Pages

Search This Blog

Saturday, December 31, 2016

செந்தமிழ் பாட்டு - சின்னச் சின்ன தூறல் என்ன

சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன

சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன ..

***

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா

பெண் : ஹஹா..அது தீண்டும் மேகமில்ல
தேகம் சிலிர்க்குதம்மா..

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா
நனைந்த பொழுதிலும் குளிர்ந்த மனதினில்
ஏதோ ஆசை துடிக்குதம்மா
மனித ஜாதியின் பசியும் தாகமும்
உன்னால் என்றும் தீருமம்மா
வாரித் தந்த வள்ளல் என்று
பாரில் உன்னைச் சொல்வதுண்டு
இனமும் குலமும் இருக்கும் உலகில்
அனைவரும் இங்கு சரிசமம் என
உணர்த்திடும் மழையே..

சின்னச் சின்ன
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன தூறல் என்ன

***

பிழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை

பெண் : படிச்சவன் பாட்டை கெடுத்த கதையால்ல இருக்கு
பிழைக்கும்ன்னு எழுதலையே
மழைக்குன்னுதானே எழுதியிருக்கேன்

ஓஹோ..மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
வெடித்த பூமியும் மானம் பார்க்கையில்
நீயோ கண்ணில் தெரிவதில்லை
உனது சேதியை பொழியும் தேதியை
முன்னால் இங்கே யாரறிவார்
நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும்
நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்
உனது பெருமை உலகம் அறியும் இடியென்னும்
இசை முழங்கிட வரும் மழையெனும் மகளே

சின்னச் சின்ன
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன

சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன

Senthamil Pattu - Chinna Chinna

செந்தமிழ் பாட்டு - காலையில் கேட்டது கோயில் மணி

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

***

ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ (இசை)

ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ

பெண் : தேவனின் கைவிரல் பாவை மேல் பட்டது

ஆண் : தேவியின் கண்விழி பானம் தான் விட்டது

பெண் : புதுவித அனுபவம்

ஆண் : ஆ..ஆஹ ஹா

பெண் : முதல் முதல் அறிமுகம்

ஆண் : ஓ..ஓஹொ ஹோ..

பெண் : புது வித அனுபவம் முதல் முதல் அறிமுகம்
தேனும் பாலும் தொட தொட ஊறுது

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண்குழு : ம்..ம்..ம்...ம்...ம்...ம்...
ம்..ம்..ம்...ம்...ம்...ம்...

***

பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி (இசை)

பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி

ஆண் : ஏக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி

பெண் : காதலா என் மனம் சேர்ந்ததே உன் வழி

ஆண் : ரகசியம் புரிந்தது

பெண் : ஆ..ஆஹ ஹா

ஆண் : அதிசயம் தெரிந்தது

பெண் : ஓ..ஓஹொ ஹோ..

ஆண் : ரகசியம் புரிந்தது அதிசயம் தெரிந்தது
காற்றும் பூவும் கலந்துறவாடுது
காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

Senthamil Pattu - Kalaiyil Kettathu

செந்தமிழ் பாட்டு - சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த

ஆண் : ஓ....ஓ.. ஓ..ஓ..
சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த
பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணை இட இங்கு
வந்தது செந்தமிழ் பாட்டு

சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த
பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணை இட இங்கு
வந்தது செந்தமிழ் பாட்டு

நான் வணங்கும் தெய்வத்தின் விழியில்
நிழல் போல் சோகம் ஆடும்
நடந்த சேதி நான் ஒன்றும் அறியேன்
எதைத்தான் இதயம் பாடும்

சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த
பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணை இட இங்கு
வந்தது செந்தமிழ் பாட்டு

***

ஆண் : அம்மா உன் வார்த்தை வேதம் என்றெண்ணும்
மகனும் நான் தானம்மா
உலவும் என் கோயில் பேசும் என் தெய்வம்
உலகில் நீ தானம்மா
தாயே உன் கண்ணில் துளி நீர் கண்டாலும்
இதயம் தாங்காதம்மா
ஏதோ உன் நெஞ்சில் துயரம் என்றாலும்
விழிகள் தூங்காதம்மா
வண்ண முகம் வாடி நிற்க
பார்த்ததில்லை நானும் எந்நாளும்
வாடை கொஞ்சும் கூந்தலை
ஆடைகொண்டு மூடிட
வருத்தமென்ன இந்நேரம் ம்..ம்..ம்..

சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த
பிள்ளையின் செந்தமிழ் பா..பா..பா..

***

பெண் : காதல் என்னென்று நீயும் காணாமல்
வளர்த்தேன் நான் தானடா
விதியும் கை நீட்ட காதல் தீ மூட்ட
விழுந்தாய் நீ தானடா
ஏழை உன் மோகம் கானல் என் ராகம்
முடிவை கண்டேனடா
மகனே உன் ஆசை முடிக்க நான் இன்று
முடியை தந்தேனடா
காதல் கொண்டு லாபம் என்ன
பார்த்ததுண்டு நானும் அந்நாளில்
அன்னை கண்ட நாடகம் அன்பு மகன் வாழ்விலும்
நடந்திடுமோ இந்நாளில் ல்..ல்..ல்

சொல்ல சொல்ல நீ அறிவாய் இந்த
அன்னையின் செந்தமிழ் பாட்டு (இசை)
பிள்ளைக்கென பாடுகிறாள் உன்னை
பெற்றவள் செந்தமிழ் பாட்டு (இசை)

நீ வணங்கும் தெய்வத்தின் விழியில்
நிழல் போல் சோகம் ஆடும்
நடந்த சேதி நான் இன்னும் சொன்னால்
மகனே மனம் தான் வாடும்

சொல்ல சொல்ல நீ அறிவாய் இந்த
அன்னையின் செந்தமிழ் பாட்டு
பிள்ளைக்கென பாடுகிறாள் உன்னை
பெற்றவள் செந்தமிழ் பாட்டு

Senthamil Pattu - Sholli Sholli

செந்தமிழ் பாட்டு - கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா

கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா
இணையா இருக்க இசைதான் படிக்க
கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா

***

சின்ன சின்ன பறவை கூட்டம்
என் பாட்டுக்கு தலையை ஆட்டும்
சின்ன சின்ன பறவை கூட்டம்
என் பாட்டுக்கு தலையை ஆட்டும்
கட்டுகளும் காவல்களும் ஆத்தாடி இங்கே இல்லை
கொத்து கொத்தா நோட்டு விழும்
ஆனந்தம் நெஞ்சுக்குள்ளே
கூண்டு கிளி போலிருந்தா
கொஞ்சும் கிளி வாடுமம்மா
கூண்டை விட்டு வாடி அம்மா

கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா

***

சங்கீதத்தை விலையை போட்டா
சந்தையிலே வாங்ககூடும்
சங்கீதத்தை விலையை போட்டா
சந்தையிலே வாங்ககூடும்
சாமி தந்த செல்வம் இது
வேறென்ன வேணும் சொல்லு
சிந்துகளை அள்ளிதர்றேன்
நாள் தோறும் வாங்கிசெல்லு
நான் அறிஞ்ச பாட்டு எல்லாம்
நீ அறிஞ்சு பாட வேணும்
பொங்கி பொங்கி ஓட வேணும்

கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா
இணையா இருக்க இசைதான் படிக்க
கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா

Senthamil Pattu - Koottooru Pattuirukku

செந்தமிழ் பாட்டு - வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு

வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு

வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசை தான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
கவலை மறக்கும் நாளும்

வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு

***

மொழிகள் வெவ்வேறு பாடல் கொண்டாலும்
இனிமை ஒன்றானது
தமிழர் பண்பாட்டைக் கூறும் பாட்டுக்கு
தமிழே கண் போன்றது

மொழிகள் வெவ்வேறு பாடல் கொண்டாலும்
இனிமை ஒன்றானது
தமிழர் பண்பாட்டைக் கூறும் பாட்டுக்கு
தமிழே கண் போன்றது
மூங்கிலிலை மோதி வரும்
காற்றும் இசை தான் தராதோ...
மூன்று தமிழ் வாசமும்
நாடுப் புறப் பாடலில்
புதுப் புனல் போலே வராதோ...

வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு

***

ஆ...ஆ...ஆ...ஆ...
பிள்ளை என்கின்ற இசையின் தாய் தந்தை
யாரோ யார் சொல்லுவார்
யாரால் எப்போது இசை தான் உண்டாச்சு
பதில் தான் யார் சொல்லுவார்

பிள்ளை என்கின்ற இசையின் தாய் தந்தை
யாரோ யார் சொல்லுவார்
யாரால் எப்போது இசை தான் உண்டாச்சு
பதில் தான் யார் சொல்லுவார்
பாயும் நதி மூலம் என்ன
பார்பதில்லை யாரும் என்னாளும்
நானும் இந்த பூமியில்
நீல நதி போலவே
நடந்திடுவேன் எங்கேயும்...ம்...ம்...ம்

வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசை தான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
கவலை மறக்கும் நாளும்

வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு

Senthamil Pattu - Vanna Vanna

பாண்டவர் பூமி - அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம்

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,

அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் உல்லா போகும்,
அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் உல்லா போகும்,
நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொற்காலம்,

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,

காற்றும் கூட எங்களுடன்,
இரவினில் தூங்க இடம் கேட்கும்,
மழை துளி கூட என் தாயின்,
மடியினில் தவழ தினம் ஏங்கும்,

நத்தை கூட்டின் நீர் போதும்,
எங்களின் தாகம் தீர்த்துகொள்வோம்,
கத்தும் கடலும் கை கட்ட,
கவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம்,

தாயின் மடியில் தினம் இருந்து,
காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்,
கனவினில் காலையில் ஒளி பெயர்த்து,
சொல்லி சொல்லி சுகமாய்,
தினம் சிரிப்போம்,

ஐந்தெழுத்து புது மொழியை,
அரிய வைத்தாள் என் அன்னை,
அண்ணன் தங்கை ஐவருமே,
நேசம் கொண்டு தமிழ் மண்ணை,
நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொற்காலம்,

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,

அன்னை ஊட்டிய பிடி சோற்றில்,
ஆயுள் முழுக்க பசி மறந்தோம்,
ஓற்றை கண்ணில் அடி பட்டால்,
பத்து கண்ணிலும் வலி கண்டோம்,

பள்ளிகூடம் தந்ததில்லை,
பாசம் என்னும் நூல் ஒன்றை,
வேதங்கள் நான்கும் சொன்னதில்லை,
எங்கள் கதை போலே வேரொன்றை,

கண்களும் நீர் துளி கண்டதில்லை,
அழுதிட அவைகளும் பழகவில்லை,
கருப்பா சிவப்பா தெரியவில்லை,
கவலைகள் இதுவரை முளைத்ததில்லை,

சேகரித்து வைப்பதற்கு,
தேவை என்று எதுவும் இல்லை,
இறைவனுக்கும் எங்களுக்கும்,
இடைவெளிகள் இருந்ததில்லை,
நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொற்காலம்,

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,

அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் உல்லா போகும்,
அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் உல்லா போகும்,
நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொற்காலம்,

Pandavar Bhoomi - Avaravar Vazhkaiyil

பாண்டவர் பூமி - அழகான தடுமாற்றம்

அழகான தடுமாற்றம்,
நிலைகின்றதா?
ஆசைகள் ஒரு மாற்றம்,
அடைகின்றதா?
என்னாச்சு நீ சொல்லடி,

அழகே, நீ அழகாக,
அழகாகிறாய்,
இதயத்தை இடம் மாற்ற,
நாள் பார்கிறாய்,
நீயாக நீ இல்லைடி…

