Pages

Search This Blog

Showing posts with label Priyamudan. Show all posts
Showing posts with label Priyamudan. Show all posts

Monday, January 2, 2017

பிரியமுடன் - பூஜா வா பூஜா வா

பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
இந்திர மண்டலம் தேடும் அழகே வா
ரோஜா வா ரோஜா வா
ஏதேன் தோட்டத்தின் ரோஜா வா
உறங்கும் போதும் வாழும் நினைவே வா
தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன்
உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன்
உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே

சரணம் -1

பூவைப் பறிக்கும் போது அதில் ஈரம் உன் காதல்
வாளை எடுக்கும் போது அதில் வீரம் உன் காதல்
ஜன்னல் திறக்கும் போது வரும் காற்றில் உன் காதல்
கண்கள் உறங்கும் போது வரும் கனவில் உன் காதல்
உன் பேரைச் சொன்னாலே முத்தத்தின் சத்தங்கள்
நீ என்னைக் கண்டாலே தித்திக்கும் ரத்தங்கள் 
நீ போடும் ஒரு கோலத்திலே 
புள்ளியைப் போல் நான் இருந்தேனே
நீ தீண்டும் அந்த நேரத்திலே 
பறவையைப் போல் நான் பறந்தேனே
நீ போகும் வழியெங்கும் நான்தானே ஆகாயமே

பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா

சரணம் -2

விளக்கை மூடும் சிமிழாய் நான் உன்னை மூடுகிறேன்
உன் மேல் விழுந்த வெயிலால் 
நான் சருகாய் மாறுகிறேன்
உந்தன் நினைப்பில் தானே நான் இன்னும் வாழுகிறேன்
உந்தன் சிரிப்பில் தானே என் உதயம் காணுகிறேன்
மீன் உன்னைக் கடித்தாலே ஆற்றுக்குத் தீ வைப்பேன்
மோகத்தீ மூட்டாதே ஆற்றுக்குள் நான் நிற்பேன்
உன் மனதில் என்னை நிரப்பிவிடு 
உன் உலகில் என்னை பரப்பிவிடு
கடமைகளை நீ மறந்துவிடு
கண்களிலே நீ இருந்துவிடு
அன்பே உன் நிழல் கூட என் மீது விழ வேண்டுமே

பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
ரோஜா வா ரோஜா வா
ஏதேன் தோட்டத்தின் ரோஜா வா
உறங்கும் போதும் வாழும் நினைவே வா
தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன்
உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன்
உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே

Priyamudan - Pooja Vaa

பிரியமுடன் - ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா

ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா 
தாய் போல நானே தாலாட்டுவேனே சோஜா சோஜா சோஜா 
ஓ ப்ரியா உயிருக்கு அருகினில் இருப்பவன் நான் தானே
ஓ பிரியா இதயத்தின் சிகரத்தில் இருப்பவள் நீ தானே
கண்ணீர் ஏன் ஏன் என் உயிரே

ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா 

அதோ அதோ ஓர் பூங்குயில்
இதோ இதோ உன் வார்த்தையில்
அதோ அதோ ஓர் பொன்மயில்
இதோ இதோ உன் ஜாடையில்
யார் இந்த குயிலை அழ வைத்தது
மலர்மீது தான சுமை வைப்பது
பூக்கள் கூடி போட்டதிங்கு தீர்மானமே
உந்தன் சிரிப்பை கேட்ட பின்பு அவை பூக்குமே

ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா 

நிலா நிலா என் கூடவா
ஸலாம் ஸலாம் நான் போடவா
சதா சதா உன் ஞாபகம்
சுகம் சுகம் என் நெஞ்சிலே
நிலவே நிலவே வெயில் கொண்டுவா
மழையே மழையே குடை கொண்டுவா
அன்னை தந்தையாக உன்னைக் காப்பேனம்மா
அன்பு தந்து உன்னில் என்னைப் பார்ப்பேனம்மா

ஆகாச வாணி ....

Priyamudan - Aakasavani

பிரியமுடன் - பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா

பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா

பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே
ஒருநாள் விழிகள் பார்த்தது என் வாழ்நாள் வசந்தம் ஆனது
என் இலையுதிர்காலம் போனபோது உன் நிழலும் இங்கே பூக்குது

பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா

ஐய்யயோ தீயை எந்தன் நெஞ்சில் வைத்தாளே
அம்மம்மா சொர்க்கம் ஒன்றை வாங்கி தந்தாளே
கல்லைத்தான் தட்ட தட்ட சிற்பம் ஒன்று பிறக்கும்
கண்கள்தான் தட்ட தட்ட உள்ளம் திறக்கும்

அவள் பேரைக்கேட்டு வந்தால் என் உயிரில் பாதி தருவேன்
அவள் உயிரைக்கேட்டு வந்தால் என் உயிரின் மீதி தருவேன்
வீசுகின்ற காற்றே நில்லு வெண்ணிலாவின் காதில் போய்ச் சொல்லு

பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா

பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா

பூட்டுக்கும் பூட்டைப் போட்டு மனதை வைத்தேனே
காற்றுக்குள் பாதை போடும் காற்றாய் வந்தாயே
உன்னோடு உலகம் சுற்றக் கப்பல் வாங்கட்டுமா
உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா
நான் பறவையாகும்போது உன் விழிகள் அங்கு சிறகு
நான் மீன்களாகும்போது உன் விழிகள் கங்கையாரு
பூக்களுக்கு நீயே வாசமடி…
புன்னகைக்கு நீயே தேசமடி

பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே
ஒருநாள் விழிகள் பார்த்தது என் வாழ்நாள் வசந்தம் ஆனது
என் இலையுதிர்காலம் போனபோது உன் நிழலும் இங்கே பூக்குது

பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா

Priyamudan - Bharathikku Kannamma

Followers