Pages

Search This Blog

Showing posts with label Dheivam. Show all posts
Showing posts with label Dheivam. Show all posts

Wednesday, January 16, 2019

தெய்வம் - திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்

திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம் ஆ..ஆ
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்

வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி ஆ..
வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி
வருகின்ற காட்சி பாருங்கள் இந்த ஆனந்தமெல்லாம் எதிலுண்டு சாட்சி கூறுங்கள் ஆ

திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்

கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்
கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்
இங்கே ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்

காவடிகள் பால் காவடிகள் பழக் காவடிகள்
புஷ்பக் காவடிகள் மச்சக் காவடிகள் பன்னீர்க் காவடிகள்
சேவற்காவடிகள் சர்ப்பக் காவடிகள் சிற்பக் காவடிகள் தீர்த்தக் காவடிகள்
பால் கவடி பழக் காவடி புஷ்பக் காவடி சேவற்காவடி மச்சக் காவடி

கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்
கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் இங்கே
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் தேடி வருவார்

வடிவேல் முருகனுக்கு அரோகரா
வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை
திருத்தணி முருகனுக்கு அரோகரா
வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை
அணைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி
அணைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி

கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு
சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே
உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே
முருகனருள் கூட வருமே

கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு
சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே
உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே
சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே
உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே
முருகனருள் கூட வருமே கந்தனாருள் கூட வருமே
குமரன் அருள் கூட வருமே



Dheivam - Thiruchendooril Por Purinthu

தெய்வம் - மருதமலை மாமணியே முருகய்யா

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை
அஆஆ.. மருதமலை மருதமலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ…
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்

பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா

அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா ஆஆ…
தேவர் வணங்கும் மருதமலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா



Dheivam - Maruthamalai Mamaniye

தெய்வம் - நாடறியும் நூறு மலை நான் அறிவேன்

முருகா.... முருகா.... முருகா....
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
கந்தன் ஒரு மந்திரத்தை கந்தன் ஒரு மந்திரத்தை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
ஸ்வாமி மலை ஸ்வாமி மலை

ஓம்
ஓம் ஓம் என வருவோர்க்கு நாம் எனத் துணையாவான்
ஓம் என வருவோர்க்கு நாம் எனத் துணையாவான்
ஆவான்…..
வா என அழைக்காமல் வா வா என அழைக்காமல்
வா என அழைக்காமல் வருகின்ற மகனாவான்

தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம்
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம்
சொன்னது தமிழ் வேதம்
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம்
சொன்னது தமிழ் வேதம்
சொன்னதை அறிந்தவற்கு சொன்னதை அறிந்தவற்கு
ஸ்வாமினாதன் சொன்னதை அறிந்தவற்கு
முருகப்பன் சொன்னதை அறிந்தவற்கு
சொன்னதை அறிந்தவற்கு நன்மைகள் உருவாகும்

நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
நான் அறிவேன் ஸ்வாமி மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை

கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
ஸ்வாமி மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை



Dheivam - Naadariyum 100 Malaiai 

Sunday, January 1, 2017

தெய்வம் - குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்

பல்லவி
=======

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்



சரணம் 1
========


தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெருமுழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம்
தெருமுழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம்

தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை
தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை
முருகப் பெம்மானை

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்

சரணம் 2
========

உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
உருகிக் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை

குழு: வேல்முருகா வெற்றி வேல்முருகா
வேல்முருகா வெற்றி வேல்முருகா

சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
அரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்

கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்

குழு: கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
வேல்முருகா வெற்றி வேல்முருகா அரோகரா
வேல்முருகா வெற்றி வேல்முருகா

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அரோகரா

குழு: வேல்முருகா வெற்றி வேல்முருகா
வேல்முருகா வெற்றி வேல்முருகா

Deivam - Kundrathile Kumaranukku Kondattam

தெய்வம் - வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

பல்லவி
=======

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன்
வரம் வேண்டி வருவோருக்கு அருள்வாண்டி ஆண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழநி மலையாண்டி

சரணம் 1
========

சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த
சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி

நவலோக மணியாக நின்றாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழநி மலையாண்டி

சரணம் 2
========

பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பாண்டி
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பாண்டி

காலாற மலையேற வைப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி கந்தா
என்றால் இங்கு வந்தேன் என்று கந்தா
என்றால் இங்கு வந்தேன் என்று சொல்லி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழநி மலையாண்டி

சரணம் 3
========

சித்தர்கள் சீடர்கள் பலகோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பலகோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி முருகனின்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பலகோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

பக்தர்கள் தினந்தோறும் பலர்கூடி
பக்தர்கள் தினந்தோறும் பலர்கூடி திருப்புகழ்
பாடி வருவார்கள் கொண்டாடி திருப்புகழ்
பாடி வருவார்கள் கொண்டாடி


வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டி வருவோருக்கு அருள்வாண்டி ஆண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
பழநி மலையாண்டி பழநி மலையாண்டி பழநி மலையாண்டி

Deivam - Varuvandi Tharuvandi Malaiyandi

Monday, November 28, 2016

தெய்வம் - திருச்செந்தூரின் கடலோரத்தில்

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்

அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும் 
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் 
அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும் 
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கு முகம் ஒன்று
ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று
நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்

பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா
நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா
வருவாய் அருள் தருவாய் முருகா

Dheivam - Thiruchendoorin Kadalorathil Senthilnaathan

Followers