Pages

Search This Blog

Showing posts with label Unakkagave Vazhkiren. Show all posts
Showing posts with label Unakkagave Vazhkiren. Show all posts

Wednesday, December 5, 2018

உனக்காகவே வாழ்கிறேன் - இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம்

இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம்
இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா

எந்த சொந்தங்கள் யாரோடு என்று காலம்தான் சொல்லுமா
பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம் தேதிதான் சொல்லுமா
சோலை எங்கும் சுகந்தம் மீண்டும் இங்கே வசந்தம்
நெஞ்சம் ஏன்தான் மயங்கும் கண்கள் சொன்னால் விளங்கும்
ஒரு மௌனம் தீர்ந்தது சுதியோடு சேர்ந்தது
ஒரு தாளம் ராகம் சொல்ல சந்தம் பொங்கும் மெல்ல
மாயம் அல்ல மந்திரம் அல்ல

இளஞ்சோலை பூத்ததா இளஞ்சோலை பூத்ததா

ஊமையாய் போன சாங்கீதம் ஒன்று இன்றுதான் பேசுதோ
மேடை இல்லாமல் ஆடாத கால்கள் இன்றுதான் ஆடுதோ
கண்ணில் என்ன கனவோ நெஞ்சில் என்ன நினைவோ
நம்மை யார்தான் கேட்பது விதிதானே சேர்ப்பது
இந்த பாசம் பாவம் இல்லை நேசம் மோசம் இல்லை
கங்கை என்றும் காய்வதும் இல்லை

இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம்



Unakkagave Vazhkiren _ Ilam Solai POothatha Enna Jaalam

Wednesday, November 28, 2018

உனக்காகவே வாழ்கிறேன் - கண்ணா உனைத்தேடுகிறேன் வா

கண்ணா…ஆ கண்ணா…ஆ ஆ…கண்ணா

கண்ணா உனைத்தேடுகிறேன் வா
கண்ணீர்க்குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
கன்னங்களும் காயவில்லை

கண்ணா உனைத்தேடுகிறேன் வா
கண்ணீர்க்குயில் பாடுகிறேன் வா

ஏனிந்த காதல் என்னும் எண்ணம் தடை போடுமா
என் பாடல் கேட்ட பின்னும் இன்னும் பிடிவாதமா
என்ன நான் சொல்வது இன்று வந்த சோதனை
மௌனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை
உன்னைத்தேடி வந்தேன் உண்மை சொல்ல வேண்டும்
இந்த சோகம் கொள்ள என்ன காரணம்

கண்ணா உனைத்தேடுகிறேன் வா
கண்ணீர்க்குயில் பாடுகிறேன் வா

கண்ணே உனைத்தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
காதல் என்றும் தீர்வதில்லை
கண்ணே இனி சோகமில்லை

கண்ணே உனைத்தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா

சோகத்தின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா
கங்கை நீர் காயக்கூடும் கண்ணீர் அது காயுமா
சோதனை நேரலாம் பாசம் என்ன போகுமா
மேகங்கள் போய்விடும் வானம் என்ன போகுமா
ஈரமுள்ள கண்ணில் தூக்கமில்லை பெண்ணே
தோகை வந்த பின்னே சோகம் இல்லையே

கண்ணே உனைத்தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
காதல் என்றும் தீர்வதில்லை
கண்ணே இனி சோகமில்லை

கண்ணா உனைத்தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா



Unakkagave Vazhkiren - Kanna Unnai Thedukiren Vaa

Followers