Pages

Search This Blog

Thursday, December 26, 2013

என்றென்றும் புன்னகை - கடல் நான் தான்

கடல் நான் தான்
அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான்
தலை சாய்வதே இல்லை
ஓர் துணை இல்லாதது
பெண்மை துயில் கொள்ளாதது
உண்மை தூக்கம் கெட்டுத் தான்
கண்ணும் தேடும் உன்னை (2)

வா எந்தன்
இதழாலே காதல் கவிதை தான்
நான் உன் மேல்
எழுதாயோ காலை வரையில் தான்
உன் அங்கம்
முழுதும் உன் பாடல் வரிகள் தான்

உன்னை பார்த்த முதல் தடவை
என் உள்ளக் கதவை நான் திறந்துவிட்டேன்
உடலாவி உனக்கெனவே ஓர் உயில் எழுதி
நான் இறந்துவிட்டேன்
என் தோழா உன் இதழை என் இதழ் மேல்
வைத்தால் நான் உயிர்ப்பேன்
என்னன்பே நான் தழுவ நீ நழுவ விட்டால்
நான் மறுபடி மறித்திடுவேன்

தலைவா உன் தலைக்கினி மேல் ஓர்
தலையணையாய் என் தொடை இருக்கும்
மெதுவாய் உன் விழி துயில
என் வளை குலுங்கி மெல் இசைப் படிக்கும்
அங்கங்கே பெண் பறவை தன் சிறகை
உன் மீது விரிக்கும்
அம்மாடி உன் குளிரும் என் குளிரும்
நில்லாமல் நொடியினில் விலகிடுமே

கடல் நான் தான் ....

Endrendrum Punnagai - Kadal Naan Thaan

Followers