Pages

Search This Blog

Showing posts with label Alaipayuthey. Show all posts
Showing posts with label Alaipayuthey. Show all posts

Thursday, December 29, 2016

அலைபாயுதே - யாரோ யாரோடி ஒன்னோட புருசன்

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு
சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை
வெளி வேட்டி கட்டியவனோ சொல்லு

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

தங்கத்துக்கு வேர்க்குது பாருங்க பாருங்க
சாந்து கண்ணும் மயங்குது ஏனுங்க ஆ
முத்தழகி இங்கே இல்லீங்க சொல்லுங்க
முத்தமிட்டு எங்கே தொடுங்க
மொத்தமாக சொல்லிக் குடுங்க
சொல்லிக் குடுங்க குடுங்க குடுங்க குடுங்க
கன்னிப் பொண்ணு நல்லா நடிப்பா அவ நடிப்பா
கட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
ஆத்தி அவந்தாண்டி உன் திமிருக்கு அரசன்
ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு
மல்லு வேட்டி கட்டி வந்த சல்லிக்கட்டு மாட்ட முட்டி
மல்லியப்பூ வெல்லப்போவுதடி நில்லு

...
கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம் (3)
கண்ணாலம்...கண்ணாலம்...பூங்கொடிக்குக் கண்ணாலம்...பூங்கொடிக்குக் கண்ணாலம்

பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு...ஆ
உரிமைக்காக ஒத்த முடிச்சு
உரிமைக்காக ஒத்த முடிச்சு அடியே
உறவுக்காக ரெண்டாம் முடிச்சு
ஊருக்காக மூணாம் முடிச்சு
முடிச்சு...முடிச்சு முடிச்சு முடிச்சு
பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன



Alaipayuthey - Yaro Yarodi

அலைபாயுதே - செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்

துன்பம் தொலைந்தது இன்பம் தொலைந்தது (2)

செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்


துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ!


இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ!


செப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்


துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ!


இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ!


ஏ பெண்ணே! காதல் என்பது இனிக்கும் விருந்து
கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து ஏன் கண்ணே?


நிறையை மட்டுமே காதல் பார்க்கும்
குறையை மட்டுமே கல்யாணம் பார்க்கும் ஏன் கண்ணா?


காதல் பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே


கிளிமூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்று
ரசிக்கும் ரசிக்கும் காதல்
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக
ஏன் ஏன் ஏன் மோதல்?
பெண்கள் இல்லாமல் ஆண்களுக் காறுதல் கிடைக்காது


பெண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காது
செப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்


நான் கண்டேன் காதல் என்பது கழுத்துச் சங்கிலி
கல்யாணம் என்பது காலில் சங்கிலி என் செய்வேன்;?


கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு
தொண்ணுhறு வரைக்கும் டூயட் பாடு வா அன்பே!


காதல் பொழுதில் விரும்பும் குறும்பு
கல்யாணக் கட்டிலில் கிடைப்பதில்லையே நண்பா!


பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை
காதல் காதல் அதுதான்
உறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம்
நாம் வாழ்வோம் வா! வா!
ஆண்கள் இல்லாமல் பெண்களுக் காறுதல் கிடைக்காது


ஆண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காது


செப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்


துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ



Alaipayuthey - September Madham

அலைபாயுதே - என்றென்றும் புன்னகை

என்றென்றும்……..
என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பார்வையிலே
என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பார்வையிலே

ஓ….. என்னுயிரே
ஓ….. என்னுயிரே
ஓ….. என்னுயிரே
ஓ ஓ ஓ….. என்னுயிரே

தீம் தீம் தனன, தீம் தனனன
ஓ ஓ ஓ வானமே எல்லையோ
தீம் தீம் தனன, தீம் தனனன
ஓ ஓ ஓ காதலே யெல்லயோ

தீம் தீம் தனன, தீம் தனனன
ஓ ஓ வானமே எல்லையோ
தீம் தீம் தனன, தீம் தனனன
ஓ ஓ காதலே யெல்லயோ

என்றென்றும்……..
என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பார்வையிலே
என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பார்வையிலே

ஓ….. என்னுயிரே
ஓ….. என்னுயிரே
ஓ….. என்னுயிரே
ஓ ஓ ஓ….. என்னுயிரே

தீம் தீம் தனன, தீம் தனனன
ஓ ஓ ஓ வானமே எல்லையோ
தீம் தீம் தனன, தீம் தனனன
ஓ ஓ ஓ காதலே யெல்லயோ

தீம் தீம் தனன, தீம் தனனன
ஓ ஓ வானமே எல்லையோ
தீம் தீம் தனன, தீம் தனனன
ஓ ஓ காதலே எல்லையோ



