Pages

Search This Blog

Showing posts with label Jodi. Show all posts
Showing posts with label Jodi. Show all posts

Wednesday, November 6, 2013

ஜோடி - வண்ணப் பூங்காவைப்போல்

தரரந்தன் தந்தந்தன்...

வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா...

வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா
எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா
இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே
அண்ணன்களோ எந்தன் உயிர்தானே

வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா
எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா
இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே
அண்ணன்களோ எந்தன் உயிர்தானே

வண்ணப் பூங்கா...பூங்கா...வண்ணப் பூங்கா

வெண்ணிலா வெண்ணிலா தங்கையானதோ வெண்ணிலா தூங்க ஒரு வானம் வாங்கவோ (2)

விண்மீங்களைக் கேட்டால் அண்ணன்கள் எல்லாம் பறித்துப் பறித்துத் தருவார்கள்
நான் வானவில் கேட்டால் ஏணியிலேறி ஒடித்து ஒடித்துத் தருவார்கள்
ஒற்றைத் தங்கை எனக்காக ஊரைத் தருவார்கள்
ஓ இன்னுயிர் போலென்னைக் காப்பதும் ஏனோ
ஓஓ...இன்னொருவன் கையில் என்னை ஒப்படைக்கத் தானோ
பெண்கள் வாழ்வே ரெட்டை வாழ்வோ ரெட்டை வாழ்வோ

வண்ணப் பூங்காவைப்போல் எங்கள்
பூங்கா பூங்கா வண்ணப் பூங்கா

வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா
எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா
இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே
அண்ணன்களோ எந்தன் உயிர்தானே

வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா

வெண்ணிலா வெண்ணிலா தங்கையானதோ வெண்ணிலா தூங்க ஒரு வானம் வாங்கவோ

அன்னையின் மடியினில் ஓரிடம் தேடி தந்தையின் தோள்களில் சில பொழுதாடி
அண்ணன்கள் மார்பினில் கவிதைகள் பாடி...வாழ்வே கனவா
பெண்ணினம் ஒருவகை பூச்செடியாகும் வேருடன் பெயர்ந்தொரு வேறிடம் போகும்
நிறமற்ற ஒரு இடம் நிரந்தரம் ஆகும்...கனவே வாழ்வா
நானுமென்ன ஒரு பூச்செடியா இந்தப் பூச்செடிக்கு இதயம் இல்லையா

வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா
எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா
இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே
அண்ணன்களோ எந்தன் உயிர்தானே

வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா
எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா

வெண்ணிலா வெண்ணிலா தங்கையானதோ வெண்ணிலா தூங்க ஒரு வானம் வாங்கவோ (2)

Jodi - Vanna Poongaavaippoal

Tuesday, October 8, 2013

ஜோடி - வெள்ளி மலரே

வெள்ளி மலரே வெளி மலரே...வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய் ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய் சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏந்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ

இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு
இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு

ஓ...
வெள்ளி மலரே வெள்ளி மலரே

ஏ...
மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள் கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்
நெஞ்சுடைந்த பூவே நில்
ஏ வெக்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை
ஆடைகொள்ளப் பார்ப்பீர் ஐயோ தள்ளி நில் நில்
வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே தேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே
உன்னைக்கண்டு உயிர்த்தேன் சொட்டுதே சொட்டுதே

(வெள்ளி மலரே)
(இளந்தளிரே)

ஏ...
வனங்களில் பூந்தளிர் தேடும்போதும் நதிகளில் நீர்க்குடைந்தாடும்போதும்
உந்தன் திசை தேடும் விழிகள்
தொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம் அருகினில் செல்லச்செல்ல ஓடிப்போகும்
நீயும் மேகம்தானா நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்
மழையிலும் கூவும் மரகதக் குயில் நான் இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்

வெள்ளி மலரே வெளி மலரே

(நேற்றுவரை)
(இளந்தளிரே)

வெள்ளி மலரே வெளி மலரே...

