Pages

Search This Blog

Showing posts with label Pachaikili Muthucharam. Show all posts
Showing posts with label Pachaikili Muthucharam. Show all posts

Wednesday, October 16, 2013

பச்சைக்கிளி முத்துச்சரம் - காதல் கொஞ்சம்

காதல் கொஞ்சம் காற்றுக் கொஞ்சம்
சேர்த்துக்கொண்டு செல்லும் நேரம்
தூரம் எல்லாம் தூரம் இல்லை
தூவானமாய் தூவும் மழை

அலுங்காமல் உனை அள்ளி
தொடுவானம்வரை செல்வேன்
விடிந்தாலும் விடியாத பொன்காலையைக்
காணக் காத்திருப்பேன்
(காதல் கொஞ்சம்)

எதிர்காலம் வந்து என்னை முட்டுமோ
தன் கையை நீட்டி நீட்டி என்னை கட்டிக்கொள்ளுமோ
கொஞ்சம் மிச்சமுள்ள அச்சம் தள்ளுமோ
என் துணிச்சலின் விரல்தொட இனி கிள்ளுமோ
அறியாத புதுவாசம் அகமெங்கும் இனி வீசும்
அதில்தானே கரைந்தோடும் நம் வாழ்வின் வனவாசம்
(காதல் கொஞ்சம்)

கையில் வந்த முத்துச்சரம் சிந்தாமல்
என் உள்ளங்கையின் வெப்பத்திலே ஒட்டிக்கொள்ளுமே
எழில்கொஞ்சும் பச்சைக்கிளி வந்தாலும்
என் வேடந்தாங்கல் வேண்டாம் வேண்டாம் என்று தள்ளுமே
தேய்கின்ற நிலவோடு தேயாத கனவோடு
தோள் சேர்த்து நடப்பேனே என் தூரம் கடப்பேனே
(காதல் கொஞ்சம்)

Pachaikili Muthucharam - Kaadhal Konjam

பச்சைக்கிளி முத்துச்சரம் - கருகரு விழிகளால்

கருகரு விழிகளால்
ஒரு கண்மை என்னைக் கடத்துதே
ததும்பிடத் ததும்பிட
சிறு அமுதம் என்னைக் குடிக்குதே
இரவினில் உறங்கையில்
என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில்
ஒரு மின்னல் வந்து சாய்க்க

நீ ஒரு மல்லிச்சரமே
நீ இலைசிந்தும் மரமே
என் புது வெள்ளிக்குடமே
உன்னைத்தேடும் கண்கள்
ஏன் நீ தங்கச்சிலையா
வெண் நுரை பொங்கும் மலையா
மன் மதன் பின்னும் வலையா
உன்னைத்தேடும் கண்கள்

புதுப்புது வரிகளால் என் கவிதைத்தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
தாமரையிலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல்தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா
(நீ ஒரு மல்லிச்சரமே)

ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
மறுநாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும்போதே இன்னும் ஏதோ தேடும்
கையின் ரேகைபோலே கள்ளத்தனம் ஓடும்
நீரே இல்லா பாலையிலே
நின்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே உச்சுக்கொட்டி
தொடர்ந்திடும் பிழை பிழை
(கருகரு விழிகளால்)

தாமரையிலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல்தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா

தாமரையிலை நீர் நீதானா ஒரு மல்லிச்சரமே
தனியொரு அன்றில் நீதானா இலைசிந்தும் மரமே
புயல்தரும் தென்றல் நீதானா புது வெள்ளிக்குடமே
புதையல் நீதானா (மதன் பின்னும் வலையா
ஒரு மல்லிச்சரமே

Pachaikili Muthucharam - Karu Karu vizhikalal

பச்சைக்கிளி முத்துச்சரம் - உனக்குள் நானே

மின்னும் பனிச் சாறு உள் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்துக் கொண்டாளே
வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே

பொன் மான் இவளா...
உன் வானவில்லா...
பொன் மான் இவளா...
உன் வானவில்லா...

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா

சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா
சொல்லா சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேனல்லவா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா

ஏனோ நம் பொய் வார்த்தைதான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பைத் தந்தாய்
மனதில் கனத்தைத் தந்தாய்
ஒரு முறை உன்னை எனக்கென்று சுவாசிக்கவா
மறுமுறை உன்னை புதிதாக சாசிக்கவா
(உனக்குள் நானே)


தீப்போல் தேன்போல் சலனமேதான்
மதி என் நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டுச்சென்றாயே
நினைவை வெட்டிச்சென்றாயே
இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா
அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா
(உனக்குள் நானே)

Pachaikili Muthucharam - Unakkul Naane

Followers