Alaipayuthey - Endrendrum Punnagai

Thursday, November 24, 2016

அலைபாயுதே - எவனோ ஒருவன் வாசிக்கிறான்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்தே யோசிக்கிறேன்
அதை தவனை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறேன்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்தே யோசிக்கிறேன்
அதை தவனை முறையில் நேசிக்கிறேன்
கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன்
ஊதும் ரகசியம் புரியவில்லை
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கம் இல்லா முன்னிரவில் என்
உள் மனதில் ஒரு மாறுதலா
உறக்கம் இல்லா முன்னிரவில் என்
உள் மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில் இது
எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு
இதுபோல் மருந்து பெரிதில்லையே
அந்தக் குழலைப்போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்




Alaipayuthey - Evano Oruvan

Wednesday, October 16, 2013

அலைபாயுதே - சினேகிதனே சினேகிதனே

நேற்று முன்னிரவில் உன்னி
நேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழைவதேனோ
உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பதேனோ
மனம் கலங்கி புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி

சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள்
செவிகொடு சினேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம்
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டுமே
சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே

சின்னச்சின்ன அத்துமீறல் புரிவாய்
என் Cell எல்லாம் பூக்கள் பூக்கச்செய்வாய்
மலர்களில் மலர்வாய்
பூப்பரிக்கும் பக்தன்போல மெதுவாய்
நான் தூங்கும்போது விரல்நகம் களைவாய்
சத்தமின்றி துயில்வாய்
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி
சேவைகள் செய்யவேன்டும்
நீயழும்போது நான் அழ நேர்ந்தால்
துடைக்கின்ற விரல் வேண்டும்
சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள்
செவிகொடு சினேகிதனே
(நேற்று முன்னிரவில்)

சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்
காதில் கூந்தல் நுழைப்பேன்
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
உப்புமூட்டை சுமப்பேன்
உன்னையள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து
கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்
வெளிவரும்போது விடுதலை செய்து
வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன்
(சினேகிதனே)

Alaipayuthey - Snehithane Snehithane

அலைபாயுதே - அலைபாயுதே கண்ணா

அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ

நிலைபெயறாது சிலைபோலவே நின்று
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா
என்மனம் அலைபாயுதே கண்ணா ஆ ஆ

தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே
திக்கைநோக்கி என்புருவம் நெறியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கதறிமனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ (2)
குழலூதிடும்பொழுது ஆடிகும் குழைகள்போலவே மனது வேதனைமிகவொடு
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ

Alaipayuthey - Alaipayuthey

அலைபாயுதே - பச்சை நிறமே

சகியே சிநேகிதியே
காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே சிநேகிதியே
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

பச்சை நிறமே பச்சை நிறமே
இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே
பச்சை நிறமே பச்சை நிறமே
இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே
எனக்கு சம்மதம் தருமே
எனக்கு சம்மதம் தருமே

கிளையில் காணும் கிளியின் மூக்கு
விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா
பூமி தொடாத பிள்ளையின் பாதம்
எல்லா சிவப்பும் உந்தன் கோபம்
எல்லா சிவப்பும் உந்தன் கோபம்

அந்தி வானம் அரைக்கும் மஞ்சள்
அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத்தோடு ஜனித்த மஞ்சள்
கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள்
எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்

சகியே சிநேகிதியே
காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

அலையில்லாத ஆழி வண்ணம்
முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்
குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்

இரவின் நிறமே இரவின் நிறமே
கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே
பெண்மை எழுதும் கண்மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே

சகியே சிநேகிதியே
காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே சிநேகிதியே
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே
மழையில் முளையும் தும்பை நிறமே
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே
விழியில் பாதி உள்ள நிறமே
மழையில் முளையும் தும்பை நிறமே
உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே

Alaipayuthey - Pachchai Nirame

அலைபாயுதே - காதல் சடுகுடுகுடு

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய்
மெதுவாய்ப் படர்வாய் என்றால்
நுரையாய்க் கரையும் அலையே
தொலைவில் பார்த்தால்
ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால் இல்லை என்றாய்
நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி
என்னைக் கொல்வாய் கண்ணே
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்
நானாக தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்
நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய்
என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே
என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே
என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே
நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி
என்னைக் கொல்வாய் கண்ணே
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே
உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே
நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி
என்னைக் கொல்வாய் கண்ணே
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

Alaipayuthey - Kadhal Sadugudu

Followers