Pages

Search This Blog

Showing posts with label Parthen Rasithen. Show all posts
Showing posts with label Parthen Rasithen. Show all posts

Saturday, December 31, 2016

பார்த்தேன் ரசித்தேன் - வா என்றது உலகம் உலகம் நான்

வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன்
நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன்
வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன்
நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன்
ஒரு பூ மீது பூலோகம் நிலை கொல்ல வேண்டும்
அது நிலை கொல்ல என் பாடல் துனையாக வேண்டும்

வாழ்வென்பதோ பயனம் புது திருப்பம் கேட்கிறேன்
நான் ஒவ்வொரு நாளையும் புதிதாய் ஜெயிப்பேன்
துன்பம் போக்கி இன்பம் செய்ய நான் மன்னில் தோன்றினேன்
தினம் இன்ப செய்தி சொல்லி காற்றே நீ வா வா வா
என் வாழ்க்கையின் போக்கில் நான் வாழ போகிறேன்
வெற்றி ஒன்றுதான் கொள்கை வெல்வேன்
கடைசி ரசிகன் உல்ல வரையில் நான் பாட போகிறேன்
எனது ரசிகனே இங்கே நீ வா வா வா

வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன்
நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன்
வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன்
நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன்

Parthen Rasithen - Vaa Endrathu

பார்த்தேன் ரசித்தேன் - தின்னாதே என்னை தின்னாதே

தின்னாதே என்னை தின்னாதே
சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே
நீ சைவம் தானே பெண்ணே என்னை தின்னாதே
ஜோடி கண்ணில் என்னை கொத்தி
ஜோடி மார்பில் என்னை குத்தி கொன்றவளே
தின்னாதே என்னை தின்னாதே
சீ .. சீன்டாதே என்னை சீன்டாதே
தின்னுவதை விடவும் இங்கு தின்னபடுதல்
இன்னும் இன்பம் அல்லவா ..அல்லவா ..
சீன்டாதே என்னை சீன்டாதே

பெண் வாடை அறியாத முனியாக நானிருந்தேன்
முந்தான பூவாசம் காட்டி விட்டாயே
ஒரு ஒரு ஒரு பாவம் அறியாத பூவாக நான் இருந்தேன்
பூ மீது பெற்றோலை ஊற்றிவிட்டாயே
பூவுக்குள்ளே தீ பிடித்தால் கொதிக்க கொதிக்க தேன் கிடைக்கும்
சுட சுட குடித்து விடு தீர்ந்த பிறகும் தேன் சுரக்கும்
பார்வை என்னும் ஈட்டி போட்டு
கொன்று என்னை கூறு போட்டு
உதட்டு மீது அடுப்பு மூட்டி சமைபவளே
(தின்னாதே …)

ஒரு நூறு பேராறு உள்நாட்டில் ஓடுகையில்
உன் தாகம் தீர என் குருதி கேட்டாயே
சுவையாறு என்பார்கள் சுவை ஏழு என்பேன் நான்
இதழ் கொண்ட சுவை சொல்ல மறந்து விட்டாரே
அ… குடலுக்கு பசி எடுத்தால் உணவு கொடுக்க அடங்கிவிடும்
உடலுக்கு பசி எடுத்தால் கொடுக்க கொடுக்க வளர்ந்துவிடும்
வண்டு விழியில் என்னை கொன்று
சுண்டு விரலில் துண்டு செய்து
மார்பு சூட்டில் என்னை சுட்டு சமைத்தவளே
(தின்னாதே …)

Parthen Rasithen - Thinnadhey Ennai

பார்த்தேன் ரசித்தேன் - கெடைக்கல கெடைக்கல பொண்ணு

கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
பஸ்சுல பாத்தா மைனாவே விட்டு
பாதியில் இரங்கி பேகாதே
அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல, கண்ண பிச்சி எரியரேன்
கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடிக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல

பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு வாழ்க்கையில பாக்கலாம்
டெர்மினசு சேரும் முன்னே ப்ரேக்கு டௌனு ஆகலாம்
ஹொ… பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு வாழ்க்கையில பாக்கலாம்
டெர்மினசு சேரும் முன்னே ப்ரேக்கு டௌனு ஆகலாம்
பஸ்சு மிசுனு சொல்ல முடியாது
ரூட்டு எப்பொவும் மாரலாம்
நெம்பர் பாத்து ஒன்னும் நம்ப முடியாது
போர்டு மாத்தி ஓட்டலாம்
ஒண்ணு போன ஒண்ணு வரும்
அது பஸ்சுக்கு மட்டும் பொருந்தலாம்
பொண்ணு போனா என்ன வரும், என் தேனுகுட்டிக்கும் தாடி வரும்
என் தலை எழுத்த ப்ரஹ்மனவன் எடது கையால் கிருக்கிட்டான்

கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல

என்ன பத்தி கவி எழுத கண்ணதாசன் இல்லையே
என்னக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லயே
ஆ… என்ன பதி கவி எழுத கண்ணதாசன் இல்லியயே
என்னக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லயே
ஆம்பிளைங்க விடும் கண்ணீர் என்னும்
shower-இல் குளிக்கும் பெண்களே
செம்பரம்பக்கம் யேரிய போல வரண்டு போசு கண்களே
சவுரி முடி எதுக்கடி அது ஆண்களுக்கு சவுக்கடி
இதயமெல்லம் காயபட்டும் இன்னும் ஏறிவிட்டது கிருக்கடி
அஹிம்சையான இம்சையடி காதல் என்னும் நெருக்கடி

கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல் எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
பஸ்சுல பாத்தா மைனாவே விட்டு
பாதியில் இரங்கி போகாதே.. போகாதே.. போகாதே..
அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல, கண்ண பிச்சி எரியரேன்…
கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல் எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல

Parthen Rasithen - Kedaikala Kedaikala Ponnu 

பார்த்தேன் ரசித்தேன் - பூவே புன்னகை காட்டு

பூவே புன்னகை காட்டு ஒரு Photograph-உக்கு
ஆப்பிள் கன்னம் நீட்டு என்ன் Autograph-உக்கு
என் வாழ்க்கை என்னும் பட்டம்
உன் கூந்தலில் சிக்கியதென்ன
அடி எப்படி சிக்கலெடுக்க
Love You Love You Baby
O Fair and Lovely Baby
Love You Love You Baby
O Fair and Lovely Baby
காற்று சிக்குவதில்லை உன் Photograph-உக்கு
வானம் எட்டுவதில்லைனீட்டு உன் Autograph-உக்கு

சொல்லில் மொழியில் என் காதல் சொல்ல முடியுமா நில்
டம்ளர் உள்ளே நீர்மூழ்கி கப்பல் போகுமா சொல்
நெஞ்சில் என்போல் வலியுண்டா நெஞ்சை தொட்டு நீ சொல்
பஞ்சின் வலியா தலை அரியும் என் பரம நன்பனே சொல்
என் இரவு படுக்கையை கேளு
நான் புரண்ட கணக்குகள் சொல்லும்
என் நைட்டி ஆடையை கேளு
நான் நனைந்த கணக்குகள் சொல்லும்
ஹே.. ஹே.. வாழ்க்கை வற்றும் வரைக்கும்
Love You Love You Baby
O Fair and Lovely Baby
Love You Love You Baby
O Fair and Lovely Baby
காற்று சிக்குவதில்லை உன் Photograph-உக்கு
வானம் எட்டுவதில்லைனீட்டு உன் Autograph-உக்கு

