Pages

Search This Blog

Showing posts with label Varusham 16. Show all posts
Showing posts with label Varusham 16. Show all posts

Friday, December 30, 2016

வருஷம் 16 - பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்

நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்

கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
பந்தங்கள் யாவும் தொடர்கதைபோல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நெய்கின்ற இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விலங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திலைத்திட
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்

நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்

கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்

Varusham 16 - Pazhamuthir Cholai

Thursday, October 17, 2013

வருஷம் 16 - பூப்பூக்கும் மாசம்

பொங்கலு பொங்கலு வெக்க மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி

பூப்பூக்கும் மாசம் தாய் மாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்
சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
ஒரு ராகம் ஒரு தாளம்
வந்து சேரும் நேரம் இந்நேரம்

(பூப்பூக்கும் மாசம் )

வாய்க்காலையும் வயற்காட்டையும்
படைத்தாள் எனக்கென காதல் தேவதை
தெம்மாங்கையும் தெருக்கூத்தையும்
நினைத்தால் இனித்திடும் வாழ்வு நாள் வரை
குழந்தைகள் கூட குமரியும் ஆட
மந்த மாருதம் வீசுது மலையமாருதம் பாடுது
ஓ ஓ ஓ ...

(பூப்பூக்கும் மாசம் )

நான் தூங்கியே நாளானது
அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதற்கொரு தாகம் வந்தது
மனதினில் கோடி நினைவுகள் ஓடி
மன்னன் யாரெனத் தேடுதோ உன்னைப் பார்த்ததும் கூடுதோ
ஓ ஓ ஓ ...

(பூப்பூக்கும் மாசம் )

varusham 16 - pooppookkum maasam

Followers