Pages

Search This Blog

Showing posts with label Idhayathai Thirudathe. Show all posts
Showing posts with label Idhayathai Thirudathe. Show all posts

Thursday, December 29, 2016

இதயத்தை திருடாதே - விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில்

விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம் நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்

விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம் நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்

காலங்கள் உதயமாகட்டும் கவலைகள் விலகி ஒடட்டும் காட்டாறு நாமல்லவோ
வா மனிதா உலகை ஆளலாம் வாழ்க்கை என்ன வாழ்ந்து காட்டலாம் ராஜாதி ராஜாக்கள் போல்
ஏனென்று கேள்வி கேட்கவும் யாரும் இல்லை எங்கேயும் கால்கள் போகலாம் ஏது எல்லை
கொண்டாட்டம் கும்மாளம் தானே தப்பாத தாளங்கள் நாம் போட…
தக தக திமி தக தக

விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம் நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்

பாடுங்கள் புதிய கீர்த்தனம் எழுதுங்கள் புதிய சாசனம் வாழட்டும் சமுதாயமே
ஆடுங்கள் புதிய தாண்டவம் அழியட்டும் பழைய தத்துவம் அச்சங்கள் நமக்கில்லையே
ஓர் நாளும் ஓய்வதில்லையே நம் போராட்டம் ஓர் நாளும் சாய்வதில்லையே நம் தேரோட்டம்
ஆரம்பம் ஆனந்த கீதம் தப்பாத தாளங்கள் நாம் போட….
தக தக திமி தக தக

விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம் நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்

Idhayathai Thirudathe - Vidiya Vidiya Nadanam

இதயத்தை திருடாதே - ஓம் நமஹ உருகும் உயிருக்கு

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

வான் வழங்கும் அமுத கலசம் வாய் வழியே ததும்பி ததும்பி வழியிதோ ஓ
தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள் தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ

மூங்கிலில் காற்று நுழைந்து மோகனம் பாடுதா
நால்வகை நாணம் மறந்து நாடகம் ஆடுதா
ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா
ஆதியும் அந்தமும் வேர்வைகள் ஊறுதா
நூலாடை விலகி விலகி நீரோடை பெருகி வழியும் வேளை
முத்தங்கள் வைத்ததும் மூன்று உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம்

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

செவ்விதழ் சேரும்போது ஜீவன்கள் சிலிர்த்தது
ஒவ்வொரு ஆசையாக உள்ளத்தில் துளிர்த்தது
மெல்லிய மேனியும் சில்லென ஆனது
வெட்கமும் சீக்கிரம் விடை பெற்றுப் போனது
ஏடென்று இதயம் இருக்க நூலொன்று இதயம் எழுதாதோ
இளமையின் இலக்கணம் எடுத்து சொல்லிய இளைய கன்னிக்கு ஓம்

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

Idhayathai Thirudathe - Om Namaha

இதயத்தை திருடாதே - காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்

காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும் 
கன்னிப் பூவும் நான்தானோ
கிட்ட வந்து கொஞ்ச சொல்லும் 
சின்னப் பொண்ணு நான்தானோ
நிழலாய் தான் ஓட நானோ உன் கூட

என் ஊர் என்ன

என்ன

என் பேர் என்ன

என்ன

நான் தான் யாரு

யாரு

என் வழி யாரு

கேகேகேகே

ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ


எந்நாளும் ஆசைகள் என்னை விடுமோ
நீ தழுவ நான் வரவோ
இந்நாளில் சூடாகும் என் மனமும் 
கண் விழிமேல் நீ இல்லையோ
மோகினி பிசாசு என் இனம்தான் 
சாத்தானின் பேய் கூட என் நிழல்தான்
மோகினி பிசாசு என் இனம்தான் 
சாத்தானின் பேய் கூட என் நிழல்தான்

ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ} (ஓவர்லப்)

பருவத் துணை மயக்கி உன்னை 
பாய் போட நீ வாடா

காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும் 
கன்னிப் பூவும் நான்தானோ

ஆண்:பூத பிரேத பிசாசு வேதாள 
பேயின் ஜம்பம் ஜடம்பாம்பாம்

காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும் 
கன்னிப் பூவும் நீதானோ
கிட்டவந்து கொஞ்ச சொல்லும் 
சின்னப் பொண்ணு நீதானோ
நிழலாய்த் தான் ஓட 
நானோ உன் கூட
ஏன் சபலம் வருதா 
நீயும் காட்டுக்கு புதிதா
நீ மயங்கும் பொழுதா 
நானும் புடிச்சுக்க தோதா
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா 
ஓ ஓ ஓஹோ ஹோஹோ

ஹஹ்ஹா

ஹ்ரர்ர்ர்ரர்ர்ர்ர்

ஹஹ்ஹா

ஹ்ரர்ர்ர்ரர்ர்ர்ர்


வாவ் வாவ் வவ்வாவாவ் வாவ் வவ்வா
வாவ் வாவ் வவ்வாவாவ் வாவ் வவ்வா
ஹூவ்வா ஹூவ்வாஹூவ்வா 

ஆண்:ராத்திரி நேர பூஜைகள் எல்லாம் இப்போ இனிமேல்தான்
அருகினில் வருவேண்டி ஆசையில் தொடுவேண்டி
குண்டலி ஏற சொக்குற பூஜை இப்போ இனிமேல்தான்
சட்டுன்னு போடத்தான் சுள்ளுன்னு ஏறாதா

ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ} (ஓவர்லப்)

