Pages

Search This Blog

Showing posts with label Sundharapandiyan. Show all posts
Showing posts with label Sundharapandiyan. Show all posts

Wednesday, November 6, 2013

சுந்தரபாண்டியன் - காதல் வந்து பொய்யாக

காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்
பூக்கள் என்று கை நீட்டி நீயும் தொடும் போது
பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்
உன் பார்வையிலே ஒரு மாற்றம் நடக்கும்
உன் வாழ்க்கையிலே இனி மௌனம் குதிக்கும்
உன் தேவதையை நீ காணும் வரைக்கும்
பல பூகம்பங்கள் உன் நெஞ்சில் வெடிக்கும்

காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்

ஒற்றை வார்த்தை பேசும் போதும்
கற்றை கூந்தல் மோதும் போதும்
நெற்றி பொட்டில் காய்சல் வந்து குடியேறும்
நண்பனோடு இருக்கும் போதும்
தன்னந்தனிமை நெஞ்சம் தேடும்
அங்கும் இங்கும் கண்கள் தேடி தடுமாறும்
கண்ணோடும் கனவோடும் யுத்தம் ஒன்று வந்திடுமே
கண்ணீரை தந்தாலும் காதல் இன்பம் என்றிடுமே
காதல் என்றும் கடலை போலே
கரையை யாரும் கண்டதில்லை
காதல் கையில் மாட்டிக் கொண்டால்
அய்யோ பிடிக்கும் பைத்தியமே

காதல் வந்து பொய்யாக உன்னைச் சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்

காற்றில் கையை வீசிட தோன்றும்
மேகம் பார்த்து பேசிட தோன்றும்
காதல் வந்து செய்யும் மாயம் புரியாதே
நேரம் கெட்ட நேரத்தில் எழுப்பும்
நடக்கும் போதே பறந்திட துடிக்கும்
காதலுக்கு காதல் செய்ய தெரியாதே
பறவைக்கு வேறாரும் பறக்க கற்று தருவதில்லை
நீயாக முன்னேறு நண்பன் உதவி தேவையில்லை
கஷ்ட நஷ்டம் கணக்கை பார்த்தால்
இதயம் வாழ முடியாதே
தட்டு தட்டு மீண்டும் தட்டு
காதல் கதவை திறந்திடுமே

காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்
பூக்கள் என்று கை நீட்டி நீயும் தொடும் போது
பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்

Sundarapandian - Kadhal Vandhu

Tuesday, November 5, 2013

சுந்தரபாண்டியன் - நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச
அட உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச
உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட

ஆத்து வெள்ளம் நீ என்றால் ஆடும் தோணி நானே
ஆட விட்டு அக்கரையில் கொண்டு சேர்ப்பாயே
பட்டாம்பூச்சி நான் என்றால் எட்டு திசை நீயே
எந்த பக்கம் போனால் என்ன நீதான் நிப்பாயே
மெட்டி வாங்கி தர சொல்லி குட்டி விரல் கூத்தாட
பட்டு சேல பல நூறு பாழா கிடக்கு
பக்கத்துல நான் தூங்க பத்துமடை பாய் வாங்க
நித்தம் நித்தம் நான் ஏங்க நாளும் போகுது

என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச
உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச

முள்ளு தச்ச காயத்த முத்தம் இட்டு ஆத்த
பத்து ஊரு தாண்டி வந்து பக்கம் நிப்பாயே
பட்ட பகல் என்றாலும் பித்தம் தலைக்கேறும்
என்னை சீண்டி ஏதோ ஏதோ பேச வைப்பாயே
பத்து தல பாம்பாக வட்டமிடும் என் ஆச
மொட்டு போல முகம் கூப்பி உள்ளம் மறைப்பேன்
நெஞ்சுக்குழி மேலாட தாலி கொடி நான் தேட
மஞ்சத்தண்ணி நீரோட எப்போ வருவ

என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச
உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட

Sundharapandiyan - Nenjukkulla nenjukkulla

Followers