Pages

Search This Blog

Thursday, April 27, 2017

காஞ்சனா - கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே

கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா 
கிழிஞ்சிப்புட்டேன் நாரா .....(2)
கறுப்பு போல ஒரு பேரழகு பூமியெங்கும் இல்ல 
நீ கண்ணனோட புள்ள 
அடி ஆத்தா ஆத்தா குங்குமப்மூட்டைய‌ திண்ணுப்புட்டு 
உங்கம்மா பெத்தாளா 
அடி பார்த்தா பார்த்தா பளப்பளன்னு இருக்குற 
வெறும் பால ஊத்தி குளிக்கவச்சாளா 

அட கருப்புக்கண்ணா வாடா 
நான் காத்திருக்கேன் சூடா 
ஒரசிப்புட்டு போடா 
இனி கருப்பு வெள்ளப்படம் 
ஏ செக்கச்செக்கச் செவப்பி 
நீ சேலக்கட்டுன குலுஃபி 
ஒடம்பு நரம்பு எழுப்பி நீ ஓட்டுற புதுப்படம் 

(கருப்பு பேரழகா)

நெறுப்பு குளிச்சா உந்தன் நெறம் வருமே 
கருப்பு நெறந்தான் என்னக்கவர்ந்திடுமே 
அடி நீ குளிச்சா ஒரு துளி சலமே 
கடலில் விழுந்தா கடல் வெளுத்திடுமே 
கரு மேகம் ம‌ட்டுந்தரும் பூமியில மழத்தூவும் 
அழகு மழத்தூவும் 
கருப்பான ராத்திரிய தேடி நெலா வரும் போகும் 
தெனமும் வரும் போகும் 

அடி ஆத்தா ஆத்தா வெண்ணக்கட்டி தேகத்தால் 
என்னைக்கட்டி இழுத்துப்புட்டேடி 
அடி ஆத்தா ஆத்தா வெள்ளக்கலறக் காட்டித்தான் 
கருப்புப்பையனக் கவுத்துப்புட்டேடி 

(கருப்பு பேரழகா )

சூப்பர் ஸ்டாரு உன் தலைவன் கருப்பு 
அவரோட ரசிகன் நீயும் கருப்பு 
ஏ சூப்பர் ஸ்டாரு மனசு ரொம்ப வெளுப்பு 
அவரோட ரசிகருக்கும் அதே சிறப்பு 
உன் ஒடம்பெல்லாம் மச்சம் வச்சி படைச்சிப்புட்டான் 
மாயக்கண்ணன் நீ என்னப்பண்ணா 
தலைமேல உள்ள ஓடைப்பக்கம் இறைக்கிவச்சா 
மச்சம் வரும் மனசுக்குள் சாமி வரும் 
அட கருப்பா கருப்பா கண்ணக்காட்டி மயக்கிட்ட 
கண்ணும்மண்ணு ஒண்ணும் புரியல 
அடி கருப்பும் வெளுப்பும் ஒட்டிக்கிட்டு நின்னுட்டா 
ப்ளாக்கன் ஒய்ட்டு அழகுப்பாருப்புள்ள 

( கருப்பு பேரழகா )



Kanchana - Karuppu Perazhaga

முப்பொழுதும் உன் கற்பனைகள் - ஹோ சுனந்தா சுனந்தா

லெமோரி கொமிஃப்லோ ஃபீல் தெம் ஆல்
ஃபீனிக் ஐ'ல் ரைட் ஆல்

ஆ... ஆ... ஆ... காட்ட செக்
இட் காட்ட செக் இட்
ஆ... ஆ... ஆ... காட்ட செக்
இட் காட்ட செக் இட்

ஹோ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தாள்
தேன் சுவையாய் நிறைந்தாள்
முதல் முறை
கடிவாளம் இல்லாக் காற்ரைப் போலவே
வடிவங்கள் இல்லா வாசம் போலவே
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே
நுரை போலே நீ அலை போலே நான்
ஆஹா... ஆ... ஆ...
எஹுவேஹுவேஹுவேஹுவே
ஆஹா... ஆ... ஆ...
ஆஹா... ஆ... ஆ.

ஹோ சுனந்தா சுனந்தா ( ஒவுஓவுஓ )
ஒரே சுகமாய் நடந்தாள் ( யெயெயெய்யே )

நன நனன்ன நன்ன எஹியெஹெ
ஹே ஹே எஹியெஹியே
நன நனன்ன நன்ன எஹியெஹெ
ஹே ஹே எஹியெஹியே
நன நனன்ன நன்ன எஹியெஹெ
ஹே ஹே எஹியெஹியே
நன நனன்ன நன்ன எஹியெஹெ
ஹே ஹே எஹியெஹியே
தன நன்ன நனனனன்ன
தர ரரரத் தரரர
தன நன்னா ஆஹா ஆ...
தர ரரரத் தரரர
தன நன்னா ஆஹா ஆ...
தன நன்னா ஆஹா ஆ...
நன நன்ன நன்னா ஆஹா ஆ...
நன நன்ன நன்னா ஆஹா ஆ...

மழை விழுகிற பொழுதினிலே
மயில் நடனங்கள் புரிகிறதே
பனி துளிகளின் சுமைகளிலே
மலர் ஒரு புறம் சரிகிறதே
நேற்று நான் வேறொரு ஆடவன்
இன்று நான் வெண்பனி ஆனவன்
தேய் பிறை நாட்களும் போனதே
வான் நிலா பௌர்ணமி ஆனதே
ஆஹா... ஆ... ஆ..ஆஹா..ஆ..ஆ..(இசை)

ஹோ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தாள்

ஏ... ஏ... ஏ... ஏ...
ஆஹா... ஆ... ஆ..ஆஹா... ஆ... ஆ...
ஆஹா... ஆ... ஆ..ஆஹா... ஆ... ஆ...

துயில் கலைந்ததும் விழிகளிலே ( ஏஹே )
புது தினங்களின் கனவுகளே ( ஹே )
நவ மணிகளின் நடுவினிலே ( ஏஹே )
தனி மரகத பவலங்களே
மின்மினி பூச்சிகள் கூடியே
பேசுதே நித்தமும் வம்புகள்
யாரிவன் அன்னியன் ஆயினும்
பெண் மனம் காட்டிடும் அன்புகள்
ஆஹா... ஆ... ஆ...
எஹுவேஹுவேஹுவேஹுவே
ஆஹா... ஆ... ஆ...ஆஹா..ஆ..ஆ...

ஹோ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தாள் (ஓவு ஓவுஓ)
தேன் சுவையாய் நிறைந்தாள் (ஓவுஓ)
முதல் முறை
கடிவாளம் இல்லாக் காற்ரைப் போலவே (ஹே)
வடிவங்கள் இல்லா
வாசம் போலவே(யெயெயெய்யே)
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே
நுரை போலே நீ அலை போலே நான்
ஆஹா... ஆ... ஆ... (ஓவு ஓவுஓ)
ஆஹா... ஆ... ஆ...
ஆஹா... ஆ... ஆ...
ஏயே ஒவுஓ ஒவு ஓவுஓ ஒவு



Muppozhudhum Un Karpanaigal - Oh Sunanda

ஆக்கோ - எனக்கென யாரும் இல்லயே

எனக்கென யாரும் இல்லயே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே

கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி
நகராமல் நின்று போகுமே என் வாழ்க்கையின் ரதி
கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி
நகராமல் நின்று போகுமே என் வாழ்க்கையின் ரதி
பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும்
நீ போன பின்பு எந்தன் மனமோ இறந்து தான் போகும்
காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால் உயிரே போகும்

எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
சிங் இட்
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே

கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி
நகராமல் நின்று போகுமே என் வாழ்க்கையின் ரதி
கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி
நகராமல் நின்று போகுமே என் வாழ்க்கையின் ரதி
பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும்
நீ போன பின்பு எந்தன் மனமோ இறந்து தான் போகும்
காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால் உயிரே போகும்

எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
சிங் இட்

போத நீதானே தள்ளாடுறேன் நானே சிங் இட்
ஒன் காமம் வேணாமே ஒன் காதல் போதுமே அன்ட் சிங் இட்
என் போத நீதானே தள்ளாடுறேன் நானே
ஒன் காமம் வேணாமே ஒன் காதல் போதுமே எவெரீ படி சிங் இட்

கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி
நகராமல் நின்று போகுமே என் வாழ்க்கையின் ரதி
கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி
நகராமல் நின்று போகுமே என் வாழ்க்கையின் ரதி

பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும்
நீ போன பின்பு எந்தன் மனமோ இறந்து தான் போகும்
காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும்
மறந்திரு என்று  நீசொல்லி நேர்ந்தால் உயிரே போகும்

எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது

போத நீதானே தள்ளாடுறேன் நானே சிங் இட்
ஒன் காமம் வேணாமே ஒன் காதல் போதுமே அன்ட் சிங் இட்

என் போத நீதானே தள்ளாடுறேன் நானே
ஒன் காமம் வேணாமே ஒன் காதல் போதுமே எவெரீ படி சிங் இட்

என் போத நீதானே தள்ளாடுறேன் நானே தள்ளாடுறேன் நானே
ஒன் காமம் வேணாமே ஒன் காதல் போதுமே

என் போத நீதானே தள்ளாடுறேன் நானே தள்ளாடுறேன் நானே
ஒன் காமம் வேணாமே ஒன் காதல் போதுமே

எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே

கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி
நகராமல் நின்று போகுமே என் வாழ்க்கையின் ரதி
கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி
நகராமல் நின்று போகுமே என் வாழ்க்கையின் ரதி
பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும்
நீ போன பின்பு எந்தன் மனமோ இறந்து தான் போகும்
காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால் உயிரே போகும்

எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது

போத நீதானே தள்ளாடுறேன் நானே சிங் இட்
ஒன் காமம் வேணாமே ஒன் காதல் போதுமே அன்ட் சிங் இட்

என் போத நீதானே தள்ளாடுறேன் நானே
ஒன் காமம் வேணாமே ஒன் காதல் போதுமே எவெரீ படி சிங் இட்

என் போத நீதானே தள்ளாடுறேன் நானே தள்ளாடுறேன் நானே
ஒன் காமம் வேணாமே ஒன் காதல் போதுமே

என் போத நீதானே தள்ளாடுறேன் நானே தள்ளாடுறேன் நானே
ஒன் காமம் வேணாமே ஒன் காதல் போதுமே

எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே



Aakko - Enakenna Yaarum Illaye

கயல் - என் ஆள பார்க்க போறேன்

என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்…
என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேச போறேன்…

அவன் கண்ணுக்குள்ள,
என்னை வைக்க போறேன்.
அவன் நெஞ்சுக்குள்ள,
என்னை தைக்க போறேன்.
நானே…. என்னை…தர போறேன்!

