Pages

Search This Blog

Showing posts with label Nattamai. Show all posts
Showing posts with label Nattamai. Show all posts

Friday, November 25, 2016

நாட்டாமை - நான் உறவுக்காரன் உறவுக்காரன்

ஆ: நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன்
நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்

பெ: நான் உறவுக்காரி உறவுக்காரி உறவுக்காரி
நீ கட்டிய வேட்டிக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரி

ஆ: என் பச்சரிசி நீதான் அச்சுவெல்லம் நாந்தான்
ஒன்னில் ஒன்னு கலக்கட்டுமே

பெ:ஏ.. ஆத்துக்குள்ள தோப்புக்குள்ள அய்யனாரு கம்மாக்குள்ள
நம்ம கொடி பறக்கட்டுமே..

ஆ: (நான் உறவுக்காரன்..)

ஆ: வெட்ட வெளியில் கொஞ்சம் தொட்டு கலப்போம்
இன்னும் விளக்கம் தேவையா?
பட்ட பகலில் ஒன்ன கட்டி புடிக்க
ஒரு வெளிச்சம் தேவையா?

பெ: விட்டு கொடு நீ கொஞ்சம் விட்டு கொடு நீ
என்று வழியா போறியா?
விட்டு கொடுத்தா இந்த கட்டி கரும்பா நீ
பிழிய போறயா?

ஆ: சொந்தக்கார பூவே சொல்லிக்கொஞ்சம் தாரேன்

பெ: சொல்லி கொடு மாமா அள்ளிதற வாரேன்

ஆ:(நான் உறவுக்காரன்..)

பெ: உன்ன நெனச்சு தினம் உன்னை நெனச்சு என் உசுரு உருகுது
உந்தன் நெனப்பில் இந்த பட்டு புடவ சும்மா வழுக்கி விழுகுது

ஆ: எந்த இடத்தில் அடி எந்த இடத்தில் என் இதயம் துடிக்குது
அந்த இடத்தில் அடி அந்த இடத்தில் என் ஆஸ்தி இருக்குது

பெ:அஞ்சு மணி வந்தா நெஞ்சுக்குள்ள பாட்டு

ஆ: பூத்திருச்சு பூவு இன்னும் என்ன பூட்டு

பெ: (நான் உறவுக்காரி..)

ஆ: (நான் உறவுக்காரன்..)

பெ: என் பச்சரிசி நீதான் அச்சுவெல்லம் நாந்தான்
ஒன்னில் ஒன்னு கலக்கட்டுமே

ஆ: ஏ.. ஆத்துக்குள்ள தோப்புக்குள்ள அய்யனாரு கம்மாக்குள்ள
நம்ம கொடி பறக்கட்டுமே..

Nattamai - Naan Uravukaaran

Thursday, December 26, 2013

நாட்டாமை - மீனா பொண்ணு மீனா பொண்ணு

ஆண் : மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு

பெண் : ஐயா கண்ணு ஐயா கண்ணு
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு

ஆண் : கொய்யா கண்ணு என் கொய்யா கண்ணு
குளிருக்கு அணைக்கணும் ஒண்ணுக்கொண்ணு

பெண் : ஊரான் பொண்ணு நான் ஊரான் பொண்ணு
மஞ்ச தாலி கொடுத்தா மாமன் பொண்ணு

ஆண் : அடி மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு

பெண் : ஐயா கண்ணு ஐயா கண்ணு
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு (இசை)

***

ஆண் : செவ்வானம் தொட்டு தொட்டு
செந்தூரம் கொஞ்சம் இட்டு
செவ்வல்லி பூவில் செய்த தேகமோ

பெண் : மலையோடு தோள்கள் வாங்கி
மதயானை தேகம் வாங்கி
பொலிவான தோற்றம் உந்தன் தோற்றமோ

ஆண் : குற்றால சாரலுக்கும் கொடைகானல் தூரலுக்கும்
இல்லாத சுகம் உந்தன் வார்த்தையோ

பெண் : நாடோடி மன்னனுக்கும் ராஜராஜ சோழனுக்கும்
உண்டான வீரம் உந்தன் வீரமோ

ஆண் : உன்னை முழுசாக முத்தம் இட வேணும்

பெண் : உன்னை முழம் போட்டு அள்ளி கொள்ள வேணும்

ஆண் : என் குலை வாழையே இலை போடவா
ஏன் இன்னும் தாமதம்

அடி மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு

பெண் : ஐயா கண்ணு ஐயா கண்ணு
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு

சரணம் - 2

பெண் : மாரோடு பள்ளி கொள்ள
தோளோடு பின்னி கொள்ள
கண்ணா என் நெஞ்சு குழி காயுதே

ஆண் : உன்னை வேரோடு அள்ளி கொள்ள
காம்போடு கிள்ளி கொள்ள
கண்ணே என் கையிரண்டும் தாவுதே

பெண் : உந்தன் பூ மாலை தாங்கி கொள்ள
பொன் தாலி வாங்கி கொள்ள
இப்போது என் கழுத்து ஏங்குதே

ஆண் : உன்னை அங்கங்கே தொட்டு கொள்ள
அச்சாரம் இட்டு கொள்ள
எப்போதும் இந்த உள்ளம் ஏங்குதே

பெண் : அட மச்சானே இன்னும் என்ன பேச்சு

ஆண் : அடி மாங்கல்யம் செய்ய சொல்லி ஆச்சு

பெண் : குயில் உன் பேரையும் என் பேரையும்
ஒண்ணாக கூவிச்சு

ஆண் : அடி மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு

பெண் : ஏய்..ஐயா கண்ணு ஐயா கண்ணு
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு

ஆண் : ஏ..கொய்யா கண்ணு என் கொய்யா கண்ணு
குளிருக்கு அணைக்கணும் ஒண்ணுக்கொண்ணு

பெண் : ஊரான் பொண்ணு நான் ஊரான் பொண்ணு
மஞ்ச தாலி கொடுத்தா மாமன் பொண்ணு (இசை)

Nattamai - Meena Ponnu

Followers