Pages

Search This Blog

Showing posts with label Kadhaludan. Show all posts
Showing posts with label Kadhaludan. Show all posts

Thursday, November 7, 2013

காதலுடன் - பூக்களின் காதினில் வண்டுகள்

பூக்களின் காதினில் வண்டுகள் ரகசிய
பாடல்கள் பாடுது காதலுடன்
மூங்கில் துளையினில் மெல்லிய காற்று
மோகனம் இசைக்குது காதலுடன்
(பூக்களின்..)

இதயங்கள் துடிக்குது ஆவலுடன்
கடிதங்கள் பறக்குது காதலுடன்
அவரவர் மனதினில் அவரவர் அளவுக்கு
சிறகுகள் காதலுடன்

காதலுடன் உன் காதலுடன்
காதலுடன் உயிர் காதலுடன்
காதலுடன் உன் காதலுடன்
காதலுடன் உயிர் காதலுடன்
(பூக்களின்..)

நேற்று வரை ஒரு யாசகனாய்
உன் பார்வைக்கு காத்திருந்தேன்
பல ஆசைகளை நான் சுமந்தபடி
உன் வருகைக்கு தவமிருந்தேன்
தேவதையே உன் தேவை என்ன
உடன் மரங்களை கேட்டுவிடு
சிறு கண்ணசைவில் உன் காதலனை
ஒரு வள்ளல் ஆக்கிவிடு
வானத்து வானத்து நிலவெடுத்து
நீ வாசலில் வாசலில் வெளிச்சமிடு
பூசணி பூசணி பூப்பரித்து
புது புள்ளிகள் வைத்து கோலமிடு
என் கனவுகள் யாவையும்
உன் வசம் தந்தேன்
நிஜமாய் நிஜமாய் மாற்றிவிடு

காதலுடன் உன் காதலுடன்
காதலுடன் உயிர் காதலுடன்
காதலுடன் உன் காதலுடன்
காதலுடன் உயிர் காதலுடன்
(பூக்களின்..)

நிலவினிலே உன் பெயரெழுதி
நான் இரவினில் ரசித்திருப்பேன்
என் உயிரினிலே உன் பெயரெழுதி
நான் தினம் தினம் உச்சரிப்பேன்
சூரியனை நான் சிறைப்பிடித்து
உன் மூக்குத்தி ஆக்கிடவா
அடி சிம்ஃபனியில் உன் சிரிப்பொலியை
ஒரு சுரமாய் சேர்த்திடவா
காதலில் காதலை காதலனே
பல காலமும் ஆயிரம் பொய்கள் உண்டு
ஆயினும் ஆயினும் உன் போல
பொய் அழகாய் யாரும் சொன்னதில்லை
உன் கவிதையின் காதலை பொய் என்றாலும்
நிஜமாய் நிஜமாய் நேசிக்கிறேன்

காதலுடன் உன் காதலுடன்
காதலுடன் உயிர் காதலுடன்
காதலுடன் உன் காதலுடன்
காதலுடன் உயிர் காதலுடன்
(பூக்களின்..)

Kadhaludan - Pookalin Kathinile 

காதலுடன் - இதுவரை யாரும் பாடியதில்லை

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

காதலிக்காக காதலன் தேடி
தூது சென்றானே காதலன் ஆ...
தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா
தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

வங்கக்கடல் ஆழம் அல்ல
வாணக்கரை நீளம் அல்ல 
காதல் கடல் காதல் கடல்
ஆழத்தினை யார் சொல்ல

ஒ ... பெண்ணின் மனம் ஆழம் என்று
சொன்னவர்கள் கோடியுண்டு
ஆணின் மன ஆழத்தினை
சொன்னவர்கள் யாருண்டு

என்னுயிரே... மனதுக்குள் இருப்பதை வெளியிடவா 
உயிருக்குள் காதலை மறைத்திடவா
மறுமுறை உனக்கென பிறந்திடவா
அதுவரை தனிமையில் அழுதிடவா

ஒரு முறை வாழ்க்கை ஒரு முறை காதல்
உனக்கென வாழ்ந்தால் அர்த்தமாகுமே

தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

மேகமதை தூதுவிட்டால்
பாதி வழி போகும் முன்பே
தூறல்களாய்   மாறிவிடும்
என்று எண்ணி பயந்தாயா 

அன்னமதை தூதுவிட்டால்
 மெல்ல மெல்ல ஆடிச்செல்லும்
தாமதமாய் ஆகிவிடும்
என்று அதை தவிர்த்தாயா

என்னுயிரே... நிலவினை தூதென அனுப்பிவைத்தால் 
பகலினில் பதிங்கிடும் என நினைத்தா
என்னை இன்று தூதாய் அனுப்பிவிட்டு 
இதயத்தில் இடிகளை இறக்கி வைத்தாய்


ஒரு முறை வாழ்க்கை ஒரு முறை காதல்
உனக்கென வாழ்ந்தால் அர்த்தமாகுமே

தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து
காதலிக்காக காதலன் தேடி
தூது சென்றானே காதலன்

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா
தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா

Kadhaludan - Ithuvarai Yarum

காதலுடன் - உச்சிக் கிளையிலே

உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா

உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா

அது பாடும் பாட்டின் ராகம்
நெஞ்சில் தேனாக பாயுது
அதை கேட்கும் போது  மனதில்
முல்லைப் பூவாசம் வீசுது
 உச்சிக் கிளையிலே...

உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா

அது பாடும் பாட்டின் ராகம்
நெஞ்சில் தேனாக பாயுது
அதை கேட்கும் போது  மனதில்
முல்லைப் பூவாசம் வீசுது

நூராண்டு   வாழும் ஆசைகள் இல்லை
அன்போடு வாழும் ஒரு நாளும் போதுமே
கோவில்கள் செல்லும் தேவைகள் இல்லை
தெய்வங்கள் எல்லாம் நம் சொந்த பந்தமே

பரதனையும் ராமனையும் பாசத்தில் மிஞ்சிடுவோம்
அனுமனைப் போல் அணில்களைப் போல்
சேவையில் நின்றுடுவோம்  ......

இதை கேட்கும் போதே கண்கள்
ஊருதே நீர்க்கோலம்  போடுதே
அட சொந்தம் என்ற சொல்லில்
கோடி வேதங்கள் உள்ளதே

உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா

தீபங்கள் ஏற்றும் கார்த்திகை மாதம்
வாசல்கள் எல்லாம் பொண் வண்ணமாயிடும்

கல்யாண மேளம் கேட்டிடும் நேரம்
ரோயாப்பூ  முகமோ நிலவாக மாறிடும்

தேரோடும் வீதியெல்லாம் தேவதை ஊர்கோலம்
பூவோடு பூவாக பூமகள் வைபோகம்

அந்த நாளை எண்ணி எண்ணி
கைகள் பூமாலை கோர்த்ததே
அது  நாளை நாளை என்று
தேதித்தாழ்  மட்டும் தீர்ந்ததே
உச்சிக் கிளையிலே

உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா

அது பாடும் பாட்டின் ராகம்
நெஞ்சில் தேனாக பாயுது
அதை கேட்கும் போது  மனதில்
முல்லைப் பூவாசம் வீசுது

உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா

Kadhaludan - Uchi Kilaiyilae

காதலுடன் - உன்னை தினம் எதிர்

உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்
அழகா உன்னை தினம் எதிர் பார்த்தேன்

நீ வரும் வழி பார்த்து நெற்றிக்கு பொட்டிட்டு
காதணி மூக்குத்தி கை வளையல்  பூட்டி
கூந்தலில் மலர் சூடி துதித்து ததித்து நினைந்து உருகி
 உன்னை தினம் எதிர் பார்த்தேன்

நீரலை மேலாடும் நுரைப்பூவைப் போல
நித்தமும் நினைவாலே தடுமாறினேனே
ஆலிலை மேலாடும் ஆகாயா வண்ணா
நான் என்ன நீ தீண்ட ஆகாத பெண்ணா

வா சடுதியிலே வாடும் இள மையிலே
வா சடுதியிலே வாடும் இள மையிலே

மிதிலை என்றால்தான் ஸ்ரீ ராமனாக
கைலை என்றால்தான் சிவரூபமாக
தணிகை என்றால் திருத்தணிகை என்றால்
வா கதிர்வேலனாக..

நீ வரும் பாதை பூவிதல் தூவி 
விழி இமைக்காமல் தவமிருந்தேன்
உன் இரு விழிப்பார்வை ஒருமுறைக் காண
துதித்து ததித்து நினைந்து உருகி

உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உன்னை தினம் எதிர் பார்த்தேன்

ராமனின் திருப்பாதம் தொடவேண்டித்தானே 
நான் ஒரு கல் போல தெருவோரம் வாழ்ந்தேன்
ஆயுளில் ஒரு பாதி தினம் உன்னை தேடி
ஆயிரம் குடம் நீரை அபிசேகம் செய்தேன்

நீ சிறகு என்றால் நானும் இறகுகளாய்
நீ மனம் திறந்தாள் நானும் நினைவுகளாய்
ஏற்றுக்கொண்டேன் நான் சரிபாதி உன்னை
ஏற்றிவைப்பாய் நீ தீபம் நான் எண்ணெய்

எழுதி வைத்தேன் எழுதி வைத்தேன் நான்
உனக்காக என்னை ....
கண்ணனின் லீலை பாட்டிகள் சொன்ன
கதைகளில் மட்டும் கேட்டிருப்பேன்
மன்னன் முன் லீலை நேரினில் காண
துதித்து ததித்து நினைந்து உருகி

உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்

அழகே ....உன்னை தினம் எதிர் பார்த்தேன்
எதிர் பார்த்தேன் எதிர் பார்த்தேன்

Kadhaludan - Unnai Thinam

Followers