Pandavar Bhoomi - Azhagana Thadu Maatram

பாண்டவர் பூமி - ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி

ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி
ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி
நாக்க நீட்டி மூக்க தொட்ட ராக்கு முத்து ராக்கு
வெள்ளி கொலுச மாட்ட நீ கெண்ட கால காட்டு
ஆத்து பூத்தி அசுக்கு நான் கால காட்ட மாட்டேன்
கெண்ட காலில் இருக்கும் முடிய கிண்டல் பண்ணி பாப்பே
ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி
சிலையே நான் வைகை ஆத்தில் மீனும் புடிக்க
வலையா நீ கட்டும் சேலை உருவி தாடி
அ ஆ… மீனு புடிக்கும் வலையா நான் கட்டும் சேலை தந்தா
புடிச்ச மீன போட நீ என் லவுக்க துணிய கேப்பே
ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி

கிழக்கால தோப்புக்குள்ள கிளிய புடிக்க
பழுத்தாடும் உன் உதட்ட நீயும் தாடி
சீ போ கிளிய புடிக்க நானும் என் உதட்ட குடுக்க மாட்டேன்
கிளியும் கெடைக்கலேனா உதட்ட கடிச்சு திருப்பி குடுப்பே
ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி
மலையூத்து தேன நானும் வாங்கி வந்தேன்
தேன் ஊத்த கன்னங்குழி தாடி புள்ள
கன்னக்குழியில் தேனும் ஊத்தி ரொம்பி வழிஞ்சு போனா
நெஞ்சுக்குழியத்தானே கேப்பே ஒன்னும் குடுக்க மாட்டேன்
ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி
ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி
குறும்பான பொண்ணுகிட்ட மனச கேளு
கொடுக்காம போக மாட்டா நீயும் பாரு

பொண்ணோட மனச மட்டும் புடிச்சா போதும்
நீ கேக்காம கேட்டதெல்லாம் கெடைக்கும் பாரு
ஆமா உச்சந்தலையில் இருந்து மாமா உள்ளங்காலு வரைக்கும்
என்ன வேணும் கேளு எல்லாம் அள்ளி அள்ளி தாரேன்
ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி
ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி

Pandavar Bhoomi - Aei Samba

பாண்டவர் பூமி - சின்ன வயசுல ஓடி புடிச்சேன்

சின்ன வயசுல ஓடி புடிச்சேன்
நித்தம் கபடிகள் ஆடி ஜெயிச்சேன்
சின்ன வயசுல ஓடி புடிச்சேன்
நித்தம் கபடிகள் ஆடி ஜெயிச்சேன்
கட்டாந்தரை எல்லாம் கண்கள் சிமிட்டுதே
பட்ட மரம் கூட பாத்து சிரிக்குதே
பழைய நெனவு திரும்புதே
பாவம் மனசு ஏங்குதே
மண்ணு மணக்குதே நெஞ்சு வரைக்கும்
கண்ணு கலங்குதே கள்ளி செடிக்கும்
கொடுக்கா புளி மரமும் கொத்து கொத்தா காய்ச்சிருக்கு
காத்து குத்தி கறி சமைச்ச நாளும் நெனைவிருக்கு
மீண்டும் இளமை திரும்புமா
உதிர்ந்த உறவு பூக்குமா

Pandavar Bhoomi - Chinna Vayasula

பாண்டவர் பூமி - கவிஞன் கவிஞன் பாரதி கேட்டான்

கவிஞன் கவிஞன் பாரதி கேட்டான் காணி நிலத்தில் ஒரு வீடு
கவிஞன் வழியில் நானும் கேட்டேன் கவிதை வாழும் சிறு வீடு
ஒரு பக்கம் நதியின் ஓசை
ஒரு பக்கம் குயிலின் பாஷை
இளம் தென்னையின் கீற்று ஜன்னலை உரசும் திருவீடு
விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே
சிறு தென்னங்குயில்கள் பாடி எழுப்பிவிட
தென்றல் வந்து வாசல் தெளித்து விட
கொட்டும் பூக்கள் கோலம் வரையும்படி விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே

தக தீம்த தீம்த திற திறனா
தக தீம்த தீம்த திற திறனா
தக தீம்த தீம்த திற திறதிறதிற திறனா
தக தீம்த தீம்த திற திறனா
தக தீம்த தீம்த திற திறனா
தக தீம்த தீம்த திற திறதிறதிறதிற திறனா

கனா கண்டு தூங்கும் வரையில் நிலா வந்து கதைகள் சொல்ல
கண்ணாடி முற்றம் ஒன்று வேண்டுமே
மின்னல் வந்து தீண்டும் போது வெட்கம் வந்து மூடிக்கொள்ள
கண் படாத ஜோடி ஒன்று வேண்டுமே
பறந்தோடும் பறவை கூட்டம் இரவோடு தங்கி செல்ல
மரகத மாடம் ஒன்று வேண்டுமே
கொலுசொலியும் சிரிப்பொலியும் எதிரொலித்து எதிரொலித்து இசை வரணும்
இந்த வாசல் வந்தால் கோபம் தீரும்படி
வீசும் காற்றில் ஆயுள் கூடும்படி
பேசும் வார்த்தை கவிதை ஆகும்படி விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே

கொடைக்கானல் மேகம் வந்து மொட்டை மாடி மேலே நின்று
குடிதண்ணீர் பொழியும் வண்ணம் வேண்டுமே
வாழ்ந்தவர்கள் கதையை சொல்லி வருங்கால கனவை எண்ணி
ஊஞ்சலாட திண்ணை ஒன்று வேண்டுமே
தலைமுறை மாறும்போது பரம்பரை தாங்கும் வண்ணம்
தங்கமணி தூண்கள் ஏழு வேண்டுமே
சிலர் நினைவாய் பெரும் கனவாய்
அரண்மனையாய் அதிசயமாய் இது வருமோ
நல்லோர் கண்கள் கண்டு போற்றும்படி
பொல்லார் மனசும் நின்று வாழ்த்தும்படி
எல்லா உறவும் வந்து வாழும்படி விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே
சிறு தென்னங்குயில்கள் பாடி எழுப்பிவிட
தென்றல் வந்து வாசல் தெளித்து விட
கொட்டும் பூக்கள் கோலம் வரையும்படி விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே

Pandavar Bhoomi - Kaviyan Kaviyan Bharathi

பாண்டவர் பூமி - மலர்களை படைத்த இறைவனும்

மலர்களை படைத்த இறைவனும் ஏனோ
முட்களின் நடுவே மலரவிட்டான்
மனதினில் காதலை பதியம் போட்டவன்
ஏனோ பயத்தையும் விதைத்து விட்டான்
இது நியாயமா உயிர் தாங்குமா
நீ வா பெண்ணே தடைகளை தாண்டி
பஞ்சாங்கத்தின் பழைய கணக்கை மாத்தி
மலர்களை படைத்த இறைவனும் ஏனோ
முட்களின் நடுவே மலரவிட்டான்

பெண்ணை ஒரு பூவென்று சொல்லி வைத்த பொய் இன்று
என் காதலை கொல்லுதே
தலைமுறைகள் போனாலும் வரைமுறைகள் போகாமல்
தடை போடுதே நியாயமா
காதலை கண்ணுக்குள் அடைத்து ஏனடி என்னை கொன்றாய்
புத்தனும் மண்ணுக்குள்ளே போனதை நீயும் உணர்வாய்
காதலும் உயிர் பெற்றால் பகை தோன்றுதே
மலர்களை படைத்த இறைவனும் ஏனோ
முட்களின் நடுவே மலரவிட்டான்
மனதினில் காதலை பதியம் போட்டவன்
ஏனோ பயத்தையும் விதைத்து விட்டான்

காதல் ஒரு நோயென்றால் குணப்படுத்த யார் வந்தார்
விடையேதுமே இல்லையே
காதல் ஒரு தீயென்றால் சுட்ட வடு யார் கண்டார்
தடமேதுமே இல்லையே
வேடனிடம் கூண்டு கிளிகள் விருப்பத்தை சொல்லவும் இல்லை
பெண்ணே நீ ஊமையும் இல்லை இருந்தும் ஏன் பேசிடவில்லை
காதலும் உயிர் பெற்றால் பகை தோன்றுதே
மலர்களை படைத்த இறைவனும் ஏனோ
முட்களின் நடுவே மலரவிட்டான்
மனதினில் காதலை பதியம் போட்டவன்
ஏனோ பயத்தையும் விதைத்து விட்டான்
இது நியாயமா உயிர் தாங்குமா
நீ வா பெண்ணே தடைகளை தாண்டி
பஞ்சாங்கத்தின் பழைய கணக்கை மாத்தி

Pandavar Bhoomi - Malargalai Padaitha

பாண்டவர் பூமி - தாயே உன்னை இத்தனை காலம்

தாயே உன்னை இத்தனை காலம் எப்படி பிரிந்து வாழ்ந்தேனோ
கால் பட்ட இடமெல்லாம் கருவறை போல தாங்கிக்கொண்டது நீதானோ
நீரும் நிழலும் உணவும் தந்து உயிரை காத்தாய் நீ
வேண்டாம் என்று என்னை நீயும் தள்ள மாட்டாய் நீ
மரம் செடி போல் மனிதனையும் வளர்த்து காத்தவள் நீதானே

ஐவகை நிலங்களை அங்கங்கள் ஆக்கி அழுக்களை கூட சுமக்கின்றாய்
கோல வடிவில் சுமைதாங்கியாகி ஒய்வே இன்றி சுற்றுகிறாய்
உன்னை விட்டால் வாழ்வெது
உன்னை போலே உறவேது
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இருந்தாலும் இறந்தாலும்
நிலையான சொந்தம் நீதானே
உன்னை இனியும் பிரியேனே
உன்னை இனியும் பிரியேனே

Pandavar Bhoomi - Thaye Unnai

பாண்டவர் பூமி - தோழா தோழா கனவு தோழா

தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
உன்ன நான் புரிஞ்சிக்கணும் ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதல் ஆகுமா
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா

நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது
நட்பு என்னும் நூல் எடுத்து
பூமியை கட்டி நீ நிறுத்து
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா
காதல் ஒன்னும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதனும் இல்லை
நண்பர்களும் காதலர் ஆக
மாறியப்பின் சொல்லிய உண்மை
இப்போ நீயும் நானும் பழகுறோமே காதல் ஆகுமா
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா
தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
தனன நன தானா நனா தனன நன தானா நனா
தனன நன தானா தானா தனன நன தானா தானா
தனன நன தானா நனா தனன நன தானா நனா
தனன நன தானா தானா தனன நன தானா தானா

நீயும் நானும் வெகு நேரம்
மனம் விட்டு பேசி சிரித்தாலும்
பிரியும் பொழுது சில நொடிகள்
மௌனம் கொள்வது ஏன் தோழி
புரிதலில் காதல் இல்லையடி
பிரிதலில் காதல் சொல்லுமடி
காதல் காதல்தான் நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே காதல் வளருமே
பிரிந்து போன நட்பினை கேட்டால்
பசுமையாக கதைகளை சொல்லும்
பிரியமான காதலும் கூட
பிரிந்தப்பின் ரணமாய் கொல்லும்
ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்
ஆ.. இது கரெக்ட்
அது ஆயுள் முழுக்க கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்
தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
உன்ன நான் புரிஞ்சிக்கணும் ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்
அது ஆயுள் முழுக்க கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்

Pandavar Bhoomi - Thozha Thozha Kanavu

பள்ளிக்கூடம் - மீண்டும் பள்ளிக்கு போகலாம்

மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்

நீராடும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்
சீராரும் வதனமென..

மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்
சிலேட்டு குச்சி கடன் வாங்கலாம்
சிலேட்டில் பேரெழுதி பார்க்கலாம்
கொட்டு வச்ச வாத்தியாரை தொட்டு வணங்கலாம்
முட்டிப்போட்டு நின்ன இடத்தை முத்தம் கொடுக்கலாம்
பள்ளிக்கூடத்தில் சொன்ன பாடத்தில்
இந்த உலகத்தை நாமறிந்தோம்
அன்னை மடி என நம்மை தாங்கிய
இந்த பள்ளியை ஏன் மறந்தோம்?
(மீண்டும்..)

ஏலேலோ ஏலேலோ லோ..
ஏலேலோ ஏலேலோ லோ..

