Pages

Search This Blog

Thursday, April 27, 2017

காவியத் தலைவன் - ஏவினை நேர்விழி மாதரை

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை – நெறிபேணா

ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை – அகலாநீள்

மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை – யிகழாதே

மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது – மொருநாளே

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் – குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி – லுடையோனே

தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு – சிறியோனே

சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு – பெருமாளே.




Kaaviya Thalaivan - Thiruppugazh

Followers