Pages

Search This Blog

Showing posts with label Guna. Show all posts
Showing posts with label Guna. Show all posts

Tuesday, January 29, 2019

குணா - பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க..
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
வழி வருக வழி நெடுக ஒழி நிறைக வாழ்விலே
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க..

இடன் கொண்டு விம்மி.. இணை கொண்டு இறுகி..
இடன் கொண்டு விம்மி.. இணை கொண்டு இறுகி..
இளகி, முத்து வடன் கொண்ட கொங்கை மலை கொண்ட
இறைவர் வலிய நெஞ்சை நடன் கொண்ட
கொள்கை நலம் கொண்ட நாயகி,
நல்ல அரவின் படம் கொண்ட அன்பு பணிமொழி
வேதப் பரிபுரையே!! வேதப் பரிபுரையே!!

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க!!



Guna - Paartha Vizhi Parthatpadi

குணா - அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்

அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு
அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு
ஞானப் பெண்ணே போகும் கரும்பு
பந்தா பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்

அப்பன் என்றும் அம்மை என்றும் ...

குத்தம் குறை ஏதும் அற்ற சஜீவன் இங்க யார் அடா
சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தான் அடா
சிவன்-ஐக் கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
புத்தி கேட்ட மூடருக்கு என்றும் ஞானப் பார்வை ஏதடா
ஆதி முதல் அந்தம உன் சொந்தம்
உன் பந்தம் நீ உள்ளவரை தான்
வந்து வந்து கூடும் கூட்டம் தான்
விட்டோடும் ஓர் சந்தை கடை தான்
இதில் நீ என்ன நான் என்ன
வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத் தள்ளு

கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரனும்
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனது யாரடா
தட்டு கேட்டு ஓடும தள்ளாடும்
எந்நாளும் உன் உள்ளக் குரங்கு
நீ போடு மெய்ஞான விலங்கு
மானம் ஆடாமல் வாடாமல்
மெய்ஞானம் உண்டாக
அஞ்ஞானம் அற்று விழும்

அப்பன் என்றும் ...



Guna - Appan Endrum

குணா - கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது

(கண்மணி)

உண்டான காயம் யாவும் தன்னாலே ஆறிப் போகும்
மாயம் என்ன பொன்மானே பொன்மானே
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது

அபிராமியே தாலாட்டும் சாமியே நாந்தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா
சுப லாலி லாலி லாலி லாலி
அபிராமி லாலி லாலி லாலி



Guna - Kanmani Anpodu

குணா - உன்னை, நான் அறிவேன்

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாறரிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?
யார் இவர்கள் மாயும் மானிடர்கள்!
ஆட்டிவைதால் ஆடும் பாத்திரங்கள்!

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?

தேவன் என்றால், தேவனல்ல, தரைமேல் உந்தன் ஜனனம்!
ஜீவன் என்றால், ஜீவனல்ல என்னைப்போல் இல்லை சரணம்!
நீயோ, வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை!
நானோ யாரும் வந்து தங்கி செல்லும் மாளிகை! 
ஏன் தான் பிறந்தாயோ?
இங்கே வளர்ந்தயோ?
காற்றே நீயே சேற்றின் வாடை கொள்ள வேண்டும்!

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?

தாய்ப்பறவை, மிதித்தால் சேய்ப்பறவை, நோவதில்லை, காயம் ஆவதில்லை!

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்



Guna - Unnai Naan

Followers