உயிரும் உடலும் கருவறைக்குள்ளே உற்பத்தியாகிறது
உறவு நட்பு காதலை பள்ளி சொல்லித் தருகிறது
(உயிரும்..)
தலைக்கு மேலே வளர்ந்தால் கூட தாய்க்கு நீ பிள்ளைதான்
எத்தனை பெரிய மனிதனானாலும்
பள்ளிக்கு நீ மாணவன் தான்
உன்னை சுமந்த பள்ளிக்கூடம் கேட்பாரற்று கிடக்கிறதே
உந்தன் வரவை எதிர்ப்பார்த்து
ஊருக்குள் தனியாய் நிற்கிறதே
(மீண்டும்..)

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இருக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இருக்க வேண்டாம்

படித்தவன் எல்லாம் பள்ளியை மறந்து
எந்திர வாழ்வில் தொலைந்துவிட்டான்
படிக்காதவன் தான் பள்ளியை பார்த்து
ஏக்கத்தோடு தசிக்கிறான்
பத்து மாதம் சுமந்த தாய்க்கே 
பணிவிடைகள் செய்கின்றோம்
பத்து வருடம் சுமந்த பள்ளிக்கு
என்ன செய்ய நினைக்கின்றோம்
இருக்கும் கோவில்கள் போதாதென்று
புதிதாய் கோவில்கள் கட்டுகின்றோம்
பள்ளிகள் எல்லாம் கோவில்கள் என்பதை
ஏனோ நாமும் மறக்கின்றோம்..
(மீண்டும்..)

Pallikoodam - Meendum Pallikku

பள்ளிக்கூடம் - இந்த நிமிடம் இந்த நிமிடம்

 இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?

இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?

இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?

இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?

இந்த மௌனம்
இந்த மௌனம்
இப்படியே உடையாதா?

இந்த மயக்கம்
இந்த மயக்கம்
இப்படியே நீளாதா?

இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?

இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?

ஞாபக பறவை
ஓடுகள் உடைந்து
வெளியே தாவி பறக்கிறதே

நீயும் நானும்
ஒன்றாய் திரிந்த
நாட்கள் நெஞ்சில்
மிதக்கிறதே

ஆயிரம் சொந்தம்
உலகில் இருந்தும்
தனிமை என்னை
துரத்தியதே

உன்னை காணும்
நிமிடம் வரைக்கும்
உடலே பொம்மையா
கிடக்கிறதே

இதயம் நொருங்குகிறேன்
இதையே விரும்புகிறேன்
இது போதும் பெண்ணே
இறப்பேனே கண்ணே

ஆயிரம் காலம் வாழ்கிற வாழ்கை
நிமிடத்தில் வாழ்ந்தேனோ

இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?

இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?

கிழக்கும் மேற்கும்
வடக்கும் தெற்கும்
மனிதன் வகுத்த
திசை ஆகும்

உன் முகம் இருக்கும்
திசையே எந்தன்
கண்களில் பார்க்கும்
திசை ஆகும்

கோடையும் வாடயும்
இலையுதிர் காலமும்
இயற்கை வகுத்த நெறியாகும்

உன்னுடன் இருக்கும்
காலத்தில் தானே
எந்தன் நாட்கள்
உருவாகும்

உந்தன் நிழல் அருகே
ஒய்வுகள் எடுத்திடுவேன்
இது காதல் இல்லை
இது காமம் இல்லை

தேகத்தை தாண்டியோ
மோகத்தை தாண்டியோ
உறவும் இது தானோ

இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?

இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?

இந்த மௌனம்
இந்த மௌனம்
இப்படியே உடையாதா?

இந்த மயக்கம்
இந்த மயக்கம்
இப்படியே நீளாதா?

Pallikoodam - Indha Nimidam

பார்த்தேன் ரசித்தேன் - வா என்றது உலகம் உலகம் நான்

வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன்
நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன்
வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன்
நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன்
ஒரு பூ மீது பூலோகம் நிலை கொல்ல வேண்டும்
அது நிலை கொல்ல என் பாடல் துனையாக வேண்டும்

வாழ்வென்பதோ பயனம் புது திருப்பம் கேட்கிறேன்
நான் ஒவ்வொரு நாளையும் புதிதாய் ஜெயிப்பேன்
துன்பம் போக்கி இன்பம் செய்ய நான் மன்னில் தோன்றினேன்
தினம் இன்ப செய்தி சொல்லி காற்றே நீ வா வா வா
என் வாழ்க்கையின் போக்கில் நான் வாழ போகிறேன்
வெற்றி ஒன்றுதான் கொள்கை வெல்வேன்
கடைசி ரசிகன் உல்ல வரையில் நான் பாட போகிறேன்
எனது ரசிகனே இங்கே நீ வா வா வா

வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன்
நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன்
வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன்
நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன்

Parthen Rasithen - Vaa Endrathu

பார்த்தேன் ரசித்தேன் - தின்னாதே என்னை தின்னாதே

தின்னாதே என்னை தின்னாதே
சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே
நீ சைவம் தானே பெண்ணே என்னை தின்னாதே
ஜோடி கண்ணில் என்னை கொத்தி
ஜோடி மார்பில் என்னை குத்தி கொன்றவளே
தின்னாதே என்னை தின்னாதே
சீ .. சீன்டாதே என்னை சீன்டாதே
தின்னுவதை விடவும் இங்கு தின்னபடுதல்
இன்னும் இன்பம் அல்லவா ..அல்லவா ..
சீன்டாதே என்னை சீன்டாதே

பெண் வாடை அறியாத முனியாக நானிருந்தேன்
முந்தான பூவாசம் காட்டி விட்டாயே
ஒரு ஒரு ஒரு பாவம் அறியாத பூவாக நான் இருந்தேன்
பூ மீது பெற்றோலை ஊற்றிவிட்டாயே
பூவுக்குள்ளே தீ பிடித்தால் கொதிக்க கொதிக்க தேன் கிடைக்கும்
சுட சுட குடித்து விடு தீர்ந்த பிறகும் தேன் சுரக்கும்
பார்வை என்னும் ஈட்டி போட்டு
கொன்று என்னை கூறு போட்டு
உதட்டு மீது அடுப்பு மூட்டி சமைபவளே
(தின்னாதே …)

ஒரு நூறு பேராறு உள்நாட்டில் ஓடுகையில்
உன் தாகம் தீர என் குருதி கேட்டாயே
சுவையாறு என்பார்கள் சுவை ஏழு என்பேன் நான்
இதழ் கொண்ட சுவை சொல்ல மறந்து விட்டாரே
அ… குடலுக்கு பசி எடுத்தால் உணவு கொடுக்க அடங்கிவிடும்
உடலுக்கு பசி எடுத்தால் கொடுக்க கொடுக்க வளர்ந்துவிடும்
வண்டு விழியில் என்னை கொன்று
சுண்டு விரலில் துண்டு செய்து
மார்பு சூட்டில் என்னை சுட்டு சமைத்தவளே
(தின்னாதே …)

Parthen Rasithen - Thinnadhey Ennai

பார்த்தேன் ரசித்தேன் - கெடைக்கல கெடைக்கல பொண்ணு

கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
பஸ்சுல பாத்தா மைனாவே விட்டு
பாதியில் இரங்கி பேகாதே
அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல, கண்ண பிச்சி எரியரேன்
கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடிக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல

பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு வாழ்க்கையில பாக்கலாம்
டெர்மினசு சேரும் முன்னே ப்ரேக்கு டௌனு ஆகலாம்
ஹொ… பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு வாழ்க்கையில பாக்கலாம்
டெர்மினசு சேரும் முன்னே ப்ரேக்கு டௌனு ஆகலாம்
பஸ்சு மிசுனு சொல்ல முடியாது
ரூட்டு எப்பொவும் மாரலாம்
நெம்பர் பாத்து ஒன்னும் நம்ப முடியாது
போர்டு மாத்தி ஓட்டலாம்
ஒண்ணு போன ஒண்ணு வரும்
அது பஸ்சுக்கு மட்டும் பொருந்தலாம்
பொண்ணு போனா என்ன வரும், என் தேனுகுட்டிக்கும் தாடி வரும்
என் தலை எழுத்த ப்ரஹ்மனவன் எடது கையால் கிருக்கிட்டான்

கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல

என்ன பத்தி கவி எழுத கண்ணதாசன் இல்லையே
என்னக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லயே
ஆ… என்ன பதி கவி எழுத கண்ணதாசன் இல்லியயே
என்னக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லயே
ஆம்பிளைங்க விடும் கண்ணீர் என்னும்
shower-இல் குளிக்கும் பெண்களே
செம்பரம்பக்கம் யேரிய போல வரண்டு போசு கண்களே
சவுரி முடி எதுக்கடி அது ஆண்களுக்கு சவுக்கடி
இதயமெல்லம் காயபட்டும் இன்னும் ஏறிவிட்டது கிருக்கடி
அஹிம்சையான இம்சையடி காதல் என்னும் நெருக்கடி

கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல் எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
பஸ்சுல பாத்தா மைனாவே விட்டு
பாதியில் இரங்கி போகாதே.. போகாதே.. போகாதே..
அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல, கண்ண பிச்சி எரியரேன்…
கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல் எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல

Parthen Rasithen - Kedaikala Kedaikala Ponnu 

பார்த்தேன் ரசித்தேன் - பூவே புன்னகை காட்டு

பூவே புன்னகை காட்டு ஒரு Photograph-உக்கு
ஆப்பிள் கன்னம் நீட்டு என்ன் Autograph-உக்கு
என் வாழ்க்கை என்னும் பட்டம்
உன் கூந்தலில் சிக்கியதென்ன
அடி எப்படி சிக்கலெடுக்க
Love You Love You Baby
O Fair and Lovely Baby
Love You Love You Baby
O Fair and Lovely Baby
காற்று சிக்குவதில்லை உன் Photograph-உக்கு
வானம் எட்டுவதில்லைனீட்டு உன் Autograph-உக்கு

சொல்லில் மொழியில் என் காதல் சொல்ல முடியுமா நில்
டம்ளர் உள்ளே நீர்மூழ்கி கப்பல் போகுமா சொல்
நெஞ்சில் என்போல் வலியுண்டா நெஞ்சை தொட்டு நீ சொல்
பஞ்சின் வலியா தலை அரியும் என் பரம நன்பனே சொல்
என் இரவு படுக்கையை கேளு
நான் புரண்ட கணக்குகள் சொல்லும்
என் நைட்டி ஆடையை கேளு
நான் நனைந்த கணக்குகள் சொல்லும்
ஹே.. ஹே.. வாழ்க்கை வற்றும் வரைக்கும்
Love You Love You Baby
O Fair and Lovely Baby
Love You Love You Baby
O Fair and Lovely Baby
காற்று சிக்குவதில்லை உன் Photograph-உக்கு
வானம் எட்டுவதில்லைனீட்டு உன் Autograph-உக்கு

ஆணா பெண்ணா யார் முதலில் காதல் சொல்வது சொல்
நீயே சொன்னால் Bridge-இன் எடை தாழ்ந்து போகுமா சொல்
காதல் என்னும் பிச்சைதான் பெங்கல் இடுகிரோம் நில்
ஆண்கள் முதலில் கேளாமல் பிச்சை கிட்டுமா சொல்
அடி அழகு தேவதை உன் போல்
நான் ஆசை வைத்ததே இல்லை
என் மேனி குத்திடும் என்றா
நீ மீசை வைப்பதே இல்லை
ஹே.. ஹே.. என் உயிர்த்தேன் சொட்டும் வரைக்கும்
Love You Love You Baby
O Fair and Lovely Baby
Love You Love You Baby
I Love You Love You Baby
பூவே புன்னகை காட்டு ஒரு Photograph-உக்கு
ஆப்பிள் கன்னம் நீட்டு என்ன் Autograph-உக்கு
என் வாழ்க்கை என்னும் பட்டம்
உன் கூந்தலில் சிக்கியதென்ன
அடி எப்படி சிக்கலெடுக்க
Love You Love You Baby
O Fair and Lovely Baby
Love You Love You Baby
I Love You Love You Baby

