Pages

Search This Blog

Showing posts with label Kannukkul Nilavu. Show all posts
Showing posts with label Kannukkul Nilavu. Show all posts

Tuesday, December 17, 2013

கண்ணுக்குள் நிலவு - ஒரு நாள் ஒரு கனவு

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது

வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திர பூ பறிப்போம்
வெள்ளி திரை படகேடுத்து ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது

நதியோரம் நதியோரம் என்னை சுற்றி பறந்தது கிழி கூட்டம் ம்ம்ம் ...
கிளிகூட்டம் கிளிகூட்டம் வந்ததேனில் நீயொரு பழத்தோட்டம் ம்ம்ம் ...
பறக்கும் கிளிகளிலே ஒரு கிளி உன்னை போல் உருவெடுக்க
கிளியே உனக்காக நானும் கிளி போல் அவதரிக்க
ரக்கைகள் கொண்டு வா விண்ணிலே பறப்போம்..
உள்ளங்கள் கலப்போம் வண்ணம் சூடும் வண்ணகிளி

 

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது

 

எதனாலே வெண்ணிலவே அவள் போல் நீயும் இளைத்தாயோ
உன் மனதை உன்மனத்தை எனை போல் எவருக்கும் கொடுத்தாயோ ஹோ
ஒளி விடும் முகத்தினிலே கரை ஏன் முத்த அடையாளங்களோ
இரவில் விழித்திருந்து நீ தான் கற்றதென்ன பாடங்களோ
மின்னிடும் கண்ணிலே என்னவோ உள்ளதே
சொல்லம்மா சொல்லம்மா ..நெஞ்சில் ஆடும் மின்னல் கோடி

 

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திர பூ பறிப்போம்
வெள்ளி திரை படகேடுத்து ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட


ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது

Kannukkul Nilavu - Oru Naal Oru Kanavu

கண்ணுக்குள் நிலவு - இரவு பகலைத் தேட இதயம்

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
மின்னுகின்றதே விண்ணில் நட்சத்திரம் எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ...அச்சச்சோ...

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

வாழ்க்கை என்னும் பயணம் இங்கே தூரம் தூரம்
எங்கே மாறும் எங்கே சேரும் சொல்லும் காலம்
தென்றல் வந்து பூக்கள் ஆடும் அதுவொரு காலம்
மண்ணில் சிந்தி பூக்கள் வாடும் இலையுதிர் காலம்
கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும் தனியாக அழகில்லையே
கடலைச் சேரா நதியைக் கண்டால் தரையில் ஆடும் மீனைக் கண்டால்
ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால் அச்சச்சோ...

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

வீசும் காற்று ஓய்வைத் தேடி எங்கே போகும்
பூக்கள் பேச வாயிருந்தால் என்ன பேசும்
மாலை நேரம் பறவைக் கூட்டம் கூட்டைத் தேடும்
பறவை போனால் பறவைக் கூடு யாரைத் தேடும்
நாடோடி மேகம் ஓடோடி இங்கே யரோடு உறவாடுமோ
அன்னையில்லா பிள்ளை கண்டால் பிள்ளையில்லா அன்னை கண்டால்
அன்பேயில்லா உலகம் கண்டால் அச்சச்சோ...

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
மின்னுகின்றதே விண்ணில் நட்சத்திரம் எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ...அச்சச்சோ...

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

Kannukkul Nilavu - Iravu Pagalai Theda

கண்ணுக்குள் நிலவு - ரோஜாப் பூந்தோட்டம்

ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்...

ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேந்துளி ஆடுதே
பூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே
நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்

விழியசைவில் உன் இதழசைவில்
இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி...ஒ ஒ ஒ ஓ...
புதிய இசை ஒரு புதிய திசை
புது இதயம் இன்று காதல் கிடைத்தடி...ஒ ஒ ஒ ஓ...
காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய் (2)
நீ நெருங்கினால் நெருங்கினால் இரவு சுடுகின்றதே

ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேந்துளி ஆடுதே
பூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே
நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்

உனை நினைத்து நான் விழித்திருந்தேன்
இரவுகளில் தினம் வண்ண நிலவுக்குத் துணையிருந்தேன்... ஒ ஒ ஒ ஓ...
நிலவடிக்கும் கொஞ்சம் வெயிலடிக்கும்
பருவனிலை அதில் என் மலருடை சிலிர்த்திருதேன்...ஒ ஒ ஒ ஓ...
சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில் (2)
என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன்

ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேந்துளி ஆடுதே
பூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே
நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்

Kannukkul Nilavu - Roja Poonthotam

கண்ணுக்குள் நிலவு - எந்தன் குயிலெங்கே

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்
கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்
என்னிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்

கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன்
படித்திடுமுன் அது புயல் காற்றினில் பறந்ததடி...ஒ ஒ ஒ ஓ...
கனவினிலும் என் நினைவினிலும்
கவிதைக்குரல் தினம் எனை அடிக்கடி அழைக்குதடி...ஒ ஒ ஒ ஓ...
அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய் (2)
வா எழுதலாம் எழுதலாம் புதிய கவிதைகளை

எந்தன் குயிலெங்கே இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்
கொஞ்சும் குயிலோசை இன்று கேட்டேன் இன்று கேட்டேன்
கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்
என்னிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்

மலர் மலரும் கொஞ்சம் இலை உதிரும்
கவலை விடு இதோ புது வசந்தங்கள் வருகிறதே...ஒ ஒ ஒ ஓ...
அழகழகாய் இனி பூ மலரும்
ரசித்திருந்தால் அது புது வாழ்க்கையின் வாசம் தரும்...ஒ ஒ ஒ ஓ...
என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும் (2)
என் வாசலின் தென்றலே மனதை வருடிவிடு

எந்தன் குயிலெங்கே இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்
கொஞ்சும் குயிலோசை இன்று கேட்டேன் இன்று கேட்டேன்
கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்
என்னிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்

Kannukkul Nilavu - Enthen Kuilenge

கண்ணுக்குள் நிலவு - நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு...ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்...நானும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்
குயில்கள் மலர்கள் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே
மழை வந்து நனைத்தது இசையன்னை செவியிலே
கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள் யாரந்தத் தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது இசையென்னும் அதிசயம்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

Kannukkul Nilavu - Nilavu Paatu

கண்ணுக்குள் நிலவு - அடிடா மேளத்த

ஏய்...என்னடா நட...தாளம் தப்புது...
ஏய் தாளத்துல நடறான்னா...

யம்மா யம்மா...யம்ம தம்ம தம்ம தம்ம...தம்மா (2)

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

சாம்பாரே கேட்காத மச்சான் மச்சான்
விடிஞ்சாலே அட கூவாத கிச்சான் கிச்சான்
மாஞ்சாவே தடவாத கிட்டான் கிட்டான்
காத்தாடி அட நீலாவே கெட்டான் கெட்டான்

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

கட்டு கட்டா பணத்த அட சேத்து வெச்சவன் கொட்ட கொட்ட முழிப்பான்
கன்னக் கோலு மறைக்கும் அட மனுஷந்தாண்டா தூக்கம் கெட்டுத் தவிப்பான்
திருட்டுத் தனமா காதல் வளர்த்தவன் தெனமும் இரவில் கண் முழிச்சுக் கெடக்குறான்
நாமெல்லாம் யோக்கியந்தான் மச்சான் மச்சான் ஆனாலும் கண் முழிக்க வெச்சான் வெச்சான்
ஆசையில் பம்பரமா ஆட்டி வெச்சான் எல்லாமே யந்திரமா மாத்தி வெச்சான்

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

சங்கீதத்தின் சங்கதி சரிகமப தம்பிக்குச் சொல்லிக் கொடு
தம்பி சுருதி பிடிச்சா தம்மாரே தம்மு கொடு
லால்லா லால்லலல லால்லா லால்லலல லால்லா லால்லலல லால்லாலல்லா
கொறட்ட கொறட்ட ஜதி போடுது உருண்டு பொரண்டு ஊருலகம் ஒறங்குது
உறங்கும் கிளிகள் இப்ப வீட்டுல எழுப்பு எழுப்பு அட நம்ம பாட்டுல
சய்யாரே சிக்கிமுக்கி சிக்கிகிச்சு ஒய்யாரே வெக்கப்பட்டு ஒட்டிகிச்சு
கண்ணாலே கிச்சு முச்சு வச்சிகிச்சு தன்னாலே தொட்டு தொட்டு பத்திகிச்சு

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

சாம்பாரே கேட்காத மச்சான் மச்சான்
விடிஞ்சாலே அட கூவாத கிச்சான் கிச்சான்
மாஞ்சாவே தடவாத கிட்டான் கிட்டான்
காத்தாடி அட நீலாவே கெட்டான் கெட்டான்

Kannukkul Nilavu - Adida Melathai

Followers