வீட்டுவிட்டு வந்துட்டேனு,
சொல்ல போறேன்.
கூட்டிகிட்டு போயிடுனு,
சொல்ல போறேன்.
இதை தான் எதிர்பார்த்து
நான் கிடந்தேன் உயிர் வேர்த்து'
என சொல்லி,
ஆசையில், அல்லடுவான்!
மனம் துள்ளி காதலில் தள்ளடுவான்!
அதனா பார்த்தே, அழ போறேன்!

என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்…

உன்னால் தான் தூங்கலைனு,
சொல்ல போறேன்!
சோறு தண்ணி சேரலைனு,
சொல்ல போறேன்!
புதுசா புளுகாம, ரொம்ப பெருசா வழியாம,
அடி எப்ப நீ எனக்கு பொண் ஜாதியா
ஆக போறேன்னு ?  அப்பாவியா
நானே… கேட்டு… வர போறேன்!

என் ஆள  பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்…

Kayal - En Aala Paakka

டார்லிங் - வந்தா மல போன முடி

பேட் டாங்கி ஸ்மால் வால்
பேட் டாங்கி ஸ்மால் வால்
பேட் டாங்கி ஸ்மால் வால்

வந்தா மல போன முடி
கட்டி இழு டார்லிங்
ஆத்த விட்ட காத்தாடி நீ சூக்க பற டார்லிங்
பல்ப் உ ஒண்னு ஃப்யூஸ் ஆ போன புடுங்கி தூக்கி போடு
வாழ்க்கை ஒண்னும் வட்டம் இல்ல அதுதான் ஒத்த கூடு
பஸ் கு தான் பங்க்சர் போட தேவை ஒரு ரோட் உ
குண்டு குழி ஆனா பின்னே லைஃப் உ மொக்க ரோட் உ

டார்லிங் நம்ம லைஃப் உ ரொம்ப ஷார்ட் உ மச்சி
டார்லிங் அட இஷ்டம் போலே ஊட்டு டா
டார்லிங் இங்க ஃபீலிங்க்ஸ் ஏல்யாம் வேஸ்ட் உ மச்சி
டார்லிங் இப்போ டீலிங்க் ஒன்னும் போது டா

வந்தா மல போன முடி
கட்டி இழு டார்லிங்
ஆத்த விட்ட காத்தாடி நீ சூக்க பற டார்லிங்
எ நாளங்கிலஸ்ஸ் உ வாத்திய த்தாம் கட்டி போட்டு உதைக்கணும் டா
அவன் வீட்டில் உள்ள டாடர் ஆ தான் நல்ல கட்டி புடிக்கணும் டா
ஏஹ் மிட்‌நைட் ஆனா டாஸ்மாக் கடைல பார்டி வைக்கணும் டா
அதுக்கு நாலு போலீஸ் பந்தகோஸ்த்து நமக்கு கெடைக்கணும் டா
எல் ஐ சி மாடி மேல மாட்ச் உ நடக்கனும் டா
அங்கிருந்து ஸ்பென்சேருக்கு ஸிக்ஸர் அடிக்கணும் டா

டார்லிங் நம்ம லைஃப் உ ரொம்ப ஷார்ட் உ மச்சி
டார்லிங் அட இஷ்டம் போலே ஊட்டு டா
டார்லிங் இங்க ஃபீலிங்க்ஸ் எல்லாம் வேஸ்ட் உ மச்சி
டார்லிங் இப்போ டீலிங்க் ஒண்னும் போட்டு டா

பழசு வெறுக்குதா கண்ணு ரெண்டும் க்லங்குதா
எதுகை மோனையும் எகத்தாளம் அடிக்குதா
குருதி காதல குண்டு மல்லி கணக்குதா
துருவி பாருடா துளு வெறும் தூளு டா
பொறுத்து பாருடா பூகம்பாம மாறுடா
இழுத்து பாருடா போன வெறும் ஹேர் உ டா

மண்ணெண்ணெய் வேப்பெண்ணை வெளக்கெண்ணை
பாகிஸ்தான் தோதாக்க எனக்கென்ன
தீபிகா அனுஷ்கா ஹன்சிகா
ப்ரேகப் உ ஆனததான் நமக்கென்ன
எ டைடானிக் உ ஷிப்புல இருந்து டைவ் உ அடிக்கணும் டா
அங்க சுனாமி ஏ வந்த க்கூட ஸ்விம்மிங் போடனும் டா
ஃப்லைட் உ ல தான் விதௌட் ல தான் ட்ராவல் பண்ணனும் டா
அட மாட்டிக்கிட்ட அங்கிருந்து ஃபுட்‌போர்ட் அடிக்கணும் டா

டார்லிங் நம்ம லைஃப் உ ரொம்ப ஷார்ட் உ மச்சி
டார்லிங் அட இஷ்டம் போலே ஓட்டு டா
டார்லிங் இங்க ஃபீலிங்க்ஸ் எல்லாம் வேஸ்ட் உ மச்சி
டார்லிங் இப்போ டீலிங்க் ஒண்னும் போட்டு டா



Darling - Vandha Mala Pona

டார்லிங் - உன்னாலே கண்கள் தள்ளாடி

உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் எங்கும் என் ஆவி
நீராவியாய் என்னை நீ மோதினாய்
உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய்
நீ தொட தொட நானும் பூவாய் மலர்ந்தேன்
நான் என் பெண்மையின் வாசம் உணர்ந்தேன்
நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன்
நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன்
முன் ஜென்மம் எல்லாம் பொய் என்று நினைத்தேன்
உன் கண்ணை பார்த்தேன் மெய் தானடா
உருவங்கள் எல்லாம் உடல் விட்டு போகும்
உள்ளத்தின் காதல் சாகாத்டி

(உன்னாலே கண்கள்)

ஏதோ ஒன்றை நான் உன்னில் கண்டேன்
எரியும் தீயை நான் என்னில் கண்டேன்
உயிரின் உயிராய் உன்னை கண்டேன்
என்னை அள்ளி உன் கையில் தந்தேன்
காதல் கொண்டு கண்கள் கெஞ்ச
அடி கை மீறி உயிர் ஓடுதே

(உன்னாலே கண்கள்)

முழுதா நிலவு நம்மை பார்க்க
காற்றில் எங்கும் அது மாயம் சேர்க்க
கைகள் கோர்த்து நீ வெப்பம் சேர்க்க
வெட்கம் தாண்டி நான் என்னை தோற்க்க
மரணம் தாண்டி வாழும் காதல்
உன் விழியோரம் நான் காண்கிறேன்

உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் எங்கும் என் ஆவி
நீராவியாய் என்னை நீ மோதினாய்
உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய்
நீ தொட தொட நானும் பூவாய் மலர்ந்தேன்
நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன்
நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன்
முன் ஜென்மம் எல்லாம் போய் என்று நினைத்தேன்
உன் கண்ணை பார்த்தேன் மே தானடா
உருவங்கள் எல்லாம் உடல் விட்டு போகும்
உள்ளத்தின் காதல் சாகாதாட



Darling - Unnale Kangal

டார்லிங் - சட்டென இடி மழை ஆகுது

வேர் இஸ் தெ பார்டி நௌ
வேர் இஸ் இஸ் தெ பார்டி ரைட் நௌ
சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்
பெண்ணே என் பார்வைகள் மாறுதடி
பட்டென முறிந்தது இதயமும் கொஞ்சம்
பக்கத்தில் வந்தால் சிதறுதாடி
அன்பே அன்பே நெஞ்சில் நேஜில் உன்னால் உஙாள்
என்னும் ஒரு நீல நடக்கம்
வேர் இஸ் தெ பார்டி
வேர் வேர் இஸ் இஸ் தெ பார்டி
வேர் இஸ் தெ பார்டி நௌ
வேர் இஸ் இஸ் தெ பார்டி ரைட் நௌ

உன் புன்னகை உன் மென் நடை
ஐயோ என்னை ஏதோ செய்ய
மின்சாரமாய் உன் கண் இமை பாய்கின்றதே
நான் என்ன செய்வேனோ
பொல்லாத காதல் ஒன்று தீ மூடி கொல்லுதே
போகாத பாதை தேடி என் கால்கள் துள்ளுதே
என் நெஞ்சத்தை கால் பந்தை போல்
நீ பூட்டவே நான் விண்ணை தாண்டினேன்
ஓஹ் சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்
பெண்ணே என் பார்வைகள் மாறுதடி

ஒரு கண்ணிலே மாயம் செய்தா
மறு கண்ணிலே காயம் செய்தாய்
நான் நேசிக்கும் பொய்கள் சொன்னா
என்னை நேசிக்கும் ஒரு மெய்யும் சொன்னாயே
சந்தோச தேரில் ஏறி என் நெஞ்சம் தாவி செல்ல
சரியான கிறுக்கன் என்று என்னை திட்டி காதல் சொல்ல
கண்ணீர் என்றால் தித்திப்பென்று
உன் காதலில் நான் கண்டு கொண்டேனே

ஓ சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்
பெண்ணே என் பார்வைகள் மாறுதடி
பட்டென முறிந்தது இதயமும் கொஞ்சம்
பக்கத்தில் வந்தால் சிதருதடி
அன்பே அன்பே நெஞ்சில் நெஞ்சில் உன்னால் உன்னால்
என்னும் ஒரு நில நடுக்கம்
வேர் இஸ் த பார்டி
வேர் வேர் இஸ் தெ பார்டி
வேர் இஸ் த பார்டி
வேர் வேர் இஸ் இஸ் தெ பார்டி நௌ



Darling - Sattena Idi Malai

டார்லிங் - உன் விழிகளில் விழுந்து நான்

உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்
உன் பார்வையில் தோன்றிட அலைகிறேன்
அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன்
ஓர் நொடியும் உன்னை நான் பிரிந்தால்
போர்க்களத்தை உணர்வேன் உயிரில்
என் ஆசை எல்லாம் சேர்த்து ஓர் கடிதம் வரைகிறேன் அன்பே
( உன் விழிகளில் விழுந்து )

தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே
நான் உனை பார்க்கிறேன் அன்பே
சாரலாய் ஓர் முறை நீ என்னை தீண்டினாய்
உனக்கது தெரிந்ததா அன்பே
என் மனம் கானலின் நீர் என ஆகுமா
கைகளில் சேருமா அன்பே
நேசிக்கும் காலம் தான் வீனென போகுமா
நினைவுகள் சேர்க்கிறேன் இங்கே
ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே விழுகிறேன் அன்பே