Parthen Rasithen - Poove Punnagai

பார்த்தேன் ரசித்தேன் - எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
ஓரப்பார்வை பார்வை பார்கும்போதே உயிரில் பாதி இல்லை
மீதிப் பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே

உயிரே உயிரே உடம்பில் சிறந்தது எதுவென்று தவித்திருந்தேன்
அதை இன்றுதான் கண்டு பிடித்தேன்
கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி
உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி
காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது.. ஆ..
காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது
அது காலத்தை கட்டுகின்றது
என் மனம் என்னும் கோப்பையில் இன்று
உன் உயிர் நிறைகின்றது
என் மனம் என்னும் கோப்பையில் இன்று
உன் உயிர் நிறைகின்றது

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி

மார்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே மனசை மறைக்கதே
என் வயதை வதைக்காதே
புல்வெளி கூட பனித்துளி என்னும் வார்த்த பேசுமடி
என் புன்னகை ராணி ஒரு மொழி சொன்னால் காதல் வாழுமடி
வார்த்தை என்னை கைவிடும் போது மௌனம் பேசுகிறேன்
என் கண்ணீர் வீசுகிறேன்
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன் புரியவில்லை..
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன் புரியவில்லை

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
ஓரப்பார்வை பார்வை பார்கும்போதே உயிரில் பாதி இல்லை
மீதிப் பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே

Parthen Rasithen - Enakena Yerkanave

பார்த்தேன் ரசித்தேன் - பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

கட்டழகு கன்னத்தில் அடிக்க
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா அடடா

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
ஹே… ஹே… ஹே…

கண்ணும் கண்ணும் மோதிய வேளை
சில நொடி நானும் சுவாசிக்கவில்லை
கடவுள் பார்த்த பக்தன் போலே
கையும் காலும் ஓட வில்லை

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

தேவதையும் பேருந்தில் வருமா
கனவா நனவா தோன்றவும் இல்லை
நல்ல வேளை சிறகுகள் இல்லை
நானும் அதனால் நம்பவில்லை
நெற்றி என்ற மேடையிலே
ஒற்றை முடியை ஆட விட்டாள்
ஒற்றை முடியில் என்னை கட்டி
உச்சி வெயிலில் தூக்கிலிட்டாள்

மனதில் இத்தனை ரணமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

யேய்… யே வேலை தேடும் இளைஞன் கேட்டேன்
காதல் செய்யும் வேலை போடு
வந்த என்னை வேண்டாம் என்றால்
அணைத்து அணைத்தே கொன்று விடு

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

உலர்ந்து போன எந்தன் வாழ்வை
நாக்கின் நுனியால் ஈரமாக்கு
உறைந்து போன எந்தன் இரவை
ஓர பார்வையில் உருக விடு
என்னை தவிர ஆண்கள் எல்லாம்
பெண்களாகி போனால் கூட
உன்னை தவிர இன்னொரு பெண்ணை
உச்சி மோர்ந்து பார்ப்பதும் இல்லை

மனதில் இத்தனை ரணமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

கட்டழகு கன்னத்தில் அடிக்க
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா அடடா

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

Parthen Rasithen - Parthen Parthen Suda Suda Rasithen

பூவேலி - ஒரு பூ எழுதும் கவிதை

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஒவியமாய் விரியும்

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஒவியமாய் விரியும்

உலகத்தின் மெலிய தாள்களின் மேலே
இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்
அழகிய இதழ் கொண்டு வா
முத்தம் என்பது நாம் காணும் தியானம
அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்

ஊசி துளைத்த குமிழிகள் போலே
உடைவது உடைவது வாழ்வு

காற்று துரத்தும் கடலலை போல
தொடர்வது தொடர்வது காதல்

உடல் மீது கொஞ்ச காலம்
இளைப்பாறும் காதலே
உடல் தீர்ந்து போன பின்னும்
உயிர் வாழும் காதலே

காலங்கள் எங்கு தீரும்
அதுவரை செல்வோமா
காலங்கள் தீருமிடத்தில்
புது ஜென்மம் கொள்வோமா

உன் மூச்சிலே நானும் என் மூச்சிலே நீயும்
காற்றில் ஒலிகள் கேட்கும்
வரையில் காதல் கொள்வோமா?

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்

நதி நீர் எழுதும் கவிதை
அலை ஒவியமாய் விரியும்

கண்கள் இருக்கும் பேர்களுகெல்லாம்
சூரியன் மட்டும் சொந்தம்

காதல் இருக்கும் பேர்களுகெல்லாம்
சூரியக்குடும்பம் சொந்தம்

உலகம் திறந்து வைத்த முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான்
இன்னும் அந்த தேடல் தான்

சுடர் கோடி எதற்கு வந்தோம்
தொலைத்ததை காணத்தான்
உதட்டினில் தொடங்கி அந்த உயிர் சென்று தேட தான்

நீ என்பதும் பாதி நான் என்பதும் பாதி
உன்னில் என்னை என்னில் உன்னை
ஊற்றி கொள்வோமா?

ஒரு பூ எழுதும் கவிதை

சிறு தேன் துளியாய் உருளும்

நதி நீர் எழுதும் கவிதை

அலை ஒவியமாய் விரியும்

உலகத்தின் மெலிய தாள்களின் மேலே

இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்

அழகிய இதழ் கொண்டு வா

முத்தம் என்பது நாம் காணும் தியானம்

அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்

முத்தம் என்பது நாம் காணும் தியானம்
அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்

Pooveli - Oru Poo Ezhuthum

பூவேலி - இதற்கு பெயர் தான் காதலா

காண்பதெல்லாம் தலைகீழ் தோற்றம்
என்னோடு ஏனோ இத்தனை மாற்றம்

பூமி என்பது தூரமானதே
நட்ஷத்திரங்கள் பாக்கமானதே
மனிதர் பேசும் பாஷை மறந்தே
பறவைகளோடு பேச தோணுதே
காணும் பிம்பம் கண்ணில் மறைந்து
காணா உருவம் கண்ணில் தோணுதே
அன்பு திருமுகம் தேடி தேடி
கண்கள் என்னை தாண்டி போகுதே

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

புரியா மொழியோ புரிந்து போகும்
புரிந்த மொழியோ மறந்து போகும்
சரியாத உடை சரிசெய்வதாக
சரியாய் இருந்தும் சரிய செய்யும்
நிலவை போலவே இரவும் பிடிக்கும்
உணவை போலவே பசியும் ருசிக்கும்
எந்த பேனா வாங்கும் பொழுதும்
என்னவள் பெயர் தான் எழுதி பார்க்கும்

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

கண்ணாடி முன்னே பேசி பார்த்தால்
வார்தைகள் எல்லாம் முந்தி அடிக்கும்
முன்னாடி வந்து பேசும் பொழுதோ
வார்தைகள் எல்லாம் நொண்டி அடிக்கும்
பாதி பார்வை பார்கும் போதே
பட்டாம் பூச்சிகள் நெஞ்சில் பறக்கும்
கண்ணில் இருந்தும் கவிதை முளைக்கும்
ககிதம் மணக்கும் கண்ணீர் இனிக்கும்

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

கண்கள் என்னும் இரண்டு ஜன்னல்
திறந்து வைத்தும் மூடி கொள்ளும்
இதயம் என்னும் ஒற்றை கதவு
மூடி வைத்தும் திறந்து கொள்ளும்
நீ என்பது நீ மட்டும் அல்ல
மூளையின் மூலையில் ஒரு குரல் கேட்கும்
நான் என்பது இன்னோரு பாதி
யார் என்பது இதயம் கேட்கும்

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

Pooveli - Itharku Peyar Than

பிரியசகி - ஓ பிரியசகி என் பிரியசகி

ஓ பிரியசகி என் பிரியசகி
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானாடி
என் ஜென்மம் முழுவதும் நீயடி
என் ஜீவ நாடியே நீயடி
வாழ்வின் எல்லை வரை

ஓ பிரியசகி என் பிரியசகி
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானாடி

மேகமாய் வந்து பூ இதழ்களை மோகம் கொண்டு தூவ
பூ இதழ் வழி தேன்துளி பட்டு தேகம் சுடாக

பூமகள் சுடாகினால் அந்த தேன் துளி என்ன ஆகும்
ஆசையால் நீ தீண்டினால் அது மீண்டும் பூ ஆகும்

தென்றல் வந்து தீண்டும் போது தேவலோகம் தெரிகிறது

எந்தன் மார்பில் சாயும் போது எந்த லோகம் தெரிகிறது

வா வா என் தேவதையே தேவதையே

ஓ பிரியசகி உன் பிரியசகி
உன் உயிரிலே உயிர் வாழ்கிறேன் உனக்காகவே

தேவதை இதழ் ஓரமே மது ஊறுமே சுவையாக
வேண்டுமே சரி பாதியாய் சுகம் யாவும் எனக்காக

தேடுதே சுகம் தேடுதே இதழ் பாயுதே சுவைக்காக
தேவைகள் உன் தேவைகள் நான் தருவேன் முழுதாக

பார்வை பட்ட நொடியில் எந்தன் உயிரும் பற்றி எரிகிறதே

பாவை உந்தன் கைகள் பட்டு உலகம் பற்றி எரிகிறதே

எரிகிறதே அணைத்துவிடு என்னை அணைத்துவிடு

ஓ பிரியசகி என் பிரியசகி
என் பேச்சிலும் உயிர் முச்சிலும் நீ தானாடி
இது உதடுகள் நடத்தும் யுத்தமா
இல்லை இதயங்கள் துடிக்கும் சத்தமா
வாழ்வின் எல்லை வரை

Priyasakhi - Oh Priyasakhi

ரோஜாக் கூட்டம் - புத்தம் புது ரோஜாவே

புத்தம் புது ரோஜாவே,
பூப்படைந்த ரோஜாவே,

புத்தம் புது ரோஜாவே,
பூப்படைந்த ரோஜாவே,
என் செய்குவாய் என்னை?
நீ என்னை கொன்றாலும்,
நெருப்பென்னை தின்றாலும்,
நித்தம் சூற்றுவேன் உன்னை,
என் காதலியே,
உன் கண்ணசைவால்,
துளி புன்னகையால்,
அடி நெஞ்சில் பூத்ததே,

ரோஜா கூட்டம்,
ரோஜா ரோஜா கூட்டம்,
நீ ஒரு ரோஜா கூட்டம்,
மனசுக்குள் ரோஜா கூட்டம்,

ரோஜா கூட்டம்… ரோஜா கூட்டம்…

காதலை உலகில்,
கழித்துவிட்டாலே,
கல்லரை பூமியடி,

காதலி ஒருத்தி,
தூங்குவதாலே,
கல்லரை கோயிலடி,

தாய் தந்தை ஆசான்,
தவிர்த்ததை கூட,
சொல்லிதரும் காதலடி,

என் காதலியே,
உன் வளைவுகளால்,
அந்த அளவுகளால்,
அடி நெஞ்சில் பூத்ததே,

ரோஜா கூட்டம்,
ரோஜா ரோஜா கூட்டம்,
நீ ஒரு ரோஜா கூட்டம்,
மனசுக்குள் ரோஜா கூட்டம்,

திரிகளை எரிக்கும்,
தீயே வாழ்க,
உன்னால் ஒளி அடைந்தோம்

தேகத்தை எரிக்கும்,
காதலே வாழ்க,
உன்னால் உயிர் வளர்தோம்

அறுவது வயது,
ஆயிரம் வருடம்,
அள்ளி தரும் காதலடி,

அந்த காதலினால்,
நல்ல கலவி உண்டு,
அந்த சுகங்களினால்,
அடி நெஞ்சில் பூக்குமே,

ரோஜா கூட்டம்,
ரோஜா ரோஜா கூட்டம்,
நீ ஒரு ரோஜா கூட்டம்,
மனசுக்குள் ரோஜா கூட்டம்,

ரோஜா கூட்டம்,
ரோஜா ரோஜா கூட்டம்,
நீ ஒரு ரோஜா கூட்டம்,
மனசுக்குள் ரோஜா கூட்டம்,

ரோஜா கூட்டம்… ரோஜா கூட்டம்…

Roja Kootam - Putham Pudhu Rojaave

ரோஜாக் கூட்டம் - உயிர் கொண்ட ரோஜாவே

உயிர் கொண்ட ரோஜாவே,
உயிர் வாங்கும் ரோஜாவே,

உயிர் கொண்ட ரோஜாவே,
உயிர் வாங்கும் ரோஜாவே,
கிள்ளி போகவே வந்தேன்,
பக்கம் வந்த ரோஜாபூ,
பக்தன் என்று சொல்லியதால்,
பூஜை அறையில் வைத்தேன்,
அன்று காதலனா,
இன்று காவலனா,
விதி சொன்ன கதை இதுதானா, நெஞ்சமே?