ஆண் :நில்லடி மானே போக்கிரிப் பெண்ணே 
பெண் பேய் உன்னைப் பார்த்தா
நாளொரு மோகம் ஏறிடும் கண்ணே 
அதுதான் அடங்காதா
நில்லடி மானே போக்கிரிப் பெண்ணே 
பெண் பேய் உன்னைப் பார்த்தா
நாளொரு மோகம் ஏறிடும் கண்ணே 
அதுதான் அடங்காதா
அடி ஆத்தி பட் பட் பட் பட்
விலகாதே ஜட் ஜட் ஜட் பட்
போப் பெண்ணே மயக்கங்கள் எதுக்கு நான் கூட

காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும் 
கன்னிப் பூவும் நீதானோ ஓ ஹஹா
கிட்ட வந்து கொஞ்ச சொல்லும்
சின்னப் பொண்ணு நீதானோ 
நிழலாய்த்தான் ஓட டொய்ங் டொய்ங்
நானோ உன் கூட
ஏன் சபலம் வருதா 
நீயும் காட்டுக்கு புதிதா
நீ மயங்கும் பொழுதா 
நானும் புடிச்சுக்க தோதா
ஆஹ ஆஹ ஆஹ ஆஹ ஆஹ ஆஹ ஆஹ ஆஹ

காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும் 
கன்னிப் பூவும் நீதானோ
கிட்டவந்து கொஞ்ச சொல்லும் 
சின்னப் பொண்ணு நீதானோ..ஒ..ஒ..

Idhayathai Thirudathe - Kattukulle Paatu Sollum

இதயத்தை திருடாதே - ஓ பாப்பா லாலி

ஓ பாப்பா லாலி 
கண்மணி லாலி 
பொன்மணி லாலி
பாடினேன் கேளடி

நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
செவ்விழி கலந்தது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
தலை சாய்த்திட மடிபாய் மேல்
திருமேனிக்கு சுகமோ
எந்த நாளிலும் வாடாத
இளந்தாமரை முகமோ
இதைக் காப்பது என்றும் பார்ப்பது
இந்த தாய் மனமே

(ஓ பாப்பா லாலி)

மேகமே ஓரமாய் நீ ஒதுங்கிடு
இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ
குயிலியே பாடிவா என் பாடலை
நல்லிசை இதயத்தின் நாதமோ
எழும் சந்தமும் இனிதாக
அதன் ஓசைகள் சுகமோ
இந்த நாளொரு அலைபாய
வரும் ஆசைகள் கனவோ
எந்த ஆசையும் நிறைவேறிட
நல்ல நாள் வருமே

(ஓ பாப்பா லாலி)

Idhayathai Thirudathe - Oh Paapaa Laali

இதயத்தை திருடாதே - காவியம் பாடவா தென்றலே

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில்
மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே
காவியம் பாடவா தென்றலே

விளைந்ததோர் வசந்தமே
புதுப்புனல் பொழிந்திட
மனத்திலோர் நிராசையே
இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாட்களே
சோகங்கள் எனபதை
கண்ணீரில் தீட்டினேன்
கேளுங்கள் என்கதை
கலைந்து போகும் கானல் நீரிது

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ

புலர்ந்ததோ பொழுதிதுவோ
புள்ளினத்தின் மகோத்ஸவம்
இவை மொழி இசைத்ததும்
சுரங்களின் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே
மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்கம்தான்
முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி இல்லையே

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
காவியம் பாடவா தென்றலே

Idhayathai Thirudathe - Kaviyam Padava

இதயத்தை திருடாதே - ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்

ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
உருகுதோ... மருகுதோ...
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையோ
கொடியிலே... அரும்புதான்...
குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே ஹே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே

வானமும்... வையமும்...
கரங்களை இணைப்பதே மழையில்தான்
செடிகளும்... மலர்களும்...
ஈரமாய் இருப்பதே அழகுதான்
மழையின் சாரலும் கிள்ளாமல் கிள்ளவும்
அழகும் ஆசையும் ஆடாமல் ஆடவும்
துள்ளுகின்ற உள்ளமென்ன
தத்தளிக்கும் மேனியென்ன
வஞ்சி எந்தன் கண்கள் கண்ட
தேவலோகம் பூமிதான்

ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
உருகுதோ... மருகுதோ...
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையோ
கொடியிலே... அரும்புதான்...
குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே

என்னவோ... எண்ணியே...
இளையவள் இதயமே ததும்புதா
சிறுசிறு... மழைத்துளி...
சிதறிட சபலம்தான் அரும்புதா
வானதேவனே சல்லாபம் செய்திட
வாயுதேவனே முத்தாட வந்திட
நீறு பூத்த கூந்தலோடு ஊதக்காற்று தழுவும்போது
துள்ளும் பெண்ணின் உள்ளம் நூறு
கவிதை சொல்லும் ஓஹொஹோ

ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
உருகுதோ... மருகுதோ...
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையோ
கொடியிலே... அரும்புதான்...
குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே ஹே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே

Idhayathai Thirudathe - Aathaadi Ammaadi

இதயத்தை திருடாதே - ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் வாழுமோ
இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்
கானல் நீரால் தாகம் தீராது


ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ
வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் மனது
தேவன் நீதான் போனால் விடாது


தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி


அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணையிட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ
எதனாலும் ஒரு நாளும் மறையாது பிரேமையும்
எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ நீ வா வா


ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா


காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராசலீலைகள்
பருவமோகம் தந்தது பாவம் அல்லவே
ஷாஜகானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது
இறந்தாலே இறவாது விளைகின்ற பிரேமையே
அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளங்கன்னி உன்னுடன் கூட வா வா


ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

ஏக்கம் என்ன பைங்கிளி 
என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட 
காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்களம்
பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும்

Idhayathai Thirudathe - Oh Priyaa Priyaa

Followers