பூக்களில் தோன்றிடும் வண்ணங்கள் போலவே
பெண்களின் நெஞ்சம் தானடா
வண்ணத்து பூசியின் வண்ணங்கள் போலவே ஆண்களின்
நெஞ்சம் தானடா
வண்ணங்கள் வேறென தோன்றிடும் போதிலும்
எண்ணங்கள் சேருமா அன்பே
வண்ணத்து பூசியின் சிறகுகள் மோதவே
இதழ்களும் உள்ளதே இங்கே
ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே விழுகிறேன் அன்பே

( உன் விழிகளில் விழுந்து )



Darling - Un Viligalil Vilunthu

டார்லிங் - அன்பே அன்பே

அன்பே அன்பே...
உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
காதல் என்பது பொல்லாத தீ தான்
மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்
கண்கள் முழுதும் நீ வந்த கனவு
விடிந்தாலும் முடியாதடி
உ ன்னோடு நான் வாழ்ந்த நொடிகளே போதும்
ஜென்மம் ஈடேருமே
உன் விரல்கள் தருகின்ற வெப்பங்களை நினைத்தால்
நெஞ்சில் வலி கூடுமே

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

யாரும் வந்து போகாத கோவில்
தீபம் போலே என்னை மாற்றும் காதல்
என்று முடியும் நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் ஏதடி
கண்ணிரின் துளி வந்து விழிகளை மூடும்
எங்கே என் தேவதை
காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும்
கரையும் என் நாழிகை

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்



Darling - Anbe Anbe

அப்புச்சி கிராமம் - என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ....(2)

யேன்காதுல எசை போல
பேசுர உன்கொரலாலே
எசை போல நீயும் பேசவே
எப்போவுமே ரசிக்கிறேன் நானே
ஏதோ ஏதோ பாடுறேன் நானே

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...

குத்தாலத்து சாரலபோல் நல்ல‌சிரிக்க என் தேன்மொழி
கன்னங்குழி போதானு என்ன மயக்கும் உன் மைவிழி
கருவாபையன் கனவெல்லாம் கலர்படம் ஆனதனால
முழிச்சாலும் மெதுக்கானே காதலெனும் பல்லாக்குமேல
தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே
பித்தனாதான் ஆகிறேன் நானே...

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...

வெக்கத்துக்கே வெக்கம் வரும் உன் மேனி முழுபவுர்ணமி
சொக்கனுக்கே ஆசைவரும் என்ன அழகு யென் கண்மணி
தைமாசம் தேதி குறிக்கவா மேளதாளம் கேள்வி கேக்குது
உன்னெஞ்சில‌ ஊஞ்சலாடவே  மஞ்சகயிரு ஏங்கிவாடுது
தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே
பித்தனாதான் ஆகிறேன் நானே...

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...



Appuchi Graamam - En Kannu Kulla

குக்கூ - கல்யாணமாம் கல்யாணம்

காதல் கண்மணியே யே யே…

கல்யாணமாம் கல்யாணம்,
காதல் கண்மணிக்கு கல்யாணம் !
கல்யாணமாம் கல்யாணம்,
காதலி பொண்ணுக்கு கல்யாணம் !

ஒண்ணா சிரிச்சு
மெய்யா பழகி
கண்ணால் பேசி
காத்துக் கிடந்தது
ஒருவர் மடியில்
ஒருவர் சரிந்து
உறங்கிடாமல்
கனவும் கண்டு
கடைசிவரைக்கும் வருவதாக
கதையும் விட்டாளே
இன்று அத்தனை எல்லாம்
மறந்துவிட்டு பறந்தும் விட்டாளே…

கல்யாணமாம் கல்யாணம்…

லலலா… லலலா…
காதல் கண்மணியே யே யே

கூறச் சேல
மடிச்சு கட்டி
குங்குமபொட்ட
நெத்தியில வச்சி

மணவறையில் அவ இருப்பா
மகாராணியா
அவள காதலிச்சவன்
கலங்கி நிற்பான் அப்பிராணியா
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்

கெட்டி மேளம்
காது பொளக்க
நாதஸ்வரம்
ஓங்கி ஒலிக்க
கச்சேரியே ரசிச்சிருப்பா
ஊரு முன்னால

அவள காதலிச்சவன்
கதறிடுவான் ஓசையில்லாம
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்

சாதி சனத்த
வணங்கிக்கிட்டே
சட்டுன்னு சட்டுன்னு
சிரிச்சுக்கிட்டு
பரிசுப் பொருள வாங்கி வப்பா
ரொம்ப ஆசையா

அவள காதலிச்சவன்
கசங்கி நிற்பான் சந்நியாசியா

வக வகயா
சமைச்சு வச்சு
வாழ இலையில்
பந்தியும் இட்டு
புருஷனுக்கு ஊட்டி விட்டுவா
போட்டோ புடிக்கத் தான்

அவள காதலிச்சவன்
மனசுக்குள்ள குண்டு வெடிக்கத்தான்

மங்களத் தாலி
கழுத்தில் ஆட
மந்திர வார்த்த
அய்யரு ஓத
காரில் ஏறி போயிடுவா
புகுந்த வீட்டுக்கு
அவள காதலிச்சவன்
வந்துடுவானே நடு ரோட்டுக்கு

கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
காதல் கண்மணியே…….யேஏஏஏஏ!

கல்யாணம் கல்யாணம்
காதலிப் பொண்ணுக்கு கல்யாணம் !



Cuckoo - Kalyanamam Kalyanam

காவியத் தலைவன் - ஏ சண்டி குதுர வாயேண்டி

ஏ சண்டி குதுர வாயேண்டி எதுர
மதுர குதுர எதுர வந்தா
மோகனா மோகனா நானும் உன் மாமனா
மாறவா பீமனா
வாயேன் கிட்ட கிட்ட வாய தச்சி விட்ட
ஏ சண்டி குதுர வாயேண்டி எதுர
மதுர குதுர எதுர வந்தா
மோகனா மோகனா நானும் உன் மாமனா
மாறவா பீமனா
வாயேன் கிட்ட கிட்ட வாய தச்சி விட்ட
அ ஆ இ அம்மாயி ஆழாக்கு நாக்கு
உ ஊ எ உம்முன்னு மொரைக்காதே ஏ பாத்து
ஏ சண்டி குதுர வாயேண்டி எதுர
மதுர குதுர எதுர வந்தா

ஏ யானைக்குட்டி பூனைக்குட்டி ஆட்டுக்குட்டி ஆந்தைக்குட்டி
மான்குட்டி உன்னை நானும் மல்லுக்கட்டி தூக்கப்போறேன்
கன்னுக்குட்டி பொன்னுக்குட்டி வாயக்கட்டி வைக்கப்போறேன்
முயலே முயலே முழிக்கும் முயலே
எதிரே இருக்கு அழகு முதல
அ ஆ இ அம்மாயி ஆழாக்கு நாக்கு
உ ஊ எ உம்முன்னு மொரைக்காதே ஏ பாத்து
மோகனா  மோகனா  நானும் உன்  மாமனா
மாறவா  பீமனா

நாணமே மௌனமா காவியம் பேசுமா ப்ரேமையே கோபமா
பேச்சு காச்சு மூச்சு மூக்கறுந்து போச்சு
மன்றலே தென்றலே கோவமா அன்றிலே சுத்துதே திங்களே
நாடகத்தின் உள்ளே நாங்க வச்ச முள்ளே
குயிலே குயிலே வெள்ளக்காரன் விட்ட ரயிலே
தத்தக்கா விட்டக்கா ஒத்திக்கா ஆ போக்கா
அத்திக்கா ஆன கிறுக்கா எட்டிக்கா ஆ மூக்கா
ஏ சண்டி குதுர வாயேண்டி எதுர
மதுர குதுர எதுர வந்தா
மோகனா  மோகனா  நானும் உன்  மாமனா
மாறவா  பீமனா
அடியே குதுர வெடி அஞ்சரைனா சீனவெடி

வண்ண வண்ண வானவெடி குட்டுவெடி பொட்டுவெடி
அத்தனை வெடிகளுமே அஞ்சிற மிஞ்சிரவெடி
உன்னுடைய பேச்சுவெடி உள்ளபடி உள்ளதடி
அண்ணன்ணன் நே நே அணிலன்னே கதையன்னே
புருஞ்சுதன்னே முயலன்னே தெரிஞ்சது அண்ணே பெண்மானே
தேனே திருந்துனா போதுன்னே
ஆனைக்குட்டி பூனைக்குட்டி ஆட்டுக்குட்டி கன்னுக்குட்டி
அணில்குட்டி ஆந்தைகுட்டி நரிக்குட்டி புலிக்குட்டி
கரடிக்குட்டி குதிரைக்குட்டி குயில்குட்டி மயில்குட்டி
கோழிக்குட்டி எலிக்குட்டி மான்குட்டி மஞ்சக்குட்டி
இந்தக்குட்டி எந்தகுட்டி வாயாடும் கத்துக்குட்டி கத்துக்குட்டி
செம்மீனின் பட்டுக்குட்டி சுட்டிக்குட்டி
என்னோட செல்லக்குட்டி செல்லக்குட்டி வெல்லக்கட்டி வெல்லக்கட்டி
முத்தம் குட்ரீ



Kaaviya Thalaivan - Sandi Kuthirai

காவியத் தலைவன் - சொல்லிவிடு சொல்லிவிடு

சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு
நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு இப்போரில் இவ்விடம் நின்றுவிடு
சென்றுவிடு சென்றுவிடு சென்றுவிடு இந்த யுத்தம் போதும் சென்றுவிடு
இன்னும் உயிர்கள் வேண்டும் என்றால் என்னை முதலில் நீயே கொன்றுவிடு
கண்ணா என்னை முதலில் கொன்றுவிடு

ஏன் அம்பை எந்த வைத்தாய்
ஏன் குருதியில் நீந்த வைத்தாய்
ஏன் உலகத்தை ஜெயிக்க வைத்தாய்
ஏன் உள்ளுக்குள் தோற்க்கடித்தாய்
உலகத்தை வெல்ல வைத்தாய் உள்ளுக்குள்ளே தோற்க்கடித்தாய்
காண்டீபன் கேட்கிறேன் கண்ணா காண்டீபன் கேட்கிறேன்
சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு
நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு இப்போரில் இவ்விடம் நின்றுவிடு

ஆ… காலச்சக்கரம் உன் கையில் அதில் சுற்றியதேனோ நான்
விதியும் சதியும் உன் கண்ணில் அதில் சிக்கியதேனோ நான்
கர்ணனை கொன்ற பாவம் கண்ணனுக்கு போகுமென்றால்
கண்ணனுக்கே பாவம் தந்த பாவம் எங்கு போகும் ஐயோ
சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு
நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு இப்போரில் இவ்விடம் நின்றுவிடு