ரோஜா கூட்டம்,
ரோஜா ரோஜா கூட்டம்,
அருகில் ரோஜா கூட்டம்,
நடுவில் முள்ளின் தோட்டம்,

ரோஜா கூட்டம்…ரோஜா கூட்டம்…

தூரத்தில் இருக்கயில்,
அண்மையில் இருந்தாய்,
அடிவான் நிலவாக,

அண்மையில் வந்ததும்,
தூரத்தில் தொலைந்தாய்,
கரைமேல் அலையாக,

கள்ளம் இல்லாமல் கை தொடும்பொழுது,
உள்ளத்தில் நில நடுக்கம்,

ஒரு சொர்க்கத்துக்குள்,
சிறு நரகமடி,
என் முகமேதான்,
முகம் மூடி பாரடி,

ரோஜா கூட்டம்,
ரோஜா ரோஜா கூட்டம்,
அருகில் ரோஜா கூட்டம்,
நடுவில் முள்ளின் தோட்டம்

கண்களில் இருந்து,
உறக்கத்தை முறித்து,
இரவில் எரித்துவிட்டேன்,

நெஞ்சத்தில் இருந்து,
காதலை உறித்து,
பாதியில் நிறுத்திவிட்டேன்,

ஒரு சில சமயம்,
உயிர் விட நினைத்தேன்,
உனக்கே உயிர் சுமந்தேன்,

அடி சினேகிதியே,
உன் காதலியே,
என் நெஞ்சோடு,
என் காதல் வேகட்டும்,

ரோஜா கூட்டம்,
ரோஜா ரோஜா கூட்டம்,
அருகில் ரோஜா கூட்டம்,
நடுவில் முள்ளின் தோட்டம்,

ரோஜா கூட்டம்,
ரோஜா ரோஜா கூட்டம்,
அருகில் ரோஜா கூட்டம்,
நடுவில் முள்ளின் தோட்டம்,

ரோஜா கூட்டம்… ரோஜா கூட்டம்…

Roja Kootam - Uyir Konda Rojaave

தமிழ் - கண்ணுக்குள்ளே காதலா

கண்ணுக்குள்ளே காதலா
கண்டதும் நெஞ்சில் தென்றலா
என்னை ஏதோ செய்கிறாய் என்னில் ஏதோ கொய்கிறாய்
மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய்
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைக்கிறாய்

நான்கு கண்கள் உள்ளதே உன் காதல் ஒன்று தான்

கண்டுகொண்டேன் நானும் அதை உன்னால் இன்று தான்

கண்ணுக்குள்ளே காதலா
கண்டதும் நெஞ்சில் தென்றலா

ஊரறிந்த செய்தி காதல் உயிரை வாங்கும் வியாதி
அதை வருமுன் தடுக்கும் தடுப்பு ஊசி உலகில் இல்லையே
உன்னை பற்றி பாட தமிழில் எங்கு வார்தை தேட
அதன் பதினெட்டு உயிரும் பன்னிரு மெய்யும் போதாதல்லவா
நீ ஆசை மொழின் நகரம் தான்
நீ நகர்ந்தால் நகரும் நகரம் தான்

நீ ஆண்கள் ஜாதியில் சைவம் தான்
உன் அசைவால் நானே அசைவம் தான்

தலைக்கேறும் போதை தடுமாறும் பெண்ணே

கண்ணுக்குள்ளே காதலா
கண்டதும் நெஞ்சில் தென்றலா

காவல் நிலையம் சென்று தூக்கம் களவு போச்சு என்று
என் விழிகள் இரண்டும் யார் யார் மீதோ குற்றம் சாட்டுமே
உன்னை பற்றி மெல்ல நான் தான் உளவு பார்த்து சொல்ல
அடி உன்னை பிடித்து காவல் துறை தான் கூண்டில் ஏற்றுமே
என் இமையை மெதுவாய் வருடாதே
என் துயிலை தினமும் திருடாதே

நீ விழியால் மனதை உழுதாயே
ஒரு விதையாய் நீயே விழுந்தாயே

உயிர் காதல் பூவே நீ தானே வாழ்வே

கண்ணுக்குள்ளே காதலா
கண்டதும் நெஞ்சில் தென்றலா
என்னை ஏதோ செய்கிறாய் என்னில் ஏதோ கொய்கிறாய்
மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய்
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைக்கிறாய்

நான்கு கண்கள் உள்ளதே உன் காதல் ஒன்று தான்

கண்டுகொண்டேன் நானும் அதை உன்னால் இன்று தான்
கண்ணுக்குள்ளே காதலா
கண்டதும் நெஞ்சில் தென்றலா

Thamizh - Kannukkulle kadhala

திருட்டுப்பயலே - தையத்தா தையத்தா தைய தைய தா

தையத்தா தையத்தா தைய தைய தா
பைய்யத்தா பைய்யத்தா பஞ்சு முத்தம் தா

உயிர் வாழ்கிற வரைக்கும்
உனக்கே மடி கொடுப்பேன்
இனி ஓர் ஜென்மம் இருந்தால்
உனக்கே மீண்டும் பிறப்பேன்
உனது கனவில் நினைவில் உருவில்
நானே என்றும் இருப்பேன்

தையத்தா தையத்தா தைய தைய தா
பைய்யத்தா பைய்யத்தா பஞ்சு முத்தம் தா

நிலங்கள் உடைந்து போனாலும்
நிழல்கள் உடைவதில்லை
நேசம் பாசம் நிஜமானது

மழையில் கிளிகள் நனைந்தாலும்
சாயம் போவதில்லை
அன்பே நம் காதல்
அது போன்றது

பெண்ணுக்கு பேராசை வேரொன்றும் இல்லை
சொன்னதை செய்தாலே நிகர் ஏதும் இல்லை

நீ உறுதியானவன்
என் உரிமை ஆனவன்
பசி ருசியை
பகல் இரவை
பகிர்ந்து கொள்ளும் தலைவன்
தையத்தா

தையத்தா தையத்தா தைய தைய தா
பைய்யத்தா பைய்யத்தா பஞ்சு முத்தம் தா

குங்கும பக்தி கொலு சாந்தம் மட்டிது
மங்கள வீதி வலம் செய்து மணநீர்
அங்கவனோடு உடன் சென்றங்க் காணி மேல்
மஞ்சன மாட்ட கனா கண்டேன் தோழி நான்

பிறவி வந்து போனாலும்
உறவு முறிவதில்லை
உயிரை உயிரால் முறுக்கேற்றவா

உன்னை போன்ற அன்பாலன்
யார்க்கும் வாய்க்கும் மீண்டும்
உடலை உடலால் குளிப்பாட்டவா

ஓரு கணம் நீ என்னை
பிரிந்தாலும் கண்ணா
மறுகணம் நான் உன்னை
சேரும் வரம் வேண்டும்

உன்னை இருக்கி அணைக்கிறேன்
உயிர் நுரைக்க ரசிக்கிறேன்
அனு அனுவாய்
உனை பிளந்து
என் ஆயுள் அடைப்பேன்.
தையத்தா

தையத்தா தையத்தா தைய தைய தா
பைய்யத்தா பைய்யத்தா பஞ்சு முத்தம் தா

உயிர் வாழ்கிற வரைக்கும்
உனக்கே மடி கொடுப்பேன்
இனி ஓர் ஜென்மம் இருந்தால்
உனக்கே மீண்டும் பிறப்பேன்
உனது கனவில் நினைவில் உருவில்
நானே என்றும் இருப்பேன்

தையத்தா தையத்தா தைய தைய தா
பைய்யத்தா பைய்யத்தா பஞ்சு முத்தம் தா

Thiruttu Payale - Thaiyathaa Thaiyatha

Friday, December 30, 2016

சார்லி சாப்ளின் - முதலாம் சந்திப்பில்

முதலாம் சந்திப்பில்,
நான் அறிமுகம் ஆனேனே,
இரண்டாம் சந்திப்பில்,
என் இதயம் கொடுத்தேனே,

மூன்றாம் சந்திப்பில்,
முகத்தை மறைத்தேன்,
நான்காம் சந்திப்பில்,
நகத்தை கடித்தேன்,
காதல் வந்தது, காதல் வந்தது,
காதல் வந்ததடா,
காதல் வந்தது, காதல் வந்தது,
காதல் வந்ததடா,

ஐந்தாம் சந்திப்பில்,
நான் ஐக்கியம் ஆனேனே,
ஆறாம் சந்திப்பில்,
நான் பைத்தியம் ஆனேனே,
ஏழாம் சந்திப்பில்,
எட்டி பிடித்தேன்,
எட்டாம் சந்திப்பில்,
கட்டி பிடித்தேன்,
காதல் வந்தது, காதல் வந்தது,
காதல் வந்ததடி,
காதல் வந்தது, காதல் வந்தது,
காதல் வந்ததடி,

இன்னும் கோடி கோடி ஆசை,
நெஞ்சில் உள்ளே உள்ளதடி,

முதலாம் சந்திப்பில்,
நான் அறிமுகம் ஆனேனே,
இரண்டாம் சந்திப்பில்,
என் இதயம் கொடுத்தேனே,
—-
அதிகாலை நேரத்திலே,
கோலங்கள் நீயும் போட,
தொலைவாக நான் நின்று,
உன்னை சந்திப்பேன்,
பால் வாங்கும் நேரத்தில்,
பக்கத்தில் சந்திப்பேன்,

நூராண்டு வயதான,
உள்ளூரு நூலகத்தில்,
மறைவாக மறைவாக,
தினம் சந்திப்போம்,
பேரூந்துக்குள்ளே தான்,
பெரு மூச்சால் சந்திப்போம்,

காலை நேரத்தில்,
உன் கடிதம் சந்திப்பேன்,
மாலை நேரத்தில்,
உன் மடியில் சந்திப்பேன்,

சாயங்காலம், சாலை ஒரம்,
நீயும் நானும் தேயும் நேரம்,
இருவரும் கூடி இமைகளை மூடி,
இதழால் சந்திப்போம்,
முதலாம் சந்திப்பில்,
நான் அறிமுகம் ஆனேனே,
இரண்டாம் சந்திப்பில்,
என் இதயம் கொடுத்தேனே,
இ.பி.கோ. சட்டம் போட்டு,
ஊர் அடங்க செய்தாலும்,
ஓடோடி ஒரு நொடியில்,
உன்னை சந்திப்பேன்,
மண்வாசம் நீ ஆனால்,
மழையாகி சந்திப்பேன்,

இரு கையில் ஆணி வைத்து,
சிலுவைக்குள் அரைந்தாலும்,
உயிர் நீர்து, உடன் வந்து,
உன்னை சந்திப்பேன்,
பூவாக நீ ஆனால்,
காற்றாகி சந்திப்பேன்,

போதிமரமாக,
நீ மாறி போனாலும்,
புத்தமதமாகி,
நான் உன்னை சந்திப்பேன்,

ஆயுள் உள்ள காலம் வரை,
அன்பே, நாமும் கூடி வாழ,
உன்னை பெற்ற அம்மா அப்பா,
இருவரை சந்திப்போம்,
முதலாம் சந்திப்பில்,
நான் அறிமுகம் ஆனேனே,
இரண்டாம் சந்திப்பில்,
என் இதயம் கொடுத்தேனே,

