Pages

Search This Blog

Showing posts with label Endrendrum Punnagai. Show all posts
Showing posts with label Endrendrum Punnagai. Show all posts

Thursday, December 26, 2013

என்றென்றும் புன்னகை - ஒத்தையில உலகம்

ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

ஒத்தையிலே ...

அரட்டைகள் அடித்தோமே குறட்டையில் சிரித்தோமே
பரட்டையாய் திரிந்தோமே இப்போது பாதியில் பிரிந்தோமே
இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே
மழையினில் அழுதாலே கண்ணீரை யார் அதை அறிவாரோ?
அவன் தொலைவினில் தொடர்கதையோ ?
இவன் விழிகளில் விடுகதையோ ?
இனிமேல் நானே தனியாள் ஆனேன் நட்பு என்ன நடிப்போ ?

ஒத்தையிலே ...

நமக்கென இருந்தோமே தினசை பிரிந்தோமே
திசைகளை பிரிந்தோமே
கல்யாண காற்றினில் தொலைந்தோமே
பனித்துளி மலரோடு பழக்கங்கள் சிலரோடு
நட்புக்கு முடிவேது என்றே நீ சொன்னது மறக்காது
நானும் மறக்கிறேன் முடியலே
கண்ணீர் மறக்கிறேன் முடியலே
கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லையே
இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால்
நட்பு சேர்க்கும் ஒரு நாள்

Endrendrum Punnagai - Othaiyila ulagam

என்றென்றும் புன்னகை - என்னை சாய்த்தாளே உயிர்

என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

இதழோரத்தில் நங்கை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தேன்
நடக்கிற வரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்

நேற்று போலே வானம் அட இன்று கூட நீலம்
என் நாட்கள் தான் நீழும்
தள்ளிப் போக எண்ணும் கால் பக்கம் வந்து பின்னும்
கேட்காதே யார் சொல்லும்
பறவை நான் சிறகு நீ
நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன்
பயணம் நான் வழிகள் நீ
நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன்

என்னைச் சாய்த்தாளே ....

மாலை வந்தால் போதும் ஒரு நூற்றில் பதில் தேகம்
செங்காந்தள் போல் காயும்
காற்று வந்து மோதும் உன் கைகள் என்றே தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்
தவிப்பதை மறைக்கிறேன்
என் பொய்யைப் பூட்டு வைத்துக் கொண்டேன்
கனவிலே விழிக்கிறேன்
என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன்

என்னைச் சாய்த்தாளே ....

Endrendrum Punnagai - Ennai Saaithaalae

என்றென்றும் புன்னகை - வான் எங்கும் நீ மின்ன

வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்
கை அள்ளியே வெண் விண்ணிலே
ஏன் வண்ணம் மாற்றினாய்

வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்
அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்க பார்க்கிறாய்

ஓ ஓ ப்ரியா ப்ரியா
இதயத்தில் அதிர்வு நீயா
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா

பூக்கள் இல்லா உலகினிலே
வாழ்ந்தேனே உன்னைக் காணும் வரை
நான் இன்றோ பூவுக்குள்ளே சிறை
பெண் வாசம் என் வாழ்வில் இல்லை என்றேனே
உன் வாசம் நுரை ஈரல் நான் தீண்டக் கண்டேனே
மூச்சும் முட்ட தான் உன் மேல் காதல் கொண்டேனே

வான் எங்கும் நீ மின்ன ....

பாலை ஒன்றை வரைந்திருந்தேன்
நீ காதல் நதியென வந்தாய்
நீ வாழ்வில் பசுமைகள் தந்தை
என் நெஞ்சம் நீர் என்றால் நீந்தும் மீனா நீ
என் காதல் காடென்றால் மேயும் மானா நீ
எந்த வெட்க தீயில் குளிர் காயும் ஆணா நீ

வானெங்கும் நீ மின்ன ....

ஓ ஓ ப்ரியா ப்ரியா ....