ஓ… உலகமே யுத்தம் எதற்கு
ஓ… உயிர்களே ரத்தம் எதற்கு
ஓ… இறைவனே துயரம் எதற்கு
ஓ… இதயமே வன்மம் எதற்கு

கண்ணா தேரை நிறுத்து
எல்லாம் வீழ்த்தி எவருடன் வாழ தேரை நிறுத்து
போதும் இந்த குருதிக்குளியல் போரை நிறுத்து
நாளை உலகம் நலம் பேரும் என்று போரை நிறுத்து போரை நிறுத்து



Kaaviya Thalaivan - Sollividu Sollividu

காவியத் தலைவன் - வந்தனம் வந்தனம்

வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம்
எல்லோருக்கும் தந்தனம் தந்தனம்
வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம்
எல்லோருக்கும் தந்தனம் தந்தனம்
குந்தனும் குந்தனும் குந்தனும் குந்தனும்
இடம் பிடிக்க முந்தணும் முந்தணும்

யாதவனாம் அந்த மாதவனும்
அவன் மச்சுனனாம் அந்த அர்ச்சுனனும்
யாத்திரை வருகையிலே தீர்த்த யாத்திரை வருகையிலே
நாடு கடந்து காடு கடந்து மதுரைக்கு வாராக
தென் மதுரைக்கு வாராக
அங்கு நடப்பது அல்லி ராஜ்ஜியம்
அத்தனை ஆண்களும் சுத்த பூஜ்ஜியம்
அல்லியோ புது ரோசா பார்த்தான் அர்ஜுன மகராசா
அல்லி மலருல கள்ளு வடியுது
அர்ஜுனன் முகத்துல ஜொள்ளு வடியுது
ஆரம்பமாகுது நாடக காதலு
ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்குற மோதலு

அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள் அழகி அவள் பேரழகி
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள் அழகி அவள் பேரழகி
முகத்தழகி ஆமா முகத்தழகி மருதாணி பூசிய நகத்தழகி
கோவில் தூண் போல தொடையழகி
கொம்பேறி மூக்கன் போல சடையழகி
அவ நடக்குற நடைய பாத்து
தென்றல் காத்து அத பாத்து உடல் வேர்த்து
உடன் தோத்து அல்லி வருகிறாளே
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள் அழகி அவள் பேரழகி
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள் அழகி அவள் பேரழகி

பிரியசகியே பிரியசகியே மழைநாளா இது மழைநாளா
மயிலினம் தோகை விரிப்பதென்ன
அது மோகன நாடகம் நடிப்பதென்ன
மோகன நாடகம் நடிப்பதென்ன
பிரியசகியே பிரியசகியே மழைநாளா இது மழைநாளா
மயிலினம் தோகை விரிப்பதென்ன
அது மோகன நாடகம் நடிப்பதென்ன
நல்ல சகுனம் இது நல்ல சகுனம் ஒரு நாயகன் வரக்கூடும்
உங்க வாய் வெளுக்க இரு விழி சிவக்க
காதல் நோய் தனை தரக்கூடும்
யாரடி அவன் யாரடி வீராதி வீரனோ கூறடி
சூராதி சூரனோ கூறடி
இந்த அல்லியை ஜாதி மல்லியை இன்பவல்லியை உயிர்கொல்லியை
வெல்லத் தகுந்தவனோ ஏழு வண்ணம் மிகுந்தவனோ
யாரடி யாரடி

அவையிளிருக்கும் அத்தனை பேருக்கும் வணக்கம் வணக்கம் வணக்கம்
என் வணக்கத்திலே தான் தமிழ் மணக்கும்
பஞ்ச பாண்டவர் அஞ்சு பேர்கள்
நடுவினில் நான் பிறந்தேன்
அர்ஜுனன் என் பேரு
இரத்தினபுரி தான் என் ஊரு
கண்ணா கண்ணா
ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்
அர்ஜுனனனே என் ஆருயிர் தோழா
மதுரையை ஆள்கிற அல்லி
என் மனதை எடுத்தாலே கள்ளி
என் உள்ளத்தை ஒட்டிய பல்லி
அவளை ஒடுக்கனும் படுக்கையில் புள்ளி
இந்த சமையத்தில் நீ உதவனும் கண்ணா
எங்கள சேத்து நீ வைக்கணும் ஒண்ணா
நான் பாமாவுக்குத்தாண்டா மாமா அதை நீ மறக்காதே ஆமா
உன்னை விட்டால் எனக்கு யாரு உதவி செய்வார் கூறு
நான் மார்க்கங்கள் சொல்வேன் கேளு
மணமாலையை தாங்கும் உன் தோளு

நான் நன்னதுவியில்லை என்றிருக்க
என் மணிக்கழுத்தில் தாலி கட்டலாமா கட்டலாமா
என் மேல குத்தமில்ல உன்ன கண்ட முதலா என் நெஞ்சு சுத்தமல்ல
என் மேல குத்தமில்ல உன்ன கண்ட முதலா என் நெஞ்சு சுத்தமல்ல
நீ போட்டது எத்தனை வேடமடா
குந்தி புத்திரனாய் வந்த மூடமடா
வீரன் என்றால் நீ வில்லெடு
இந்த பூவையின் மேலே போர் தொடு

ஆ… ஆ…
நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே
நாம் தாயால் பிறந்தோம் பிறந்தோம்
தமிழால் வளர்ந்தோம் வளர்ந்தோம்
தாயும் தமிழும் பெண்தானே இரண்டும் இரண்டு கண்தானே
தாயும் தமிழும் பெண்தானே இரண்டும் இரண்டு கண்தானே
பரங்கியர்க்கு பாரத தாய் தான் அடிமையாவதா
அவள் கைவிலங்காலும் கால் விலங்காலும் நாளும் நோவதா
விடுதலை வேள்வியில் கொடுதலை
வெள்ளையன் செய்வானோ சுடுதலை
மக்களுக்கில்லை சூடு இது மாபெரும் மானக்கேடு
எங்கே போகும் நாடு இது நாமிருக்கும் தாய் வீடு
நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே




Kaaviya Thalaivan - Alli Arjuna

காவியத் தலைவன் - ஏவினை நேர்விழி மாதரை

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை – நெறிபேணா

ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை – அகலாநீள்

மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை – யிகழாதே

மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது – மொருநாளே

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் – குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி – லுடையோனே

தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு – சிறியோனே

சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு – பெருமாளே.




Kaaviya Thalaivan - Thiruppugazh

காவியத் தலைவன் - வாங்க மக்கா வாங்க எங்க நாடகம்

ஓ.. செந்தமிழால இசையை கூட்டி
பல பல பலவென கதை சொல்லுவோம்
சந்திரனை சாட்சி வச்சி ஜகதலப்ரதாபன் கதை சொல்லுவோம்
மதுரை ஸ்ரீ பால ஷன்முகனந்தா நாடக சபா

வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க

வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க

பச்சை மஞ்ச செவப்பு வெள்ளை ஊதா
கருநீல கண்ணனோடு மீரா
பச்சை மஞ்ச செவப்பு வெள்ளை ஊதா
கருநீல கண்ணனோடு மீரா
உங்க கண்ணுக்குள்ள வண்ண வண்ண மாயம் காட்டுவோம்
நாங்க வானவில்ல உங்க நெஞ்சுக்குள்ள காட்டுவோம்
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க ஆட்டம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க பாட்டை கேக்க வாங்க

திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
நாங்க தாம் கினத்தோம் ததிங்கினத்தோம் சொல்லி
திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
நாங்க தாம் கினத்தோம் ததிங்கினத்தோம் சொல்லி
நீங்க பாக்காத உலகத்த காட்டுவோம்
நாங்க பகல் கனவை நனவாக மாற்றுவோம்
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க ஆட்டம் பாக்க வாங்க – சும்மா வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க பாட்டை கேக்க வாங்க – யம்மா வாங்க
வாங்க மக்கா வாங்க நீங்க வண்டி கட்டி வாங்க – யக்கா வாங்க
வாங்க மக்கா வாங்க நீங்க வறிஞ்சி கட்டி வாங்க – அய்யா வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க – சும்மா வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க – யம்மா வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க



Kaaviya Thalaivan - Vaanga Makka

காவியத் தலைவன் - ஹேய்… ஏய் மிஸ்டர் மைனர்

ஹேய்… ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற
ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற
 ஓ… என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற
 ஹாஹேய்… ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற

ஆசைகள் உன்னோட நெஞ்சை தட்டி எட்டி பார்க்குது ஆடை ஒட்டி பார்க்குது
பேசத்தான் நெஞ்சோடு வார்த்தை கெஞ்சி கொஞ்சுது வாய் பேச வாய் தாயேன்
இமைகளை திறக்குதே கனவுகள்
இதழ்களை நனைகுதே இரவுகள்
மலர்களை உடைக்குதே பனித்துகள்
நீயும் நானும் சேரும் நேரம் மீறும் நேரம்
ஹாஹேய்… ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற
ஓ… என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற

என்னமோ என்னோடு கிச்சு கிச்சு மூட்டி போகுது கன்னம் பிச்சு போடுது
கன்னமோ தன்னோட முத்த பேச்சை கேக்குது தா உன் இதழ் தாயேன்
முதல் முறை பரவுதே பரவசம்
தொடங்கணும் மலர்வனம் இவள் வசம்
இடைவெளி குறைந்தபின் இதழ்ரசம்
கண் கவிழ்ந்து மையல் போது நெஞ்சின் மீது
ஓ… என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற
ஹோ… ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற



Kaaviya Thalaivan - Aye Mr. Minor

காவியத் தலைவன் - யாருமில்லா தனியரங்கில்

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்...

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

இசையால் ஒரு உலகம்
அதில் நீ நான்
மட்டும் இருப்போம் !
கனவால் ஒரு இல்லம்
அதில் நாம் தான்
என்றும் நிஜமாய்
ஓ… அது ஒரு
ஏகாந்த காலம்
உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் என்னும் படிவழியில்
இதயத்துக்குள் இறங்கியது
காதல் காதல் காதல் காதல்

யாருமில்லா தனியரங்கில்...

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே
நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

ஓ...என்ன சொல்வேன்
இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்

யாருமில்லா தனியரங்கில் !….

பேச மொழி தேவையில்லை
பார்த்துக் கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா ?
மணிக்குயில் நானுமே !

சிற்பம் போல செய்து என்னை
சேவித்தவன் நீயே நீயே
மீண்டும் என்னை கல்லாய் செய்ய
யோசிப்பதும் ஏனடா – சொல்

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே
நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

ஓ...என்ன சொல்வேன்
இதயத்திடம்
உன்னை தனிமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்....