மூன்றாம் சந்திப்பில்,
முகத்தை மறைத்தேன்,
நான்காம் சந்திப்பில்,
நகத்தை கடித்தேன்,
காதல் வந்தது, காதல் வந்தது,
காதல் வந்ததடா,
காதல் வந்தது, காதல் வந்தது,
காதல் வந்ததடா,

இன்னும் கோடி கோடி ஆசை,
நெஞ்சில் உள்ளே உள்ளதடா,

Charlie Chaplin - Mudhalam Sandhippil

தாமிரபரணி - வாரான் வரவரல

குழு:
வாரான் வரவரல இவன் வாரான் வரவரல

ஆண்:
கட்டப்பொம்மன் ஊரெனக்கு கெட்டவன்னு பேரெனக்கு
எட்டப்பனா எவன் வந்தா எட்டிஎட்டி மிதி இருக்கு

குழு:
வாரான் வரவரல இவன் வாரான் வரவரல

ஆண்:
பரணியில் பொறந்தவன்டா தரணிய பொளப்பவன்டா
நல்ல தண்ணி தீவுக்குள்ள கெட்ட தண்ணி அடிப்பவன்டா

குழு:
வாரான் வரவரல இவன் வாரான் வரவரல

ஆண்:
வெட்டருவா என் பேரச்சொன்னா பேசுமே
வீச்சருவா என் ஊரச் சொன்னா வீசுமே (வாரான்)

ஆண்:
ராத்திரியில் முழிப்போம் காலையில் படுப்போம்
நல்லவன கெடுப்போம் நாங்க நாலு பேர மிதிப்போம்
சமுத்திரத்தில் குளிப்போம் சத்திரத்தில் கெடப்போம்
சண்டையின்னு வந்தா எலும்பு சூப்பு வச்சுகுடிப்போம்
எங்க கூட்டத்தில குள்ள நரியே இல்ல
எங்க ஒட்டத்தில ஒரு ஒளியே இல்ல (வாரான்)

ஆண்:
கபடி........... கபடி............... கபடி................... கபடி...................
கேட்டு பூட்டி இருந்தா ஓட்ட பரிச்சு குதிப்போம்
இரும்பு பெட்டிய பாத்தா நாங்க ஏ.டி. எம்மாநெனப்போம்
கையெழுத்தப் போட்டு காசத்தானே அடிப்போம்
கல்லாப் பெட்டிய பாத்தா நாங்க நல்லா தானே நடிப்போம்
எங்க சட்டபையில் துட்டு தானா வரும்
எங்க தூண்டிலிலே தங்கமீனா வரும் (வாரான்)

Thaamirabharani - Vaaraan Varavarale

தாமிரபரணி - திருச்செந்தூரு முருகா

குழு்:
கஞ்சுன மேல நெய்மேல எடையமேல நல்ல மேல
முல்லக்காடு கோவக்காடு பூச்சிக்காடு பொம்மாரிக்காடு
குறும்பூரு நல்லூரு ஆத்தூரு பனையூரு
வல்லநாடு மொராப்ப நாடு தெய்வ செயல் புதங்கோயிங்

ஆண்:
பொண்ணுங்கள தேடிபாத்தேன் வள்ளிய கண்டு பிடிச்சேன்
பத்தாயிரம் கலெக்டிங் கல கல கல கலெக்டிவ்
திருச்செந்தூரு முருகா திருச்செந்தூரு முருகா
தெருத் தெருவா அலையவச்சா திருச்செந்தூரு முருகா
ஏ........ ஹேய்........... தேவதையா வந்தா தலவலியதந்தா
தேடித்தேடி திரிய வச்சா திருச்செந்தூரு முருகா
காசுக்கு காயிரம் கடத்தெரு மேயிரம்
கண்டபடி பாயிரம் காணலயே
அவ வள்ளியா இல்ல கள்ளியா
கொஞ்சம் குள்ளியா சினிமா வில்லியா
அவ ஒல்லியா குண்டு மல்லியா
காஞ்ச சுள்ளியா கருங்கல்லு ஜல்லியா (திரு)

லோக்கலு ஆளுமில்ல அவுட்டரில் பாத்ததில்ல
அவளினி மாட்டிக்கிட்டா கதகளிதான் (அவ)

திருச்செந்தூரு முருகா
வாகஷம் வந்தும் தர எறங்கும்
ப்ளைட்டில் கூட தேடிபாத்து புட்டோம்
காலையில தெனம் ஸ்டேஷன் வரும்
முத்துநகர் ட்ரெயின பொரட்டிப் புட்டோம்
பனிமாதா கோயிலு மணிய
கயிறே இல்லாம அடுச்சுப்புட்டா

குழு்:
அவ கீர வட நாம நாடார் கட
காசு கெடைக்கலையினா தேடி மூஞ்சிய ஒட
அவ சிக்கட்டும் சிக்குஎடுப்போம்
அவ நெட்டையா இல்ல குட்டையா
புளியங்கொட்டையா நாட்டுக்கட்டையா
அவ ஒத்தையா இல்ல ரெட்டையா
கிழிஞ்ச சட்டையா கழுத மூட்டையா

பெண்:
ஆ...... கணபதி சரணம் கணபதி சரணம்
கணேஷ சரணம் கணபதியே
ஐந்து கரத்தினை யானை முகத்தினை
அகிலம் முழுவதும் கணபதியே கணபதியே கணபதியே

ஆண்:
பிகருங்கெல்லாம் நம்ம அழுகவிட்டு
அட உப்பு தொழிலே உலகில் உருவாச்சு
கிரைண்டருல போட்ட அரிசியைப் போல்
பசங்க வாழ்க்க வெந்து நொந்து நூலா ஆச்சு
பொண்ண பூவுனு சொன்னது நால
நாரு நாராக கிழிக்குதுடா
அவங்கள தெய்வமின்னும் சாமி ஆடுறhங்க
ஒடும் ஆறு என்னும் காலவாரு ராங்க
குத்து வெளங்குன்னும் குத்துராங்க
அவ கேடியா திருட்டு சி.டி.யா
ஏ.பி. சீடியா கொப்பன் தடியா
அவசிட்டியா பட்டி தொட்டியா
கொரங்கு புத்தியா குதிர லத்தியா (திரு)

Thaamirabharani - Thiruchendhuru Muruga

தாமிரபரணி - வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு

ஆண் :
வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு கொல்லப்பாக்குதே
அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டபாக்குதே........
நான் திமிரா செஞ்ச காரியமொண்ணு தப்பா போனதே
என் தாமிரபரணி தண்ணி இப்போ உப்பா போனதே
எனக்கு சொந்தமில்லை என்று சொன்ன உடன்
மனசு வெறுத்துப் போச்சே
என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி
இதயம் சுருங்கிப் போச்சே (வார்த்த)

உறவுகள் எனக்கது புரியல
சில உணர்வுகள் எனக்கது வெளங்கல
கலங்கர வெளக்கமே இருட்டிலே
பெத்ததுக்கு தண்டனையை கொடுத்துட்டேன்
அவன் ரத்தத்தில் துக்கத்த நான் தெளிச்சிட்டேன்
அன்புல அரளிய வெதச்சிட்டேன்

அட்டகத்தி தான்னு நான் ஆடிப்பாத்தேன் விளையாட்டு
வெட்டுக்கத்தியாக அது மாறி இப்ப வெனையாச்சு
பட்டாம் பூச்சி மேலே ஒரு கொட்டங்குச்சி மூடியதே
கண்ணாமூச்சி ஆட்டத்திலே கண்ணே இப்ப காணலியே
வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு
படச்சவன் போட்ட முடிச்சிது
என் கழுத்துல மாட்டி இருக்குது
பகையிலே மனசு தான் பதருது கனவுல பெய்யிர மழ இது
நான் கைதொடும் போது மறையுது
மேகமே சோகமா உறையுது
சுரைத் தேங்கா போல என்ன சுக்கு நுறா ஒடைக்காதே
சொக்கபன மேலே நீ தீய அள்ளி வீசாதே
எட்டி எட்டி போகையிலே 
கூட்டாஞ்சோறு ஆக்கையிலே பேயிக் காத்து வீசியதே (வார்த்த)

Thaamirabharani - Vaartha Onnu

தாமிரபரணி - கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான்

கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான் 
காதல் என் காதல் பூபூகுதம்மா 

கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான் 
காத ல் என் காதல் பூபூகுதுஅம்மா 
மனசுக்குள்ளே பேய் பிடிச்சு ஆட்டுதம்மா 
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா 
அவன் மீசை முடியை செஞ்சுக்குவேன் மோதிரமா 

சிவப்பாக இருக்காளே கோவை பழமா 
கலரு இவ கலரு என்னை இழுக்குதம்மா 
அறுகம்புல்லு ஆட்டை இப்போ மீயுதம்மா 
பார்வையாலே ஆயுள்ரேகை தேயுதம்மா 
இவ காதல் இப்போ ஜோளியதான் காட்டுதம்மா 

கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான் 
காதல் என் காதல் பூபூகுதம்மா 

(இசை )


வெள்ளிகிலமா 10.30 - 12 உன்னை பார்த்தேனே 
அந்த ராவுகல நேரம் எனக்கு நல்ல நேரமே 
தண்ணியால என்னக்கு ஒன்னும் கண்டமில்லையே 
ஒரு கன்னியால கண்டம் ஏன்னு தெரியவில்லையே 

ஆத்துக்குள்ள மீன்பிடிக்க 
நீச்சல் தெரியனும் 
காதல் கடலுக்குள்ள முத்து எடுக்க 
பாய்ச்சல் புரியனும் - அய்யா 

சிவப்பாக - ஆகா 
இருப்பாளே - ஆமா 
சிவப்பாக - அஹஹஹ 

சிவப்பாக இருக்காளே கோவை பழமா 
கலரு இவ கலரு என்னை இழுக்குதம்மா 


(இசை )

ஒ உருக்கிவச்ச இரும்பு போல உதடு உனக்கு 
அத நெருங்கும் பூத்து கரண்ட்டு போல ஷோக்கு என்னக்கு 
ஹே வெட்டும்புலி தீப்பெட்டி போல் கண்ணு உன்னக்கு 
நீ பாக்கும் போது பத்திகிச்சு மனசு எனக்கு 

பூமியில எத்தனையோ பூவு இருக்கு 
உன் பூ பூட்ட பாவாடை மேல் எனக்கு கிறுக்கு - எம்மா , ஆத்தா 

கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான் 
காதல் என் காதல் பூபூகுதம்மா 
மனசுக்குள்ளே பேய் பிடிச்சு ஆட்டுதம்மா 
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா 
இவ காதல் இப்போ யோளியதான் காட்டுதம்மா 

கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான் 
காதல் என் காதல் பூபூகுதம்மா 
பூகுதம்மா ....தனனானன ...தனனானன

Thaamirabharani - Karuppaana Kaiyale

தாமிரபரணி - தாலியே தேவ இல்ல

தாலியே தேவ இல்ல
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி
உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
மாமா மாமா நீதான் நீதானே

அடி சிறுக்கி
நீதான் என் மனசுக்குள்ளெ
அட கிருக்கி
நீதான் என் உசுருக்குள்ளெ
உன்ன நெனச்சு
நான் நடந்தேன் என் ஊருக்குள்ளெ
என்ன உருக்கி

தாலியே தேவ இல்ல
நான் தான் உன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரி பாதி
ஆஹ் ஆஹ்…

ஆஹ் ஆஹ்…

பத்து பவுனு பொன் எடுத்து
கங்கு குள்ள காய வெச்சு
தாலி ஒன்னு செய்ய போறேன்
மானே மானே
நட்ட நடு நெத்தியிலெ
ரத்த நெர பொட்டுவெச்சு
உன் கை புடிச்சு ஊருக்குள்ளெ
போவேன் நானே
அடி ஆத்தி
அடி ஆத்தி
மனசுல மனசுல மயக்கம்
இது என்ன
இது என்ன
கனவுல கனவுல கொழப்பம்
இது காதல் இல்ல
அதுக்கும் மேலதான்
அட கிருக்க
நான் உனக்காக பொறந்தவடா
அட கிருக்க
நான் உனக்காக அலைஞ்சவடா
உன்ன நெனச்சு
ஆஹ் ஒஹ்..
ஆஹ் ஒஹ்..