Endrendrum Punnagai - Vaan Engum Nee Minna

என்றென்றும் புன்னகை - கடல் நான் தான்

கடல் நான் தான்
அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான்
தலை சாய்வதே இல்லை
ஓர் துணை இல்லாதது
பெண்மை துயில் கொள்ளாதது
உண்மை தூக்கம் கெட்டுத் தான்
கண்ணும் தேடும் உன்னை (2)

வா எந்தன்
இதழாலே காதல் கவிதை தான்
நான் உன் மேல்
எழுதாயோ காலை வரையில் தான்
உன் அங்கம்
முழுதும் உன் பாடல் வரிகள் தான்

உன்னை பார்த்த முதல் தடவை
என் உள்ளக் கதவை நான் திறந்துவிட்டேன்
உடலாவி உனக்கெனவே ஓர் உயில் எழுதி
நான் இறந்துவிட்டேன்
என் தோழா உன் இதழை என் இதழ் மேல்
வைத்தால் நான் உயிர்ப்பேன்
என்னன்பே நான் தழுவ நீ நழுவ விட்டால்
நான் மறுபடி மறித்திடுவேன்

தலைவா உன் தலைக்கினி மேல் ஓர்
தலையணையாய் என் தொடை இருக்கும்
மெதுவாய் உன் விழி துயில
என் வளை குலுங்கி மெல் இசைப் படிக்கும்
அங்கங்கே பெண் பறவை தன் சிறகை
உன் மீது விரிக்கும்
அம்மாடி உன் குளிரும் என் குளிரும்
நில்லாமல் நொடியினில் விலகிடுமே

கடல் நான் தான் ....

Endrendrum Punnagai - Kadal Naan Thaan

என்றென்றும் புன்னகை - என்னத்த சொல்ல

ரொம்ப நேரம் இதே போயிட்டு இருக்குடா
மச்சான் எடுத்துவிடு

என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்லை
நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்லை
பொண்ணு லைப் லாங்க் தொல்லை

ஐயோ பழைய கதைடா

என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்லை
நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்லை
பொண்ணு லைப் லாங்க் தொல்லை

மயில் போல வருவா
புது போத தருவா
நீ பொண்ணோட சேர்ந்தாலே
மண்ணாவ மாமா
அம்மி மிதிக்க வச்ச காரணம் என்ன
கொஞ்சம் எண்ணிபாருடா மாமா
அவ உன்னை மிதிக்க
செய்யும் ஒத்திகை தானே
நல்ல புரிஞ்சுக்க ஆமா
ஏலே பெண்டு நிமித்தி
உன்னை கண்டபடிதான்
அவ ஆட்டிபடப்பா மாமா
அவ கழுத்துல தான்
மஞ்ச கயிற கட்டி
நாமே மாட்டிக் கொள்றோம் ஆமா

என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்ல
நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்ல
பொண்ணு லைப் லாங்க் தொல்ல

ஹேப்பி மேனா பார்த்த
ஆறுமுகம் இப்போ
பி.பி வந்து படுத்துபிட்டான்
காபி டீயை கூட
கையால் தொடா நண்பன்
குவாட்டரல குளிசிடுறான்
ஹே.. பொண்ணும் போலி
அவ லவ்வும் போலி
ஒரு நூலு தாலி
அதில் நீயும் காலி
டார்ச்சருடா ஏலே டார்ச்சருடா
எந்த மேரேஜ்ஜுமே இருட்டு
பேச்சுலரா நீயும் கூத்தடிச்சா
நீ சொல்வதெல்லாம் ரைட்டு

என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்ல
நிம்மதி இல்ல
இனி நிம்மதி இல்ல
பொண்ணு லைப் லாங்க் தொல்ல

யப்பா நாக்கு தள்ளுதுடா

ஒத்த தலைகாணி
போதுமடா சாமி
கட்டிக்கிட்டே தூங்கிக்கொள்ளலாம்
வாய்க்கு ருசியாக
வக்கனையாக திண்ண
குக் ஒன்னு வச்சுக்கொள்ளலாம்
சின்ன தாகம் தீர
பெரும் சோகம் வேணா
ஒரு ரோட்டை தாண்ட
ஏரேபிளேனு வேணா
மூச்சு முட்ட நீயும் குடிச்சுபிட்டு
போய் மூலையில தூங்கு
பேச்சு துணை வேணுமுனா
நல்ல ரேடியாவ வாங்கு
கு… கு…

என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்லை
நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்லை
பொண்ணு லைப் லாங்க் தொல்லை

மயில் போல வருவா
புது போதை தருவா
நீ பொண்ணோட சேர்ந்தாலே
மண்ணாவ மாமா
அம்மி மிதிக்க வச்ச காரணம் என்ன
கொஞ்சம் எண்ணிபாருடா மாமா
அவ உன்னை மிதிக்க
செய்யும் ஒத்திகை தானே
நல்ல புரிஞ்சுக்க ஆமா.
ஏலே பெண்டு நிமித்தி
உன்னை கண்டபடிதான்
அவ ஆட்டிபடப்பா மாமா
அவ கழுத்துல தான்
மஞ்ச கயிற கட்டி
நாமே மாட்டிக் கொள்றோம் ஆமா

Endrendrum Punnagai - Ennatha Solla

Followers