ஆணா பெண்ணா யார் முதலில் காதல் சொல்வது சொல்
நீயே சொன்னால் Bridge-இன் எடை தாழ்ந்து போகுமா சொல்
காதல் என்னும் பிச்சைதான் பெங்கல் இடுகிரோம் நில்
ஆண்கள் முதலில் கேளாமல் பிச்சை கிட்டுமா சொல்
அடி அழகு தேவதை உன் போல்
நான் ஆசை வைத்ததே இல்லை
என் மேனி குத்திடும் என்றா
நீ மீசை வைப்பதே இல்லை
ஹே.. ஹே.. என் உயிர்த்தேன் சொட்டும் வரைக்கும்
Love You Love You Baby
O Fair and Lovely Baby
Love You Love You Baby
I Love You Love You Baby
பூவே புன்னகை காட்டு ஒரு Photograph-உக்கு
ஆப்பிள் கன்னம் நீட்டு என்ன் Autograph-உக்கு
என் வாழ்க்கை என்னும் பட்டம்
உன் கூந்தலில் சிக்கியதென்ன
அடி எப்படி சிக்கலெடுக்க
Love You Love You Baby
O Fair and Lovely Baby
Love You Love You Baby
I Love You Love You Baby

Parthen Rasithen - Poove Punnagai

பார்த்தேன் ரசித்தேன் - எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
ஓரப்பார்வை பார்வை பார்கும்போதே உயிரில் பாதி இல்லை
மீதிப் பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே

உயிரே உயிரே உடம்பில் சிறந்தது எதுவென்று தவித்திருந்தேன்
அதை இன்றுதான் கண்டு பிடித்தேன்
கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி
உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி
காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது.. ஆ..
காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது
அது காலத்தை கட்டுகின்றது
என் மனம் என்னும் கோப்பையில் இன்று
உன் உயிர் நிறைகின்றது
என் மனம் என்னும் கோப்பையில் இன்று
உன் உயிர் நிறைகின்றது

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி

மார்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே மனசை மறைக்கதே
என் வயதை வதைக்காதே
புல்வெளி கூட பனித்துளி என்னும் வார்த்த பேசுமடி
என் புன்னகை ராணி ஒரு மொழி சொன்னால் காதல் வாழுமடி
வார்த்தை என்னை கைவிடும் போது மௌனம் பேசுகிறேன்
என் கண்ணீர் வீசுகிறேன்
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன் புரியவில்லை..
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன் புரியவில்லை

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
ஓரப்பார்வை பார்வை பார்கும்போதே உயிரில் பாதி இல்லை
மீதிப் பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே

Parthen Rasithen - Enakena Yerkanave

பார்த்தேன் ரசித்தேன் - பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

கட்டழகு கன்னத்தில் அடிக்க
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா அடடா

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
ஹே… ஹே… ஹே…

கண்ணும் கண்ணும் மோதிய வேளை
சில நொடி நானும் சுவாசிக்கவில்லை
கடவுள் பார்த்த பக்தன் போலே
கையும் காலும் ஓட வில்லை

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

தேவதையும் பேருந்தில் வருமா
கனவா நனவா தோன்றவும் இல்லை
நல்ல வேளை சிறகுகள் இல்லை
நானும் அதனால் நம்பவில்லை
நெற்றி என்ற மேடையிலே
ஒற்றை முடியை ஆட விட்டாள்
ஒற்றை முடியில் என்னை கட்டி
உச்சி வெயிலில் தூக்கிலிட்டாள்

மனதில் இத்தனை ரணமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

யேய்… யே வேலை தேடும் இளைஞன் கேட்டேன்
காதல் செய்யும் வேலை போடு
வந்த என்னை வேண்டாம் என்றால்
அணைத்து அணைத்தே கொன்று விடு

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

உலர்ந்து போன எந்தன் வாழ்வை
நாக்கின் நுனியால் ஈரமாக்கு
உறைந்து போன எந்தன் இரவை
ஓர பார்வையில் உருக விடு
என்னை தவிர ஆண்கள் எல்லாம்
பெண்களாகி போனால் கூட
உன்னை தவிர இன்னொரு பெண்ணை
உச்சி மோர்ந்து பார்ப்பதும் இல்லை

மனதில் இத்தனை ரணமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

கட்டழகு கன்னத்தில் அடிக்க
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா அடடா

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

Parthen Rasithen - Parthen Parthen Suda Suda Rasithen

Followers