Kaaviya Thalaivan -  Yaarumilla

சண்டிவீரன் - அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல

பஞ்சி நீ, பஞ்சுல பதுங்கி வரும் நூலு நான்
அஞ்சி நீ, அஞ்சுல அடங்கி வரும் நாலு  நான்
பந்த நீ, பந்தல தாங்குற காலு நான்
பந்து நீ, பந்துல நிரம்பி நிக்கும் காத்து நான்
ஆத்தாடி என்ன ஆத்துனு ஆத்துன
காத்தாகி  மெல்ல தூத்துனு தூத்துன
காதல மீட்டுன கடவுள காட்டுன

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல

கோணலா மாணலா இருந்த மனம் நேருல

காலு தான் போகுதே காதலென்னும் ஊருல
நாணலா நாணலா அசஞ்சி மனம் ஆடல
தொலஞ்சது தெரிஞ்சும் நான்  இன்னும் ஏன் தேடல
கண்ணெல்லாம் ஒன் காச்சிதான் காச்சிதான்
காதெல்லாம் ஒன் பேச்சிதான் பேச்சிதான்
காதல மீட்டுன கடவுள காட்டுன

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற



Chandi Veeran - Alunguraen Kulunguraen

Wednesday, April 26, 2017

திருவிளையாடல் ஆரம்பம் - கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ

பல்லவி
=======
ஆ: கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
காலடிச் சத்தம் ஒன்று கேட்கிறதே
உன் உயிர்வந்து எந்தன் உயிர்தொட்டது
என் உலகமே உன்னால் மாறிவிட்டது
பெ: கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே

சரணம்-1
========
ஆ: காதல் வந்து கெடுத்தபின் கவிதைகள் படிக்கிறேன்
பெ: தோழிகளைத் தவிர்க்கிறேன் உன்னைத்தேடி வருகிறேன்
ஆ: தாய் தந்தை இருந்துமேன் தனிமையில் தவிக்கிறேன்
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்
பெ: எந்தன் வீட்டை சொந்தமென்று நேற்றுவரை நினைத்தவள்
உன்வீட்டில் குடிவர நினைக்கிறேன்
ஆ: உன்னைக் காதலித்த கணமே உனக்குள் வந்தேன்
பெ: கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே

சரணம்-2
========
ஆ: கனவிலே நீயும் வந்தால் புகைப்படம் எடுக்கிறேன்
பெ: கனவுகள் இங்கு இல்லை கண்விழித்து நினைக்கிறேன்
ஆ: பெண்ணே நானோ உன்னை என்றும் மறப்பது இல்லையடி
மறந்தால் தானே நினைத்திட
பெ: அன்பே நானோ இறக்கையில் உந்தன் சுவாசம் தீண்டட்டும்
உடனே நானும் பிறந்திட
ஆ: உண்மைக் காதல் சாவது இல்லையடி
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே

பெ: நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
காலடிச் சத்தம் ஒன்று கேட்கிறதே
ஆ: உன் உயிர்வந்து எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால் மாறிவிட்டது
பெ: கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா



Thiruvilayadal Aarambam - Kannukul Yaetho

திருவிளையாடல் ஆரம்பம் - என்னமா கண்ணு சௌக்கியமா

என்னமா கண்ணு சௌக்கியமா
ஆமமா கண்ணு சௌக்கியந்தான்....
பாக்கத்தான் சின்னப் பையன் நானுங்க
உங்க பூட்டுக்கு சின்ன சாவி நானுங்க
நாட்டுக்கு நல்ல பையன் நானப்பா
எனது பூட்டுக்குக்கு கள்ளச்சாவி நீயப்பா (என்)

கொல்லைப் பணம் என்னிடத்தில் கொட்டிக்கெடக்கு
அட ஒல்லிக்குச்சி ராஜாவுக்கு என்ன இருக்கு
வாரித்தரும் வள்ளலுக்கு வாரிசிருக்கு
உங்க வாரிசுக்கு பிள்ள தரும் யோகம் எனக்கு
சென்டிமெண்ட காட்டி ஓ ஹோ ..............
போடாதப்பா போட்டி ஓ ஹோ ..............
வெற்றி கொடி நாட்டி ஆ.... நாளை தர்றேன் பேட்டி ஒ....
என்ன வெல்ல முடியாதே ஏ படியாதே
யானை காதில் உள்ளபோயி வெல்லும் எறும்பு ஹோய் (என்)

வெள்ளிப்பணம் சத்தம் போட்டால் சொர்க்கம் திறக்கும்
வெட்டிப்பய ஒன்னக்கண்டா என்ன திறக்கும்
உங்கள் வசம் உள்ள துட்டில் சொர்க்கம் திறக்கும்
எங்கள் வசம் உள்ள புத்தி சொர்க்கம் படைக்கும்
கோணல் உள்ள புத்தி ஒஹோ......
கண்ணைத் தாக்கும் கத்தி ஒஹோ ........
உன்னை வெல்லும் யுத்தி ஆ..... காணும் எந்தன் சக்தி ஒ .......
கள்ளப் புத்தி செல்லாதே வெல்லாதே
உன்னைவென்று பெண்ணை வென்று
மண்ணை வெல்லுவேன் (என்)

என்னம்மா கண்ணு சொல்லம்மா கண்ணு
என்னமா கண்ணு சௌக்கியமா
ஆமமா கண்ணு சௌக்கியந்தான்.



Thiruvilayadal Aarambam - Ennama Kannu Sowkiyama

அரங்கேற்ற வேளை - ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ


ஆண் : தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் உண்டு
பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று

பெண் : தென்பாண்டி மன்னன் என்று திரு மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண் : இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண் : கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண் : கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண் : நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ


பெண் : தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண் : வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்

பெண் : அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன

ஆண் : அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன

பெண் : இசை வீணை வாடுதோ இதமான கைகளை மீட்ட

ஆண் : சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

பெண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

ஆண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ



Arangetra Velai - Aagaya Vennilaave

அரங்கேற்ற வேளை - குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
கன்னி வெடி வெச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வெச்சிருக்கேன்
தொட்டா சிதறிவிடும் தோட்டா வெடிச்சிவிடும்
குட்டு ஒடிஞ்சிவிடும் பட்டா தெறிச்சிவிடும் டோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
கன்னி வெடி வெச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வெச்சிருக்கேன் ஹோ ஹோ

தாய்பாலும் கெட்டுபோச்சு என்ன பண்ணும் கொழந்த
ஹும் ஹா...ஹும் ஹா...ஹும் ஹா
வாய்க்காலில் தண்ணி இல்ல தண்ணியிலே மனுஷன்
ஹும் ஹா...ஹும் ஹா...ஹும் ஹா
சுட்டுபுட்ட ஹீரோ நீ தான் தட்டுகெட்ட ஜீரோ தான்
வெட்டுகுத்து நீயும் போட்டா
கட்சிக்குள்ள கோட்டா தான்
வீறாப்பா மெரட்டி உருட்டும்
ஊரெல்லாம் திருட்டு பயக
கெட்டாலும் சுட்டாலும் எல்லோரும் ராஜாங்கதான் டோய்

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
கன்னி வெடி வெச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வெச்சிருக்கேன்
தொட்டா சிதறிவிடும் தோட்டா வெடிச்சிவிடும்
குட்டு ஒடிஞ்சிவிடும் பட்டா தெறிச்சிவிடும் டோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
கன்னி வெடி வெச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வெச்சிருக்கேன் ஹோ

நெல்லு விளையும் நிலம் வீடாகிபோச்சு
ஹும் ஹா...ஹும் ஹா...ஹும் ஹா ஹா
ஊரில் ஜனம் இருந்தும் காடாகி போச்சு
ஹும் ஹா...ஹும் ஹா...ஹும் ஹா ஹா
கெட்ட வேலையான கூட துட்டு வந்த தப்பே இல்ல
இஷ்டப்படி விட்ட போதும் அப்பன் போல புள்ளயில்ல
குளிரெல்லாம் விலகிபோச்சு எல்லாமே பழகிபோச்சு
வெள்ளைக்கும் கொள்ளைக்கும் அல்லாடும்
சொள்ளைகளே ஹே ஹோய்

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
கன்னி வெடி வெச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வெச்சிருக்கேன்
தொட்டா சிதறிவிடும் தோட்டா வெடிச்சிவிடும்
குட்டு ஒடிஞ்சிவிடும் பட்டா தெறிச்சிவிடும் டோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
கன்னி வெடி வெச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வெச்சிருக்கேன் ஹோ



Arangetra Velai - Gundu Onnu Vachirukken

ரெட் - தாய் மடியே உன்னை தேடுகிறேன்

தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக பாடுகிறேன்
பத்து திங்கள் என்னை சுமந்தாயே
ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே
நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு
நடு தெருவில் கிடக்கிறது பார்த்தாயோ
உதிரம் வெளியேறும் காயங்களில்
என் உயிரும் ஒழுகும் முன்னே வா தாயே
தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கின்றேன்
தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக பாடுகிறேன்

விண்ணை இடிக்கும் தோள்கள்
மண்ணை அளக்கும் கால்கள்
அள்ளி கொடுத்த கைகள் அசைவிழந்ததென்ன
கனல்கள் தின்னும் கண்கள்
கனிந்து நிற்கும் இதழ்கள்
உதவி செய்யும் பார்வை
உயிர் குறைந்ததென்ன
பாரத போர்கள் முடிந்த பின்னாலும்
கொடுமைகள் இங்கே குறையவில்லை
ஏசுகள் என்றோ மாண்ட பின்னாலும்
சிலுவைகள் இன்னும் மறிக்கவில்லை
தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக பாடுகிறேன்

படை நடத்தும் வீரன்
பசித்தவர்கள் தோழன்
பகைவருக்கும் நண்பன் படும் துயரம் என்ன
தாய் பாலாய் உண்ட ரத்தம்
தரை விழுந்ததென்ன
இவன் பேருக்கேற்ற வண்ணம் நிலம் சிவந்ததென்ன
தீமைகள் என்றும் ஆயுதம் ஏந்தி தேர்களில் ஏறி வருவதென்ன
தர்மங்கள் என்றும் பல்லக்கில் ஏறி தாமதமாக வருவதென்ன

தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக பாடுகிறேன்
பத்து திங்கள் என்னை சுமந்தாயே
ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே
நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு
நடு தெருவில் கிடக்கிறது பார்த்தாயோ
உதிரம் வெளியேறும் காயங்களில்
என் உயிரும் ஒழுகும் முன்னே வா தாயே
தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கின்றேன்



Red - Thai Madiyae

ரெட் - ரோஜா காடு சுடிதார் போட்டு

ரோஜா காடு சுடிதார் போட்டு
மதுரை வீதியில் வந்தா
அட மனம் குதிக்குது பந்தா
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா
தீயாய் இருந்தேனடா திரியாய் வந்தாளடா
கலக்கும் காட்டறாரு நான் கரையே அவள் தானடா
ரோஜா காடு சுடிதார் போட்டு
Ho baby Ho baby Ho baby ho…

