Pages

Search This Blog

Showing posts with label Kaadhal sugamanathu. Show all posts
Showing posts with label Kaadhal sugamanathu. Show all posts

Tuesday, October 15, 2013

காதல் சுகமானது - சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்..
காதல் சுகமானது..

வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..
தேடல் சுகமானது..

அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல..
வெக்கங்கள் வர வைக்குறாய்..
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்..
தனியே அழ வைக்குறாய்..
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..
காதல் சுகமானது..!

சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்..
காதல் சுகமானது..

சின்ன பூவொன்று பாறையை தாங்குமா..
உன்னை சேராமல் என் உயிர் தூங்குமா..
தனிமை உயிரை வதைக்கின்றது..
கண்ணில் தீவைத்து போனது நியாயமா ..
என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா..
கொலுசும் உன் பெயர் சபிக்கின்றது..
தூண்டிலனை தேடும் ஒரு மீன்போல ஆனேன்..
துயரங்கள் கூட அட சுவையாகுது..
இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ..
ரொம்ப ருசிக்கின்றது..!
காதல் சுகமானது..!

சொல்லத்தான் நினைக்கிறேன் ,
சொல்லாமல் தவிக்கிறேன்... காதல் சுகமானது..

ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா..
நீயும் ஆனந்த பைரவி ராகமா..
இதயம் அலை மேல் சருகானதே..
ஒரு சந்தன பௌர்னமி ஓரத்தில்..
வந்து மோதிய இரும்பு மேகமே..
தேகம் தேயும் நிலவானதே..
காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட
கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது..
சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய்..
ஏன் குடை சாய்ந்தது..
காதல் சுகமானது..!

சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்..
காதல் சுகமானது..
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..
தேடல் சுகமானது..
அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல..
வெக்கங்கள் வர வைக்குறாய்..
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்..
தனியே அழ வைக்குறாய்..
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..
காதல் சுகமானது..!



Kadhal Sugamanathu - Sollathaan Ninaikkiren

Followers