Pages

Search This Blog

Showing posts with label Amaravathi. Show all posts
Showing posts with label Amaravathi. Show all posts

Tuesday, January 3, 2017

அமராவதி - தாஜ்மகால் தேவையில்லை

ஆண் : தாஜ்மகால் தேவையில்லை, அன்னமே, அன்னமே..

பெண் : காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே..

ஆண் : இந்த பந்தம், இன்று வந்ததோ

பெண் : ஏழுஜென்மம், கண்டுவந்ததோ

ஆண் : உலகம் முடிந்தும், தொடரும் உறவிதுவோ...

பெண் : தாஜ்மகால் தேவையில்லை,

ஆண் : அன்னமே, அன்னமே..காடுமலை நதிகளெல்லாம்

பெண் : காதலின் சின்னமே..

***

ஆண் : பூலோகம் என்பது, பொடியாகிப் போகலாம்,,
பொன்னாரமே, நம் காதலோ, பூலோகம் தாண்டி வாழலாம்.

பெண் : ஆகாயம் என்பது, இல்லாமல் போகலாம்,,
ஆனாலுமே, நம் நேசமே, ஆகாயம் தாண்டி வாழலாம்..

ஆண் : கண்ணீரில் ஈரமாகிக் கறையாச்சுக் காதலே

பெண் : கறை மாற்றி நாமும் மெல்ல, கரையேற வேண்டுமே

ஆண் : நாளை வரும், காலம் நம்மை, கொண்டாடுமே...

பெண் : தாஜ்மகால் தேவையில்லை,

ஆண் : அன்னமே, அன்னமே..காடுமலை நதிகளெல்லாம்

பெண் : காதலின் சின்னமே..

***

பெண் : சில்வண்டு என்பது, சிலமாதம் வாழ்வது,,
சில்வண்டுகள், காதல் கொண்டால், செடி என்ன கேள்வி கேட்குமா

ஆண் : வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே,,
ஆணும் பெண்ணும், காதல் கொண்டால், அது ரொம்ப பாவமென்பதா

பெண் : வாழாத காதல் ஜோடி, இம்மண்ணில் கோடியே

ஆண் : வாழாத பேர்க்கும் சேர்த்து, வாழ்வோமே தோழியே

பெண் : வானும் மண்ணும், பாடல் சொல்லும், நம்பேரிலே...

ஆண் : தாஜ்மகால் தேவையில்லை, அன்னமே, அன்னமே..

பெண் : காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே..

ஆண் : இந்த பந்த இன்று வந்ததோ

பெண் : ஏழுஜென்மம், கண்டுவந்ததோ

ஆண் : உலகம் முடிந்தும், தொடரும் உறவிதுவோ...

பெண் : தாஜ்மகால் தேவையில்லை

ஆண் : அன்னமே, அன்னமே..காடுமலை நதிகளெல்லாம்

பெண் : காதலின் சின்னமே..

Amaravathi - Tajumahal Thevailla

அமராவதி - புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன்
என்ன தான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னன்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்தேன் தவித்தேன்

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
செல்லக் கிளி என்னை குளிப்பிக்க வேண்டும்
சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும்
கல்லுச் சிலை போல நீ நிற்க வேண்டும்
கண்கள் பார்த்து தலைவார வேண்டும்
நீ வந்து இலை போட வேண்டும்
நான் வந்து பரிமாற வேண்டும்
என் இமை உன் விழி மூட வேண்டும்
இருவரும் ஒரு சுரம் பாட வேண்டும்
உன்னில் என்னை தேட வேண்டும்
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
கன்னி உந்தன் மடி சாய வேண்டும்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
உன்னைக் கட்டிக்கொண்டு தூங்க வேண்டும்
உந்தன் விரல் தலைகோதிட வேண்டும்
கையோடு இதம் காண வேண்டும்
கண்ணீரில் குளிர் காய வேண்டும்
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும்
தாயாய் சேயாய் மாற வேண்டும்
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன்
என்ன தான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னன்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்தேன் தவித்தேன்

Amaravathi - Putham Pudhu Malare

Followers