அழகு பெண்ணழகு ஆயிரம் தான் இருக்குதடி
ஆனா என் மனசு உன் மடியில் விழுந்ததடி
ஓ.. பிடிச்சது முன்னழகோ பின்னழகோ இல்லையடி
அதுக்கும் மேல ஒரு தாயழகும் உள்ளதடி
அவள பொண்ணு கேட்டு போடப் போறேன் தாலி
திருப்பரங்குன்றத்து கோயிலிலே
மேல மாசி வீதி வர மேல சத்தம் கேட்கும்
மூணு மோடி போடும் வேளையிலே
வீட்டுக்குள்ளே பாய் போடுவேன்
பிள்ளை பெத்து வெளியேறுவேன்

ரோஜா காடு சுடிதார் போட்டு
மதுரை வீதியில் வந்தா
அட மனம் குதிக்குது பந்தா
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா
தீயாய் இருந்தேனடா திரியாய் வந்தாளடா
கலக்கும் காட்டறாரு நான் கரையே அவள் தானடா

அவள மனம் முடிச்சி அரசர் அடியில் குடியிருப்பேன்
வேர்த்தா அழகர் மலை காத்த கொஞ்சம் திருப்பி வெப்பேன் .
மதுரை மல்லிகை பூ வண்டி கட்டி வாங்கி வருவேன்
மேட்டினிக்கு டைடானிக் இங்கிலீஷ் படம் பாக்க வெப்பேன்
செம்பவள விரல் விட்டு நகம் விழுந்தாலும்
அத ஒரு முத்தா வெச்சிருப்பேன்
பட்டு வண்ண கூந்தல் விட்டு முடி விழுந்தாலும்
பரம்பரை சொத்தா வெச்சிருபேன்
மடியில் சீராட்டுவேன் விடிந்தும் வாலாட்டுவேன்

ரோஜா காடு சுடிதார் போட்டு
மதுரை வீதியில் வந்தா
அட மனம் குதிக்குது பந்தா
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா
தீயாய் இருந்தேனடா திரியாய் வந்தாளடா
கலக்கும் காட்டறாரு நான் கரையே அவள் தானடா
ரோஜா காடு சுடிதார் போட்டு



Red - Roja Kaadu

ரெட் - டில் டில் டில் இத்தாலி கட்டில்

டில் டில் டில் இத்தாலி கட்டில்
தை தை தை இங்கிலாந்து மெத்தை

டில் டில் டில் இத்தாலி கட்டில்
தை தை தை இங்கிலாந்து மெத்தை
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நீ நண்பா
டில் டில் டில் இத்தாலி கட்டில்
தை தை தை இங்கிலாந்து மெத்தை
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நான் பெண்ணே
காஷ்மீரின் ஆப்பிள் காபூலின் திராட்சை ரூசிப்பேன் ரூசிப்பேன்
பெல்ஜியம் கிலாஸ்ஸில் ஜெர்மனி வைனை ரூசிப்பேன் ரூசிப்பேன்
அடி பெண்களில் நான் தொட்டது அடி நீதானே நீதானே
டில் டில் டில் இத்தாலி கட்டில்
தை தை தை இங்கிலாந்து மெத்தை
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நீ நண்பா

துருக்கி கம்பலத்தில் நான் இந்திய ஓட்டெலுக்கு
உன்னை நடக்க வைத்திருப்பேன்
சௌதி பேரிச்சையில் ஆஸ்ட்ரேலிய தேன் ஊற்றி
உனை சுவைக்க வைத்திருப்பேன்
கிளியே நமக்கொரு மாளிகையில் கிரேக்க நாடு மார்பல்கள்
ஆப்ரிக்காவின் தங்கத்தில் அழகிய கைப்பிடிகள்
ஜோர்டன் முஸ்லிம் தனியறையில் தாய்லாந்து நாட்டு தலையனைகள்
பாத்ரூம் போக நினைத்தாலும் டென்னிஸ் காலணிகள்
இனியெல்லாம் முதல் தரம் இந்த இன்பம் நிரந்தரம்
அட பெண்களில் யார் முதல் தரம் அது நான்தானே நான்தானே
டில் டில் டில் இத்தாலி கட்டில்
தை தை இங்கிலாந்து மெத்தை
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நான் பெண்ணே

சீன கிண்ணத்தில் சேலத்து மாம்பழங்கள்
நீ புசிக்க நான் தருவேன்
இலங்கை தேயிலையில் நான் டென்மார்க் பாலூற்றி
புது தேநீர் நான் தருவேன்
மைசூர் சந்தன தைலத்தில் மாலை பொழுதில் நீராடி
பாரிஸ் பர்ஃப்யூம் பூசிக்கொண்டு மெக்சிகன் இசை கேட்போம்
இராக் நாட்டு கோப்பையிலே பிரெசில் நாடு ஜூஸ் பருகி
ரோமன் விளக்கு வெளிச்சத்தில் கவிதை தமிழ் படிப்போம்
இனியெல்லாம் முதல் தரம் இந்த இன்பம் நிரந்தரம்
அட பெண்களில் யார் முதல் தரம் அது நான்தானே நான்தானே

டில் டில் டில் இத்தாலி கட்டில்
தை தை தை இங்கிலாந்து மெத்தை
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நான் பெண்ணே
காஷ்மீரின் ஆப்பிள் காபூலின் திராட்சை ருசிப்பாய் ருசிப்பாய்
பெல்ஜியம் கிலாஸ்ஸில் ஜெர்மனி வைனை ருசிப்பாய் ருசிப்பாய்
அட பெண்களில் நீ தொட்டது நான்தானே நான்தானே



Red - Dil Dil Italy Kattil

ரெட் - கண்ணை கசக்கும் சூரியனோ ரெட்

கண்ணை கசக்கும் சூரியனோ ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
காணும் மண்ணில் சரி பாதி ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
உடம்பில் ஓடும் செங்குருதி ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
உழைக்கும் மக்கள் உள்ளங்கை ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு
அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு
நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு
அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு
அட வறுமையின் நிறமா சிவப்பு?
அதை மாற்றும் நிறமே சிவப்பு!
பிள்ளை தமிழ் இனமே எழு! எழு! எழு!
அறிவை ஆண்டவனாய் தொழு! தொழு! தொழு!
நீலும் ஆகாயம் தொடு! தொடு! தொடு!
நிலவை பூமியிலே நடு! நடு! நடு!

கண்ணை திறக்கும் கல்வி இங்கே குருடாய் போனதே
காசு எறிந்தால் கதவு திறக்கும் வணிகம் ஆனதே
கலைமகள் தனது மகளை சேர்க்க பள்ளி ஏறினாள்
வீணை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள்
சரியா? சரியா? ஒரு கல்வி மனித உரிமை என்று காணலையா!
முறையா? ஒரு ஏழை வீட்டில் கல்வி என்ன பொய்யா!
குடிக்கும் தாய்ப்பாலுக்கு விலையொன்றும் கேட்காதே
படிக்கும் படிப்பை நீ பணம் கேட்டு விற்காதே
குடிக்கும் தாய்ப்பாலுக்கு விலையொன்றும் கேட்காதே
படிக்கும் படிப்பை நீ பணம் கேட்டு விற்காதே
கண்ணை கசக்கும் சூரியனோ ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
காணும் மண்ணில் சரி பாதி ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
உடம்பில் ஓடும் செங்குருதி ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
உழைக்கும் மக்கள் உள்ளங்கை ரெட்! ரெட்! ரெட்! ரெட்!

என் தமிழ் நாட்டின் மக்கள் தொகையோ ஆறு கோடிகள்
இந்திய நாட்டின் மக்கள் தொகையோ நூறு கோடிகள்
மனிதனை மனிதன் சாப்பிடும் முன்னே தடுத்து நிறுத்துங்கள்
உங்கள் அரிசியில் உங்கள் பெயருண்டு உழைத்தே உண்ணுங்கள்
குழந்தாய்! குழந்தாய்! இது போட்டி உலகம் போட்டி போட்டு முந்தி விடு
கொழுந்தே! இது நாடு அல்ல புலிகள் வாழும் காடு
உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே
உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே
உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே
உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே

கண்ணை கசக்கும் சூரியனோ ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
காணும் மண்ணில் சரி பாதி ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
உடம்பில் ஓடும் செங்குருதி ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
உழைக்கும் மக்கள் உள்ளங்கை ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு
அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு
நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு
அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு
அட வறுமையின் நிறமா சிவப்பு?
அதை மாற்றும் நிறமே சிவப்பு!
பிள்ளை தமிழ் இனமே எழு! எழு! எழு!
அறிவை ஆண்டவனாய் தொழு! தொழு! தொழு!
நீலும் ஆகாயம் தொடு! தொடு! தொடு!
நிலவை பூமியிலே நடு! நடு! நடு!



Red - Kannai Kasakkum Suriyano

ரெட்- ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா

ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
சடையில் அடிச்சே என்னை சாச்சுப்புட்டா…
முத்தாங்கனி தொட்டுப்புட்டா
நான் செத்தே போனேன் திட்டு திட்டா
நான் காணாங்குளத்து மீனே
நான் காணாங்குளத்து மீனே
உன்ன கடிக்கப் போறேன் நானே
நான் சமைஞ்சதும் சாமி வந்து
உன் காதில் சொல்லுச்சு தானே
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி

எனக்காச்சு மச்சினிச்சி உனக்காச்சு
வேணாம் இனி வாய்பேச்சு
வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம்
பற்களே முத்தாய் மாறலாம்
கிச்சு கிச்சு பண்ணிக்கலாம் பிச்சு பிச்சு தின்னுக்கலாம்
பழுத்தாச்சு நெஞ்சம்பழம் பழுத்தாச்சு
அணில் கிட்ட குடுத்தாச்சு
அணில் இப்ப துள்ளி குதிக்கலாம் அப்பப்பா பல்லும் பதிக்கலாம்
பசியையும் தூண்டிவிட்டு பந்திக்கும் வரச்சொல்லிட்டு
இலைகளை மூடி ஓடுறியே
பசி வந்தால் கலங்குவே நீ பாத்திரத்த முழுங்குவே
நீ சமைஞ்சதும் சாமி வந்து
என் காதில் சொல்லுச்சு மானே
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி

