Pages

Search This Blog

Showing posts with label Karuththamma. Show all posts
Showing posts with label Karuththamma. Show all posts

Tuesday, December 17, 2013

கருத்தம்மா - பச்சைக்கிளி பாடும் ஊரு

பச்சைக்கிளி பாடும் ஊரு
பஞ்சு மெத்தை புள்ள பாரு
மஞ்சல் ஆறு பாயும் அந்த ஊரு
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டையாட்டும் கோழி கூட்டம்
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு
(பசு மாட்டுக்கு..)
(பச்சைக்கிளி..)

தண்ணி குடம் கொண்ட பொம்பளைய போலே
ஊரு கதை பேசிக்கொண்டு நதி நடக்கும்
பச்சைக்கிளி மெல்ல பல்லவியே சொல்ல
குயில் வந்து சரணத்தில் குரல் கொடுக்கும்

கொண்டாட்டம் இங்கு தென்றலுக்கும் தினம் தினம்
தேரோட்டம் அட பட்டணத்தில் இல்லை இந்த
காற்றோட்டம் அந்த நந்தவன பூவே
நாக்காலி அதில் அமர்வேன் வண்டாட்டம்
(பச்சைக்கிளி..)

குட்டை காம தேவர் கட்டி வச்சதம்மா
கூதல் வரும் முன்னாலே குளிக்கட்டுமா
ஒத்தையடி பாதை போகும் இடம் எங்கே
ஒத்தையிலே நானாக நடக்கட்டுமா

சங்கீதம் எங்கே கோழி
ஆடு கத்தும் சத்தம் சங்கீதம்
கொஞ்சம் தள்ளி நின்னு ரசிப்பது சந்தோஷம்
எங்கள் ஜன்னல் பக்கம் எப்பொழுதும் பூ வாசம்
அந்த சுகமோ பரவசம்
(பச்சைக்கிளி..)

Karuththamma - Pacha Kili Paadum

Wednesday, October 9, 2013

கருத்தம்மா - தென்மேற்குப் பருவக் காற்று

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்

தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்

மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே

மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
நீயெறும் நானெறும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே

ஆணென்றும் பெண்ணெறும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே

காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே

வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

Karuththamma - Thenmerku Paruva Kaatru

Followers