Jodi - Velli Malarae

ஜோடி - கை தட்டித்தட்டி

கை தட்டித்தட்டி அழைத்தாளே
என் மனதைத் தொட்டுத்தொட்டுத் திறந்தாளே
என் உயிரை மெல்லத் துளைத்து நுழைந்தாளே
ஜீவன் கலந்தாளே அந்தத் தேன்குயிலே

தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம் பொன் வானெங்கும் அவளின் இன்பம்

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால் வாழ்வு மரணத்தை வெல்லும்

தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம்

ரத்தினத்துத் தேரானாள்
என் மனசுக்குள் சத்தமிடும் பூவானாள்
என் பருவத்தைப் பயிர் செய்யும் நீரானாள்
என் நெஞ்சக் குளத்தில் பொன் கல்லை எறிந்தாள்
அலை அடங்குமுன் நெஞ்சத்தில் குதித்தாள்
விழியால் நெஞ்சுடைத்துவிட்டாள்
ஸ்பரிசங்களால் பின் இணைத்துவிட்டாள்

தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம் பொன் வானெங்கும் அவளின் இன்பம்

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால் வாழ்வு மரணத்தை வெளும்

தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம் தரரம்பம்பம் பம்பம்பம்பம் (2)
பால்வண்ண நிலவெடுத்துப்
பாற்கடலில் பலமுறை சலவை செய்து
பெண்ணுருவாய்ப் பிறந்தவள் அவள்தானோ
என் கவிதைகளில் கண் மலர்ந்தவளோ
என் மௌளனங்களை மொழி பெயர்த்தவளோ
அழகைத் தத்தெடுத்தவளோ
என் உயிர் மலரைத் தத்தரித்தவளோ

தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம் பொன் வானெங்கும் அவளின் இன்பம்

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால் வாழ்வு மரணத்தை வெளும்

தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம்

Jodi - Kai Thatti Thatti

ஜோடி - காதல் கடிதம்

ம்ம்...ம்ம்ம்...

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ
பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ
அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்

(காதல்)

கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா
காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும்போதும் உறங்கமாட்டாயா
தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக்கொள்வாயா
மேலாடை நீங்கும்போது வெட்கம் என்ன முந்தானையா

லலா லாலல லாலா லாலா லாலா லாலலா
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
லாலா லாலா லாலலா லாலா லாலா லாலா
ஓ வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
ஓ வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
ஓ...

Jodi - Kaathal Kaditham

ஜோடி - அஞ்சாதே ஜீவா

அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா
என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
பூக்களையே ஆயுதமா கொண்டவன் நீதானே
பூவிரிந்து என்னுயிரை கொன்றவன் நீதானே
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
? தீர்க்கிற தேவா தேவா வா
ஒரு பூவுக்குள் வசிக்கிற நிலவே வா
என் போர்வைக்குள் அடிக்கிற வெயிலே வா
குளிர் புன்னகை பூக்கும் பூவே வா ஜீவா ஜீவா

ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
காதல் இல்லாத நகரம்
அது காற்று இல்லாத நரகம்
காதல் இல்லாத நகரம்
அது காற்று இல்லாத நரகம்
காற்று இல்லாத இடமும் அட
காதல் தெரியாமல் நுழையும்
கண்ணில் மணியாகி உன்னில் உயிராகி
காதல் யோகம் கொண்டாட வேண்டும்
சந்திர மண்டலம் எல்லாம் நாம் தாவி விளையாடவேண்டும்
ஒன்பது கிரகம் தாண்டி நாம் ஓடி விளையாட வேண்டும்
வானம் முடியும் முடியாது காதல் பயணம்

............என்னை கொள்ளை இட்டுபோகும்......................

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ
காதல் தப்பென்று சொல்ல
அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல
காதல் தப்பென்று சொல்ல
அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல
இரவு நேரத்து போரில் நீ என்னை எப்போது வெல்ல
பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும்
முடிவில் இருவரும் ஒன்றாக வேண்டும்
ஒவ்வொரு காலையின் போதும்
உன் மார்பினில் நான் தூங்க வேண்டும்
காலங்கள் முடிகின்ற போதும்
உன்னை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்
மீண்டும் மீண்டும் நாம் காதல் ஜென்மம் காணலாம்

.......... என்னை கொள்ளை இட்டுபோகும்............

Jodi - Anjaathae Jeeva

ஜோடி - ஒரு பொய்யாவது சொல்

ஆஆஆ...

ஒரு பொய்யாவது சொல் கண்ணே...உன் காதல் நாந்தான் என்று...
அந்த சொல்லில்...அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்...அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2)
பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌளனத்தில் உன்னால் யுத்தம் இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்

பெண்மையும் மென்மையும் பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் வேறுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கங்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேருதான்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

இரவினைத் திரட்டி ஓஆ
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ
ஓ விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஓ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
காதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2)
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் நான் உயிர் வாழ்வேன்
உயிர் வாழ்வேன் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்
அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்
சொல்லில் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன்

Jodi - Oru Poiyaavathu

Followers