றல் காற்றே என்னை தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)

நீலக்கருங்குயிலே தென்னை சோலை குருவிகளே
கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
காணும் வழியெங்கும் பூவை இரைத்திடுங்கள்
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத்தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)

16 Vayathinile - Senthoora Poovae

Monday, November 4, 2013

16 வயதினிலே - செவ்வந்தி பூ முடிச்ச

செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா ஹோய்
சேதி என்னக்கா ஹோய்
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா ஹோய்
முத்து பல்லக்கா ஹோய்
அது என்னமோ என்னமோ ஹோய்

செவ்வந்தி ...

கோயில் அம்மனுக்கு சூடம் காட்டு
அத நீயும் காட்டு
அது சிரிப்பது தெரியாதா
பூஸை உன் கையால் போட்டாச்சு
நானும் பார்த்தாச்சு இனி எனக்கது புரியாதா
கண்ணால் சொல்லு மலை எடுப்பேன்
ரெண்டு கையாலே அத வளைப்பேன்
சிரிக்காதே நாடு பொறுக்காதே
என் மனசே கெடுதே குயிலே மயிலே ஹோய்

செவ்வந்தி ...

ஆத்துல காத்தடிச்சா அலை ஓடும்
கெண்டை விளையாடும்
இப்போ மனசுல துடிக்குதம்மா
ஆயிரம் நினப்புக்கு வயசிருக்கு
சின்ன மனசிருக்கு
அது துணிஞ்சது எதுக்காக
உடம்பு இப்போ நடுங்குதம்மா
சலங்கையைப்போல் குலுங்குதம்மா
நீ பலசாலி நல்ல அறிவாளி
எனக்கு இதுவே போதும் குயிலே மயிலே ஹோய்

செவ்வந்தி ...

செவ்வந்தி பூ முடிச்ச சின்னய்யா ஹோய்
சேதி என்னய்யா ஹோய்
நீ சீட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லய்யா ஹோய்
முத்து பல்லய்யா ஹோய்
அது என்னமோ என்னமோ ஹோய்

16 Vayathinile - Sevvanthi poo mudicha

Followers