Pages

Search This Blog

Showing posts with label Uyirodu Uyiraga. Show all posts
Showing posts with label Uyirodu Uyiraga. Show all posts

Tuesday, December 24, 2013

உயிரோடு உயிராக - பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
முப்பது நாளும் முதூர்தமானது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன் துளி கசிந்தது எந்தன் ராகத்தில்
இது எப்படி எப்படி ஞாயம்
எல்லாம் காதல் செய்த மாயம் (2)

(பூவுக்கெல்லாம் சிறகு ....)

நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
I love you love you சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவற ?
இது தான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்து
கற்றை குழல் கயிறு செய்தது
மோதும் ஆடை முத்தமிட்டது
ரத்தம் எல்லாம் சுட்டுவிட்டது
I love you love you சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை குளிர்ந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது
காதல் என்பது சரியா தவற ?
இது தான் எனக்கு தெரியவில்லை

(பூவுக்கெல்லாம் சிறகு ...)

Uyirodu Uyiraga - Poovukkellam Siragu

உயிரோடு உயிராக - உயிரோடு உயிராக

அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

(அன்பே அன்பே)

கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும் உன்னை உன்னை அழைக்க
கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள் என்னை என்னை உரைக்க
கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன்
கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்
உன் பொன் விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன்
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்

(அன்பே அன்பே)

யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும் தீயும் பஞ்சும் நெருங்க
யாரைப் பெண் என்பது யாரை ஆண் என்பது ஒன்றில் ஒன்று அடங்க
உச்சியில் தேன் விழுந்து என் உயிருக்குள் இனிக்குதடி
மண்ணகம் மறந்து விட்டேன் எனை மாற்றுங்கள் பழையபடி
உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என் ஆயுள் நீளும்படி
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

(அன்பே அன்பே)

Uyirodu Uyiraga - Anbae Anbae

Followers