தடுக்காதே மூடு வந்தா கெடுக்காதே மஞ்சப்பூவும் மறைக்காதே
தாகம் தான் சும்மா அடங்குமா
தண்ணிக்குள் பந்து உறங்குமா
கொஞ்சம் கொஞ்சம் விட்டு கொடு
குங்குமத்த தொட்டு கொடு
நொருக்காதே பொன்னாங்கண்ணி பொறுக்காதே
புடலங்காய முருக்காதே
மொத்தத்தில் என்ன துவைக்கிற
முத்தத்தில் மச்சம் கரைக்கிற
காதலின் சேட்டையடி கட்டில் மேல் வேட்டையாடி
காயமும் இங்கே இன்பமடி
கட்டிலுக்கு கெட்ட பையன் நீ ரெட்ட சுழி உள்ள பையன்
நீ சமைஞ்சதும் சாமி வந்து
என் காதில் சொல்லுச்சு மானே

ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
சடையில் அடிச்சே உன்னை சாச்சுப்புட்டா…
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
சடையில் அடிச்சே உன்னை சாச்சுப்புட்டா…
முத்தாங்கனி தொட்டுப்புட்டா
நான் செத்தே போனேன் திட்டு திட்டா
நான் காணாங்குளத்து மீனே
நான் காணாங்குளத்து மீனே
உன்ன கடிக்கப் போறேன் நானே
நான் சமைஞ்சதும் சாமி வந்து
உன் காதில் சொல்லுச்சு தானே



Red - Olikuchi Udambukari

ரெட் - நவம்பர் மாதம் நாலாம் தேதி

நவம்பர் மாதம் நாலாம் தேதி காதலி கையிளிருப்பாள்
மெக்சிகோவில் இருந்து மதுரைக்கு பறந்து மெத்தை மேலே வந்து குதிப்பாள்
உன் மார்பில் பாய்ந்து கண் மூடி சாய்ந்து
கண்ணாளா தன் மேனியை உன் மீசையில் தேய்ப்பாள்
கண் ஜாடை செய்தாள் கை ரெண்டும் சேர்த்தாள்
ஐயய்யோ என் ஆசையை சொல்லாமலே தீர்ப்பாள்
நவம்பர் மாதம் நாலாம் தேதி காதலி கையிளிருப்பாள்

ஹோ.. தினம் விசேஷமே தினம் விசேஷமே
அவள் முத்தமிட்ட எச்சிலை முத்தத்தாலே துடைத்தால்
ரத்தத்துக்குள் சந்தோஷமே
பேரின்ப வாரம் கொண்டாடும் நேரம்
கண்ணா நாம் பாலாற்றிலே தேன் ஊற்றுவோம் வா வா
ஓ. தினம் விசேஷமே தினம் விசேஷமே
ஹோ… இதயத்தில் விட்டு கொல்வாயா அடி பெண்ணே பெண்ணே
என் உயிரை வெட்டி தின்பாயா என் கண்ணே கண்ணே
பாம்பை போல் பின்னி கொள்வாயா அடி பெண்ணே பெண்ணே
பள்ளியறை கலகம் செய்வாயா என் கண்ணே கண்ணே
என் கூந்தல் பாயில் நீ வந்து தூங்கு
கண்ணா உன் முன்கோபத்தை என் மெத்தையில் காட்டு
நவம்பர் மாதம் நாலாம் தேதி காதலி கையிளிருப்பாள்
மெக்சிகோவில் இருந்து மதுரைக்கு பறந்து மெத்தை மேலே வந்து குதிப்பாள்

ஓ… இன்ப கொண்டாட்டமோ தினம் கோலாட்டமோ
என் உச்சந்தலை முத்தத்தில் உள்ளங்காலும் தித்திக்கும்
உற்சவத்தின் தேரோட்டமா
உன் ஆடை போக நான் ஆடை ஆக
உன் அங்கம் ஒவ்வொன்றையும் நான் மூடுவேன் வா வா
ஓ… இன்ப கொண்டாட்டமோ தினம் கோலாட்டமோ
ஊரெல்லாம் நம்மை பார்த்தாலும் உன் உதடை விட்டு
என் உதடை பிரிக்க மாட்டேனே என் கண்ணா கண்ணா
பூகம்பம் புரட்டி விட்டாலும் என் வாழ்நாள் முழுதும்
மடி விட்டு இறங்க மாட்டேனே என் மன்னா மன்னா
தேனுண்ட வாயும் தித்தித்த கையும்
நில் என்று சொன்னாலுமே நில்லாதடி வா வா

நவம்பர் மாதம் நாலாம் தேதி காதலி கையிளிருப்பாள்
மெக்சிகோவில் இருந்து மதுரைக்கு பறந்து மெத்தை மேலே வந்து குதிப்பாள்
உன் மார்பில் பாய்ந்து கண் மூடி சாய்ந்து
கண்ணாளா தன் மேனியை உன் மீசையில் தேய்ப்பாள்
கண் ஜாடை செய்தாள் கை ரெண்டும் சேர்த்தாள்
ஐயய்யோ என் ஆசையை சொல்லாமலே தீர்ப்பாள்



Red - November Madham

காதல் ஓவியம் - குயிலே குயிலே உந்தன் கீதங்கள்

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

உயிரே உறவே அந்த காலங்கள் வாராதோ

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

ஆ ஆ ஆ வானத்து நிலவை தண்ணீரிலே
சிறைவைத்த கதை தான் உன் கடையே
வானத்து நிலவை தண்ணீரிலே
சிறைவைத்த கதை தான் உன் கடையே

விழிகள் இருந்தும் உன்னை காணாமல் சுகம் ஏது
அழகே மலரே வருவாய்யா

ஆ ஆ ஆ

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

சீர்கொண்ட கவிதை கலைந்ததம்மா
நான் கண்ட கனவும் மறைந்ததம்மா

சீர்கொண்ட கவிதை கலைந்ததம்மா
நான் கண்ட கனவும் மறைந்ததம்மா
சலங்கை இசையை நான் கேட்கின்ற காலம் ஏது

நினைவில் உனை நான் மறப்பேனா

ஆ ஆ ஆ

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

உயிரே உறவே அந்த காலங்கள் வாராதோ

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ



Kaadhal Oviyam - Kuyilae Kuyilae

காதல் ஓவியம் - சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை

நம்தம்த நம்தனம்தம் நம்தனம்தம்
நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம்
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம்
என் நாதமே வா வா ஆஆஆஆஆஆஅ...

சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றிப் பார்வையில்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை
சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என் நாதமே வா வா ஆஆஆஆஆஆஅ...

(சங்கீத)

திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ அது சுடுவதைத் தாங்க முடியுமோ
கனவினில் உந்தன் உயிரும் உறவாகி விழிகளில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிரைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
இசை எனும் மழை வரும் இனி எந்தம் மயில் வரும்
ஞாபக வேதனை தீருமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ
குயிலே...குயிலே...குயிலே...குயிலே...
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே...

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள் நீதானே நீதானே நீதானே
விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னல் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் என்றும் உந்தன் பிம்பம் (2)
சிந்தும் சந்தன் உந்தன் சொந்தம்
தத்திசெல்லை முத்துச் சிற்பம் கண்ணுக்குள்லே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ கண்டுகொண்டும் இந்த வேஷமென்ன
ராஜ தீபமே...

(ஸ்வரங்கள்)



Kadhal Oviyam - Sangeetha Jathimullai

தங்க பதக்கம் - சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

மாமா காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?

நானாட வில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி



Thanga Pathakkam - Sothanai Mel Sothanai

தங்க பதக்கம் - நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

எங்கள் வீடு கோகுலம்
என் மகன் தான் கண்ணனாம்
தந்தை வாழுதேவனோ
தங்கமானா மன்னனாம்
எங்கள் வீடு கோகுலம்
என் மகன் தான் கண்ணனாம்
தந்தை வாழுதேவனோ
தங்கமானா மன்னனாம்
(நல்லதொரு..)

அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் தந்த்து
அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் தந்த்து
பிள்ளை செல்வம் என்னும் வண்ணம் கண்ணன் பிறந்தான்
நன்றி என்னும் குணம் கொண்டது
நன்மை செய்யும் மனம் கொண்டது
எங்கள் இல்லம் பேரை கண்ணன் வளர்ப்பான்
(நல்லதொரு..)

வெள்ளம் போல ஓடுவான்
வெண்மணல் மேல் ஆடுவான்
கானம் கோடி பாடுவான்
கண்ணன் என்னைத் தேடுவான்
கானம் கோடி பாடுவான்
கண்ணன் என்னைத் தேடுவான்

மாயம் செய்யும் மகன் வந்தது
ஆயர்பாடி பயம் கொண்டது
அந்த பிள்ளை செய்யும் லீலை நானறிவேன்
இந்த பிள்ளை நலம் கொள்ளவும்
என்னைப் பார்த்து எனை வெல்லவும்
கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து
நான் வளர்த்தேன்
(நல்லதொரு…)

கோலம் கொண்ட பாலனே
கோவில் கொண்ட தெய்வமாம்
தாயில் பிள்ளை பாசமே
தட்டில் வைத்த தீபமாம்

பாசம் என்று எதை சொல்வது
பக்தி என்று எதை சொல்வது
அன்னை தந்தை காட்டும் நல்ல சொந்தம் அல்லவா?
பிள்ளை என்னும் துணை வந்தது
உள்ளம் என்றும் இடம் கொண்டது
இல்லம் கண்டு தெய்வம் தந்த செல்வம் அல்லவா?
(நல்லதொரு..)



Thanga Pathakkam - Nalladhoru Kudumbam

கருப்புசாமி குத்தகைகாரர் - உப்புகல்லு தண்ணீருக்கு தண்ணீருக்கு ஏக்கபட்டது

உப்புகல்லு தண்ணீருக்கு
தண்ணீருக்கு ஏக்கபட்டது 
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது
மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது
நீ தப்பிசெல்ல கூடாதுனு கேட்டுகிட்டது
தேதிதாள போல வீணே நாளும் கிழியிரேன்
நான் தேர்வுதாழ கண்ணீரால ஏனோ எழுதுரேன்
இது கனவா....ஆ. இல்லை நிஜமா...ஆ..
தற்செயலா தாய் செயலா
நானும் இங்கு நானும் இல்லயே...

உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது 
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது
மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது
நீ தப்பிசெல்ல கூடாதுனு கேட்டுகிட்டது

ஏதுமில்லை வண்ணம் மென்று நானும் வாடினேன்
ஏழு வண்ண வானவில்லாய் என்னை மாத்தினாய்..
தாயும்மில்லை என்று உள்ளம் என்று நேற்று ஏங்கினேன்
நீ தேடிவந்து நெய்த அன்பால் நெஞ்ஜை தாக்கினாய்..
கத்தியின்றி ரத்தம்மின்றி காயபட்டவள் 
உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிரேன் மிச்சமின்றி மீதமின்றீ சேதபட்டவள்
உன் நிழல்குடுத்த தைரியத்தால் உண்மை அறிகிரேன்

உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது
ஓ மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது

மீசை வைத்த அன்னை போல உன்னை காண்கிரேன்
நீ பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதம் ஆகுதே...
பாளடைந்த வீடு போல அன்று தோன்றினேன்
உன் பார்வை பட்ட காரணத்தால் கோயிலாய் மாறுதே
கட்டில்லுண்டு மெத்தை உண்டு ஆன போதிலும் 
உன் பாசம் கண்டு தூங்க வில்லை எனது விழிகளே
தென்றல் உண்டு திங்கள் உண்டு ஆனபோதிலும்
கண் ஆழம் இங்கு தீண்டவில்லை உனது நினைவிலே...

உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது 
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது
மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது
நீ தப்பிசெல்ல கூடாதுனு கேட்டுகிட்டது
தேதிதாள போல வீணே நாளும் கிழியிரேன்
நான் தேர்வுதாழ கண்ணீரால ஏனோ எழுதுரேன்
இது கனவா....ஆ. இல்லை நிஜமா...ஆ..
தற்செயலா தாய் செயலா
நானும் இங்கு நானும் இல்லயே..

உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது 
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது...



Karuppusamy Kuththagaithaarar - Uppu Kallu Thanneerukku

சத்யா - வளையோசை கலகலகலவெனக்

வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

(வளையோசை கலகலகலவென)

ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்

நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்கத் தானாக ஆறும்

முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

(வளையோசை கலகலகலவென)

லாலலாலலாலா லாலா
லாலலாலலாலா லாலா ஹே
லாலலாலலாலா லாலலாலலாலா

உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்

நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே

ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு

சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேச்சில்தான்

(வளையோசை கலகலகலவென)



Sathya - Valaiosai Kala kala kalavena

அவதாரம் - தென்றல் வந்து தீண்டும் போது

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போலை
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போலை

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே
அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை



Avatharam - Thendral Vanthu Theendumbothu

Tuesday, April 25, 2017

வெற்றிவேல் - உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது

உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல     
ஓ உசுர பார்த்து வானம் கூட     
குறுகுமே மெல்ல (உன்ன)
     
சாமி போல வந்தவனே     
கேட்கும்முன் நீ தந்தவனே      
நான் வணங்கும் நல்லவனே     
நல்ல உள்ளம் கொண்டவனே     
ஏன் ஒட்டுமொத்த     
ஜென்மத்துக்கு சாமி நீ தானே (உன்ன)
     
உன்ன எதிர்பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ     
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ     
இல்லை இனி ஏதும் என்று வாடிரபா நின்ற போதிலே     
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே     
ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்     
உன் உறவென்பது யுக யுகங்களை      
கடந்தது தானே (உன்ன)
     
உன்னுடைய சாலையில் நின்று மலர் தூவவே     
கன்னி வரம் கேட்கிறேன்     
நானும் அரங்கேறவே     
உன்னருகில் வாழுவதொன்று     
போதும் இந்த மண்ணிலே     
வேறு ஒன்றும் தேவை இல்லை     
யாவும் உந்தன் அன்பிலே     
எனை ஆளவே வந்த மகராசனே     
நான் உனக்காகவே பல பிறவிகள்     
துணை வருவேனே  (உன்ன)



Vetrivel - Onnapola

வெற்றிவேல் - அதுவா இதுவா அவ என்னத்தான்

அதுவா இதுவா அவ என்னத்தான் சொல்லுவா     
தவியா தவிச்சேன்     
அத எப்பத்தான் சொல்லுவா      (அதுவா)
     
மனசெல்லாம் தூரலா நெனப்பெல்லாம் சாரலா     
பயமும் இருக்கு சோகமும் இருக்கு     
அடடா எனக்கு நிக்காம எங்கெங்கோ     
நான் போகுறேன் சொக்கமா சொக்கித்தான்     
நான் நிக்கிறேன்     
நிக்காம எங்கெங்கோ     
நான் போகுறேன் சொக்கமா சொக்கித்தான்     
நான் நிக்கிறேன்     
அதுவா இதுவா அவ என்னத்தான் சொல்லுவா     
தவியா தவிச்சேன் அத எப்பத்தான் சொல்லுவா     
மனசெல்லாம் தூரலா நெனப்பெல்லாம் சாரலா     
பயமும் இருக்கு சொகமும் இருக்கு      
அடடா எனக்கு நிக்காமா     
எங்கெங்கோ நான் போகுறேன்     
சொக்காம சொக்கித்தான் நான் நிக்குறேன்     
ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…



Vetrivel - Athuva Ithuva Ava Ennatha

வெற்றிவேல் - அடியே உன்ன பார்த்திட பார்த்திட

அடியே… உன்ன பார்த்திட பார்த்திட     
நான் தொலைஞ்சேனே     
அழகா இந்த ஆறு அடி ஆம்பளையும் வளைஞ்சேனே     
பொழுதும் உன் வாசனை ஆசையக்கூட்டுதே     
அடங்கா மதயானைப் போல் என்ன தாக்குதே     
உசுரே உன் ஓர பார்வை     
சக்கரத்தை நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே…

அடியே… உன்ன பார்த்திட பார்த்திட     
நான் தொலைஞ்சேனே     
அழகா இந்த ஆறு அடி ஆம்பளையும் வளைஞ்சேன...

எதுக்கு என்னை நீ பொரியேற ஊதுரா     
சுருக்கு கயிற விழியால மாத்துர     
முன் அழகில் நீ தான் ஒரு பேரா ஜாட காட்டுறா     
ஒத்த நொடிக்கூட ஒரு ஒதுங்காம தீய மூட்டுற     
எங்கோ ஏதோ நீயாக உன் நெனப்புல பேய்யாக     
பிடிச்சி பிடிச்சி நெஞ்சில் ஆணி அடிச்சேன்

அடியே… உன்ன பார்த்திட பார்த்திட     
நான் தொலைஞ்சேனே     
அழகா இந்த ஆறு அடி ஆம்பளையும் வளைஞ்சேனே....
     
உன்ன நான் நெனச்சு திமிராகி போகுறேன்     
விளக்கு திரி நான் விடிவெள்ளி ஆகுறேன்     
     
எத்தனையோ வார்த்த தெரிஞ்சாலும்     
வாய மூடுறேன் ஒத்த பனை ஓல     
அத போல நான் ஆடுறேன்     
     
சித்ததுல நோயாக மொத்தத்துல தாயாக     
கிடைச்ச கிடைச்ச என்ன என்டி கலைச்ச

அடியே… உன்ன பார்த்திட பார்த்திட     
நான் தொலைஞ்சேனே     
அழகா இந்த ஆறு அடி ஆம்பளையும் வளைஞ்சேன...
பொழுதும் உன் வாசனை ஆசையக்கூட்டுதே     
அடங்கா மதயானைப் போல் என்ன தாக்குதே     
உசுரே உன் ஓர பார்வை     
சக்கரத்தை நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே….



Vetrivel - Adiye Unna

வெற்றிவேல் - ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம்

ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம்     
சும்மா நிக்காதே ஒரு பூட்ட போட்டு     
போட்டி வைக்க காலம் சிக்காதே  (ஆட்டம்)
     
அட போகுது யாருது வானம்     
அட போகுது போகுது மேகம்     
அத பட்டா போட முடியாதுடா     
உன் போக்குல போக்குல ஓடு     
உன் தேடல தேடல சேரு     
என்ன நடக்குமோ அது நடக்கட்டும்     
அத அப்பப்பா பாத்துக்கலாம்  (ஆட்டம்)
     
பொழுதோடு பொழுதாக உன் வாழ்க்கைய நீ தேடு     
சிறு புல்லும் சிகரம்தான் சித்தேறும்ப நீ கேளு     
மேகத்த போல நிகழ்காலம் அது ஓடி போகுமே     
வானத்த போல எதிர்காலம் தெளிவாக தோன்றுமே     
என்னடா வாழ்க்கை என்று நீயுமே ஏங்கக்கூடாது     
கண்முன்னே காலம் காலி ஆகுமே தூங்கக்கூடாது     
ஒரு ஆமை தன் ஓட்டில் அட பிச்சை வாங்காதே (ஆட்டம்)
     
ஒரு போதும் தளராதே உன் நம்பிக்கை     
தினந்தோறும் இரை தேட எந்த பறவையும் சலிக்காது     
விரல்களை மூடு சுருக்கம் தான கை ரேசை என்பது     
அதைவிட வாடா நம் கையில் நம் வேர்வை உள்ளது     
வாழ்க்கையோ போகபோக தானடா பாடம் சொல்லுது     
வாலிபம் தேயும் முன்னே ஓடுடா பாதை உள்ளது     
போராட்டம் இல்லாமல் இங்கு எதுவும் கிடையாது  (ஆட்டம்)



Vetrivel - Aattam Pottu

24 - புன்னகையே பள பள பள பளவென

புன்னகையே
பள பள பள பளவென
ஒளிகளின் துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள்
அடிமனக் கனவுகள் பலிக்கிறதே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே

மழை சதுமனரிச இது
மழை சதுமனரிச இது
என்னுள்ளம் இசைக்கிறதே
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னுள்ளம் இசைக்கிறதே

அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக

அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
அந்த வானமே பல துண்டானதே

அது மண்ணில் விழுந்து
நம்மைக் கொண்டாடுதே
புது கல்லும் முள்ளும் சொல்லும்
மழையின் ரகசியமே

புன்னகையே
பள பள பள பளவென
ஒளிகளின் துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள்
அடிமனக் கனவுகள் பலிக்கிறதே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே

மழை சதுமனரிச இது
மழை சதுமனரிச இது
என்னுள்ளம் இசைக்கிறதே
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னுள்ளம் இசைக்கிறதே

கான மழையோ
ஏழு ஸ்வரமே
காதல் மழையோ
நூறு ஸ்வரமே
உன் சின்னத் திமிரோ

நாதஸ்வரமே
நீ என்னுள் கலந்தால்
ஜீவ ஸ்வரமே

மறக்காமலே நான்
நன்றி சொல்வேன்
மழைத்துளியால் மாலை கட்டுவேன்

புன்னகையே
பள பள பள பளவென
ஒளிகளின் துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள்
அடிமனக் கனவுகள் பலிக்கிறதே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே

மழை சதுமனரிச இது
மழை சதுமனரிச இது
என்னுள்ளம் இசைக்கிறதே
மனிதர்கள் இசைக்கிறதே
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னுள்ளம் இசைக்கிறதே

அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக

அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
அந்த வானமே பல துண்டானதே

அது மண்ணில் விழுந்து
நம்மைக் கொண்டாடுதே
புது கல்லும் முள்ளும் சொல்லும்
மழையின் ரகசியமே


24 - Punnagaye

Followers