Pages

Search This Blog

Showing posts with label Naan Adimai Illai. Show all posts
Showing posts with label Naan Adimai Illai. Show all posts

Tuesday, January 7, 2014

நான் அடிமை இல்லை - வா வா என் இதயமே

வா வா என் இதயமே என் ஆகாயமே
உன்னை நாளும் பிரியுமோ இப்பூ மேகமே
கடல் கூட வற்றி போகும்
கங்கை ஆறும் பாதை மாறும்
இந்த ராகம் என்றும் மாறுமோ
வா வா இதயமே என் ஆகாயமே

தேவ லோக பாரிஜாதம்
மண்ணில் வீழ்தல் என்ன ஞாயம்
எந்தன் பாதம் முள்ளில் போகும்
மங்கை உந்தன் கால்கள் நோகும்
வான வீதியில் நீயும் தாரகை
நீரில் ஆடும் நான் காயும் தாமரை
காதல் ஒன்றே ஜீவன் என்றாய்
தியாகம் உந்தன் வாழ்க்கை என்றாய்
ஏழை வாசல் தேடி வா

.வா வா இதயமே ....

வான வில்லும் வண்ணம் மாறும்
வெள்ளி வேரும் சாய்ந்து போகும்
திங்கள் கூட தேய்ந்து போகும்
உண்மை காதல் என்றும் வாழும்
காற்று வீசினால் பூக்கள் சாயலாம்
காதல் மாளிகை சாய்ந்து போகுமோ
ராமன் பின்னே மங்கை சீதை
எந்தன் வாழ்வோ உந்தன் பாதை
காதல் மாலை சூட வா

வா வா இதயமே ....

Naan Adimai Illai - Vaa Vaa Idhayamea

Tuesday, October 22, 2013

நான் அடிமை இல்லை - ஒரு ஜீவன் தான்

ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
ஒரு ஜீவன் தான்..........

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்
வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி
உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை
மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்
ஒரு ஜீவன் தான்..........

காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையோ
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ
வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்
வளையோசைதான் நல்ல மணிமந்திரம்
நாந்தானைய்யா நீலாம்பரி
தாலாட்டவா நடுராத்திரி
சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம்
ஒரு ஜீவன் தான்..........

Nann Adimai Illai - Oru Jeevan Dhaan

Followers