தாலியே தேவ இல்ல
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி
ஆஹ் ஆஹ்…

எட்டு ஊரு சந்தையில
எம்பது பேர் பாக்கையில
உன்ன கட்டி புடிச்சு கடிக்கபோறேன்
நானே நானே
ஹே குற்றவியல் நீதிமன்ற
கூண்டுகுள்ளெ நிக்கவெச்சு
கேசு ஒன்னு போட்டுருவேன்
மானே மானே
அடி ஆத்தி
அடி ஆத்தி
எனக்கிப்போ பிடிக்கிது உன்ன
இது என்ன
இது என்ன
நான் எத்தன தடவ சொன்னேன்
இது காதல் இல்ல
அதுக்கும் மேலதான் ஹோ..
அடி சிருக்கி
நீ தாய் மாமன் சீதனமே
உன்ன நெனச்சு
நான் முழுசாக தேயணுமே
என்ன உருக்கி
ஒஹ் ஹோ…

தாலியே தேவ இல்ல
நாந்தான் உன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி

Thaamirabharani - Thaaliyae Thevaiyillai

வருஷம் 16 - பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்

நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்

கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
பந்தங்கள் யாவும் தொடர்கதைபோல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நெய்கின்ற இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விலங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திலைத்திட
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்

நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்

கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்

Varusham 16 - Pazhamuthir Cholai

வசூல் ராஜா M.B.B.S - சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
விடிய மட்டும் விடிய மட்டும் தேன் போன டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே கானா போன டோய்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
எவ்விடத்தில் காய்ச்சல் உண்டோ
அவ்விடத்தில் முத்தம் இட்டா
பிடிச்ச நோய் ஓடி போகும்
உச்சியிலே துடி துடிச்சா
உடம்புகுள்ளே உடுக்கடிசா
பிடிச்ச பேய் ஓடி போகும்
வாய்த்து மட்டும் நிறைச்சி கிட்டு
நான்கு புலன் பட்டினியா
கெடந்தா யாருக்கு லாபம்
லஞ்சுகொரு மஞ்சுளாவும்
டின்னருக்கு வென்னிலாவும்
இருந்த இளமைக்கு யோகம்
உலகம் இன்பதுக்கு ஏங்கி கெடக்கு
ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறி கெடக்கு
தப்புகள் இல்லயென்றால் தத்துவம் இல்லையடா
தத்துவம் பிறக்கட்டுமே தப்பு பண்ணேன்டா
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
விடிய மட்டும் விடிய மட்டும் தேன் போன டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே கானா போன டோய்
என்னுடய தேகம் இது
எங்கு எப்போ வெக்கப்படும்
என்னை ஒரு வாட்டி கேளு
அர்த்தமில்லா வார்தைகளின்
அர்த்தங்களை அறியணுமா
அதுக்கு இதுதான்டா ஸ்கூலு
வேலி கட்டி வெச்சாலும்
வெள்ளை தொல்லை பாத்துபுட்ட
கடத்த துடிக்குதடா காலு
மங்கில இருந்து
ஒரு மனுச பையன் வந்தாலும்
இன்னும் போகலயே வாலு
ஓடும் தண்ணியில பாசியில்லையே
உணர்ச்சி கொட்டி புட்டா நோயும் இல்லயே
வாழ்கை வாழ்வதெற்கே ஜெமினி எடுத்த படம்
அத நான் உனக்கு மட்டும் காட்ட போறேன்டா
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
விடிய மட்டும் விடிய மட்டும் தேன் போன டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே கானா போன டோய்

Vasool Raja MBBS - Siruchi Seena Thana

வேதம் புதிது - கண்ணுக்குள் நூறு நிலவா

கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா

கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

(சம்பசாம்பவி சந்ரமௌளிதகலா
வர்ண உமா பார்வதி
காளி பைபவத்தீ ஷிவற்றி நயன
காத்யாயனி பைரவி
சாவித்ரி நவயுவன சுபகாரி
சாம்ராஜ்ய லட்ஷ்மிப்ரதா…)

தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா

கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா

வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது

சாத்திரம் தாண்டி தப்பி செல்வதேது

கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

(பூவே…பெண் பூவே…
இதில் என்ன அதிசயம், இளமையின் அவசியம்
இது என்ன ரகசியம், இவன் மனம் புரியலயா ? )
ஆணின் தவிப்பு அடங்கி விடும்
பெணின் தவிப்பு தொடர்ந்து விடும்

உள்ளம் என்பது உள்ளவரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்

என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண் உள்ளம் இன்று ரெண்டானது

ரெண்டா ? ஏது ? ஒன்று பட்ட போது..

கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை

ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா

கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா

கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

Vedham Pudhithu - Kannukkul Nooru

வீரா -ஆத்துல அன்னக்கிளி

ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி
ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி
என்னை ஏன் தொறத்துன மனச ஏன் வருத்துன
உனக்கு நா ஒருத்துனா எப்பவும் இருப்பனா
அடி அச்சாரம் போடாம ஆடுதடி லோலாக்கு
பூங்கலத்து ஏன் ஆடுது உன் பொன் உடம்பு ஏன் வாடுது
பூங்கலத்து ஏன் ஆடுது உன் பொன் உடம்பு ஏன் வாடுது
ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி
ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி

Veera - Aathile Annakili

வீரா - மாடத்திலே கன்னி மாடத்திலே

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே 
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளை

ஆண் : மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி

இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளை

ஆண் : மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி

இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு

இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு சிக்கு சக்கு சிக்கு சக்கு
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு சிக்கு சக்கு சிக்கு சக்கு (இசை)

பெண்குழு : மாமா எண்ணெய் தேய்க்கலாமா ஆண்குழு-1: ஓ...ஓ..
பெண்குழு : மாமி காத்திருக்கலாமா
ஆண்குழு-1: ஓ...ஓ..

இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு சிக்கு சக்கு சிக்கு சக்கு
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு சிக்கு சக்கு சிக்கு சக்கு 

***

ஆண் : டாலடிக்கிற நல்ல வைர ஆட்டி
போலிருக்கிற நீதான் ரொம்ப சுட்டி ஆ.ஹா..ஓஹோ..ஏஹே ஹேஹே..

பெண் : ஆசை வைக்கிறேள் இப்ப ரொம்ப நன்னா
மாலையிட்டதும் மாறக் கூடாதுன்னா

ஆண் : பூ நூலே சாட்சி பொம்மனாட்டி ஆட்சி
ஸ்ரீ கிருஷ்ணன் நானால்லடி

பெண் : இப்போது பார்ப்பேள் என் பேச்சை கேட்பேள்
பின்னால என்னாவேனோ..

ஆண் : ஆன போதும் இங்கு ஆத்துக்காரி
ரொம்ப கண்ட்ரோல் பண்ணா கண்ட்ரோல் ஆகாதடி

இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளை

ஆண் : மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி வாடின்னா...

இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு (இசை)

இரு குழு : ம்..ஹும்..ஹுஹுஹும்..ம்..ஹும்..ஹுஹுஹும்..
ம்..ஹும்..
பெண்குழு : ஆ..ஆ..ஆ...ஆ...

***

ஆண் : அட்ஜஸ் பண்ணி கூட நீ இருப்பியோ
அடங்காத அலமு போல் இருப்பியோ ஆஹா..ஓஹோ..ஹா.ஹா.ஹா.

பெண் : சட்ட திட்டம் தான் கையில் வச்சிருப்பேளே
ஃபாளோ பண்லேனா நீங்க என்னை நச்சரிப்பேளா

ஆண் : மத்யான நேரம் பாய் போட சொன்னா
மாட்டேன்னு சொல்லுவியோ..ஹா..

பெண் : மாட்டேன்னு சொன்னா சும்மாவா விடுவேள்
மேட்னி ஷோ கூப்பிடுவேள் ஏன்னா

ஆண் : நாளை சங்கதி நாளை பார்க்கலாம்
மானே இப்போ வாடி அணைச்சிக்கலாம்

இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளை

ஆண் : மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி 

இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே..

Veera - Maadathileh Kanni

வீரா - வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்

ஆண் : வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

பெண் : வாய்யா வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

ஆண் : முந்திபோட்டு கொஞ்சுறபோது
பந்தி ஒண்ணு வைக்க வேணும்

பெண் : அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
சுந்தரிக்கு முந்திரிப் பந்தல்

ஆண் : எடம் பாத்து அடிச்சா கண்ணு…
தக்கிட ..தகதிமி தகஜுனுதோம்

பெண் : வாய்யா வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

***

பெண் : விடவே மாட்டேன் வா மாமா

ஆண் : ஆ..வரலாமா வரலாமா வரலாமா

பெண் : அது தான் கேட்டேன் தா மாமா

ஆண் : ஹா..தரலாமா தரலாமா தரலாமா

பெண் : ஓஹோ.ஹோ… விடவே மாட்டேன் வா மாமா
அதுதான் கேட்டேன் தா மாமா
நடுச்சாமம் ஆனாக்க தூக்கமில்லை

ஆண் : ஹா.ஹோஆஹா

பெண் : நடுச்சாமம் ஆனாக்க தூக்கமில்லை
அட நீயுந்தான் ஏனின்னு கேக்கவில்லை

ஆண் : ஹா.. ஊத காத்து பட்டாலே

பெண் : ஹா..கொதிக்காதா கொதிக்காதா கொதிக்காதா

ஆண் : மாமன்காரன் தொட்டாலே

பெண் : ஹும்.. குளிராதா குளிராதா குளிராதா

ஆண் : ஓ..ஓ..ஓ....ஊத காத்து பட்டாலே
மாமன்காரன் தொட்டாலே
கொதிப்பேறிச் சூடேறும் மெல்ல மெல்ல

பெண் : ஹா..ஹோ..ஹா..

ஆண் : கொதிப்பேறிச் சூடேறும் மெல்ல மெல்ல
மனம் குஷி ஏறி கூத்தாடும்
சொல்லச் சொல்ல

பெண் : எடம் பாத்து அடிச்சா கண்ணு…
தக்கிட ..தகதிமி தகஜுனுதோம்

ஆண் : ஆ..ஹா….
வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ ஹா…

***

ஆண் : புதுசா சுட்ட பணியாரம்

பெண் : ஹா..எடுத்துக்கோ எடுத்துக்கோ எடுத்துக்கோ

ஆண் : கடிச்சா கொஞ்சம் பசியாறும்

பெண் : ஹ..கடிச்சுக்கோ கடிச்சுக்கோ கடிச்சுக்கோ

ஆண் : ஓ..ஓ..ஓ.. புதுசா சுட்ட பணியாரம்
கடிச்சா கொஞ்சம் பசியாறும்
சுட சுட இப்பவே தந்திடணும்

பெண் : ஹா.. ஹோ.. ஹா..

ஆண் : சுட சுட இப்பவே தந்திடணும்
கை பட பட பக்கத்தில் வந்திடணும்

பெண் : வெடலப் பொண்ண கண் வச்சு

ஆண் : ஹா.. வளைக்கட்டா வளைக்கட்டா வளைக்கட்டா

பெண் : உரசி கொஞ்சம் கை வச்சு

ஆண் : ஆஹா புடிக்கட்டா புடிக்கட்டா புடிக்கட்டா

பெண் : ஓஹோ..ஹோ.. வெடலப் பொண்ண கண் வச்சு
உரசி கொஞ்சம் கை வச்சு

பெண் : வலிக்காம தேனள்ளி குடிச்சுக்கைய்யா

ஆண் : ஹா..ஹோ..ஹ.ஹா..

