Pages

Search This Blog

Showing posts with label Kaadhal Kondein. Show all posts
Showing posts with label Kaadhal Kondein. Show all posts

Monday, November 21, 2016

காதல் கொண்டேன் - காதல் காதல் காதலில் நெஞ்சம்

காதல் காதல் காதலில் நெஞ்சம்
கண்ணாமூச்சி ஆடுதட
தேடும் கண்ணில் பட படவென்று
பட்டாம்பூச்சி ஓடுதடா
எங்கேயோ எங்கேயோ இவனை இவனை தேடுகிறான்
தாய் மொழி எல்லாம் மறந்துவிட்டு
தனக்கு தானே பேசுகிறான்
காதல் மட்டும் புரிவதல்லை காற்றா நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூச்சை நிலை
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை

(காதல் காதல் …)

நேற்று வரைக்கும் இங்கிருந்தேன்
இன்று என்னை காணவில்லை
வெயில் இல்லை மழை இல்லை பார்தேனே வானவில்லை
என் நெஞ்சோடு ரசித்தேன் கொள்ளாமல் கொள்கின்ற அழகை
உயிரில் ஓர் வண்ணம் குழைத்து வரைந்தேன் அவளை
காதல் மட்டும் புரிவதல்லை காற்றா நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூச்சை நிலை
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை

(காதல் காதல் …)

பாலைவனத்தில் நடந்திருந்தேன்
நீ வந்து குடை விரித்தாய்
எந்தன் பெயரே மறந்திருந்தேன்
நீ இன்று குரல் கொடுத்தாய்
என் கண்ணாடி மனதில் இப்போது என் முகம் பார்த்தேன்
நீ வந்த பொழுதில் எந்தன் நெஞ்சம் பூத்தேன்
நதிகள் கடலில் தெரிவதில்லை நட்பில் கவலை புரிவதில்லை
இதயம் ரெண்டும் சேர்ந்திருந்தால்
இரவும் பகலும் பார்பதில்லை

(காதல் காதல் …)

Kaadhal Kondein - Kadhal Mattum Purivathillai

காதல் கொண்டேன் - தேவதையை கண்டேன் காதலில்

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்

ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது 
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது

தீக்குள்ளே விரல் வைத்தேன் 
தனி தீவில் கடை வைத்தேன் 
மணல் வீடு கட்டி வைத்தேன் 


தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் 

தேவதை தேவதை தேவதை தேவதை அவள் வதை 
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை அவள் வதை 
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை

விழி ஓரமாய் ஒரு நீர் துளி அடி வழியுதே என் காதலி 
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும் 
அழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம் 
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேரிடும் 
கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதே
எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவு உடைந்து போகுதே


தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் 

தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில் 
பாவியாய் மனனம் பாழாய் போகும் போகும் போகும்
சோழியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலைதிசை மாற்றினாய்
கானலாய் ஒரு காதல் கொண்டேன் கண்ணை குருடாக்கினாய் 
காற்றினில் கிழியும் இல்லைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது 
உன்னிடம் காமம் இங்கு நான் கொண்டால் எங்கு போவது ? என்ன ஆவது ?
என் வாழ்வும் தாழ்வும் உன்னை சேர்ந்தது …


தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்

ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது 
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது

தீக்குள்ளே விரல் வைத்தேன் 
தனி தீவில் கடை வைத்தேன் 
மணல் வீடு கட்டி வைத்தேன் 

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்

Kaadhal Kondein - Devathaiyai Kandaen

காதல் கொண்டேன் - மனசு ரெண்டும் பார்க்க

மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே

மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
நரம்பில் ஒரு நதி பாயுதே
இது என்ன வேட்கை
காதல் வலி உடல் காயுதே
இது என்ன வாழ்க்கை
ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில்
ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே

மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே

காதல் சருகான பின்பு
மோகம் வந்தாலே சாபம்
கண்ணில் முள் வைத்து மூடி
தூங்க சொன்னாலே பாவம்
உன் மார்பில் வழிகின்ற நீர் அள்ளி
மருந்து போல குடிப்பேன்
என் பித்தம் கொஞ்சம் தணிப்பேன்
உன் பாத சுவடுக்குள்
சுருண்டு விழுந்து மரிப்பேன்
உடல் சீறுதே நிறம் மாறுதே
வலி ஏறுதே இது என்ன கலவரமோ

மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே

மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே

நிலவின் ஒளியில் அலைகள் எரியுமா
அலையின் வேதனை நிலவு அறியுமா
வேதனைகள் நெஞ்சில் சுகமா எங்கும் பரவுதடி
உடலே உடலே உறைந்து போய்விடு
மனமே மனமே இறந்து போய்விடு
பாதையிலே சிறு கல்லாய் என்னை கிடக்க விடு
உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே
உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே
உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே
உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே
கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு பெண்ணே
அதை மறைக்காதே…
ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில்
ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே

Kaadhal Kondein - Manasu Rendum

காதல் கொண்டேன் - தொட்டு தொட்டு போகும் தென்றல்

தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசுதோ?
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறதோ?
ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே
அவள் பார்க்கும் பார்வை தான் குளிர்கிறதே
போகும் பாதை தான் தெரிகிறதே
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா இது மௌனமா?
வானவில் வெறும் சாயமா
வண்ணமா மனம் மின்னுமா தேடி தேடி துலைந்திடும் பொழுது

தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசுதோ?
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறதோ?

தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசுதோ?
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறதோ?
இந்த கனவு நிலைக்குமா?
தினம் காண கிடைக்குமா?
உன் உறவு வந்ததால் புது உலகம் பிறக்குமா?
தோழி உந்தன் கரங்கள் தீண்ட தேவனாகி போனேனே
வேலி போட இதயம் மேல வெள்ளை கொடியை பார்த்தேனே
தத்தி தடவி இங்கு பார்கையிலே பார்த்த சுவடு ஒன்று தெரிகிறதே
வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான் வாழ்ந்து பார்த்து வியந்திடலாமே
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசுதோ?
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறதோ?

தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசுதோ?
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறதோ?
விண்ணும் ஓடுதே மண்ணும் ஓடுதே கண்கள் சிவந்து தலை சுத்தியதே
இதயம் வலிக்குதே இரவு கொதிக்குதே இது ஒரு சுகம் என்று புரிகிறதே
நேற்று பார்த்த நிலவா என்று நெஞ்சம்
எண்ணை கேட்கிறதே புட்டி வைத்த
உறவுகள் மேல புதிய சிறகு முளைகிறதே
இது என்ன உலகம் என்று தெரியவில்லை
விதிகள் வரை முறைகள் புரியவில்லை
இதய தேசத்தில் இறங்கி போகயில் இன்பம் துன்பம் எதுவும் இல்லை
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசுதோ?
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறதோ?
ஒரு வெட்கம் எண்ணை இங்கு தீண்டியதே
அவள் பார்க்கும் பார்வை தான் குளிர்கிறதே
போகும் பாதை தான் தெரிகிறதே
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா இது மௌனமா?
வானவில் வெறும் சாயமா
வண்ணமா மனம் மின்னுமா தேடி தேடி துலைந்திடும் பொழுது

Kaadhal Kondein - Thottu Thottu

காதல் கொண்டேன் - நெஞ்சோடு கலந்திடு உறவாலே

நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே

ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்
சிறு பூவாக நீ மர்வாயா?
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்
வழி போகும் என் அன்பே அன்பே
(நெஞ்சோடு..)

கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
முக மூடி அணிகின்ற உலகிது
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது
நதி நீரில் அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா
(நெஞ்சோடு..)

காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை
(ஒரு பார்வை..)
(நெஞ்சோடு..)

Kaadhal Kondein - Nenjodu

Followers