பெண் : வலிக்காம தேனள்ளி குடிச்சுக்கைய்யா
மிச்ச விஷயத்த ஒழுங்காக முடிச்சுக்கைய்யா

ஆண் : எடம் பாத்து அடிச்சா கண்ணு…
தக்கிட ..தகதிமி தகஜுனுதோம்

பெண் : வாய்யா வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

ஆண் : ஓ..முந்திபோட்டு கொஞ்சுறபோது
பந்தி ஒண்ணு வைக்க வேணும்

பெண் : அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
சுந்தரிக்கு முந்திரிப் பந்தல்

ஆண் : எடம் பாத்து அடிச்சா கண்ணு…
தக்கிட ..தகதிமி தகஜுனுதோம்

ஆண் : வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ....

Veera - Vaadi Vethala Paakku

வீரா - கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
ஓ… அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னை பாடுவேன்
மனதில் இன்ப தேனும் ஊறும்

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது
மேகம் வந்து தாலாட்ட
போன் மயில் ஆடுது வெண்பனி தூவுது
பூமி எங்கும் சீராட்ட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
அன்னங்களின் ஊர்வலம்…..
ச க ரி ம க ம ம ட ப நி ட ச நி ரி நி
சுவாரங்களின் தோரணம்
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில்
மாதர் தம்மை மறந்தாட
ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னே
ஆற்றில் பொர்க்கோள் அலையாட
காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
இயற்கையின் அதிசயம்
ச க ரி ம க ம ம ட ப நி ட ச நி ரி நி
வானவில் ஓவியம்….
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னை பாடுவேன்
மனதில் இன்ப தேனும் ஊறும்

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

Veera - Konji Konji

வீரா - மலை கோயில் வாசலில்

ஓ…
மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே
ஓ…
நாடகம் ஆடிய பாடகன்.. ஓ..
நீ இன்று நான் தொடும் காதலன்..ஓ..

நீ சொல்ல நான் மெல்ல மாறினேன்
நன்றியை வாய் விட்டு கூறினேன்

தேர் அழகும் சின்ன பேர் அழகும்
உன்னை சேராத உடன் வாராதா

மான் அழகும் கெண்டை மீன் அழகும்
கண்கள் காட்டாத இசை கூட்டாத

பாலாடை இவன் மேலாட
வண்ண நூலாடை இனி நீயாகும்
மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
நான் ஒரு பூச்சரம் ஆகவோ..
நீழ் குழல் மீதினில் ஆடவோ..

நான் ஒரு மெல்லிசை ஆகவோ..
நாளும் உன் நாவினில் ஆடவோ

நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோரும் உந்தன் சீர் பாடும்

பூ மரத்தில் பசும் பொன் நிறத்தில்
வளை பூத்தாடும் உந்தன் பேர் பாடும்

மா கோலம் மழை நீர் கோலம்
வண்ண நாள் காணும் இந்த ஊர்கோலம்
மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே

விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

Veera - Malai Kovil Vaasalil

வேலைக்காரன் - வா வா வா கண்ணா வா

வா வா வா கண்ணா வா
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா

உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான் தனிமையில்
உனக்கொரு சிறுகதை நான்
தொடத் தொட தொடர்கதை தான்
உருகி உருகி இதைப் படித்திட
வா வா வா வா கண்ணா வா
வா வா வா

வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழு வண்ணமோ
தோகை உந்தன் தேகம் சூட மேகமாலை பின்னுமோ

காணும் இந்த பூக்கள் மேலே காயம் என்ன காயமோ
காற்சலங்கையோடு வண்டு பாடிச் சென்ற மாயமோ

நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகை
வாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை

நாலு கண்கள் பாதை போட
நாகரீகம் தொடர்ந்தது

வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா

எனக்கொரு சிறுகதை நீ இனிமையில்
தொடத் தொட தொடர்கதை நீ தனிமையில்
எனக்கொரு சிறுகதை நீ
தொடத் தொட தொடர்கதை நீ
உருகி உருகி உனைப் படித்திட
வா வா வா அன்பே வா
வா வா வா

ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே
ஆவலாக வந்த பின்னும் தஞ்சம் இந்த நெஞ்சமே

ஆசை கொண்ட தேகம் ரெண்டு நீதி மன்றம் போகுமே
பேசத் தேவை இல்லை என்றே அங்கு தீர்ப்பு ஆகுமே

ராக வீணை போலவே நானும் வந்து போகவோ
தேகம் வீணை ஆகவே தேவ கீதம் பாடவோ

நானும் நீயும் காதல் கைதி
எண்ண எண்ண இனிக்குது

வா வா வா அன்பே வா
தா தா தா அமுதம் தா

காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான்
கம்ப நாடன் உன்னை கண்டு சீதை என்று துள்ளுவான்

ஜாஜஹானை பார்த்ததில்லை நானும் உன்னை பார்க்கிறேன்
தாகம் கொண்ட தேகம் ஒன்று பாடும் பாடல் கேட்கிறேன்

தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்
மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்

பாதி நீயும் பாதி நானும்
ஜோதியாக இணைந்திட

வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா

எனக்கொரு சிறுகதை நீ

இனிமையில்

தொடத் தொட தொடர்கதை நீ

தனிமையில்

எனக்கொரு சிறுகதை நீ…ஆ…
தொடத் தொட தொடர்கதை நீ…ஆ…
உருகி உருகி உனைப் படித்திட
வா வா வா அன்பே வா
வா வா வா

Velaikaran - Va Va Va Kanna

வென்னிலா கபடி குழு - லேச பறக்குது மனசு மனசு

காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
மௌனம் புரிகின்ற தருனம் தருனம்
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்

லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேச நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல

சுண்டெலி வளையில நெல்லப் போல
அந்த உன் நெனப்ப எனக்குள்ள சேர்க்கிற
அள்ளிப் பூ கொளத்துல
கல்ல போல் அந்த
கண் விழி தாக்கிட
சுத்தி சுத்தி நின்ன

கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்

லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேச நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல

தத்தி தத்தி போகும்
காய்ச புல்ல போலே
பொத்தி வெச்சி தானே
மனசு இருந்ததே
திருவிழா கூடத்தில்
தோலையுர சுகமா

தொண்ட குழி தாண்டி
வார்த்தை வர வில்ல
என்னனெவோ பேச
உதடு நெனச்சது
பார்வையை பார்த்ததும்
இதமா பதறுது

ராதிரி பகல தான்
நெஞ்சில ராட்டினம் சுத்துதடி

பூடின வீடில தான்
புதுச பட்டாம் பூசி பறக்குதட

கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்

லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல

பூவா விறியுர உலகம் உலகம்
தரிசா கெடந்தது இது வரை

ஒத்த மரம் போல
செத்து கெடந்தனே
உன்ன பார்த்த பின்ன
உசுரு பொழச்சது

சொந்தமா கெடப்பியா
சாமிய கேட்பேன்

ரெட்ட ஜடை போட்டு
துள்ளி திரிஞ்சேனே
உன்ன பார்த்த பின்னே
வெட்கம் புரிஞ்சதே

உனக்கு தான்
உனக்கு தான்
பூமியில் பொறந்தேன்

காவடி சுமப்பது போல்
மனசு காதல சுமக்கதுடா

கனவுல நீ வருவ
அதனால் கண்ணு தூங்குதடி

கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்

Vennila Kabadi Kuzhu - Lesa parakkathu

வெற்றி விழா - தத்தோம் தளாங்கு தத்தோம்

தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும் கொடியாய் தாங்கும் தகதோம்….

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்…
தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும் இளமைதான் கொடி காட்டும் ஹோய்…

தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
இரவில் உன்னோடு நர்த்தனம் தான்
இடையில் உண்டாகும் சத்தம்
உறவில் முன்னூறு கீர்த்தனம் தான்
இதழில் கொண்டாடும் முத்தம்

சுதந்திரம் தினம் தினம் தான்
நிரம்தரம் சுகம் சுக ம்தான்
நலம் பெறும் மனம் மனம் தான்
வலம் வரும் நகர்வலம் தான்

இணையத்தான் இணையத்தான்
அணையத்தான் அணையத்தான்

ஒரு அத்தான் ஒரு அத்தான்
உருகத்தான் உருகத்தான்

திசை எட்டும் இசை எட்டும் தாளங்கள் முழங்கட்டும் ஹோய்…
தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும் கொடியாய் தாங்கும் தகதோம்….

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்…
தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும் இளமைதான் கொடி காட்டும் ஹோய்…

தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
கழுவும் தண்ணீரில் நழுவிடுமே
வலையில் சிக்காத மீன்கள்
தடைகள் இல்லாமல் தாவிடுமே
தடைகள் கொண்டாடும் மான்கள்

சிறையினில் பறவைகள்தான்
சிறகினை விரித்திடத்தான்
பிறந்தது துணிச்சலுந்தான்
பறந்திடும் இருப்பிடம்தான்

இதயத்தில் துணிவைத்தான்
குடி வைக்கும் குடி வைக்கும்

எதிரிக்கும் உதிரிக்கும்
வெடி வைக்கும் வெடி வைக்கும்

திசை எட்டும் கொடி கட்டும் தாளங்கள் முழங்கட்டும் ஹோய்…
தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்…

தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும் கொடியாய் தாங்கும் தகதோம்….

தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும் இளமைதான் கொடி காட்டும் ஹோய்…

தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்

Vetri Vizha - Thathom Talangu

வெற்றி விழா - பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே

பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று

நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று

தீர்த்த கரை ஓரத்திலே

தேன்சிட்டுகள் உள்ளதிலே

கல்யாண வைபோகம்தான்

நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று

மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு
மோக பண் பாடுதே
மேலை காற்றோடு கை சேத்து நாணல்
காதல் கொண்டாடுதே

ஆலம் விழுதோடு கிளி கூட்டம் ஆடும்
காலம் இதுவல்லவா
ஈர சிறகோடு இசை பாடி திரியும்
நேரம் இதுவல்லவா

ஏதேதோ எண்ணம் தோன்ற ஏகாந்தம் இங்கே

நான் காணும் வண்ணம் யாவும் நீதானே அன்பே

வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்

ஆசைகள் ஈடேர கூடும்

பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று

ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடுதான்
தேவி ஸ்ரிதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்

நீல வான் கூட நிறம் மாறி போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன
காதல் தடம் மாறுமா

ஓயாமல் உன்னை கொஞ்சும்
ஊதாபூ வண்ணம்

ராஜாவின் முத்தம் கொள்ளும்
ரோஜாபூ கன்னம்

வாடை தீண்டாத வாழை தோட்டம்

ஆனந்த எல்லைகள் காட்டும்

பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று

நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று

தீர்த்த கரை ஓரத்திலே

தேன்சிட்டுகள் உள்ளதிலே

கல்யாண வைபோகம்தான்
பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று

Vetri Vizha - Poongatru Un Peru Solla

வேட்டையாடு விளையாடு - வென்னிலவே வெள்ளி வெள்ளி நிலவே

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்..

மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் காட்டுதே

தயக்கங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே….

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிகொண்டு வந்தாய்..

உலகத்தின் கடைசி நால்
இன்று தான்…என்பதுபோல்
பேசி பேசி தீர்த்தபின்னும்
ஏதோ ஒன்று குறையுதே…

உள்ளே ஒரு சின்னசிறு
மரகத மாற்றம் வந்து
குறுகுறு மின்னல் என்ன
குறுக்கே ஓடுதே…

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்
வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்..

மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் காட்டுதே

தயக்கங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே…

வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சிலர்
நடக்கிறார் நடக்கிறார்
அஹ் ..மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்யுது பெய்யுது மழை
நனைகிறார் நனைகிறார்

யாரோ யாரோ யாரோ அவள்
ஹே..யாரோ யாரோ யாரோ அவன்
ஒரு கோடும் கோடும் வெட்டிகொள்ள
இரு தண்டவாளம் ஒட்டி செல்ல…

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்
வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் குட்டிகொண்டு வந்தாய்..

இன்னும் கொஞ்சும் நிலவனும்
இந்த நொடி இந்த நொடி
எத்தனையோ காலம் தள்ளி

Vettaiyaadu Vilaiyaadu - Vennilave Velli Velli

Followers